search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IS"

    இலங்கையின் கல்முனை சாய்ந்தமருது பகுதியில் 15 பேர் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. #SriLankaAttacks #IS
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த வாரம் தேவாலயம் உள்பட பல்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 253 பேர் பலியாகினர். இதையடுத்து, ராணுவமும் போலீசாரும் பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர். நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
     
    இதைத்தொடர்ந்து இலங்கை முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை முடுக்கி விடப்பட்டது. இதில் பலர்  கைது செய்யப்பட்டனர். 



    இதற்கிடையே, இலங்கையின் கல்முனை சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு படை நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள வீட்டை சுற்றி வளைத்தனர். உள்ளே இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். சிறிது நேரத்தில் வீட்டில் குண்டு வெடித்து சிதறியது. அதிரடிப்படை தாக்குதலை சமாளிக்க முடியாமல், உள்ளே இருந்தவர்கள் தற்கொலைத் தாக்குதலை நடத்தியதில் 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் பலியாகினர்.

    இந்நிலையில், இலங்கை கல்முனை சாய்ந்தமருது பகுதியில் 15 பேர் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்புக் கொண்டது. #SriLankaAttacks #IS
    ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்ஹார் மாகாணத்தில் ராணுவத்தினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர். #ISMilitantsKilled
    காபுல்:

    ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சில முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு பொதுமக்களை கொடுமைப்படுத்துவதுடன் அங்கிருந்தவாறு பிறபகுதிகளில் வன்முறை தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களை கொத்துக் கொத்தாக கொன்று வருகின்றனர்.
     
    இந்த பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டும் பணியில் உள்நாட்டு ராணுவ வீரர்களுடன் அமெரிக்கப் படையினரும் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் பல பகுதிகளில் சுமார் ஆயிரத்து ஐநூறு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் ஆப்கன் ராணுவத்தினர் இன்று வான்வெளி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். #ISMilitantsKilled
    சிரியா நாட்டில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். #Syria #IS
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.எஸ். குழுவினரும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். இவர்களை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    சிரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற அரசு படைகள் ஆகியவையும் போரில் இறங்கி உள்ளன. சிரியாவில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் குண்டுகளுக்கு இரையாகி உள்ளனர்.
     
    இந்நிலையில், ஈராக் எல்லை அருகே டெயிர் அல் சோர் மாகாணத்தில் வசித்து வந்தவர்கள் மீது அமெரிக்க கூட்டுப் படையினர் இன்று வான்வழி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 30 பேர் பலியாகினர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து அங்கு மீட்புப் படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #Syria #IS
    சிரியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள அமெரிக்க ஆதரவு போராளிகள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 68-ஆக உயர்ந்துள்ளது. #ISAttack #Syria
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

    கிளர்ச்சியாளர்களில் சிலர் அமெரிக்க படைகளுக்கு ஆதரவாக உள்ளனர். அதே நேரத்தில் சிரியா அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல்வேறு பகுதிகளை அரசு படையினர் மீட்டு வருகின்றனர்.
     
    இதற்கிடையே, உள்நாட்டுப் போரால் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ள சிரியா நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினர்.

    இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 68-ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதால், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. #ISAttack #Syria
    ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலால் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Afghanistan #TalibanAttack
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசுக்கு எதிராக தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்து வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

    தலிபான் பயங்கரவாதிகளுடன் இணைந்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பும் அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன.

    இன்று இரண்டாம் நாள் வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், கிழக்கு நங்கர்கார் மாகாணத்தில் சாலையோரத்தில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்ததில் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என மாகாண கவர்னரின் செய்தித்தொடர்பாளர் அட்டஹுல்லா கொக்யானி தெரிவித்துள்ளார். #Afghanistan #TalibanAttack
    ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #IS #US #Afganistan
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் ஒரு சில பகுதிகளில் இருந்து வருகிறது. தலிபான், ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளை ஒடுக்க அந்நாட்டு பாதுகாப்பு படையும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு படைகளும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.

    அதன்படி, கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்க கூட்டுப்படைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ராணுவம் இணைந்து ஐ.எஸ் அமைப்பு பதுங்கி இருந்ததாக கருதிய இடங்கள் மீது பல்வேறு வித தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஐ.எஸ் இயக்கத்தின் தலைமை தளபதி அபு சயீத் உயிரிழந்ததாக அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஷா உசைன் தெரிவித்துள்ளார்.

    இதே தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் தலைவனாக செயல்பட்டு வந்த அபு சாட் எர்ஹாபி என்பவன் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. #IS #US #Afganistan
    ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு தலைமை வகித்த அபு சாட் எர்ஹாபி கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. #Afganistan #ISHeadKilled
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் ஒரு சில பகுதிகளில் இருந்து வருகிறது. தலிபான், ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளை ஒடுக்க அந்நாட்டு பாதுகாப்பு படையும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு படைகளும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.

    அதன்படி, ஐ.எஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதியில் ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் தலைவனாக செயல்பட்டு வந்த அபு சாட் எர்ஹாபி என்பவன் கொல்லப்பட்டான். மேலும், 10 ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும், பல்வேறு ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. #Afganistan #ISHeadKilled
    சமீப காலமாக ஐஎஸ் இயக்கம் சந்தித்து வரும் தோல்விகள் இறைவன் அளித்த சோதனை என்று அவ்வமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி தெரிவித்துள்ளார். #ISIS #AlBaghdadi
    டமாஸ்கஸ்:

    சில ஆண்டுகளுக்கு முன்னர் உலகை நடுங்க வைத்த ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் தற்போது பலத்த பின்னடவை சந்தித்து இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. இந்த இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி ரஷிய தாக்குதலில் இறந்து விட்டதாக இரண்டு முறை கூறப்பட்டது. 

    எனினும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அல் பக்தாதி உயிரோடு இருப்பதாக கூறின. கடந்த ஓராண்டாக அவரை பற்றிய செய்திகள் எதுவும் வெளியாகமல் இருந்த நிலையில், தற்போது அவர் பேசியதாக ஆடியோ வெளியாகியுள்ளது. 

    அதில் அவர் பேசுவதாவது, "ஐஎஸ் சமீபத்தில் பல தோல்விகளை சந்தித்துள்ளது. கடவுள் நம்மை சோதிக்கும் காலம் தான் இது. இந்தக் காலகட்டத்தை பொறுமையுடன் கையாள வேண்டும். பொறுமையோடு இருந்தால் இறைவன் நிச்சயம் நற்செய்தியை அறிவிப்பார். நமது இயக்கத்தினர் பசியுடனும் அச்சத்துடனும் தற்போது வாழ்கின்றனர். இது கடவுள் வகுக்கும் சோதனைக் காலம்'' என்று கூறியுள்ளார். 

    எனினும், இந்த ஆடியோவில் உள்ள குரல் அவருடையதுதானா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. 
    பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் துணை ராணுவ படையைச் சேர்ந்த 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். #ISattack #pakistanisoldierskilled
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தின் அதிகப்படியான வளங்களை ஒதுக்கக்கோரி சமீபகாலமாக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று மஸ்தூங் நகரின் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த துணை ராணுவ வீரர்கள் மீது பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையேயான துப்பாக்கிச்சூட்டில் 1 பயங்கரவாதி கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐஎஸ் அமைப்பின் தொடர்புடைய இணையதளத்தில் முகமது அல் குரசானி, ரித்வான் அல் குரசானி ஆகிய 2 பயங்கரவாதிகளே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. #ISattack #pakistanisoldierskilled
    இந்தோனேசியாவில் பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், பயங்கரவாதிகளுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. #Indonesiaparliament #tougherantiterrorlaw
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. சமீபத்தில் அந்நாட்டின் பிரசித்தி பெற்ற 3 தேவாலயங்களில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இந்நிலையில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை கடுமையாக்க அந்நாட்டு அரசு முன்வந்துள்ளது. இந்த புதிய சட்ட வரைவில், பயங்கரவாத அமைப்புகளில் இணைவோர், அமைப்பிற்காக ஆட்களை சேகரிப்போர் ஆகியோர் மீது காவல்துறையே நேரடியாக வழக்குப்பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்த புதிய சட்டவரைவுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தின் மூலம் பயங்கரவாத இயக்கங்களை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது. #Indonesiaparliament #tougherantiterrorlaw
    ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் மக்கள் அதிகம் கூடும் பூங்கா ஒன்றில் நேற்று இரவு தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.#Suicideattack
    பாக்தாத்:

    இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில், தற்போது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு மக்கள் அதிகம் கூடும் பூங்கா ஒன்றில் தற்கொலைப்படை மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சந்தேகத்துக்கு உரிய நபர் நுழையும்போதே காவல்துறையினர் அவரை தடுக்க முயன்றுள்ளனர். இருப்பினும் அவர்களை மீறி உள்ளே சென்ற அந்த நபர் தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான்' என தெரிவித்துள்ளனர்.

    மேலும், பூங்காவின் முன்பகுதியிலேயே அவன் வெடிகுண்டை வெடிக்கச்செய்ததால் பாதிப்புகள் குறைவு எனவும் போலீசார் கூறியுள்ளனர்.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், 16 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் வடக்கு மற்றும் தெற்கு ஈராக் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. #Baghdad #Suicideattack
    ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். #afganistan #Blastatstadium
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்கம் மேலோங்கி காணப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான் போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகிறது. மேலும், அவ்வப்போது தலிபான்களின் தாக்குதலில் பொதுமக்களும் காவல் அதிகாரிகளும் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது.

    இந்நிலையில், நேற்று இரவு ஜலாலாபாத் பகுதியில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. அப்போது, பயங்கரவாதிகள் நடத்திய ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 43-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்பாக ஆளுனர் மாளிகையின் அதிகாரி அட்டல்லா கோக்யானி கூறுகையில், ராக்கெட்டுகள் மூலம் அடுத்தடுத்து தொடர்ந்து 3 முறை தாக்குதல் நடைபெற்றதாகவும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    கடந்த வாரம், மாகாணத்தின் பாதுகாப்பு குறித்த செயல்பாடுகள் மோசமடைந்துள்ளதாக கூறி, மாகாண ஆளுனர் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் தலிபான்களை போன்று ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பும் வலுவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. #afganistan #Blastatstadium
    ×