search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Thangamani"

    தமிழகம் முழுவதும் தற்போது சீரான மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று மதுரையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். #TNMinister #thangamani
    மதுரை:

    மதுரையில் மின்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது மின்வெட்டு எதுவும் இல்லை. ஒருசில பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் மற்றும் காற்றாலைகள் மூலம் மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் நிலவி வந்தது. ஆனாலும் அனல் மின் நிலையத்தின் மூலம் மின் தேவை சரிசெய்யப்பட்டுள்ளது.

    எனவே தற்போது தமிழகம் முழுவதும் சீரான மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.


    தி.மு.க. ஆட்சியில்தான் தரமற்ற நிலக்கரி கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அந்த ஆட்சி மின்வெட்டு ஆட்சியாக இருந்தது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் மின்துறை சீர் செய்யப்பட்டு தேவைக்கு அதிகமான மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #thangamani
    அமைச்சர் தங்கமணி ஊழலையும் மின்வெட்டையும் மூடி மறைப்பதாக தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார். #DMK #AVVelu #TNMinister #Thangamani
    சென்னை:

    தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்றைய தினம் “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில்” நடைபெறும் ஊழல்களையும், மின்வெட்டை நோக்கி தமிழகம் நகர்ந்து கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டி வெளியிட்ட அறிக்கைக்கு பதில் சொல்ல நினைத்து, “தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை” என்றும் “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் ஊழலே நடக்கவில்லை” என்றும் “இலைச் சோற்றுக்குள் இமய மலையை” திணித்து மறைக்க முயன்ற மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    “தமிழ்நாடு மின்வெட்டை நோக்கிச் செல்கிறது” என்று ஒரு ஆங்கில நாளிதழிலேயே செய்தி வெளிவந்துள்ளது. ஆகவே மின்வெட்டு என்பதை மக்கள் குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள் என்பது அக்மார்க் உண்மை.

    தரமற்ற நிலக்கரி இறக்குமதி, அதில் உள்ள ஊழல் எல்லாம் தமிழக சட்டமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள சி.ஏ.ஜி. அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

    மின் கொள்முதல் ஊழல் பற்றி சென்னை உயர் நீதிமன்றத்திலேயே வழக்கு தொடர்ப்பட்டு அதுவும் மின் வாரியத்தில் பணியாற்றியவரே ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று வழக்குப் போட்டாரே அதுவும் அமைச்சருக்கு தெரியாதா?

    மின் வாரியத்துறை ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டுகளையாவது அமைச்சர் ஞாபகம் வைத்துள்ளாரா அல்லது அதையும் மறந்து விட்டாரா?


    300-க்கும் மேற்பட்ட உதவிப் பொறியாளர்களை தேர்வு செய்வதற்கு நட்சத்திர ஹோட்டலில் நேர்காணல் நடத்தியதும் அமைச்சருக்குத் தெரியாதா? மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள களப்பொறியாளர்கள் ஆய்வுக்கூட்டங்களில் உயரதிகாரிகள் மற்றும் தலைமை பொறியாளர்களிடம் “கேபிள் கூட இல்லாமல் நாங்கள் எப்படி வேலை பார்ப்பது” என்று கேள்வி எழுப்புகிறார்களே அதுவும் அமைச்சருக்கு தெரியாதா?

    ஆகவே தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் ஒரு அமைச்சர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தன் பக்கத்தில் அமர்த்தி வைத்துக் கொண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து “அரசியல் பேட்டியை” கொடுப்பதும், அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் கூட அமர்ந்து “ஊழலை மறைக்கும்” பேட்டிக்கு துணை போக வைப்பதும் பொறுப்புள்ள ஒரு அமைச்சரின் செயலா என்பதை முதலில் மின்துறை அமைச்சர் யோசிக்க வேண்டும்.

    அதை விடுத்து எங்கள் கழகத் தலைவர் கொடுத்த ஆதாரமிக்க அறிக்கை பற்றியும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிர்வாக அலங்கோலம் பற்றியும் “கேலி” செய்யும் விதத்தில் பேட்டியளிப்பது அமைச்சர் இன்னும் பொதுவாழ்வில் தன்னை பண்படுத்திக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

    ஊழலிலும், நிர்வாக சீர்கேட்டிலும், கடும் நிதி நெருக்கடியிலும் மூழ்கிக் கிடக்கும் மின் பகிர்மானக்கழகத்தை முடிந்தால் அமைச்சர் தங்கமணி சீரமைக்க நடவடிக்கை எடுக்கட்டும். அதை விடுத்து கற்பனைக் குதிரைகளை பறக்க விட்டு, ஊழல் கறையைப் போக்க முயற்சிப்பது வீண் வேலை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு எ.வ.வேலு கூறியுள்ளார். #DMK #AVVelu #TNMinister #Thangamani
    வெளிநாட்டில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் இன்னும் 15 நாட்களில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். #Minister #thangamani
    சென்னை:

    தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறை குறித்து மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    காற்றாலை மின்உற்பத்தி மூலம் பெறப்படும் மின்சாரம் கடந்த 2 நாளில் குறைந்ததாலும், மத்திய மின் தொகுப்பில் இருந்து நமக்கு வரவேண்டிய 4 ஆயிரம் மெகாவாட் வராததாலும் மின்பற்றாக்குறை ஏற்பட்டது.

    கூடங்குளத்தில் இருந்து கிடைக்க வேண்டிய 1000 மெகாவாட் மின்உற்பத்தியில் நமக்கு 3 மாதமாக மின்சாரம் தரவில்லை. ஆனாலும் நீர்மின்நிலையம், அனல் மின்நிலையங்களில் இருந்து பெறப்பட்ட மின்உற்பத்தியை வைத்து நிலைமையை சமாளித்தோம்.

    காற்றாலை மூலம் அதிகமாக மின்உற்பத்தி கிடைத்ததால் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் மின்உற்பத்தி கணிசமாக குறைந்தது.

    மேலும் வடசென்னையில் 2 அனல் மின்நிலையத்தில் பழுது ஏற்பட்டது. இதில் வல்லூர் அனல் மின்நிலையத்தில் நிறுத்தப்பட்ட மின்உற்பத்தி நாளை மீண்டும் தொடங்குகிறது. இதேபோல் 210 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுது 2 நாளில் சரி செய்யப்பட்டுவிடும்.



    நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்உற்பத்தி நிறுத்தப்படவில்லை. ஏனென்றால் 5 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலத்தில் பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள நிலக்கரி சுரங்கத்தில் இருந்து நிலக்கரி கொண்டு வருவதில் சிரமம் ஏற்படுவது உண்மைதான். ஆனாலும் நம்மிடம் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது.

    வெளிநாட்டில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் இன்னும் 15 நாட்களில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு அனல் மின்நிலையங்களுக்கு அனுப்பப்படும்.

    எனவே இப்போது மின் வெட்டு இல்லை. இதுதான் உண்மை.

    இவ்வாறு அவர் கூறினார். #Minister #thangamani
    ஜெயலலிதாவின் இறப்பிற்கும், அவருக்கு தண்டனை கிடைப்பதற்கும் டி.டி.வி.தினகரன் தான் காரணம் என்று வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார். #TNMinister #Thangamani #TTVDhinakaran
    வேலூர்:

    வேலூரில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

    ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடிபழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒரு சாமானியர்களாக இருந்து ஆட்சி புரிந்து வருகின்றனர்.

    அத்தகைய சாமானியர்களின் ஆட்சியைக் கலைத்திட திமுகவுடன் கைகோர்த்துக் கொண்டு தினகரன் செயல்பட்டு வருகிறார்.

    அவர் தற்போது தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை கொண்டு மீண்டும் திமுகவுடன் கைகோர்த்து அதிமுக ஆட்சியைக் கலைக்க முயற்சித்து வருகிறார்.

    மேலும், 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு தீர்ப்பு வந்தால் ஆட்சியில் உள்ளவர்கள் சிறை செல்வர் என்றும் தினகரன் கூறி வருகிறார். அவரது 1991ஆம் ஆண்டுக்கு முந்தைய சொத்துக் கணக்கும், தற்போதைய சொத்துக் கணக்கும் வெளியானாலே யார் சிறைக்கு செல்வர் என்பது தெளிவாகிவிடும்.

    எப்போதும் சிரித்து கொண்டே இருப்பவர் தான் லூசு மோகன். அவரது இடத்தை தற்போது டி.டி.வி.தினகரன் நிரப்பி உள்ளார். எனவே அவரை இனி லூசு மோகன் என்ற டி.டி.வி. தினகரன் என்று அழைக்கலாம்.

    திருப்பரங்குன்றம், திருவாரூரில் டி.டி.வி.தினகரனின் பலம் எடுபடாது.

    25 சதவீதம் மது அவரது தொழிற்சாலையில் இருந்து தான் வருகிறது. அவருடன் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக ஆசை வார்த்தை கூறி வைத்துள்ளார். எங்கள் மீது பொய்யான பிரசாரம் செய்து வருகிறார்.

    தொண்டர்களுக்கு எல்லாம் தெரியும். பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு இருந்த போது கருணாநிதியுடன் டி.டி.வி. தினகரன் கூட்டு வைத்துக்கொண்டு ஆட்சியையும், கட்சியையும் கலைக்க நினைத்தார்.

    அதன் காரணமாகவே லண்டன் ஓட்டல் வழக்கில் இருந்து டி.டி.வி.தினகரன் விடுவிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் இறப்பிற்கும், அவருக்கு தண்டனை கிடைப்பதற்கும் காரணம் டி.டி.வி.தினகரன் தான்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNMinister #Thangamani #TTVDhinakaran
    நாமக்கல்லில் கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மையத்தை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
    நாமக்கல்:

    நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள துணைமின் நிலைய வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மைய திறப்பு விழா நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையில், கலெக்டர் ஆசியாமரியம் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மையத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி திறந்து வைத்து மின் பயனீட்டாளர்கள் அளிக்கும் புகார்கள் கணினி மூலம் பதிவு செய்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை பார்வையிட்டார்.

    பின்னர் அமைச்சர் பி.தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு மண்டல தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு உட்பட்ட நாமக்கல் மின்பகிர்மான வட்டத்திற்கு என பிரத்யேகமான கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மையம் புதியதாக அமைக்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மின் பகிர்மான வட்டமானது நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், மற்றும் பரமத்திவேலூர் ஆகிய 4 கோட்டங்களும், 16 உபகோட்டங்களும், 76 பிரிவு அலுவலகங்களும் அடங்கியதாகும்.

    நாமக்கல் மின்பகிர்மான வட்டத்தில் மொத்தம் 6,36,000க்கு மேல் மின் பயனீட்டாளர்கள் உள்ளனர். இதில் வீட்டு மின் இணைப்புகள் மட்டும் 4,06,273 ஆகும்.

    நாமக்கல் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அனைத்து மின் பயனீட்டாளர்களும் 24 மணிநேரமும் செயல்படும் கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மையம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1912 அல்லது 180042519124 (அனைத்து வாடிக்கையாளர்கள்)-ஐ தொடர்பு கொண்டு தங்களது மின்தடை பழுதுகளை சரி செய்து கொள்ளலாம். மின் பயனீட்டாளர்கள் மேற்கண்ட இலவச மின்சாரவாரிய சேவையை உபயோகித்து பயன்பெற வேண்டும். மின்தடை பழுது புகார்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட களப்பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு விரைந்து சரிசெய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மைய சேவை குறித்த துண்டு பிரசுரங்களை அமைச்சர் பி. தங்கமணி பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மண்டல தலைமைப் பொறியாளர் சந்திரசேகர், நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சந்தானம் உள்பட அனைத்து பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படுவது உறுதி என அமைச்சர் தங்கமணி கூறினார். #MinisterThangamani
    நாமக்கல்:

    தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டு தமிழகத்தில் சுமார் 6,800 மதுக்கடைகள் இருந்தன. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவி ஏற்ற போதும், தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றபோதும் தலா 500 மதுக்கடைகளை மூடினர்.

    அதன் பிறகு படிப்படியாக மேலும் 1,000 மதுக்கடைகள் மூடப்பட்டன. தற்போது 4,800 மதுக்கடைகள் மட்டுமே உள்ளன. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதில் உறுதியாக இருக்கிறோம். இதில் மாறுபட்ட கருத்து இல்லை.

    மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைந்து இருப்பதால், அவற்றில் பணி புரிந்த பணியாளர்களுக்கு வேறு துறையில் பணியிடங்களை ஒதுக்கி கொடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வேறு துறைக்கு செல்லும் டாஸ்மாக் பணியாளர்கள் தங்களுக்கு இதே முன்னுரிமை வழங்க வேண்டும் என கேட்டு வருகின்றனர். ஆனால் இதர துறைகளில் உள்ளவர்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    இருப்பினும் கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வு நடத்தி இளநிலை உதவியாளர் நிலையிலான பணியிடம் வழங்க முடிவு செய்து உள்ளோம். அதற்கான எழுத்துத்தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) நடக்கிறது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அதற்கு பணியாற்ற வசதியாக மூத்த அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்து உள்ளார். அந்த விவகாரத்தில் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MinisterThangamani
    தமிழகத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஈரோட்டில் அமைச்சர் தங்கமணி கூறினார். #MinisterThangamani
    ஈரோடு:

    ஈரோடு மாநகரின் முக்கிய சாலைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லும் மேல்நிலை கம்பிகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக நிலத்தடியில் மின் கேபிள் பதிக்கும் பணிக்கு ரூ 58.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலத்தடி மின் கேபிள் பதிக்கும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி இன்று ஈரோடு மின்வாரிய அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி, எம்.பி. செல்வ குமாரசின்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், தங்கமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிலத்தடியில் மின் கேபிள் பதிக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னைக்கு அடுத்தபடியாக ஈரோட்டில்தான் ரூ 58.96 கோடி மதிப்பில் பூமிக்கடியில் மின் கேபிள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சாதாரணமாக நிலத்திற்கு மேல் மின்கம்பிகள் அமைப்பதை விட நிலத்தடியில் மின் கேபிள் பதிக்கும் பணிக்கு கூடுதலாக 10 சதவீதம் செலவாகும்.

    எனினும் நிதி நிலைமை பொறுத்து ஒவ்வொரு பகுதியாக இந்த பணி நடக்க உள்ளது. 2011-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகம் மின் மிகை மாநிலமாக மாற்றப்படும் என்று அறிவித்தார்.

    அதன்படி 2015-ம் ஆண்டு மின் மிகை மாநிலமாக அவர் மாற்றிக் காட்டினார். அவரது வழியில் நாங்களும் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றி வருகிறோம். 2005-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது 3 நாட்களில் மின் விநியோகம் செய்யப்பட்டது.

    அதற்கு முக்கிய காரணம் இந்த நிலத்தடியில் மின் கேபிள் பதிக்கும் முறைதான். மின்வாரிய ஊழியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகிறார்கள். போலீஸ் துறைக்கு அடுத்து 24 மணி நேரமும் மின் துறை ஊழியர்கள் தான் வேலை செய்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் 6 லட்சம் கிலோ மீட்டர் தூரம் மின் கம்பங்கள் கொண்டு செல்லப்படும். தயாரிக்கப்படும் மின்சாரத்தை அனைத்து பகுதிக்கும் கொண்டு செல்ல மின் டவர் அவசியம். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு, நஷ்டஈடு அதிகமாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தட்கல் முறை கடந்த 2017-ம் ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டது. இது விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை 9 ஆயிரத்து 865 பேர் தட்கல் முறையில் மின் வினியோகம் பெற்று வருகின்றனர்.

    இதன் மூலம் 1,000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு செய்யப்பட்டுள்ளது.

    காவிரி ஆற்றின் 7 பேரேஜ் மூலம் 210 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தயாரிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வெள்ளம் பாதித்த மக்களுக்காக 256 டிரான்ஸ்பார்மர்கள் 40 ஆயிரம் மின் மீட்டர்கள் வழங்கப்படும்.
     
    இவ்வாறு அவர் கூறினார். #MinisterThangamani

    குமாரபாளையத்தில் தரைவழி பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க ரூ.75 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள மொள்ளபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கோம்புப் பள்ளத்தின் வழியாக நீர் ஊருக்குள் புகுந்தது. இதன் காரணமாக பழைய பள்ளிபாளையம் ரோடு தரை பாலம் மூழ்கியது. இதனால் கடந்த ஒரு வாரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த தரைப் பாலத்திற்கு பதிலாக உயர்மட்டப் பாலம் அமைக்குமாறு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் அமைச்சர் தங்கமணி பார்வையிட்டார். பின்னர் தரைவழி பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க ரூ.75 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்தார். நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உடன் இருந்தனர்.
    ‘மின்வாரியத்துறை விரைவில் லாபத்தை அடையும் நிலைக்கு வந்து விடும்’ என அமைச்சர் தங்கமணி கூறினார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை மண்டல மின்வாரியத்துறை வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மின்வாரியத்துறை அமைச்சர் பி.தங்கமணி, கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    முன்னதாக அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் மண்டலம் வாரியாக ஆய்வு கூட்டத்தை நடத்தி வருகிறோம். கடந்த ஒரு ஆண்டில் 3 லட்சத்து 85 ஆயிரம் மின் இணைப்புகள் ஒரே நாளில் கொடுக்கப்பட்டுள்ளது சாதனையாகும்.

    விவசாயிகளிடம் தட்கல் திட்டம் தற்போது அதிக வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு மின்சாரவாரியம் வெளிப்படை தன்மையாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மின்வாரியத்தில் 3 வருடம் ஒரே இடத்தில் வேலை செய்து வருபவர்களுக்கு மாறுதல் வழங்க வேண்டும் என்பதற்காக கேட்டிருந்தோம். அதன்படி ஆன்லைனில் 14 ஆயிரம் மனுக்கள் வந்திருக்கிறது. அந்த மனுக்களில் ஊழியர்கள் எந்த இடத்தில் மாறுதல் கேட்டிருக்கிறார்களோ அவர்களுக்கு பணி மாறுதல் விரைவில் வழங்கப்படும்.

    மின்சார வாரியம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.14 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இருந்தது. தற்போது இது ரூ.3 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது. நிலக்கரியாக இருந்தாலும் மற்ற எந்த டெண்டராக இருந்தாலும் இ-டெண்டர் முறையில் நடைபெற்று வருவதால், விரைவில் மின்வாரியத்துறை லாபத்தை அடையும் நிலைக்கு வரும்.

    மின்சார வாரிய ஊழியர்கள் எதிர்பார்த்த அளவிற்கு சம்பளம் வழங்கப்படுகிறது. மழைக்காலம் மற்றும் இயற்கை இடர்பாடுகளின் போது பொதுமக்கள் மின்தடையால் அவதியடைய கூடாது என்பதற்காக, உடனுக்குடன் பணிகள் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    எனது இன்னொரு முகத்தை நீங்கள் பார்த்தது கிடையாது என்று கூறி தினகரம் உங்கள் வீடு தேடி வந்து உதைப்பேன் என்று மிரட்டினார் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். #ADMK #MinisterThangamani

    ஜெயங்கொண்டம் :

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்காக காவிரியிலிருந்து தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக பல போராட்டங்களை நடத்தினார். ஆனால் அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரசும், மாநிலத்தில் ஆட்சி நடத்திய தி.மு.க.வும் அதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா போராடி பெற்ற தீர்ப்பினை அரசிதழில் வெளியிட செய்தார்.

    ஆனால் அப்போது ஆட்சி நடத்தியவர்கள் அதனை அரசிதழில் வெளியிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இன்றைக்கு காவிரி நீர் வருகிறது என்றால் அதற்கு ஜெயலலிதாதான் காரணம்.

    தற்பொழுது ஆட்சி நடத்தி வரும் நமது முதல்வர் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் முதல்வர் ஆனவுடன் அப்பதவியிலிருந்து நீக்கி ஆட்சியை கலைப்பதற்கு பல்வேறு வகையில் தி.மு.க. முயற்சி செய்து வருகிறது. ஆனால் தொண்டர்களின் ஆதரவோடு இன்று வரை சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது.

    சொத்து சம்பந்தமான வழக்கு பெங்களூர் கோர்ட்டில் நடந்து கொண்டிருந்த போது, சசிகலா குடும்பம் ஆட்சியை பிடிப்பதற்காக பெங்களூரில் ஒரு ஓட்டலில் ரூம் போட்டு பேசியுள்ளனர். இதனை அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் பதிவு செய்து கொண்டு வந்து ஜெயலலிதாவிடம் கொடுத்ததால் அவர்களின் சுயரூபம் தெரிய வந்ததை அடுத்து சசிகலா உட்பட அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கினார்.

    சில மாதங்கள் கழித்து சசிகலா, ஜெயலலிதாவிடம் எனது குடும்பம் இவ்வளவு பெரிய துரோகம் செய்யுமென்று நான் நினைக்கவில்லை. என்னை மன்னித்து மீண்டும் ஏற்றுக்கொள்ளுங்கள் என மன்னிப்பு கடிதம் கொடுத்து அனுப்பினார். மன்னிப்பு கொடுத்து மீண்டும் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார்.

    ஆனால் கடந்த 2008-ம் ஆண்டே தினகரனை கட்சியை விட்டே நீக்கினார். இனிமேல் போயஸ்கார்டன் பக்கமே வரக்கூடாது, பெரியகுளம் தொகுதி பக்கமே செல்லக்கூடாது. சென்னையிலேயே இருக்கக்கூடாது என கட்டளையிட்டார். அது முதல் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை இருந்த இடம் தெரியாத அளவிற்கு இருந்து வந்தவர் இன்று ஜெயலலிதா இல்லை என்றதும் ஆட்சியை பிடிக்கலாம் என நினைக்கிறார்.

    ஏன் தினகரனை நீக்கினார் என்றால், ஜெயலலிதா மீது தி.மு.க. ஒரு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் தினகரனும் இருக்கிறார். அப்போது ஜெயலலிதாவிற்கு தெரியாமலேயே தினகரன் லண்டனில் ஒரு ஓட்டல் வாங்கியுள்ளார். அந்த ஓட்டலையும் சேர்த்து வழக்கு போடப்பட்டுள்ளது.

    அதில் தினகரனும் ஒரு குற்றவாளியாக இருக்கிறார். தினகரன் அப்போதே முடிவு செய்து விட்டார். எப்படியாவது ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும். அதன் பின் நாம் ஆட்சியை பிடித்து விடலாம் என்று கருணாநிதியுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்பட்டுள்ளார்.

    கடந்த 2007-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது கருணாநிதியுடன் பேசிய தினகரன், என்னையும் லண்டன் சொகுசு ஓட்டலையும் வழக்கிலிருந்து விடுவித்து விடுங்கள். மற்றவர்களையெல்லாம் வழக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியதும் லண்டனில் உள்ள விலைமதிக்க முடியாத அந்த ஓட்டலை வழக்கில் இருந்து தி.மு.க.வினர் நீக்கி விட்டனர். ஒப்பந்தம் இல்லை என்று சொன்னால் தினகரனையும், ஓட்டலையும் வழக்கில் இருந்து நீக்கியிருப்பார்களா?

    ஜெயலலிதா இறந்த பிறகு தமிழ்வருடப் பிறப்பையொட்டி கொறடா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உட்பட அனைவரும் தினகரன் வீட்டிற்கு சென்று அவரிடம், நீங்கள் இந்த இயக்கத்திற்கு வந்த பிறகு பிரச்சினைகள் அதிகம் வந்துவிட்டது. ஆகையால் நீங்கள் இந்த இயக்கத்தை விட்டு ஒதுங்கி இருங்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி -ஓ.பன்னீர்செல்வத்தை வைத்து நாங்கள் இந்த இயக்கத்தை நடத்திக்கொள்கிறோம் என்று சொன்னோம்.

    அதற்கு தினகரன் உங்களுக்கு 60 நாட்கள் கெடு கொடுக்கின்றேன். அதன் பிறகு நான் மீண்டும் எனது விஸ்வரூபத்தை எடுப்பேன். அதற்குள் ஓ.பி.எஸ்.சிடம் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார்.

    அதற்கும் மேல் தாமதமானால் என்னுடைய ஒரு முகத்தை மட்டும்தான் நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள். எனது இன்னொரு முகத்தை நீங்கள் பார்த்தது கிடையாது என்று கூறி, என்னையும், வேலுமணியையும் பார்த்து உங்கள் வீடு தேடி வந்து சட்டை காலரை தூக்கி உதைப்பேன் என்று சொன்னார்.

    மேலும் அங்கிருந்து எழுந்து எங்களை அடிப்பதை போல் வந்தார். இதற்கு மேலும் அங்கிருந்தால் அசிங்கமாகி விடும் என்று நானும், வேலுமணியும் வெளியே வந்து விட்டோம். எங்கள் பின்னே அனைத்து அமைச்சர்களும் வந்து விட்டார்கள்.

    தினகரன் முதல்வராவதற்கு கனவு காண்கின்றார். அம்மாவின் ஆத்மா இருக்கும் வரை சசிகலா குடும்பத்தில் எவரும் முதல்வராக முடியாது. இந்த கட்சியில் உரிமைக் கொண்டாடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. அம்மா ஒரு முறை சட்டமன்றத்தில் பேசிய போது, எனக்கென்று யாரும் கிடையாது, எனக்காக இருப்பவர்கள் ஒன்றரை கோடி தொண்டர்களும், 7½ கோடி தமிழக மக்களும்தான் எனது குடும்பம் என பேசினார். ஆனாலும் எனக்குப் பின்னால் 100 ஆண்டு காலம் இந்த ஆட்சி நடைபெற வேண்டும் என கூறினார்.

    ஆர்.கே.நகர் தொகுதியில் நுழையும் போதெல்லாம் ஏமாந்த மக்கள் 20 ரூபாய் நோட்டை காண்பித்து 20 ரூபாய் இங்கே, 10 ஆயிரம் எங்கே என்று கேட்டுக்கொண்டிருக்கின்ற நிலைமை இருக்கின்ற காரணத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிக்கு கூட செல்லமுடியாத சட்டமன்ற உறுப்பினர்தான் தினகரன்.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #MinisterThangamani

    தமிழகத்தில் மின் இணைப்புக்கான வைப்பு தொகையை 5 சதவீதம் உயர்த்துவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
    நாமக்கல்:

    நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. இதில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு பணியை தொடங்கிவைத்தார்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சத்துணவு முட்டை முறைகேடு விவகாரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் யாரும் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கூறவில்லை. சிலர் வேண்டுமென்றே இப்படி ஒரு தகவலை பரப்புகிறார்கள். அதில் உண்மை இல்லை.

    குமாரபாளையம் மக்களுக்கு என்னை பற்றி நன்கு தெரிந்ததால் தான் அமைச்சராக இருந்த என்னை 2016-ம் ஆண்டில் மீண்டும் 48 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தனர்.

    டி.டி.வி.தினகரன் முதலில் 135 இடங்களில் நடந்த சோதனை குறித்து பதில் சொல்லட்டும், அதன் பின்னர் நான் பதில் சொல்கிறேன்.

    தமிழகத்தில் மின் இணைப்புக்கான வைப்பு தொகையை 5 சதவீதம் உயர்த்துவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. முழுமையாக முடிவான பிறகு அது குறித்த அறிவிப்பு வெளியாகும்.

    தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இளநிலை பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு 960 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆகஸ்டு மாதத்தில் இப்பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

    இவ்வாறு அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
    தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக உள்ளதால் மின்வெட்டு எங்கும் இல்லை என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி பேசுகையில், திருவொற்றியூரில் காலையில் இருந்து மதியம் வரை மின்சாரம் இல்லாமல் இருந்தது. சட்டசபை முடிந்து நான் சென்றபோது பொதுமக்கள் பலர் எனக்கு போன் செய்து மின்சாரம் எப்போது வரும் என்று கேட்டுக்கொண்டே இருந்தனர். அது எனது காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது என்றார்.

    இதற்கு மின்துறை அமைச்சர் பதில் அளிக்கையில், “உங்களது ஆட்சியில் வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம். இப்போது தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக உள்ளது. மின்வெட்டு எங்கும் இல்லை. மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு பள்ளம் தோண்டுவது, தொலைபேசி துறையினர் பள்ளம் தோண்டும் பிரச்சனையால் மின் கேபிள்கள் துண்டிக்கப்படுவதால் மின்தடை ஏற்படுகிறது. அதை கண்டுபிடித்து சரி செய்வதற்கு நேரம் ஆவதால் மின்சார விநியோகம் செய்ய சிறிது நேரம் ஆகிறதே தவிர எங்கும் மின்வெட்டு இல்லை” என்றார். #TNAssembly

    ×