search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலி
    X

    பாவூர்சத்திரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலி

    பாவூர்சத்திரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குளம்:

     பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் சாமிதோப்பை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் வசீகரன் (வயது 17). இவர் பிளஸ்-2 படித்துவிட்டு கல்லூரியில் சேர்வதற்காக முயன்று கொண்டிருந்தார். 

    இந்நிலையில் நேற்று மாலை வசீகரன் தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரத்தில் இருந்து கீழப்பாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் அங்குள்ள மெயின்ரோட்டில் வந்த போது குறும்பலாபேரியை சேர்ந்த சரவணன் (55) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வசீகரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து பாவூர்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×