search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூத் கமிட்டி"

    • மாவட்ட கவுன்சிலருமான ரத்தினமங்கலம் கஜா என்ற கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • காயரம்பேடு ஊராட்சியில் 7 பூத் கமிட்டி நிர்வாகிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    கூடுவாஞ்சேரி:

    காட்டாங்கொளத்தூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அ. தி.மு.க. சார்பில் காரணைப் புதுச்சேரி, பெருமாட்டுநல்லூர் மற்றும் காயரம்பேடு ஆகிய ஊராட்சிகளில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ரத்தினமங்கலம் கஜா என்ற கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    காயரம்பேடு ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம். எல்.ஏ. தன்சிங், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் காட்டூர் கன்னியப்பன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், காயரம்பேடு ஊராட்சி மன்ற துணை தலைவர் திருவாக்கு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக பிரிவு செயலாளருமான செல்ல பாண்டியன் கலந்துகொண்டு பூத் கமிட்டி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் 11 பூத் கமிட்டி நிர்வாகிகளும், பெரு மாட்டுநல்லூர் ஊராட்சியில் 6 பூத் கமிட்டி நிர்வாகிகளும், காயரம்பேடு ஊராட்சியில் 7 பூத் கமிட்டி நிர்வாகிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    கிளை பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன், முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. மதன்சிங் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதில் வேங்கடமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, நிர்வாகிகள் ரங்கன், பொன்.தர்மராஜ், துளசிங்கம், கார்த்திக் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தானில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கிளை நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் அ.தி.மு.க. சார்பில் சோழவந்தானில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வாடிப் பட்டி தெற்கு ஒன்றிய செய லாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார்.

    சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இனை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மாணிக் கம், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அனை வரையும் வரவேற்றனர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    இதில் சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி, முன்னாள் சேர்மன் முருகேசன்ஜூஸ் கடை கென்னடி, மன்னாடி மங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி, கிளை நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் இளைஞரணி செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி பணிகள் ஆய்வு குறித்த ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் நடந்தது.
    • கூட்டத்தில் பொன்தனபாலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் தென்காசி வடக்குமாவட்ட அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் பூத் கமிட்டி, மகளிர் குழு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை குழு அமைத்து வரும் பணிகள் ஆய்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில அண்ணா தொழிற்சங்க மாநில துணை செயலாளர் பொன்தனபாலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த், மாவட்ட அண்ணா தொழிற்சங்க மண்டல முன்னாள் செயலாளர் கந்தசாமிபாண்டியன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சண்முகையா நன்றி கூறினார்.

    • ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, செல்வ மோகன்தாஸ்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி, இளைஞர் இளம் பெண்கள் பாசறை, மகளிர்அணி அமைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ்பாண்டியன் ஆகியோர் தலைமையில் பாவூர்சத்திரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட பொருளாளர் லாட சன்னியாசி, பொதுக்குழு உறுப்பினர்கள் கசமுத்து, பாண்டிய ராஜ், அண்ணா தொழிற்சங்கம் கந்தசாமிபாண்டியன், சார்பணி மாவட்ட செயலாளர்கள், காத்தவராயன், சந்திரகலா, பிரேம்குமார், கிருஷ்ணசாமி, நெல்லை முகிலன், சுப்பையா என்ற ராஜ், சிவசீதாராம், வக்கீல் சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் சங்கரபாண்டியன், அமல்ராஜ், என். ஹெச்.எம்.பாண்டியன், ஜெயக்குமார், அருவேல்ராஜ், முருகேசன், சுப்பிரமணியன், பாலகிருஷ்ணன், இருளப்பன், நகர செயலாளர்கள் சுடலை, சக்திவேல், பேரூர் செயலாளர்கள் கணேஷ் தாமோதரன், கார்த்திக்குமார், முத்துராஜன், ஜெயராமன், சுப்பிரமணியன், வில்சன், சங்கர், பூத் கமிட்டி அமைக்கும் பொறுப்பாளர்கள் பாலமுருகன், ராமசுப்பிரமணியன், சாமி ஆசாரி, பரசுராமன், வக்கீல்கள் செல்லத்துரை பாண்டியன், ரங்கராஜ், சதீஷ்குமார், சாந்தகுமார், ராமச்சந்திரன், ஜோதி முருகன், மாவட்ட மாணவரணி பொருளாளர் சேர்மப்பாண்டி, கவுன்சிலர் உமா மகேஸ்வரன் மற்றும் ராமமூர்த்தி, ஜெயபால கண்ணன், குணம் என்ற உத்தர குண பாண்டியன், ஐவராஜா, தமிழ் என்ற ராமசாமி, மணி, சுந்தர், குத்தாலிங்கம், பாலமுருகன், பாஸ்கர், சேவியர் ரஜினி, ராசு, தங்கச்சாமி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சாமிதோப்பில் நடைபெற்றது.
    • சிறப்பாக செயல்பட்டு வரும் ஒன்றிய செயலாளர் பாபுவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

    தென்தாமரைகுளம்:

    சாமிதோப்பு, கரும்பாட்டூர், வடக்கு தாமரைகுளம் ஆகிய ஊராட்சிகளின்தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சாமிதோப்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தலைமை தாங்கினார். தொகுதி பார்வையாளர் நம்பி முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேயர் மகேஷ் கலந்துகொண்டு பேசினார். மேலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒன்றிய செயலாளர் பாபுவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

    இதில் சாமிதோப்பு தலைமைபதி குருவும், தி.மு.க.வக்கீலுமான ஜனா யுகேந்த், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அகஸ்தீசன், துணை அமைப்பாளர்கள் பொன் ஜான்சன், தமிழன் ஜானி, வடக்கு தாமரைகுளம் பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம் பிள்ளை, மாவட்ட பிரதிநிதி தமிழ்மாறன், நிர்வாகி தாமரை பிரதாப், கரும்பை மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பூத்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
    • ஆய்வின்போது பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்டம் மானூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு பூத் கமிட்டி அமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி, முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆலோசனை குழு அமைத்து நிர்வாகிகளை சந்திப்பது, பூத்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    அதன்பேரில் மானூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சரும், மகளிர் அணி துணை செயலாளருமான ராஜலெட்சுமி தலைமையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு நடைபெற்றது. தொடர்ந்து பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பூத் கமிட்டி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட குருக்கள்பட்டி செல்வம், இளைஞர் அணி நிர்வாகி மேல இலந்தைக்குளம் செந்தில் குமார், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே திருவேடகம் மன்னாடி மங்கலம் குருவித்துறை தாமோதரன் பட்டி இரும்பாடி கருப்பட்டி நாச்சிகுளம் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் அந்தந்த ஊராட்சி கிராமத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம், யூனியன் பெருந்தலைவர் மகாலட்சுமி, ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன் சிலர் அகிலா ஜெயக்குமார், மகளிரணி மாவட்ட செய லாளர் லட்சுமி, வடக்கு ஒன்றிய செயலாளர் காளி தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத்தலைவர் முனியாண்டி வரவேற்றார்.

    திருவேடத்தில் நடந்த பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாவட்டச் செயலாளர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.

    திருவேடகம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணி என்ற பெரியசாமி முள்ளிப் பள்ளம் கிராமத்தில் சேது முன்னாள் ஒன்றிய கவுன் சிலர் பாண்டியம்மாள், மன்னாடிமங்கலம் கிரா மத்தில் கிளைச் செயலாளர் ராஜபாண்டி, குருவித்துறை கிராமத்தில் மகளிரணி வனிதா உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மேற்கு தெற்கு ஊராட்சி ஒன்றியம் அரியூர் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் 2024 நாடாளு மன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

    இதில் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோ சனை வழங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. க்கள் தமிழரசன், சரவணன், கருப்பையா, மாணிக்கம், அம்மா பேரவை நிர்வாகி வெற்றி வேல், மாவட்ட பொரு ளாளர் திருப்பதி, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச்செயலாளர் ஜெயச்சந்திரமணியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பொதும்பு, அதலை உள்ளிட்ட பல கிராமங்களில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    • எஞ்சிய 30 சதவீத பணிகளை விரைந்து முடிக்கப்படும்.
    • தொகுதி பங்கீடுகள் தொடர்பாக வலைத்தளங்களில் உலா வரும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை.

    சென்னை:

    தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்தும் பணிகளை முன்னெடுத்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் சுமார் 65 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் தி.மு.க.- அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுக்கு பூத்கமிட்டிகள் முழு அளவில் பலமாக இல்லை என்று கூறப்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் கட்சிகளின் பலம், கேட்கும் தொகுதிகளில் அந்த கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கை பொறுத்தே தொகுதிப்பங்கீடு இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் ஆய்வு செய்ய உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    காங்கிரசில் 70 சதவீதம் அளவுக்கு பூத் கமிட்டி அமைக்கப்பட்டுவிட்டது. எஞ்சிய 30 சதவீத பணிகளை விரைந்து முடிக்கப்படும்.

    இதற்காக அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறேன். அடுத்த மாதம் 1-ந்தேதி திருவள்ளூர், 8-ந்தேதி தென்காசி, விருது நகர், 14-ந்தேதி கன்னியாகுமரி, 28-ந்தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி தொகுதிகளில் ஆய்வு கூட்டங்கள் நடைபெறுகிறது. காலியாக இருக்கும் பூத் கமிட்டிகள் விரைவில் அமைக்கப்படும். இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. தொகுதி பங்கீடுகள் தொடர்பாக வலைத்தளங்களில் உலா வரும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை. இது பற்றி எங்கள் கட்சி தலைமையும், தி.மு.க. தலைமையும் உரிய நேரத்தில் பேசி முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைப்பு கூட்டம் நடந்தது.
    • அதிகளவில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் ஒன்றியம் வளநாடு, செங்கப்படை ஆகிய கிராமங்களில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைம யில் பூத் கமிட்டி அமைக்கப் பட்டன. வளநாடு கிரா மத்தில் நடந்த பூத் கமிட்டி அமைக்க நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனிய சாமி தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாவாட்ட செயலாளர் சுந்தர பாண்டியன் முன்னிலை வகித்தார். வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றதலைவரும், முதுகுளத்தூர் ஒன்றிய துணைச் செயலாளருமான செந்தில்குமார் வரவேற்றார். பூத்கமிட்டி உறுப்பி னர்களுக்கு நோட்டுகளை வழங்கி மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசிய தாவது:

    தி.மு.க.ஆட்சியில் விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு என வரிகளை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கிறது. நகர் பகுதிகளில் 20 ஆயிரம் சம்பாதிப்பவர்கள் கூட குடும்பம் நடத்த முடியாமல் அல்லல்பட்டு வருகின்றனர். கனிமொழி எம்.பி.தேர்தலின்போது மதுவை ஒழிப்போம் என்றார். ஆனால் அதிகளவில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் முது குளத்தூர் நகர் செயலாளர் ஷங்கரபாண்டியன், அபிராமம் கர்ணன், கண்ணன், பூசேரி சதிஸ் மிக்கேல், முத்துமணி, கருப்பசாமி, கவுன்சிலர் அர்ச்சுனன் , சித்திரைவேலு, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு
    • முதல் முறையாக ஒரு பெண் பேரூர் செயலாளராக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நியமனம் செய்தார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சி 11-ம் வார்டு பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் வடசேரியில் நடந்தது.

    கூட்டத்திற்கு மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாநில எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் கிருஷ்ன தாஸ், பகுதி கழக செய லாளர்கள் ஜெயகோபால், முருகேஷ்வ ரன், கவுன்சிலர்கள் அக்யா கண்ணன், கோபாலசுப்பிர மணியன், அணி செயலாளர் சுகுமாரன், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் பேசியதாவது:-

    நாகர்கோவில் மாநகரத் தில் நான்கு பகுதி செய லாளர் உள்ளனர். வடக்கு பகுதி செயலாளராக தமிழகத்திலேயே ஒரு பெண், அதாவது நாகர்கோவில் வடக்கு பகுதி செயலாளராக மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா நியமனம் செய்யப் பட்டுள்ளார். ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத் தில் தான் முதல் முறையாக ஒரு பெண் பேரூர் செயலாளராக மறைந்த முதல்-அமைச்சர் ஜெய லலிதா நியமனம் செய்தார்.

    அவர் சிறப்பாக செயல்பட்டு மேல் பதவியை அடைந்துள்ளார். மதுரையில் அ.தி.மு.க. மாநாடு வெற்றி பெற்றதை தொடர்ந்து சென்னையில் ஸ்ரீலிஜா எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அப்போது ஸ்ரீலிஜாவுக்கு நாகர்கோவில் சட்டமன்ற வேட்பாளராக நிற்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் உள்ள வடக்கு மண்டலத்தில் 70 பூத்கள் உள்ளது. அந்த 70 பூத்களிலும் பூத் கமிட்டி அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் தொகுதியில் உள்ள ராஜாக்கமங்கலம் ஒன்றியம் மற்றும் நாகர்கோவில் மாநகர பகுதி என நாகர்கோவில் தொகுதியில் மொத்தம் 275 பூத்கள் உள்ளது.

    ஒவ்வொரு பூத்-க்கும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் செய்து கட்சியை பலப்படுத்த வேண்டும். தி.மு.க. ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல், மணல் கொள்ளை, சட்ட ஒழுங்கு சீர்கேடு ஆகியுள்ளது. தமிழகத்திற்கு எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சி மலரும் என்பதில் சந்தேகம் இல்லை. கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. பலமாக உள்ளது. தற்பொழுது பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளது. பாராளுமன்றத்தில் பா.ஜ.க. வேட்பாளர் களம் இறங்கினால் அவருடன் நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். ஒற்றுமையாக பணியாற்றினால் தான் நாம் வெற்றி பெற முடியும். எடப்பாடி பழனிசாமி மீது எந்த வழக்கும் இல்லை. அதனால் தான் அவர் தலைநிமிர்ந்து நிற்கிறார்.

    தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடந்து வருகிறது. நாகர்கோ வில் மாநகராட்சியில் பல பிரச்சினைகள் உள்ளது. சாலைகள் மிகவும் மோசம டைந்தது. பழுதடைந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்ட முடிய வில்லை. கட்சியில் உழைக் கின்றவர்களுக்கு பதவி தேடி வரும். உழைப்பின் மூலம் உயர்ந்தவர்கள் அ.தி.மு.க. வில் அதிகமானோர் உள்ள னர். கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்கள் யாராக இருந்தாலும் மேயர், எம்.எல்.ஏ., நாடாளுமன்ற உறுப்பினராகலாம். எனவே கட்சி நிர்வாகிகள் பூத் கமிட்டியை வலுப்படுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • நிர்வாகிகள் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் திருவாடானை சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினரும், நகர் மன்ற உறுப்பினருமான ராஜாராம் பாண்டியன் கோபால் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பா ளர்களாக காங்கிரஸ் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ராமசாமி, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண் டோ, திருவாடா னை தொகுதி எம்.எல்.ஏ. ராம.கருமாணிக்கம், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்லதுரை அப்துல்லா, மாவட்ட பஞ்சாயத்து துணை சேர்மன் மாவீரன் வேலுச்சா மி, மாநிலச் செயலாளர் ஆனந்தகுமார், மூத்த நிர்வாகிகள் துல்கீப் கான், ஆர்ட் கணேசன், காவனூர் கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் தலைவர் காருகுடி சேகர் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் கோடனூர் கணேசன், தட்சிணா மூர்த்தி, மனோகரன், சுப்பிர மணியன், அன்வர் அலி நத்தர், கந்தசாமி, சேது பாண்டியன், கிருஷ்ண மூர்த்தி, சுப்பிரமணி, சுரேஷ் காந்தி, நகர் காங்கிரஸ் தலைவர்கள் கோபி, ராஜீவ் காந்தி, பேரூர் காங்கிரஸ் தலைவர்கள் காத்த ராஜா, முகமது காசிம் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி தலைவர்கள், மாவட்ட துணை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவாடானை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.

    ×