search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் 24-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல்லில் 24-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

    • திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 24ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.
    • விவசாயம் சார்ந்த தங்களது கோரிக்கை களுக்கு தீர்வு கண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 24ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற வுள்ளது.

    அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள், அரசின் மானியத்திட்டங்கள், மானியத்தில் கிடைக்கும் வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனை க்கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு குறித்த தொழில்நுட்பங்கள்,

    பட்டுப்புழு வளர்ப்பு மூலம் கூடுதல் வருமானம் பெற ஆலோசனைகள், முன்னோடி வங்கி மற்றும் கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு கடன் சம்பந்தப்பட்ட விளக்க ங்களும் அளிக்கப்பட வுள்ளது.

    எனவே இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு, விவசாயம் சார்ந்த தங்களது கோரிக்கை களுக்கு தீர்வு கண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×