search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Head"

    • கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று விசாரணை நடத்தினர்.
    • மணிகண்டன் என்ற மாற்று திறனாளி கொலை வழக்கிலும் குண்டர் சட்டத்தில் கைதானது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள குள்ளம்பட்டி பிரிவு ரோட்டில் விநாயகர் கோவில் உள்ளது.

    நேற்றிரவு 8 மணியளவில் இந்த பகுதியில் வாலிபர் ஒருவரின் தலை ஒன்று தனியாக துண்டிக்கப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் வீசப்பட்டு கிடந்தது. இருட்டான பகுதி என்பதால் சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு சென்றபோது தலை கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுபற்றி தெரிய வந்ததும் அந்த பகுதியில் வந்து சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன், வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலை செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கிடந்த வாலிபருக்கு 35 வயது இருக்கும் என தெரிய வந்தது. மேலும் துண்டிக்கப்பட்டு கிடந்த தலையில் இருந்து ரத்தம் வடிந்ததால் கொலை நடந்து சில மணி நேரமே ஆவது தெரியவந்தது. எனவே உடல் இந்த பகுதியில் தான் எங்காவது வீசி இருக்கலாம் என்று போலீசார் கருதினர். தொடர்ந்து அந்த வாலிபரின் தலையை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் குள்ளம்பட்டி, அக்ரஹாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாலிபரின் உடலை தேடினர். இன்று அதிகாலை அக்ரஹாரம் ஏரி கரையில் வாலிபரின் உடலை போலீசார் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்ய ப்பட்ட நபர் குள்ளம்பட்டி, வலசையூர், காட்டூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம்? என்று போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையினர் கொலையாளியை தேடினர். அப்போது அங்குள்ள வேகத்தடை அருகே போலீசார் சார்பில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் காரிப்பட்டியை அடுத்த கள்ளிக்காடு பகுதியை சேர்ந்த திருமலை (32) என்பவர் ரோட்டில் கிடந்த வாலிபரின் தலையை அங்கு வீசி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்ததால் உளறியபடியே இருந்தார். இதையடுத்து போலீசார் இன்று காலை அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். மேலும் சம்பவம் குறித்து அந்த பகுதியில் நேற்றிரவு போலீசார் விசாரணை நடத்திய போது பரபரப்பு தகவல்கள் வெளியானது, அதன் விவரம் வருமாறு-

    கொலை செய்யப்பட்ட நபர் அங்குள்ள மதுக்கடையில் மது வாங்கிய போது திருமலைக்கும், கொலை செய்யப்பட்ட வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், அப்போது அந்த நபர் திருமலையை தாக்கியதாகவும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் திருமலை வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து கழுத்தை அறுத்து அந்த வாலிபரை கொலை செய்து தலையை அங்கு வீசி சென்றதும் தெரியவந்தது.

    மேலும் போலீசாரிடம் சிக்கியுள்ள திருமலை வாழப்பாடியை சேர்ந்த ஒருவரை கொலை செய்துள்ளார். மேலும் அந்த பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற மாற்று திறனாளி கொலை வழக்கிலும் குண்டர் சட்டத்தில் கைதானது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சேலம் தலைமை தபால் அஞ்சல் நிலையத்தில் கடந்த மாதம் 7-ந் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
    • பதிவு தபால், விரைவு தபால் சேவை, அனைத்து விதமான பணப்பரிவர்த்தனைகள் (பணம் செலுத்துதல், பணம் எடுத்தல்), அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு சேவைகளை பெறலாம்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள சேலம் தலைமை தபால் அஞ்சல் நிலையத்தில் கடந்த மாதம் 7-ந் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, பதிவு தபால், விரைவு தபால் சேவை, அனைத்து விதமான பணப்பரிவர்த்தனைகள் (பணம் செலுத்துதல், பணம் எடுத்தல்), அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு சேவைகளை பெறலாம்.

    இதுதவிர, தற்பொழுது புதிதாக பெண்களுக்கு என மட்டுமே சிறப்பாக தொடங்கப்பட்டு உள்ள மகிலா சம்மான் சேமிப்பு பத்திரக்கணக்கும் (வட்டி விகிதம் 7.5 சதவீதம், இரண்டு ஆண்டுகள் வரை) தொடங்கும் வசதியும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் உள்ளது.

    இதுபோன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தபால் சேவைகளை சேலம் மாநகரில் இயங்கி வரும் முக்கிய தபால் அலுவலகங்களிலும் கொண்டு வருவதற்கான முயற்சி பரிசீலனையில் உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி க்கொள்ளுமாறு சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அருணாசலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • ரிஷிவந்தியம் ஒன்றியம் வாணாபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதியதாக தாலுகா பிரித்து கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் அறிவிப்பு செய்தார்.
    • புதியதாக உருவாக்கப்பட்ட வாணாபுரத்துக்கு அதே ஊரிலேயே தாலுகா தலைநகரமும் செயல்படும். வரும்

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரிஷிவந்தியம் ஒன்றியம் வாணாபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதியதாக தாலுகா பிரித்து கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் அறிவிப்பு செய்தார். அதன்படி புதியதாக உருவாக்கப்பட்ட வாணாபுரத்துக்கு அதே ஊரிலேயே தாலுகா தலைநகரமும் செயல்படும். வரும் மே மாதத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அதனை தொடங்கி வைக்கவும் உள்ளார்கள். அதேபோல் புதிய தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அலுவலகப் பணிகளுக்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு அதற்கான திட்ட அறிக்கையும் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் அளிக்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. மேலும் புதிய தாலுக்கா அமைப்பதற்கான அனைத்து பூர்வாங்க பணிகளும் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு உத்தரவின் பேரில் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் செய்து வருகின்றனர். ஆனால் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் சில விஷமிகள் வாணாபுரம் தாலுகாவின் தலைநகர் வேறெங்கோ செல்வதாக தவறான தகவல்களை பொதுமக்களிடத்தில் பரப்பி வருகின்றனர். இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கி றேன். தவறான தகவல் பரப்புவோர் மீது மாவட்ட காவல்துறையின் வாயிலாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கூறினார்.

    • ரவுடி தலை துண்டித்து கொலை செய்தவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    • முன் விரோதத்தில் அவரை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தே கிக்கின்றனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள பண்ணவயலைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மகன் முத்துப்பாண்டி (வயது 42). நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் முத்துப்பாண்டி செங்கமடை சாலையில் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி.க்கள் கணேஷ்குமார் (தேவகோட்டை), ராஜூ (ராமநாதபுரம்) மற்றும் போலீசார் சம்பவ இத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    தலை தனியாகவும், உடல் தனியாகவும் துண்டித்து கொடூரமாக கொலையுண்டு கிடந்த முத்துப்பாண்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொலையான முத்துப்பாண்டி மீது கொலை, கொள்ளை, கஞ்சா, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்ற வழக்கு தொடர்பாக சிறைக்கு சென்றிருந்த முத்துப்பாண்டி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மீண்டும் அவர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். முத்துப்பாண்டியால் பாதிக்கப்பட்டவர்கள் முன் விரோதத்தில் அவரை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனடிப்படையில் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    • சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு பகுதியில் வளைவில் திரும்பும் போது பஸ்சும்,மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கர சத்தத்துடன் மோதியது.
    • இந்த விபத்து குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகிரி:

    முத்தூரில் இருந்து ஈரோடு செல்வதற்காக தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் சேலத்தை சேர்ந்த ஆர்.சந்தோஷ் (வயது 24), பி.சந்தோஷ் (24) என்ற வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ஒரு வளைவில் திரும்பும் போது பஸ்சும்,மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் தூக்கி வீசப்பட்டதில் 2 பேரும் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஆர்.சந்தோஷ் இறந்து விட்டதாக கூறினர். மற்றொரு வாலிபருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆரோன் பிஞ்ச், டிராவிஸ் ஹெட், லபுஸ்சேக்னே ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை துபாயில் தொடங்குகிறது. ஆஸ்திரேலியா அணிக்கு விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் கேப்டனாக உள்ளார். மிட்செல் மார்ஷ் துணைக் கேப்டனாக உள்ளார்.


    டிராவிஸ் ஹெட்

    ஆஸ்திரேலியா அணியில் ஆரோன் பிஞ்ச், டிராவிஸ் ஹெட், லபுஸ்சேக்னே ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள். இதை டிம் பெய்ன் உறுதி செய்துள்ளார். அத்துடன் ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.


    மார்னஸ் லபுஸ்சேக்னே

    துபாய் டெஸ்டிற்கான ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஆரோன் பிஞ்ச், 2. உஸ்மான் கவாஜா, 3. மிட்செல் மார்ஷ், 4. ஷேன் மார்ஷ், 5. டிராவிஸ் ஹெட், 6. மார்னஸ் லபுஸ்சேக்னே. 7. டிம் பெய்ன், 8. மிட்செல் ஸ்டார்க், 9. நாதன்  லயன், 10. பீட்டர் சிடில், 11. ஹோலண்ட்.
    ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு தலைமை வகித்த அபு சாட் எர்ஹாபி கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. #Afganistan #ISHeadKilled
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் ஒரு சில பகுதிகளில் இருந்து வருகிறது. தலிபான், ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளை ஒடுக்க அந்நாட்டு பாதுகாப்பு படையும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு படைகளும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.

    அதன்படி, ஐ.எஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதியில் ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் தலைவனாக செயல்பட்டு வந்த அபு சாட் எர்ஹாபி என்பவன் கொல்லப்பட்டான். மேலும், 10 ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும், பல்வேறு ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. #Afganistan #ISHeadKilled
    ×