search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "meeting"

    • மாணவ- மாணவிகள் ஆசிரியர்களுடன் வாழ்க்கை நிகழ்வுகளை கலந்துரையாடினர்.
    • 20 ஆண்டுகள் கழித்து சந்தித்த இந்த நிகழ்வு எங்கள் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும்.

    நீடாமங்கலம்:

    நீடாமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2003-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு தங்களின் பள்ளிப்பருவ நினைவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.

    தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.

    பின்னர், மாணவ- மாணவிகள் ஆசிரியர்களுடன் வாழ்க்கை நிகழ்வுகளை கலந்துரையாடினர்.

    பின்னர், அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.

    தொடர்ந்து, அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

    இதுகுறித்து முன்னாள் மாணவர் அருண் கூறுகையில்:-

    ஒரே பள்ளியில் படித்த நாங்கள் அனைவரும் இன்று பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகிறோம்.

    அனைவரும் ஒன்றிணைந்து சந்திக்க வேண்டும் என்ற எங்களது முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

    20 ஆண்டுகள் கழித்து சந்தித்த இந்த நிகழ்வு எங்கள் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும் என்றார்.

    • திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 24ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.
    • விவசாயம் சார்ந்த தங்களது கோரிக்கை களுக்கு தீர்வு கண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 24ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற வுள்ளது.

    அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள், அரசின் மானியத்திட்டங்கள், மானியத்தில் கிடைக்கும் வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனை க்கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு குறித்த தொழில்நுட்பங்கள்,

    பட்டுப்புழு வளர்ப்பு மூலம் கூடுதல் வருமானம் பெற ஆலோசனைகள், முன்னோடி வங்கி மற்றும் கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு கடன் சம்பந்தப்பட்ட விளக்க ங்களும் அளிக்கப்பட வுள்ளது.

    எனவே இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு, விவசாயம் சார்ந்த தங்களது கோரிக்கை களுக்கு தீர்வு கண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    • அரியலூரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது
    • மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் என்று அறிவிப்பு

    அரியலூர், 

    அரியலூர் ராஜாளி நகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் மின்நுகர்வோர் குறை–தீர்க்–கும் நாள் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறுகிறது.

    எனவே மின் நுகர்வோர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயனடையுமாறு அரியலூர் செயற்பொறியாளர் அய்யனார் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • மாவட்ட கவுன்சிலருமான ரத்தினமங்கலம் கஜா என்ற கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • காயரம்பேடு ஊராட்சியில் 7 பூத் கமிட்டி நிர்வாகிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    கூடுவாஞ்சேரி:

    காட்டாங்கொளத்தூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அ. தி.மு.க. சார்பில் காரணைப் புதுச்சேரி, பெருமாட்டுநல்லூர் மற்றும் காயரம்பேடு ஆகிய ஊராட்சிகளில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ரத்தினமங்கலம் கஜா என்ற கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    காயரம்பேடு ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம். எல்.ஏ. தன்சிங், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் காட்டூர் கன்னியப்பன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், காயரம்பேடு ஊராட்சி மன்ற துணை தலைவர் திருவாக்கு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக பிரிவு செயலாளருமான செல்ல பாண்டியன் கலந்துகொண்டு பூத் கமிட்டி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் 11 பூத் கமிட்டி நிர்வாகிகளும், பெரு மாட்டுநல்லூர் ஊராட்சியில் 6 பூத் கமிட்டி நிர்வாகிகளும், காயரம்பேடு ஊராட்சியில் 7 பூத் கமிட்டி நிர்வாகிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    கிளை பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன், முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. மதன்சிங் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதில் வேங்கடமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, நிர்வாகிகள் ரங்கன், பொன்.தர்மராஜ், துளசிங்கம், கார்த்திக் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அதிகாரிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு
    • நகராட்சி தலைவர் உஷாவெங்கடேஷ் தலையிட்டு சமரசம்


    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் உஷாவெங்கடேஷ் தலைமை வகித்தார். ஆணையாளர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் காரமடை நகராட்சியில் தனியார் ஒப்பந்ததாரர் நிறுவனம் சரியான முறையில் குப்பைகளை அகற்றாததால் அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:

    விக்னேஷ் (பா.ஜ.க) : காரமடை நகராட்சியில் குப்பை எடுப்பதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. இதற்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் தலைவர் தான் பதில் கூற வேண்டும்.

    வனிதா (அ.தி.மு.க.): தூய்மை பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை எனக்கூறி தற்போது தூய்மை பணிகளை மேற் கொண்டு வரும் ஒப்பந்த தாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது பணி புரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் பலருக்கும் சம்பளம் போடவில்லை. பி.எப், இ.எஸ்.ஐ பிடிக்கப்படவில்லை. அவர்களுக்கு இதெல்லாம் கிடைக்குமா. தூய்மை பணிகளை எவ்வாறு மேற்கொள்ளப் போகிறோம்.

    நித்யா (தி.மு.க.): என் வார்டில் எந்த பணிகளும் நடப்பது இல்லை. எனது வார்டில் கோவில் கும்பாபிஷகம் தொடர்பாக புற்கள் வெட்ட ஆட்கள் வேண்டும் என கேட்டேன். ஆணையாளரிடம் தொலை பேசி வாயிலாக பேசும் போது அவர் தரக்குறைவாக பேசினார்.

    கோபமாக போன் இணைப்பை துண்டித்தார். இதுதான் நாகரீகமா? எப்படி பேசணும்னு தெரியாதா உங்களுக்கு. மேலும் என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் மிரட்டுகிறார். நடவடிக்கை எடுங்கள் பார்த்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதற்கு பதில் அளித்து ஆணையாளர் கூறும்போது, நான் அவரிடம் அநாகரிகமாக எதுவும் பேசவில்லை, அவர்தான் நகராட்சி ஊழியரை மிரட்டினார். கவுன்சிலராக இருந்தாலும் கூட நகராட்சி ஊழியரை எப்படி அவர் மிரட்டலாம். அதை தான் கேட்டேன் என்றார்.

    அப்போது கவுன்சிலர் நித்யாவிற்கு ஆதரவாக தி.மு.க., ம.தி.மு.க, சி.பி.எம் கவுன்சிலர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பெண் கவுன்சிலர் வார்டு தேவைக்காக கேட்கும் போது ஆணையாளர் எப்படி இப்படி பேசலாம் என வாக்குவாதம் முற்றியது.

    இதனால் ஆத்திரமடைந்த ஆணையாளர் மனோகரன் நான் பேசியது தவறு என்று நீங்கள் நினைத்தால் நான் இந்த மன்ற கூட்டத்தை விட்டு வெளியேறுகிறேன் என கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

    அப்போது இவருடன் சுகாதார ஆய்வாளர் சீனிவாசன், பொறியாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் வெளிநடப்பு செய்தனர்.

    அதன்பின் நகராட்சி தலைவர் உஷாவெங்கடேஷ் ஆணையாளர் மனோகரன் மற்றும் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் மன்ற கூட்டத்திற்கு அழைத்து வந்தார்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் தலைமையில் நடந்தது
    • பாராளுமன்ற தேர்தல் பணிகள், பூத் கமிட்டி குறித்து ஆலோசனை

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குன்னூரில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் தலைமை தாங்கினார். குன்னூர் நகர செயலாளர் ராமசாமி வரவேற்றார்.

    கூட்டத்தில் சட்டமன்ற தொகுதி பார்வையாளரும், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளருமான பாண்டி செல்வம், 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு தலைமை கழகத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.

    இதில் ஒன்றிய செயலாளர்கள் பிரேம்குமார், லாரன்ஸ், மாவட்டத் துணைச் செயலாளர் லட்சுமி, பேரூர் செயலாளர்கள் சஞ்சீவ், கிருஷ்ணகுமார், ரமேஷ், கண்ட்டோண்ட்மென்ட் நகரிய செயலாளர் மார்ட்டின், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பரமேஸ் குமார், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் பா.மு.வாசிம் ராஜா, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் பில்லன், சதக்கத்துல்லா ,சீலா கேத்தரின், செல்வம், காளிதாஸ் மற்றும் குன்னூர் நகர நிர்வாகிகள் தாஸ், முருகேசன், சாந்தா சந்திரன், ஜெகநாத்ராவ், மாவட்ட பிரதிநிதிகள் மணிகண்டன், பழனிச்சாமி, சார்லி, கருணாநிதி மாவட்ட ஆதிதிராவிடர் குழு அமைப்பாளர் ராம்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பத்மநாதன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் தலைமை கழக பேச்சாளர் ஜாகீர், குன்னூர் நகர தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஜெயராம் ராஜா, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பாக நிலை முகவர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் மேலூர் ஒன்றிய செயலாளர் லாரன்ஸ் நன்றி கூறினார்.

    • பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட திட்டப் பணிகளின் செயல்பாடுகள் மற்றும் தற்பொழுது நடைபெற்று வரும் புதிய திட்டப்பணிகள் குறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர் வழங்கப்படுவதை அலுவலர்கள் தொடர்ந்து உறுதி செய்திட வேண்டுமென இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட திட்டப் பணிகளின் செயல்பாடுகள் மற்றும் தற்பொழுது நடைபெற்று வரும் புதிய திட்டப்பணிகள் குறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி வடகிழக்கு பருவமழையையொட்டி சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளான மழைநீர் வடிகால் வசதி, சுகாதாரம், குடிநீர் விநியோகம், சாலை போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார்.

    குறிப்பாக, 12.90 சதுர கீலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி 20,498 மக்கள் தொகை கொண்டதாகும். பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் ஆத்தூர் - நகரசிங்கபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் உள்ளூர் நீர் ஆதாரம் மூலம் 1.552 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு தற்போது நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 76 லிட்டர் தினசதி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர் வழங்கப்படுவதை அலுவலர்கள் தொடர்ந்து உறுதி செய்திட வேண்டுமென இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் சாலை வசதிகளைப் பொறுத்தவரை பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 2022-2023 நிதியாண்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் வி.ஐ.பி நகர் பகுதியில் ரூ.2.93 கோடி மதிப்பீட்டிலும், பாலாண்டியூர் பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.96 கோடி மதிப்பீட்டிலும், நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2.98 கோடி மதிப்பீட்டிலும், முத்து ஹேவே நகர் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் என ஆக மொத்தம் 15.402 கிலோ மீட்டர் நீளத்தில், ரூபாய் 11.34 கோடி மதிப்பீட்டில் தார்சாலைகள் மற்றும் மழைநீர்வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் தெருவிளக்கு, குப்பைகள் சேகரித்து தரம் பிரித்தல் என பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள் ளப்பட்ட துடன், பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து உடனுக்குடன் பணிகளை செய்து முடித்திட வேண்டுமென அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதிஸ்ரீ, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியளார் துரை, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மகா விஷ்ணு பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கணேஷ்ராம், பேரூராட்சி செயல் அலுவலர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கியதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
    • பாக முகவர்கள் கூட்டத்தை வருகிற 22-ந் தேதிக்குள் முடிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் பாளை மகாராஜாநகரில் உள்ள கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் கிரகாம்பெல் தலைமை தாங்கினார். ராதாபுரம் தொகுதி பொறுப்பாளர் சுரேஷ், அம்பை தொகுதி பொறுப்பாளர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் கலந்துகொண்டு பேசினார்.

    கூட்டத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தை மாற்றி வருவதற்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கியதற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    கடந்த மாதம் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம், மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தல், நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வரும் நிர்வாகிகளுக்கு பாராட்டு, பாராளுமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 40 தொகுதிகளையும் வென்று இந்தியா கூட்டணி வெற்றிபெற உழைப்பது, பாக முகவர்கள் கூட்டத்தை வருகிற 22-ந் தேதிக்குள் முடிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் பொருளாளர் ஜார்ஜ் கோஷல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சித்திக், வக்கீல் பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர் தமயந்தி, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கிய எட்வின், போர்வெல் கணேசன், சுடலை கண்ணு, ஜோசப் பெல்சி, நகர செயலாளர் பிரபாகர பாண்டியன், பேரூர் செயலாளர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூரில், நாளை மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது
    • பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் கூட்டம், பெரம்பலூர் செயற்பொறியாளர் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

    பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம், என்று பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

    • நடிகர் விஷால், நடிகை பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி ஆகியோர் நடிக்கும் விஷால் 34 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட திரைபடத்தை டைரக்டர் ஹரி இயக்கி வருகிறார்.
    • இதனை கண்ட அமைச்சர் கே.என்.நேரு தனது காரை நிறுத்தி படப்பிடிப்பு நடைபெறுவதை பார்வையிட்டார்.

    திருச்சி

    நடிகர் விஷால், நடிகை பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி ஆகியோர் நடிக்கும் விஷால் 34 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட திரைபடத்தை டைரக்டர் ஹரி இயக்கி வருகிறார்.

    இத்திரைப்படத்தின் ஷூட்டிங், திருச்சி - சிதம்பரம் சாலை, சிறுமருதூர் அருகில் உள்ள கிராமத்தில் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருந்த போது,

    அந்த வழியாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சென்றார். காணக்கிளியநல்லூருக்கு சென்று கொண்டிருந்த அமைச்சரை கண்டதும், படப்பிடிப்பு குழுவினர் அமைச்சருக்கு வணக்கம் தெரிவித்தனர். இதனை கண்ட அமைச்சர் கே.என்.நேரு தனது காரை நிறுத்தி படப்பிடிப்பு நடைபெறுவதை பார்வையிட்டார்.

    அமைச்சர் கே.என்.நேரு வந்திருப்பதை அறிந்து அங்கு வந்த விஷால் அவரை வரவேற்றார். அவருடன் இயக்குனர் ஹரி, நடிகர் சமுத்திரகனியும் வரவேற்றனர். பின்னர் அமைச்சர் அவர்களுக்கு சால்வை அணிவித்து திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். மேலும் படப்பிடிப்பு குழுவினர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை கூறினார். இதனை தொடர்ந்து நடிகர் விஷால் உள்ளிட்டோர், அமைச்சர் நேருவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினர்.

    பின்னர் எந்த உதவியென்றாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி விட்டு அமைச்சர் நேரு புறப்பட்டு சென்றார். இந்த சந்திப்பின் போது திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் க. வைரமணி, மேற்கு மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மகரஜோதி வரை வழிபாட்டுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.
    • பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    தேனி:

    சபரிமலை அய்யப்பன் கோவில் கார்த்திகை முதல்நாள் முதல் மகரஜோதி வரை வழிபாட்டுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் தேக்கடியில் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர் ஷீபா ஜார்ஜ், தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கார்த்திகை முதல் நாள் முதல் மகரஜோதி வரை அய்யப்பன் கோவில் வழிபாட்டிற்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்பதால் பக்தர்களின் வசதி மற்றும் பாதுகா ப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    வெளியூர் மற்றும் வெளிமாநிலத்திலிருந்து வரும் வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நிறுத்தப்பட வேண்டும். மேலும் வாகனங்களில் முன்புறம் மற்றும் பின்புறம் உள்ள வாகன எண் பலகைகளை மறைக்காத வண்ணம் புகைப்படங்கள் மற்றும் மாலைகளை அணி வித்திருக்க வேண்டும்.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். வாடகை வாகனங்களில் அதிக அளவில் பக்தர்களை ஏற்றி செல்லக் கூடாது. பக்தர்கள் சாலை விதிகளை பின்பற்றி, குறிப்பிட்டுள்ள இடங்களில் மாற்று பாதைகளில் செல்ல வேண்டும்.

    மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் பசுமை சோதனை சாவடிகள் அமைக்கப்பட வேண்டும். பக்த ர்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு செல்ல அனு மதிக்க கூடாது. அவ்வாறு பக்தர்களால் கொண்டு வரப்படும் தடைசெய்ய ப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

    வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொரு ட்கள், மது, புகையிலை போன்ற பொ ருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க உரிய இடங்களில் விழிப்பு ணர்வு பதாகைகளை வைக்கப்பட வேண்டும். பக்தர்களின் பாதுகாப்பி ற்காக போதிய போலீசார் சுழற்சி முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.

    குறுவனூத்து மற்றும் எரச்சல் பாலம் அருகில் உள்ள நீர்த்தேக்கத்தில் பக்தர்களை குளிக்க அனுமதிக்க கூடாது. மேலும் பாலத்தின் இருபுறமும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட வேண்டும்.

    கம்பம் மற்றும் கூடலூர் நகராட்சி சார்பாக பக்தர்களுக்கு குடிநீர் வசதி, நடமாடும் கழிவறைகள் ஆகியன அமைக்கப்பட வேண்டும். தமிழக எல்லையில் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் சுண்ணாம்பு, பீனாயில் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி தக்க சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும். பக்தர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வீசப்படும் குப்பைகளை உடனுக்குடன் சுத்தம் செய்வதற்கு சுழற்சி முறையில் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

    அவசர நிகழ்வுகளுக்காக சுகாதாரத்துறையின் மூலம் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பயிற்சி பெற்ற மீட்பு குழுவினர் தயார் நிலையில் பணியமர்த்தப்பட வேண்டும்.

    தமிழ்நாடு மற்றும் கேரளா வருவாய்த்துறை, போக்குவரத்துத்துறை போலீசார் ஆகியோர் இணைந்து உரிய களப்பணி கள் மேற்கொண்டு முன்னே ற்பாடு பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

    இதில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீண் உமேஷ் டோங்கரே, துணை காவல் கண்காணி ப்பாளர் மதுகுமாரி, இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குரியாகோஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாட்டில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை ஒரு டிரில்லி யன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த, நிலையான வளர்ச்சிக்கான இலக்கு களில் கூட்டுறவு அமைப்புக ளின் பங்கு என்ற பிரதான பொருளில் கொண்டா டப்பட உள்ளது.
    • இதற்கு கூட்டுறவு சங்கங் களின் மண்டல இைணப்ப திவாளரும் கூட்டுறவு வார விழாக்குழு தலைவருமான கே.ராேஜந்திரபிரசாத் தலைமை வகித்தார்.

    புதுக்கோட்டை

    தமிழ்நாட்டில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை ஒரு டிரில்லி யன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த, நிலையான வளர்ச்சிக்கான இலக்கு களில் கூட்டுறவு அமைப்புக ளின் பங்கு என்ற பிரதான பொருளில் கொண்டா டப்பட உள்ளது.

    இதற்கு ஏதுவாக புதுக் கோட்டை மாவட்டத்தில் வருகின்ற 7 நாட்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச் சிகள், கருத்தரங்கம், இலவச சிறப்பு முகாம்கள், மரக் கன்று நடுதல்,

    கால்நடை சிகிச்சை முகாம், ரத்ததான முகாம், உறுப்பினர் சந்திப்பு கூட்டங் கள் மாணவ-மாணவிக ளுக்கு பரிசு வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிளான விழா நடத்து வது தொடர்பான ஆலோச னைக் கூட்டம் புதுக் கோட்டை மண்ட இணைப்ப திவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதற்கு கூட்டுறவு சங்கங் களின் மண்டல இைணப்ப திவாளரும் கூட்டுறவு வார விழாக்குழு தலைவருமான கே.ராேஜந்திரபிரசாத் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் புதுக் கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்ப திவாளரும் செயலாட்சியரும் கூட்டுறவு வாரவிழாக்குழு துணைத்தலைவருமான மு. தனலெட்சுமி மற்றும் வார விழாக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

    ×