search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் பதுங்கியிருந்த 3 போடோ பயங்கரவாதிகள் கைது
    X

    கேரளாவில் பதுங்கியிருந்த 3 போடோ பயங்கரவாதிகள் கைது

    கேரளாவில் பதுங்கியிருந்த 3 போடோ பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். #Militants #Militantsarrest

    கொழிஞ்சாம்பாறை:

    அசாம் மாநிலம் கொக்குரு ஜார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தும்கேது பிரம்மா (வயது 35), மனு பத்தேரி (25), பிரிதம் பசுமதாரி (24). இவர்கள் 3 பேரும் போடோ பயங்கரவாதிகள். பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட இவர்களை அசாம் போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் அவர்கள் 3 பேரும் திடீரென மாயமானார்கள். பயங்கர குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட இந்த போடோ பயங்கரவாதிகளை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் அவர்கள் கேரளாவில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அசாம் போலீசார் கேரள போலீசாரை தொடர்பு கொண்டு 3 போடோ பயங்கரவாதிகள் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வைத்து பிடித்து தருமாறு கேட்டுக்கொண்டனர்.

    இதனையடுத்து போடோ பயங்கரவாதிகளை பிடிக்க எர்ணாகுளம் எஸ்.பி. (பொறுப்பு) பிரேம்மேந்திரநாத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் உதவி அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் மாநிலம் முழுவதும் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அசாம் போலீசாரால் தேடப்படும் போடோ பயங்கரவாதிகள் பெரும்பாவூர் மன்னூரில் ஒரு பிளைவுட் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுடன் வேலை செய்து வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து நேற்று மாறுவேடத்தில் சென்ற போலீசார் 3 பயங்கரவாதிகளையும் பிடித்து கைது செய்தனர்.

    இது குறித்து அசாம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இன்று கேரள வர உள்ளனர். 3 போடோ பயங்கரவாதிகளையும் கேரள போலீசார் அசாம் போலீசாரிடம் ஒப்படைக்கிறார்கள்.

    Next Story
    ×