என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Militants"
புதுடெல்லி:
நாட்டில் பல இடங்களில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த 10 பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு படையினர் மற்றும் உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களின் சதித்திட்டம் முன்கூட்டியே கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு இருப்பதால் நாடு பெரிய தாக்குதலில் இருந்து தப்பி உள்ளது.
இந்த பயங்கரவாதிகள் ஐ.எஸ். இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு அதேபோன்று இந்தியாவிலும் செயல்பட திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இதற்காக ஹர்கத்- உல்-ஹர்ப்-இ-இஸ்லாம் என்ற பெயரில் பயங்கரவாத இயக்கத்தை தொடங்கினார்கள். இதற்கு முப்தி முகமது சுகாய்ல் என்பவன் மூளையாக செயல்பட்டான்.
இவன் உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகா என்ற இடத்தை சேர்ந்தவன். அங்கு ஹக்கிம் மக்தாப் உதின் சாலையில் மதரசா (மத பாடசாலை) உள்ளது.
இங்கு ஆசிரியராக பணியாற்றி வந்தான். அவனுக்கு 29 வயது ஆகிறது. ஐ.எஸ். இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட அவன் இந்த புதிய இயக்கத்தை தொடங்கினான்.
அதில், உத்தரபிரதேச பகுதியை சேர்ந்த பலரை உறுப்பினராக சேர்த்தான். இவனது பெற்றோர் டெல்லியில் உள்ள ஜப்ராபாத் என்ற இடத்தில் வசித்து வந்தனர்.
இது, டெல்லியில் உள்ள குடிசை பகுதி ஆகும். அங்கும் தனது இயக்கத்துக்கு ஆட்களை சேர்ப்பதற்காக சமீப காலமாக டெல்லியில் தங்கி இருந்தான்.
அங்கு பல்வேறு இளைஞர்களை தன்பக்கம் இழுத்து இயக்கத்தை பெரிய அளவில் உருவாக்கினான். அதை தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கு திட்டம் உருவாக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள போலீஸ் தலைமையகம், ஆர்.எஸ்.எஸ். தலைமையகம், மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றில் தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்.
அதுமட்டும் அல்லாமல், பாரதிய ஜனதா தலைவர்கள், இந்து அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் ஆகியோரையும் கொல்வதும் அவர்கள் திட்டமாக இருந்தது.
இதற்காக ஆயுதங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து மர்ம நபர் ஒருவர் ஆலோசனைகளை வழங்கி உள்ளார். தாக்குதல் திட்டங்களையும் அவர் தயாரித்து கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் தான் இந்த குழுவினர் செயல்பட்டனர். வெடி குண்டு தயாரிப்பதற்காக வெடி பொருட்களை சேகரித்தனர்.
மேலும் தலைவர்களை கொல்வதற்கு ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்துவதும் அவர்கள் திட்டமாக இருந்தது.
இதற்காக அவர்களாகவே சொந்தமாக ராக்கெட் லாஞ்சரை தங்களுக்கு தெரிந்த தொழில்நுட்பம் மூலமாக தயாரித்தனர்.
இந்த அமைப்பில் முப்தி முகமது சுகாயிலுக்கு அடுத்த முக்கிய நபராக அனஸ் யூனுஸ் (24) என்பவன் இருந்து வந்தான்.
டெல்லி ஜப்ராபாத்தை சேர்ந்த இவன் நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் 3-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தான். தனக்கு தெரிந்த என்ஜினீயரிங் தொழில்நுட்பம் மூலம் ராக்கெட் லாஞ்சர் மற்றும் வெடிகுண்டு தயாரிக்க உதவினான்.
இயக்கத்தில் உள்ள மற்ற நபர்களுக்கும் எப்படி வெடி குண்டு தயாரிப்பது? அதை எவ்வாறு பொறுத்துவது? எந்த மாதிரி தாக்குவது போன்ற நுட்பங்களை முப்தி முகமது சுகாயிலும், அனஸ் யூனுசும் மற்றவர்களுக்கு சொல்லி கொடுத்தனர்.
முப்தி முகமது சுகாயிலிடம் இருந்து செல்போன் மற்றும் லேப்-டாப் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், மற்ற பயங்கரவாதிகளுக்கு தாக்குதல் பற்றி சொல்லி கொடுக்கும் வீடியோக்கள் இருந்தன.
பயங்கரவாதிகளிடம் இருந்து 25 கிலோ வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அதில், பொட்டாசியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரைட், கந்தகம் ஆகியவை இருந்தன.
மேலும் 112 அலாரம் கடிகாரம், 12 துப்பாக்கிகள், புல்லட் புரூப் சட்டை, 90 செல்போன்கள், 134 சிம்கார்டுகள், ரூ.7½ லட்சம் ரொக்க பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இதற்கு தேவையான பணத்தை பலரிடம் இருந்து நன்கொடையாக பெற்றுள்ளனர். அவர்கள் தாக்குதலுக்கு மறைமுகமாக உதவும் வகையில் பணத்தை தாராளமாக கொடுத்துள்ளனர்.
மேலும் பயங்கரவாதிகளில் ஒருவனான சுபாயர் மாலிக் என்பவன் தனது வீட்டில் இருந்தே நகைகளை திருடி அதில் விற்ற பணத்தை பயங்கரவாத இயக்கத்துக்கு கொடுத்துள்ளான்.
துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் தயாராக இருந்த நிலையில் அடுத்ததாக வெடி குண்டுகளை முழுமையாக தயாரிக்க ஆயத்தமாக இருந்தனர்.
‘டைம்பாம்’ வகை குண்டுகளை வைப்பதே அவர்களின் முக்கிய திட்டமாகும். இதற்காகத்தான் கடிகாரத்தை வாங்கி தயாராக வைத்து இருந்தனர்.
அந்த வெடிகுண்டுகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குவதற்கும் சாதனங்களை உருவாக்கி இருந்தனர்.
மேலும் சிலர் தற்கொலை படை பயங்கரவாதிகளாக மாறி தாக்குதல் நடத்துவதற்கும் தயாராக இருந்தனர். ஜனவரி மாதம் 26-ந் தேதி குடியரசு தினத்தை ஒட்டி முதல் கட்ட தாக்குதலை நடத்துவது அவர்களது திட்டமாகும்.
தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களை கண்டறிந்த அவர்கள் அந்த இடங்களுக்கு சென்று எந்த மாதிரி தாக்குதல் நடத்த வேண்டும் என்று முழுமையாக ஆய்வு செய்தனர்.
அதே போல் தலைவர்கள் மீது நடத்த வேண்டிய தாக்குதல் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு தயாராக இருந்தார்கள்.
குடியரசு தினத்தின் போது, நடத்தும் தாக்குதலை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்கும் வகையிலும் அடுத்த கட்ட தாக்குதலை நடத்துவதற்கும் அவர்கள் திட்டங்களை உருவாக்கி இருந்தார்கள்.
முதலாவது தாக்குதலை டெல்லியில் நடத்த திட்டமிட்ட அவர்கள் அதன் பிறகு நாடு முழுவதும் பல இடங்களிலும் தாக்குதல் நடத்துவதற்கும் முடிவு செய்து இருந்தனர்.
ஆனால், போலீஸ் வலையில் வசமாக சிக்கியதால் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
தற்போது முப்தி முகமது சுகாயில், அனஸ் யூனுஸ், ரஷீத் ஜாபர், சயீத், ரகீஸ் அகமது, சுபாயர் மாலிக், சயித் மாலிக், சாகிப் இப்தேகர், முகமது இர்சாத், முகமது ஆசம் ஆகிய 10 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
கைதானவர்களில் ரசீத் சாபர், சயீத் இருவரும் அண்ணன்- தம்பி ஆவர். இவர்களில் சயீத் அம்ரோகா நகரில் வெல்டிங் தொழில் செய்து வந்தார். அவர்தான் ராக்கெட் லாஞ்சர் தயாரித்து கொடுத்தார்.
முகமது ஆசம் என்பவர் டெல்லி சீலம்பூரில் ரசாயன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். அவர்தான் வெடி பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்.
போலீசார் டெல்லியில் சிலாம்பூரிலும், உத்தரபிரதேசத்தில் லக்னோ, அம்ரோகா, ஹபுர், மீரட் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினார்கள். மொத்தம் 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இவர்களுடன் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என கருதப்படுவதால் மேலும் சோதனைகள் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
சோமாலியாவில் அல்-ஷபாப் மற்றும் அல் கொய்தா பயங்கரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி, அரசுப் படைகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர். அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் சோமாலியா ராணுவத்திற்கு அமெரிக்க ராணுவம் உதவி புரிந்து வருகிறது. பயங்கரவாத முகாம்கள் மீது அமெரிக்க ராணுவம் வான்தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தலைநகர் மொகடிஷூவில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள பெலத் அமின் சவுத் பகுதியில் அல் ஷபாப் பதுங்கியிருந்த இடங்களை குறிவைத்து அமெரிக்க ராணுவம் சமீபத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை விமான தாக்குதல்களை நடத்தியது. விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கியதில், 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. பொதுமக்கள் தரப்பில் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் மொகடிஷூ மீது தாக்குதல் நடத்துவதற்காக பெலத் அமின் சவுத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை அல் ஷபாப் பயங்கரவாதிகள் பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
சோமாலியா மற்றும் ஆப்பிரிக்க ஒன்றிய படைகளுடன் அமெரிக்க படைகளும் இணைந்து கடந்த சில மாதங்களாக பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தரைவழி தாக்குதல்கள் மற்றும் வான்தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. #Somalia #USAirstrikes
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், புல்வாமா மாவட்டம் சர்னூ கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது.
சிறிது நேரம் நீடித்த இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது. ராணுவம் தரப்பில் ஏற்பட்ட சேத விவரம் குறித்து தகவல் வெளியாகவில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. #PulwamaEncouter #JKEncounter
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், டர்பத் மாவட்டம் கச் பகுதியில் ராணுவத்தினர் நேற்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களின் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் ராணுவ வாகனம் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தது. வாகனத்தில் இருந்த 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதேபோல் அதேபகுதியில் நடந்த என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #PakAttack #Baluchistan
கொழிஞ்சாம்பாறை:
அசாம் மாநிலம் கொக்குரு ஜார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தும்கேது பிரம்மா (வயது 35), மனு பத்தேரி (25), பிரிதம் பசுமதாரி (24). இவர்கள் 3 பேரும் போடோ பயங்கரவாதிகள். பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட இவர்களை அசாம் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர்கள் 3 பேரும் திடீரென மாயமானார்கள். பயங்கர குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட இந்த போடோ பயங்கரவாதிகளை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர்கள் கேரளாவில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அசாம் போலீசார் கேரள போலீசாரை தொடர்பு கொண்டு 3 போடோ பயங்கரவாதிகள் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வைத்து பிடித்து தருமாறு கேட்டுக்கொண்டனர்.
இதனையடுத்து போடோ பயங்கரவாதிகளை பிடிக்க எர்ணாகுளம் எஸ்.பி. (பொறுப்பு) பிரேம்மேந்திரநாத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் உதவி அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் மாநிலம் முழுவதும் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அசாம் போலீசாரால் தேடப்படும் போடோ பயங்கரவாதிகள் பெரும்பாவூர் மன்னூரில் ஒரு பிளைவுட் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுடன் வேலை செய்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து நேற்று மாறுவேடத்தில் சென்ற போலீசார் 3 பயங்கரவாதிகளையும் பிடித்து கைது செய்தனர்.
இது குறித்து அசாம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இன்று கேரள வர உள்ளனர். 3 போடோ பயங்கரவாதிகளையும் கேரள போலீசார் அசாம் போலீசாரிடம் ஒப்படைக்கிறார்கள்.
காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் ரெட்ஹனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், மாநில போலீசார் ஆகியோர் இணைந்து அந்த வீட்டை நள்ளிரவில் முற்றுகையிட்டனர்.
அவர்களை பார்த்ததும் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. வீடுகள் நிறைந்த பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
5 மணி நேரம் நடந்த இந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்கள் யார்? எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.
இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார். அங்கிருந்த ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.
இதேபோல மற்றொரு என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்தது.
புல்ஹமா மாவட்டம் டிரால் பகுதியை அடுத்த ஹபு என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்தில் 20 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #JK #MilitantsKilled
காஷ்மீரில் கடந்த வாரம் 2 வாலிபர்களை தீவிரவாதிகள் கடத்தி கொன்றனர். இதில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் பாணியில் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் காஷ்மீரில் முன்னாள் போலீஸ் அதிகாரியை தீவிரவாதிகள் கடத்தி கொன்றனர்.
காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தை சேர்ந்தவர் பசரத் அகமது. முன்னாள் சிறப்பு போலீஸ் அதிகாரி. அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் இவரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். அவருடன் அதே பகுதியை சேர்ந்த சகத் அகமது, ரியாஸ் அகமது ஆகியோரும் கடத்தப்பட்டனர். இவர்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதில் பசரத் அகமதுவை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். குண்டு துளைக்கப்பட்ட நிலையில் அவரது உடலை போலீசார் கண்டெடுத்தனர்.
கடத்தப்பட்ட சகித் அகமது, ரியாஸ் ஆகிய இருவரையும் தீவிரவாதிகள் விடுதலை செய்தனர். #JK #MilitantsAttack
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்