search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேப்பனப்பள்ளி அருகே விபத்தில் விவசாயி உயிரிழப்பு
    X

    வேப்பனப்பள்ளி அருகே விபத்தில் விவசாயி உயிரிழப்பு

    வேப்பனப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்த விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    சூளகிரி:

    வேப்பனப்பள்ளி அருகே உள்ள எட்ரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 48). விவசாயி. இவரும் இவரது நண்பர்களுமான முனிராஜ் மற்றும் வெங்கடேசன் ஆகியோருடன் கொத்த கிருஷ்ணப்பள்ளி கிராமத்திற்கு சென்றுவிட்டு தங்களது கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். 

    சின்னகொத்தூர் கிராமம் அருகே சென்றுகொண்டிருந்த போது நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் சாலையோரம் இருந்த தண்ணீர் தொட்டியின் மீது மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற இருவரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து வேப்பனப் பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×