என் மலர்
நீங்கள் தேடியது "Afghan"
பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வரும் நிதியுதவியில் இருந்து 1.5 பில்லியன் டாலர் தொகை மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்துக்கு ஒதுக்க இருப்பதாக ராணுவ மந்திரி தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
மெக்சிகோ எல்லை வழியாக அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்ப வேண்டும் என்பது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கனவு திட்டமாகும்.
இதற்காக நிதி ஒதுக்கும்படி நாடாளுமன்றத்தில் டிரம்ப் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிப்பட்டதை தொடர்ந்து, அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதன் மூலம் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப தேவையான தொகையை ராணுவ நிதியில் இருந்து பெறமுடியும்.

இந்த நிலையில் பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வரும் நிதியுதவியில் இருந்து 1.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,500 கோடி) தொகை மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்துக்கு ஒதுக்க இருப்பதாக ராணுவ மந்திரி பேட்ரிக் சனாஹன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை எவ்வித பாதிப்பும் இல்லாமல் மாற்றியமைத்து, அதில் இருந்து 1.5 பில்லியன் டாலரை மெக்சிகோ எல்லையில் 120 மைல் தூரத்துக்கு சுவர் எழுப்புவதற்காக ஒதுக்கியுள்ளோம்” என தெரிவித்தார்.
மேலும், இந்த நிதியானது, முந்தைய ஆண்டில் பாகிஸ்தானுக்கு வழங்காமல் நிறுத்திவைத்த நிதியுதவி, நிறைவேற்றப்படாத திட்டங்களின் நிதி உள்பட பல்வேறு ஆதாரங்களில் இருந்து திரட்டப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
மெக்சிகோ எல்லை வழியாக அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்ப வேண்டும் என்பது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கனவு திட்டமாகும்.
இதற்காக நிதி ஒதுக்கும்படி நாடாளுமன்றத்தில் டிரம்ப் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிப்பட்டதை தொடர்ந்து, அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதன் மூலம் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப தேவையான தொகையை ராணுவ நிதியில் இருந்து பெறமுடியும்.

இதுபற்றி அவர் கூறுகையில், “பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை எவ்வித பாதிப்பும் இல்லாமல் மாற்றியமைத்து, அதில் இருந்து 1.5 பில்லியன் டாலரை மெக்சிகோ எல்லையில் 120 மைல் தூரத்துக்கு சுவர் எழுப்புவதற்காக ஒதுக்கியுள்ளோம்” என தெரிவித்தார்.
மேலும், இந்த நிதியானது, முந்தைய ஆண்டில் பாகிஸ்தானுக்கு வழங்காமல் நிறுத்திவைத்த நிதியுதவி, நிறைவேற்றப்படாத திட்டங்களின் நிதி உள்பட பல்வேறு ஆதாரங்களில் இருந்து திரட்டப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 34 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #Militantskilled
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், அரசு படையினருக்கும் இடையே தொடர்ந்து நீண்டகால போர் நீடித்து வருகிறது. தீவிரவாத குழுக்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அதிபர் விடுத்த அழைப்பு தோல்வியில் முடிந்தது. ஆனாலும் தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் அச்சா மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 27 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
இதேபோல், குஷ் டேபா மாவட்டத்தில் நடைபெற்ற மோதலில் 7 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 11 பயங்கரவாதிகள் காயமடைந்தனர்..
மேலும், இந்த சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 7 பேரும் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். #Militantskilled
ஆப்கானிஸ்தான் ராணுவ தாக்குதலில் தலீபான் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான முல்லா முகமது மற்றும் அவரது பாதுகாவலர் கொல்லப்பட்டனர். #AfghanAttack #Taliban
காபூல்:
ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பக்லான் மாகாணத்தில் தலீபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள பக்லான்-இ-மர்காஷி மாவட்டத்தில் ஆப்கான் ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த குகைகள் மற்றும் ஆயுதகிடங்குகள் மீது வான் வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் தலீபான் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான முல்லா முகமது மற்றும் அவரது பாதுகாவலர் கொல்லப்பட்டனர். ஆப்கான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பக்லான் மாகாணத்தில் தலீபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள பக்லான்-இ-மர்காஷி மாவட்டத்தில் ஆப்கான் ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த குகைகள் மற்றும் ஆயுதகிடங்குகள் மீது வான் வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் தலீபான் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான முல்லா முகமது மற்றும் அவரது பாதுகாவலர் கொல்லப்பட்டனர். ஆப்கான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்
காபூல்:
ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் கொன்று குவிக்கப்பட்ட பரிதாபம் அரங்கேறி உள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.
இதுபற்றி அந்தப் பகுதியை சேர்ந்த எம்.பி. முகமது ஹாசிம் அல்கோஜாய் கூறும்போது, “ஒரு வான்தாக்குதலில் 13 பேர் பலியாகினர். மற்றொரு வான்தாக்குதலில் 8 பேர் பலியாகினர். இவ்விரு தாக்குதல்களும் 8-ந் தேதி இரவு நடந்துள்ளது” என குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் கொன்று குவிக்கப்பட்ட பரிதாபம் அரங்கேறி உள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.
இதுபற்றி அந்தப் பகுதியை சேர்ந்த எம்.பி. முகமது ஹாசிம் அல்கோஜாய் கூறும்போது, “ஒரு வான்தாக்குதலில் 13 பேர் பலியாகினர். மற்றொரு வான்தாக்குதலில் 8 பேர் பலியாகினர். இவ்விரு தாக்குதல்களும் 8-ந் தேதி இரவு நடந்துள்ளது” என குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்ஹார் மாகாணத்தில் ராணுவத்தினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர். #ISMilitantsKilled
காபுல்:
ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சில முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு பொதுமக்களை கொடுமைப்படுத்துவதுடன் அங்கிருந்தவாறு பிறபகுதிகளில் வன்முறை தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களை கொத்துக் கொத்தாக கொன்று வருகின்றனர்.
இந்த பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டும் பணியில் உள்நாட்டு ராணுவ வீரர்களுடன் அமெரிக்கப் படையினரும் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் பல பகுதிகளில் சுமார் ஆயிரத்து ஐநூறு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் ஆப்கன் ராணுவத்தினர் இன்று வான்வெளி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். #ISMilitantsKilled
ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தில் போலீஸ் வாகன அணிவகுப்பின் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 22 போலீசார் கொல்லப்பட்டனர். #Afghanpolicekilled #Talibanambush #policekilled
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அங்குள்ள தலிபான் பயங்கரவாதிகள் போட்டி அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர். பல மாகாணங்களில் இவர்கள் கை ஓங்கியுள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் போலீசார் மற்றும் ராணுவ முகாம்களை குறிவித்து இவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர்.
இவர்களின் வன்முறைக்கு லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்களும் பலியாகியுள்ளனர். தலிபான்களின் ஆதிக்கத்தை வேரறுக்க அந்நாட்டு ராணுவம் 17 ஆண்டுகளாக எடுத்துவரும் நடவடிக்கைகள் பெரிய அளவிலான பலனை அளிக்கவில்லை.

இந்நிலையில், நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பரா மாகாணத்திக்குட்பட்ட ஜுவைன் மாவட்டத்தின் வழியாக சென்ற போலீஸ் வாகன அணிவகுப்பின் மீது நேற்று தலிபான் பயங்கரவாதிகள் அதிரடியாக வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.
இதில் 4 வாகனங்கள் நாசமாகின. அவற்றில் வந்த 22 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ராணுவ கிடங்கு மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 27 வீரர்கள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். #Afghanpolicekilled #Talibanambush #policekilled
ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தஹார் மாகாணத்தில் இன்று ராணுவ ஹெலிகாப்டர் தரையில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். #Afghanarmy #armyhelicopter #crashlanding
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய பகுதியில் இருந்து மருஃப் மாவட்டத்துக்கு ராணுவ வீரர்களை ஏற்றிவந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதி, நொறுங்கி தீபிடித்தது.

இதற்கிடையில் அந்த ஹெலிகாப்டரை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம் என்று அப்பகுதியில் உள்ள தலிபான் பயங்கரவாதிகள் அறிவித்துள்ளனர். #Afghanarmy #armyhelicopter #crashlanding
ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய பகுதியில் இருந்து மருஃப் மாவட்டத்துக்கு ராணுவ வீரர்களை ஏற்றிவந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதி, நொறுங்கி தீபிடித்தது.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததாக ராணுவ செய்தி தொடர்பாளர் ஜாவெத் கபூர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையில் 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும் 68 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். #Afghan #NationalDefense #SF #Afghanelectionrally
காபூல்:
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை தவிர ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்பட பல்வேறு பயங்கரவாத இயக்கங்களும் அங்கு காலூன்றி தாக்குதல் நடத்தி வருகின்றன. இவர்களின் கொட்டத்தை ஒடுக்க ஆப்கான் ராணுவம் போராடி வருகிறது.
இந்த நிலையில் ஆப்கான் தேசிய ராணுவப்படையினர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினர். அவர்கள் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதிகளை சுற்றிவளைத்து அதிரடி தாக்குதல்களை நடத்தினர்.

அதே சமயம் 120 போர் விமானங்கள் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான்தாக்குதல்களை நடத்தின.
ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் இந்த அதிரடி நடவடிக்கையில் 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும் 68 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். இவர்களில் 42 பேர் தரைவழி தாக்குதலிலும், 26 பேர் வான்தாக்குதலிலும் கொல்லப்பட்டதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 21 பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்ததாகவும், 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் அந்த தகவல்கள் கூடுதலாக தெரிவிக்கின்றன. #Afghan #NationalDefense #SF
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை தவிர ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்பட பல்வேறு பயங்கரவாத இயக்கங்களும் அங்கு காலூன்றி தாக்குதல் நடத்தி வருகின்றன. இவர்களின் கொட்டத்தை ஒடுக்க ஆப்கான் ராணுவம் போராடி வருகிறது.
இந்த நிலையில் ஆப்கான் தேசிய ராணுவப்படையினர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினர். அவர்கள் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதிகளை சுற்றிவளைத்து அதிரடி தாக்குதல்களை நடத்தினர்.

ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் இந்த அதிரடி நடவடிக்கையில் 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும் 68 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். இவர்களில் 42 பேர் தரைவழி தாக்குதலிலும், 26 பேர் வான்தாக்குதலிலும் கொல்லப்பட்டதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 21 பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்ததாகவும், 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் அந்த தகவல்கள் கூடுதலாக தெரிவிக்கின்றன. #Afghan #NationalDefense #SF
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புபடை வீரர்களுக்கும விடிய விடிய நீடித்த மோதலில் பாதுகாப்புபடை வீரர்கள் மொத்தம் 37 பேர் கொல்லப்பட்டனர். #Afghan #Taliban
காபூல்:
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவர்களின் கொட்டத்தை ஒடுக்க முடியாமல் ஆப்கான் வீரர்களும், நேட்டோ படை வீரர்களும் திணறி வருகிறார்கள்.
இந்தநிலையில் குண்டூஸ் மாகாணத்தின் தாஸ்தி ஆர்ச்சி மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடியில் நேற்றுமுன்தினம் இரவு பாதுகாப்புபடை வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த தலீபான் பயங்கரவாதிகள் பாதுகாப்புபடை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை மூண்டது. விடிய விடிய நீடித்த மோதலில் பாதுகாப்புபடை வீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதே போல் ஷஜ்வான் மாகாணத்தின் காம்யாப் மாவட்டத்தில் போலீஸ் படையினருக்கும் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் போலீசார் 8 பேர் உயிர் இழந்தனர். 6 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
சமான்கான் மாகாணத்தில் தாரா சுப் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் போலீசார் 14 பேர் பலியாகினர். சாரி புல் மாகாணத்தின் தலைநகர் சாரி புல்லில் உள்ள ராணுவ சோதனை சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 வீரர்கள் உயிர் இழந்தனர். அதே சமயம் ஆப்கானிஸ்தானின் பல்வேறு இடங்களில் நடந்த இந்த தாக்குதல்களில் தலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #Afghan #Taliban
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவர்களின் கொட்டத்தை ஒடுக்க முடியாமல் ஆப்கான் வீரர்களும், நேட்டோ படை வீரர்களும் திணறி வருகிறார்கள்.
இந்தநிலையில் குண்டூஸ் மாகாணத்தின் தாஸ்தி ஆர்ச்சி மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடியில் நேற்றுமுன்தினம் இரவு பாதுகாப்புபடை வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த தலீபான் பயங்கரவாதிகள் பாதுகாப்புபடை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை மூண்டது. விடிய விடிய நீடித்த மோதலில் பாதுகாப்புபடை வீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதே போல் ஷஜ்வான் மாகாணத்தின் காம்யாப் மாவட்டத்தில் போலீஸ் படையினருக்கும் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் போலீசார் 8 பேர் உயிர் இழந்தனர். 6 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
சமான்கான் மாகாணத்தில் தாரா சுப் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் போலீசார் 14 பேர் பலியாகினர். சாரி புல் மாகாணத்தின் தலைநகர் சாரி புல்லில் உள்ள ராணுவ சோதனை சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 வீரர்கள் உயிர் இழந்தனர். அதே சமயம் ஆப்கானிஸ்தானின் பல்வேறு இடங்களில் நடந்த இந்த தாக்குதல்களில் தலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #Afghan #Taliban
ஆப்கானிஸ்தான் நாட்டில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 5 பேர் உடல் சிதறி பலியாகினர்.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் லாகர் மாகாணத்தில் நேற்று கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர் என போலீசார் தெரிவித்தபர்.
விசாரணையில், நாட்டோ படைகள் சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் நன்கர்ஹர் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் என்னும் இடத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சீக்கியர்கள் உள்பட 19 பேர் பரிதாபமாக பலியானது குற்ப்பிடத்தக்கது.