search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகரஜோதி வழிபாடு"

    • மகரஜோதி வரை வழிபாட்டுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.
    • பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    தேனி:

    சபரிமலை அய்யப்பன் கோவில் கார்த்திகை முதல்நாள் முதல் மகரஜோதி வரை வழிபாட்டுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் தேக்கடியில் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர் ஷீபா ஜார்ஜ், தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கார்த்திகை முதல் நாள் முதல் மகரஜோதி வரை அய்யப்பன் கோவில் வழிபாட்டிற்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்பதால் பக்தர்களின் வசதி மற்றும் பாதுகா ப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    வெளியூர் மற்றும் வெளிமாநிலத்திலிருந்து வரும் வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நிறுத்தப்பட வேண்டும். மேலும் வாகனங்களில் முன்புறம் மற்றும் பின்புறம் உள்ள வாகன எண் பலகைகளை மறைக்காத வண்ணம் புகைப்படங்கள் மற்றும் மாலைகளை அணி வித்திருக்க வேண்டும்.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். வாடகை வாகனங்களில் அதிக அளவில் பக்தர்களை ஏற்றி செல்லக் கூடாது. பக்தர்கள் சாலை விதிகளை பின்பற்றி, குறிப்பிட்டுள்ள இடங்களில் மாற்று பாதைகளில் செல்ல வேண்டும்.

    மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் பசுமை சோதனை சாவடிகள் அமைக்கப்பட வேண்டும். பக்த ர்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு செல்ல அனு மதிக்க கூடாது. அவ்வாறு பக்தர்களால் கொண்டு வரப்படும் தடைசெய்ய ப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

    வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொரு ட்கள், மது, புகையிலை போன்ற பொ ருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க உரிய இடங்களில் விழிப்பு ணர்வு பதாகைகளை வைக்கப்பட வேண்டும். பக்தர்களின் பாதுகாப்பி ற்காக போதிய போலீசார் சுழற்சி முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.

    குறுவனூத்து மற்றும் எரச்சல் பாலம் அருகில் உள்ள நீர்த்தேக்கத்தில் பக்தர்களை குளிக்க அனுமதிக்க கூடாது. மேலும் பாலத்தின் இருபுறமும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட வேண்டும்.

    கம்பம் மற்றும் கூடலூர் நகராட்சி சார்பாக பக்தர்களுக்கு குடிநீர் வசதி, நடமாடும் கழிவறைகள் ஆகியன அமைக்கப்பட வேண்டும். தமிழக எல்லையில் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் சுண்ணாம்பு, பீனாயில் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி தக்க சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும். பக்தர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வீசப்படும் குப்பைகளை உடனுக்குடன் சுத்தம் செய்வதற்கு சுழற்சி முறையில் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

    அவசர நிகழ்வுகளுக்காக சுகாதாரத்துறையின் மூலம் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பயிற்சி பெற்ற மீட்பு குழுவினர் தயார் நிலையில் பணியமர்த்தப்பட வேண்டும்.

    தமிழ்நாடு மற்றும் கேரளா வருவாய்த்துறை, போக்குவரத்துத்துறை போலீசார் ஆகியோர் இணைந்து உரிய களப்பணி கள் மேற்கொண்டு முன்னே ற்பாடு பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

    இதில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீண் உமேஷ் டோங்கரே, துணை காவல் கண்காணி ப்பாளர் மதுகுமாரி, இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குரியாகோஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×