என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானில் காவல் நிலையம் மீது திடீர் தாக்குதல்- 6 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்13 Jan 2019 7:54 AM GMT (Updated: 13 Jan 2019 7:54 AM GMT)
ஆப்கானிஸ்தானில் காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் போலீசார் நடத்திய பதிலடியில் 6 பேர் கொல்லப்பட்டனர். #AfghanistanAttack
ஹீரத்:
ஆப்கானிஸ்தானின் ஹீரத் மாகாணம், புலே ரங்கினா பகுதியில் உள்ள காவல் நிலைய வளாகத்தினுள் நேற்று இரவு 3 பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர். காரில் வந்து இறங்கிய அவர்கள், காவல் நிலைய வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் புகார் கொடுக்க வந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பயந்து போன மக்கள் சிதறி ஓடினர்.
பயங்கரவாதிகளை நோக்கி சில போலீஸ்காரர்கள் துப்பாக்கியால் சுட்டு பதில் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக காவல் நிலைய வளாகம் போர்க்களமாக காட்சியளித்தது. இந்த சம்பவத்தில் 3 போலீஸ்காரர்கள், பொதுமக்கள் 2 பேர் மற்றும் ஒரு பயங்கரவாதி என 6 பேர் உயிரிழந்தனர். 3 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.
காவல் நிலையத்திற்குள் நுழைய முடியாமல் பின்வாங்கிய 2 பயங்கரவாதிகள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் விட்டுச் சென்ற காரில் வெடிகுண்டு இருந்தது. அதனை சிறப்பு காவல் படையினர் செயலிழக்கச் செய்தனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. #AfghanistanAttack
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X