என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mother"
- ராஜேஸ்வரியின் மூத்த மகன் திட்டி வெளியே செல்லுமாறு கூறினார்.
- மகன் என்றும் பாராமல் அவரை இரும்பு கம்பியால் தாக்கினார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு திருமணமாகி மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு 17 வயது ஆகிறது.
இந்நிலையில் ராஜேஸ்வரிக்கும் வயநாட்டை சேர்ந்த சுனீஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதனால் சுனீஸ், அடிக்கடி ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்து சென்றார்.
இதுபற்றி அக்கம்பக்கத்தினர், ராஜேஸ்வரியின் மூத்த மகனிடம் கூறினர். அவர் தாயாரிடம் இதுபற்றி கேட்டார். இதில் தாய்க்கும், மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சம்பவதன்றும் சுனீஸ் ராஜேஸ்வரி வீட்டிற்கு வந்தார். அவரை ராஜேஸ்வரியின் மூத்த மகன் திட்டி வெளியே செல்லுமாறு கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜேஸ்வரி, மகன் என்றும் பாராமல் அவரை இரும்பு கம்பியால் தாக்கினார். அவருடன் சேர்ந்து சுனீசும், தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சிறுவன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தாக்கியதாக அவரது தாயார் ராஜேஸ்வரி, கள்ளக்காதலன் சுனீஸ் உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
- தாய்-மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
விருதுநகர்
சாத்தூர் பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணபிரபு. இவர் சம்பவத்தன்று தனது தாய் மகாலட்சுமியிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால் அவர் பணம் தர மறுத்தார். இதனால் தாய்-மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அவரது சகோதரர் கண்டித்தார். அப்போது லட்சுமணபிரபு கொலை மிரட்டல் விடுத்து தப்பினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அக்கா தேவி வீட்டிற்கு தனது 2 மகன்களுடன் சென்றுள்ளார்.
- பல இடங்களில் தேடியுள்ளனர்.
பல்லடம் :
கோவை மாவட்டம், சூலூர் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 36). இவரது மனைவி கவிதா ( 29 ). இவர்களது மகன்கள் ரத்தீஷ்( 8 ), மிஜின்( 6 ) இந்த நிலையில் கடந்த 29- ந்தேதி பொங்கலூர் அருகே உள்ள வேலம்பட்டியில் வசிக்கும் கவிதாவின் அக்கா தேவி வீட்டிற்கு தனது 2 மகன்களுடன் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை தேவி மற்றும் அவரது கணவர் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். வேலை முடிந்து இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது கவிதா மற்றும் அவரது 2 மகன்களுடன் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து அவர்கள் பெருமாளுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக வேலம்பட்டி வந்த பெருமாள் இது குறித்து அவினாசி பாளையம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் எங்கு சென்றனர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- பெண்ணை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. வேலூர், காட்பாடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
- நான் குழந்தையுடன் சென்று ஒரு மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு சென்றேன் என கண்ணீர் மல்க கூறினார்.
வேலூர்:
சேலம் ஆட்டையாம் பட்டியை சேர்ந்தவர்கள் சுந்தரி (வயது 63), சிவகுமார் (43). இவர்கள் இருவரும் வேலை சம்பந்தமாக காட்பாடிக்கு வந்தனர்.
சேலத்துக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் மாலை காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்றனர். ரெயிலுக்காக 1-வது பிளாட்பாரத்தில் நின்றிருந்தனர்.
அப்போது 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் 3 மாத பெண் கைகுழந்தையை அவர்களிடம் கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.
பெண் திரும்பி வராததால் அவர்கள் ரெயில்வே போலீசாரிடம் குழந்தையை ஒப்படைத்தனர். குழந்தை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் கண்காணித்து வந்தனர்.
பெண்ணை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. வேலூர், காட்பாடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அடையாளம் தெரியாத பெண் காட்பாடி பஸ் நிலையத்தில் இருந்து வேலுார் பஸ் நிலையம் சென்று அங்கிருந்து ஆரணி செல்லும் பஸ்சில் ஏறி பயணம் செய்தது தெரியவந்தது.
கேமரா மூலம் கிடைத்த புகைப்படத்தை எடுத்து வாட்ஸ்அப், டிவிட்டர், பேஸ்புக் மற்றும் உள்ளுர் போலீஸ் நிலையம் மூலம் விசாரணை நடத்தினர்.
இதில் குழந்தையை தவிக்க விட்டு சென்றது கண்ணமங்கலம் அருகே உள்ள மோத்தக்கல் கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவரது மனைவி கலைச்செல்வி (வயது27) என்பது தெரியவந்தது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் கலைச்செல்வியை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். அப்போது குழந்தையை விட்டு சென்றதை ஒப்புக் கொண்டார்.
எனது கணவர் விஜய் திருப்பூரில் தறி வேலை செய்து வருகிறார். மாதம் ரூ.7 ஆயிரம் ஊதியம் கிடைக்கிறது. எங்களுக்கு ஏற்கனவே 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 4-வதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதை வளர்க்க போதிய வருமானம் இல்லை. வறுமையின் காரணமாக தவித்தோம்.
ஏற்கனவே குடும்ப பெரியவர்கள் 4-வது குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டாம் என கூறி இருந்தனர்.
என்ன செய்வது என வழி தெரியாமல் திணறினோம். இதனால் காட்பாடி ரெயில் நிலையத்தில் உள்ளவர்களிடம் குழந்தையை ஒப்படைக்க முடிவு செய்தோம். நான் குழந்தையுடன் சென்று ஒரு மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு சென்றேன் என கண்ணீர் மல்க கூறினார்.
போலீசார் அவருக்கு அறிவுரை கூறி குழந்தையை ஒப்படைத்தனர்.
துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் காட்பாடி ரெயில் நிலையத்தில் மூதாட்டியிடம் குழந்தையை கொடுத்து சென்ற பெற்றோரை கண்டுபிடித்த தனிப்படையினரை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு, வெகுமதி வழங்கி பாராட்டினார்.
- நல்ல தொடுதல், தவறான தொடுதல் பற்றி குழந்தைக்கு கற்றுக் கொடுத்ததும் குழந்தையின் தாயார் அக்குழந்தையின் உடலில் தொடுகிறார்.
- குழந்தை ரியாக்ஷன் செய்வது போன்ற காட்சிகள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீப காலமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுப்பதற்காக சட்டங்களை கடுமையாக்கி வரும் அரசுகள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகின்றன.
இந்நிலையில் சுமார் 3 வயது பெண் குழந்தைக்கு நல்ல விதமாக தொடுவது மற்றும் தவறான முறையில் தொடுவது குறித்து பெற்றோர் சொல்லிக் கொடுப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், நல்ல தொடுதல், தவறான தொடுதல் பற்றி குழந்தைக்கு கற்றுக் கொடுத்ததும் குழந்தையின் தாயார் அக்குழந்தையின் உடலில் தொடுகிறார். அதற்கேற்ப அந்த குழந்தை ரியாக்ஷன் செய்வது போன்ற காட்சிகள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த குழந்தையின் பெற்றோருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
- தாய்க்கு ‘அன்னை சுப்புலட்சுமி’ என்ற பெயரில் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகரில் கோவில் கட்டினர்.
- கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரை சேர்ந்தவர் கல்யாண குமார். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு மே 14-ந் தேதி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
இந்நிலையில் சுப்புலெட்சுமியின் மகள் ஜெய்சங்கரி (வயது 32), மகன் ராகவேந்திரா (29) ஆகியோர் உயிரிழந்த தனது தாய்க்கு 'அன்னை சுப்புலட்சுமி' என்ற பெயரில் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகரில் கோவில் கட்டினர். இதனையடுத்து நேற்று காலை இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி நேற்று முன்தினம் காலை மகாகணபதி ஹோமம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் நவக்கிரக ஹோம், சுதர்சன ஹோமம், மகாலெட்சுமி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. மாலையில் முதல்கால யாகசாலை பூஜையும், நேற்று காலையில் 2-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் விமான கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
- நாமக்கல்லில் 2 குழந்தைகளின் தாய், கல்லூரி மாணவி மாயமானார்கள்.
- நாமக்கல் நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாமக்கல்:
நாமக்கல்லில் 2 குழந்தை களின் தாய், கல்லூரி மாணவி மாயமானார்கள்.
கல்லூரி மாணவி
நாமக்கல் தாதம்பட்டி மேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். இவரது மகள் மேனகா (வயது 18). இவர் ராமலிங்கம் அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு மைக்ரோ பயாலஜி படித்து வருகிறார்.
கடந்த 15-ந் தேதி கல்லூ ரிக்கு சென்ற மேனகா, அதன் பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் அக்கம் பக்கம் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து சந்திரகுமார் நாமக்கல் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.
2 குழந்தைகளின் தாய்
இதேபோல், நாமக்கல் கொசவம்பட்டியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி சிவப்பிரகாசம் நாமக்கல்லுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டில் குழந்தைகள் மட்டும் இருந்த னர். ஆனால் மனைவி ஜெயந்தி வீட்டில் இல்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் மற்றும் உற வினர் வீடுகளில் தேடினார். ஆனால் ஜெயந்தை குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், நாமக்கல் நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கணவரும் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததால் குழந்தையை கொன்றுவிட முடிவு செய்தேன்.
- விசாரணையில் பெற்ற தாயே குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது.
புதுச்சேரி:
சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (32). இவருக்கு ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் ஏற்கனவே திருமணமாகி 4 ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் அவர் மற்றொருவரின் மனைவி சங்கீதா(24)வை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
பழங்குடி நாடோடிகளான குமரேசன் தம்பதி சமீபத்தில் புதுவையை அடுத்த கிருமாம்பாக்கம் புதுக்குப்பத்துக்கு வந்தனர். புதுக்குப்பம் குளக்கரையில் இவர்கள் குடும்பத்தோடு வசித்து வந்தனர். கர்ப்பிணியாக இருந்த சங்கீதாவுக்கு கடந்த 29 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
நேற்று முன்தினம் இரவு குழந்தையோடு சங்கீதா அங்கு படுத்திருந்தார். நேற்று காலை கண் விழித்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதையடுத்து அப்பகுதி முழுவதும் குழந்தையை தேடினர்.
அப்போது புதுக்குப்பம் சுடுகாடு அருகே கடற்கரையில் பெண் சிசு புதைக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் அங்கு வந்த விசாரித்தபோது, அது சங்கீதாவின் குழந்தை என தெரியவந்தது. குழந்தையை கண்டு சங்கீதா, குமரேசன் கதறி அழுதனர். அப்பகுதியை சேர்ந்த மர்ம ஆசாமிகள் குழந்தையை தூக்கி சென்றிருக்கலாம் என போலீசில் தெரிவித்தனர்.
சங்கீதாவின் பேச்சில் சந்தேகமடைந்த போலீசார் அவரை தனியே அழைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பெற்ற தாயே குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சங்கீதாவை கைது செய்தனர்.
இதுகுறித்து சங்கீதா போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
குழந்தை பிறந்த பிறகு என் கணவர் அடிக்கடி சந்தேகப்பட்டு, அடித்து துன்புறுத்தினார். குழந்தை எனக்கு பிறந்ததா? எனக்கேட்டு தகராறு செய்தார். ஏற்கனவே குழந்தை குறை பிரசவத்தால் பிறந்ததால் வளர்ப்பதற்கு சிரமப்பட்டேன். கணவரும் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததால் குழந்தையை கொன்றுவிட முடிவு செய்தேன்.
நேற்று அதிகாலை எல்லோரும் அசந்து தூங்கும்நேரத்தில் குழந்தையை புதுக்குப்பம் கடற்கரைக்கு கொண்டுசென்றேன். அங்கு மணலில் குழந்தை தலையை அழுத்தி கொலை செய்து புதைத்துவிட்டு வந்துவிட்டேன். காலையில் ஒன்றும் தெரியாதது போல இருந்தேன். போலீசார் என்னை கண்டுபிடித்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
- அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காங்கயம் :
காங்கயம் பழையகோட்டை சாலை ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 70). இவருடைய தங்கை மகள் மனநலம் பாதிக்கப்பட்ட கலாமணி (33). வாடகை வீட்டில் வசித்து வந்த இருவரும் ஆதரவற்ற நிலையில் வறுமையின் கொடுமையால் பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் உடல்களை காங்கயம் போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் காங்கயம் போலீசார் அனுமதியுடன் 2 பெண்களின் உடல்களை காங்கயத்தை சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் காங்கயம் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.
- 2 வயது குழந்தையுடன் தாய் மாயமானார்.
- சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை
பழங்காநத்தம் மருதுபாண்டியர் நகர் பசும்பொன் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்பாண்டி. இவரது மனைவி கலைமலர் (வயது23). இவர்களது 2 வயது மகன் அருள்கருப்பு. கடந்த 31-ந் தேதி அருள்கருப்புடன் வெளியே சென்ற கலைமலர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து சதீஷ்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- 2 பெண்கள் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் அடுத்த சோமனூர் ரெயில் நிலையம் அருகே 2 பெண்கள் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா காயத்ரி,சப் -இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.அங்கு 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் 15 வயது மதிக்கத்தக்க பெண்ணும் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பிணமாக கிடந்தனர்.உடலை கைப்பற்றிய ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் இறந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் அடுத்த சாமளாபுரம் பவலந்தான்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரது மனைவி தனலட்சுமி (32),மகள் தட்சணா (15) என்பது தெரியவந்தது. சரவணன் சொந்தமாக விசைத்தறி வைத்து நடத்தி வருகிறார்.இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் கணவனிடம் கோபித்துக் கொண்டு தனலட்சுமி மகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற அவர்கள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.தொடர்ந்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திட்டங்களை செயல்படுத்துவதில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் செயல்படுத்தி வருகிறார்.
- தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் என்று மானாமதுரை தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. கூறினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் உள்ள இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு தமிழக அரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஏராளமான திட்டபணிகள் நடைபெற்று வருகிறது.
மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்-முன்னாள் அமைச்சர் ஆ.தமிழரசி ரவிக்குமார் கூறியதாவது:- தாயுள்ளம் கொண்ட நமது தமிழக முதல்வர் இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும், திட்டங்களை செயல்படுத்துவதில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் செயல்படுத்தி வருகிறார்.
மகளிர் முன்னேற்றத்தில்மிகவும் அக்கறையுடன் கட்டணமில்லா பஸ்பயணம், உயர் கல்வி கற்கும் மாணவிகளுக்குமாதம் ரூ.1000 திட்டம், வரும்பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், வீடுதேடிவரும்மருத்துவம், இல்லம் தேடி கல்வி திட்டங்களும் பொது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இதுதவிர மாதந்தோறும் மாவட்டங்களில் திட்டங்கள் செயல்படுத்துவது பற்றி கள ஆய்வு பணி, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் நிறைவேற்றப்படாத வளர்ச்சி பணிகள் நமது மானாமதுரை தொகுதியில் இளையான்குடி பேரூராட்சிக்கு தற்போது ரூ.9 கோடி மதிப்பில் திட்டப்பணிகள், மானாமதுரை வைகை ஆற்றில் புதிய பாலம், நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிய அலுவலக கட்டிடங்கள், உயர் நிலை-மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், புதிதாக நெல்கொள்முதல் நிலையங்கள், மானாமதுரையில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடம், திருப்புவனம் ஒன்றியம் லாடனேந்தல், செல்லப்பனேந்தல் இடையே வைகைஆற்றில் புதிய பாலம், மானாமதுரை வைகைஆற்றில் குடிநீர்திட்டத்திற்காக தடுப்பணைகள், கிராமங்கள் முழுவதும் புதிதாக பஸ் வசதி, மானாமதுரையில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி மையம்,சொட்டதட்டி- பனையூர் சுற்றுசாலை திட்டம், தற்போது உலகமே வியக்கும் கீழடி, கொந்தகை, மணலூர்அகழ்வாராய்ச்சி பணிகள் முடிக்கப்பட்டு இன்று ரூ.18 கோடி மதிப்பீட்டில் தமிழக செட்டிநாடு கலையில் 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நமது பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகளையும், அகழ்வாராய்ச்சி பணியில் கிடைத்த பல அரிய பொருட்களை தமிழக மக்கள் எளிதாக பார்த்து பயன் அடையும் வகையில் எதிர்கால நமது தலைமுறைக்காக கீழடியில் அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகத்தை தாயுள்ளம் படைத்த நமது தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார் என்பது தமிழக மக்களுக்கு பெருமை ஆகும்.
மதுரை-ராமேசுவரம் சாலையில் இருந்து எளிதாக கீழடிஅருங்காட்சியகம் வருவதற்காக புதிய சர்வீஸ் சாலை மற்றும் சாலையை கடக்க நடைபாலம் அமைக்கவும், சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்