search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கம்பைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பலி
    X

    கம்பைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பலி

    கம்பைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர்  அடுத்துள்ள பெரிச்சூர் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது65). விவசாயியான இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கம்பைநல்லூரில் இருந்து திப்பம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே போகும் போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு முனியப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பைநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற முனியப்பன் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×