search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் கூட்டுறவு வார விழா ஆலோசனை கூட்டம்
    X

    புதுக்கோட்டையில் கூட்டுறவு வார விழா ஆலோசனை கூட்டம்

    • தமிழ்நாட்டில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை ஒரு டிரில்லி யன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த, நிலையான வளர்ச்சிக்கான இலக்கு களில் கூட்டுறவு அமைப்புக ளின் பங்கு என்ற பிரதான பொருளில் கொண்டா டப்பட உள்ளது.
    • இதற்கு கூட்டுறவு சங்கங் களின் மண்டல இைணப்ப திவாளரும் கூட்டுறவு வார விழாக்குழு தலைவருமான கே.ராேஜந்திரபிரசாத் தலைமை வகித்தார்.

    புதுக்கோட்டை

    தமிழ்நாட்டில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை ஒரு டிரில்லி யன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த, நிலையான வளர்ச்சிக்கான இலக்கு களில் கூட்டுறவு அமைப்புக ளின் பங்கு என்ற பிரதான பொருளில் கொண்டா டப்பட உள்ளது.

    இதற்கு ஏதுவாக புதுக் கோட்டை மாவட்டத்தில் வருகின்ற 7 நாட்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச் சிகள், கருத்தரங்கம், இலவச சிறப்பு முகாம்கள், மரக் கன்று நடுதல்,

    கால்நடை சிகிச்சை முகாம், ரத்ததான முகாம், உறுப்பினர் சந்திப்பு கூட்டங் கள் மாணவ-மாணவிக ளுக்கு பரிசு வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிளான விழா நடத்து வது தொடர்பான ஆலோச னைக் கூட்டம் புதுக் கோட்டை மண்ட இணைப்ப திவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதற்கு கூட்டுறவு சங்கங் களின் மண்டல இைணப்ப திவாளரும் கூட்டுறவு வார விழாக்குழு தலைவருமான கே.ராேஜந்திரபிரசாத் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் புதுக் கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்ப திவாளரும் செயலாட்சியரும் கூட்டுறவு வாரவிழாக்குழு துணைத்தலைவருமான மு. தனலெட்சுமி மற்றும் வார விழாக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

    Next Story
    ×