search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madhya Pradesh Assembly Election"

    • மத்திய பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ளது.
    • அங்கு ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ், பாஜக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    போபால்:

    மத்திய பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. ஆட்சியைக் கைப்பற்றுவதில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    இதற்கிடையே, 230 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி சமீபத்தில் அறிவித்தது.

    இந்நிலையில், தலைநகர் போபாலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல் மந்திரியும், மாநில தலைவருமான கமல்நாத் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.

    500 ரூபாய்க்கு கியாஸ் சிலிண்டர், பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது, வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    • 5 மாநிலங்களில் சட்ட பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
    • வாக்கு செலுத்திவிட்டு வந்தால் 10 சதவீதம் சலுகை என்றும் அறிவித்துள்ளன.

    போபால்:

    மக்களவை தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்ட பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

    அதன்படி, சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. மற்ற மாநிலங்களில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மத்தியப்பிரதேசத்தில் நவம்பர் 17, மிசோரமில் நவம்பர் 7, ராஜஸ்தானில் நவம்பர் 23, தெலங்கானாவில் நவம்பர் 30-ல் தேர்தல் நடத்தப்படுகிறது. 5 மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்படும்.

    இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் வாக்குப்பதிவை ஊக்குவிக்க உணவகங்கள் புதுமையான முயற்சியை அறிவித்துள்ளன. அதன்படி நவம்பர் 17ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு அன்று, காலை 9 மணிக்குள் வாக்கு செலுத்திவிட்டு வருபவர்களுக்கு போஹா, ஜிலேபி அடங்கிய காம்போ இலவசமாக வழங்கப்படும் என்று இந்தூரில் '56 சப்பன் துக்கன்' எனும் பல்வேறு உணவுவகைகள் விற்கும் உணவகங்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

    அதற்கு பின் வாக்கு செலுத்திவிட்டு வந்தால் 10 சதவீதம் சலுகை என்றும் அறிவித்துள்ளன. மக்களை வாக்களிக்க ஊக்குவிப்பதற்காக இந்த சலுகையை அறிவித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

    • மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • பா.ஜ.க. ஆட்சியில் ஒன்றரை லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என பிரியங்கா குற்றம்சாட்டினார்.

    போபால்:

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் 17-ம் தேதி சட்டசபை தேர்தல்நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மத்திய பிரதேச மாநிலம் மண்ட்லா மாவட்டத்தில் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    சமீபத்தில் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், இதர பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி. ஆகியோர் மொத்த மக்கள் தொகையில் 84 சதவீதம் இருப்பதாக தெரியவந்தது. ஆனால், அரசு வேலைவாய்ப்பில் அந்த சமூகத்தினர் மிகக் குறைவாகவே உள்ளனர். எனவே, அவர்களின் துல்லியமான எண்ணிக்கையை தெரிந்து கொள்ளவும் அவர்களுக்கு நீதி வழங்கவும் நாடுதழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

    மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வின் 18 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

    தேர்தல் வரும்போதுதான் மக்களை நினைவுபடுத்தி, ஏதேனும் திட்டங்களை அறிவிப்பார்கள்.

    பா.ஜ.க. ஆட்சியில் ஒன்றரை லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

    மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

    சிலிண்டர் ரூ.500-க்கு விற்கப்படும். பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும்.

    100 யூனிட்வரை இலவச மின்சாரமும், 200 யூனிட் மின்சாரம் பாதி விலைக்கும் வழங்கப்படும். 5 குதிரை சக்திவரை கொண்ட மோட்டார் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்படும்.

    முதல் வகுப்பு முதல் 12-ம்வகுப்புவரை இலவச கல்வி அளிக்கப்படும்.

    மேலும், முதல் வகுப்பு முதல் 8-ம்வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு மாதத்துக்கு ரூ.500-ம், 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.ரூ.1,000-ம், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிப்பவர்களுக்கு ரூ.1,500-ம் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.

    • ரூ.19,620 கோடிக்கு வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார்
    • எதிர்கட்சிகளிடம் வளர்ச்சி திட்டம் எதுவும் இல்லை என்றார் மோடி

    மத்திய பிரதேச மாநிலத்தின் 230 இடங்களை கொண்ட சட்டசபைக்கு அடுத்த மாத இறுதிக்குள் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அங்கு பா.ஜ.க.வின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜ.க.வை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியமைக்க தீவிரமாக போராடி வருகிறது.

    இந்நிலையில், ம.பி.யில் உள்ள குவாலியர் நகருக்கு இன்று வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரூ.19,260 கோடிக்கான வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைத்து பொது மக்களிடையே உரையாற்றினார்.

    அக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:

    மத்திய அரசிலும் மாநில அரசிலும் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதை "இரட்டை எஞ்சின்" (double engine) என எதிர் கட்சியினர் கிண்டல் செய்கின்றனர். "இரட்டை எஞ்சின்" நல்லதுதான். இதன் மூலம் மாநிலம் "இரட்டை வளர்ச்சி" காண முடிகிறது.

    பா.ஜ.க.வின் ஆட்சியில் பல்வேறு துறைகளில் நாடு முன்னேறி வருவதை எதிர்கட்சிகளுக்கு காண சகிக்கவில்லை. அவர்களிடம் வளர்ச்சி திட்டமோ அல்லது நாட்டின் வளர்ச்சி குறித்த தொலைநோக்கு பார்வையோ எதுவும் கிடையாது. உலகளாவிய மன்றங்களில் இந்தியா இப்போது பாராட்டப்படுவதை அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. உலகம் முழுவதும் இந்தியாவை புகழும் போது, இங்குள்ள எதிர்கட்சிகளுக்கு தங்கள் நாற்காலியை தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை. அதனால், இந்தியாவிற்கு கிடைக்கும் பாராட்டை காண பிடிக்காமல் வயிற்றெரிச்சலில் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்.

    எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கொலை மற்றும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

    பின் தங்கிய நிலையில் இருந்த ம.பி. மாநிலம் இன்று வளர்ச்சி பட்டியலில் 10-ஆம் இடத்தில் உள்ளது. அடுத்த 5 ஆண்டுகள் ம.பி.யின் வளர்ச்சிக்கு முக்கியமான ஆண்டுகள். ம.பி.யை நாட்டின் முதன்மையான முதல் 3 மாநிலங்களில் ஒன்றாக நாம் மாற்ற வேண்டும். உங்களின் ஒரு ஓட்டு ம.பி.யை முதல் நிலைக்கு கொண்டு செல்லும்.

    இவ்வாறு மோடி தெரிவித்தார்.

    ம.பி.யில் 2003 ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 3 முறை சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வென்றது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடகாவில் தொடங்கிய காங்கிரசின் வெற்றி பயணம், மத்தியபிரதேசத்திலும் தொடரும்.
    • கர்நாடகாவில் அறிவித்தது போன்ற சலுகைகள், மத்தியபிரதேசத்திலும் அறிவிக்கப்படும்.

    புதுடெல்லி :

    பா.ஜனதா ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசத்தில் இன்னும் 4 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

    கர்நாடகாவை தொடர்ந்து, மத்தியபிரதேசத்திலும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் விரும்புகிறது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று கூட்டம் நடந்தது.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் அகர்வால், முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில், நிர்வாகிகள் அனைவரும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். ஒற்றுமையாக போட்டியிட்டு, வெற்றியை தேடித்தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    கூட்டம் முடிவடைந்த பிறகு, ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கர்நாடகாவில் 136 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கணித்தோம். அது அப்படியே நடந்தது. அதுபோரல், மத்தியபிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில், 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கணித்துள்ளோம்.

    கர்நாடகாவில் தொடங்கிய காங்கிரசின் வெற்றி பயணம், மத்தியபிரதேசத்திலும் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ''மத்தியபிரதேச சட்டசபை தேர்தலுக்கு காங்கிரசின் முதல்-மந்திரி வேட்பாளராக கமல்நாத் இருப்பாரா?'' என்ற கேள்விக்கு ராகுல்காந்தி பதிலளிக்கவில்லை.

    முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத் கூறியதாவது:-

    தேர்தலுக்கான வியூகம் குறித்தும், என்னென்ன பிரச்சினைகளை பற்றி பேசுவது என்றும் விவாதித்தோம். ஒற்றுமையாக செயல்படுவது என்று முடிவு செய்துள்ளோம்.

    கர்நாடகாவில் அறிவித்தது போன்ற சலுகைகள், மத்தியபிரதேசத்திலும் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மந்திரிகள் 4 பேர் நோட்டா ஓட்டால் தோல்வியை தழுவினார்கள். #BJP #Congress #Nota #MadhyaPradeshAssemblyElection2018
    போபால்:

    மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

    பகுஜன்சமாஜ், சமாஜ் வாடி, சுயேட்சைகளுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.

    அந்த மாநிலத்தில் மொத்தம் 230 தொகுதிகளாகும். மெஜாரிட்டிக்கு 116 இடங்கள் தேவை.

    காங்கிரஸ் 114 இடங்களையும், பா.ஜனதா 109 தொகுதியையும் கைப்பற்றின. பகுஜன் சமாஜ்-2, சமாஜ்வாடி-1 சுயேட்சை-4 இடங்களில் வெற்றி பெற்றன.

    மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு நோட்டாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. 22 தொகுதிகளில் பா.ஜனதா குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது. இதற்கு நோட்டா முக்கிய பங்கு வகித்தது.

    பா.ஜனதா மந்திரிகள் 4 பேர் நோட்டாவால் வெற்றியை இழந்து தோல்வியை தழுவினார்கள்.



    குவாலியர் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட உள்துறை இணை மந்திரி நாராயணன்சிங் குஷ்வா 121 ஓட்டில் தோற்றார். இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 1550 வாக்குகள் கிடைத்தது. தமோ தொகுதியில் நிதி மந்திரி ஜெயந்த் மல்லையா 799 வாக்கில் தோற்றார். இங்குநோட்டாவுக்கு 1,299 ஓட்டுகள் கிடைத்தது.

    ஜபல்பூர் வடக்கு தொகுதியில் சுகாதாரதுறை இணை மந்திரி சரத் ஜெயின் 578 வாக்குகள் வித்தியாத்திலும், (நோட்டா 1,209), புர்கான்பூர் தொகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி 5,120 வாக்குகள் வித்தியாசத்திலும் (நோட்டா 5,700) தோற்றனர்.

    இதேபோல காங்கிரசுக்கும் சில தொகுதிகளில் நோட்டாவால் பாதிப்பு ஏற்பட்டது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் நோட்டாவுக்கு மொத்தம் 5.4 லட்சம் ஓட்டுகள் கிடைத்தது. இது 1.4 சதவீதம் ஆகும். இதன் மூலம் அந்த மாநிலத்தில் 5-வது இடம் கிடைத்தது.

    பா.ஜனதா 41 சதவீத ஓட்டுகளும், காங்கிரஸ் 40.9 சதவீத ஓட்டுகளும், பகுஜன் சமாஜ் 5 சதவீத ஓட்டுகளும், ஜி.ஜி.பி. கட்சி 1.8 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன. அதற்கு அடுத்த இடத்தில் நோட்டா இருக்கிறது. சமாஜ்வாடி ((1.3 சதவீதம்), ஆம் ஆத்மி (0.7 சதவீதம்) ஆகிய கட்சிகள் நோட்டாவுக்கு அடுத்த நிலையிலேயே உள்ளன. #BJP #Congress #Nota #MadhyaPradeshAssemblyElection2018
    மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். #AmitShah #BJP

    புதுடெல்லி:

    அகில இந்திய பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தற்போது சட்டசபை தேர்தல் நடக்கும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகில மாநிலங்களில் நாங்கள் மீண்டும் வெற்றி பெறுவோம். அங்கு ஆட்சியில் இருக்கும் எங்களுக்கு கடும் சவால் நிலவுவதாக சொல்வது தவறானது.

    ஆனால் நிலைமை அப்படியல்ல. தேர்தல் முடிவு டிசம்பர் 11-ந்தேதி வரும்போது 3 மாநிலத்திலும் நாங்கள் ஆட்சியை கைப்பற்றி இருப்போம். இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு மேலும் உயர்ந்து வலுவாகும்.

    மக்களின் அமோக ஆதரவுடன் 2019 பாராளுமன்ற தேர்தலில் அதிக எண்ணிக்கையில் பா.ஜ.க. வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார்.

    ஒரு மாநிலத்தில் அரசு நடந்து கொண்டிருந்தால் ஆதரவும் இருக்கும், எதிர்ப்பும் இருக்கும். ஆனால் எதிர்ப்பை மட்டும் பத்திரிகைகள் வெளிப்படுத்தி காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளன. குஜராத் மாநிலத்திலேயே இதை பார்த்திருப்பீர்கள்.

    மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நாங்கள் 15 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறோம். ஏராளமான வளர்ச்சி திட்டங்களை அங்கு நிறைவேற்றி இருக்கிறோம். 129 நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.

    நாங்கள் செய்துள்ள வளர்ச்சி திட்டங்களே எங்களுக்கு மக்களிடம் வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

    அரசுக்கு எதிர்ப்பு இருப்பதாக இப்போது தான் சிலர் பேசுகிறார்கள். இதேபோலத்தான் குஜராத் தேர்தலிலும் சொன்னார்கள். ஆனால் அங்கு நாங்கள் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றோம். அதற்கு நாங்கள் செய்த திட்டங்கள் தான் காரணம். அதேபோல இந்த மாநிலங்களிலும் எங்களுடைய திட்டங்கள் வெற்றியை தேடித்தரும்.

     


    மாநில தேர்தல் முடிவின் தாக்கம் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கும் என்று சொல்வது சரியான வாதம் அல்ல. மாநில தேர்தல் என்பது அங்குள்ள சூழ்நிலைகளை பொறுத்து, அங்குள்ள பிரச்சினைகளை மையமாக வைத்து நடப்பதாகும்.

    எனவே அதன் தாக்கக்தை பாராளுமன்றத்தில் எதிர் பார்க்க முடியாது. எங்கள் கட்சியை பொறுத்தவரை கூட்டு அரசியல் முறையில் பணியாற்றி வருகிறோம். நாங்கள் செய்த திட்டங்கள், எதிர்கால பணிகள் மூலம் 2019 தேர்தலிலும் சிறப்பான வெற்றியை பெறுவோம். மக்கள் மத்தியில் எங்களுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது.

    2014 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தொடர்ந்து பல மாநிலங்களிலும் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். உத்தரபிரதேசம், மராட்டியம், அரியானா என பல மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறோம்.

    இப்போது நடக்கும் 5 மாநில தேர்தல்களும் எங்களுக்கு முக்கியமானது தான். இதிலும் சிறப்பான வெற்றி கிடைக்கும்.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சட்டம் இயற்ற வேண்டும் என்று விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனாலும் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. பெரிய அளவிலான ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது எங்களது உறுதியான எண்ணம் நோக்கம் ஆகும். இதில் வேறு எந்த சமரசத்துக்கும் நாங்கள் தயாராக இல்லை.

    அதே நேரத்தில் இது சம்பந்தமான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஜனவரி மாதம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. நிச்சயம் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதுவரை காத்திருப்போம்.

    இது 9 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கு. ஆனால் காங்கிசார் இந்த வழக்கை மீண்டும் நீடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கபில்சிபில் கூறியிருக்கிறார். அவர்கள் தான் வழக்கை தள்ளிப்போட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

     


    இந்த வி‌ஷயத்தில் காங்கிரஸ் கட்சி தவறான தகவல்களை பரப்பி வருகிறது. சிவசேனாவை பொறுத்தவரை அது தனி கட்சி. நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். இந்த வி‌ஷயத்தில் எங்களுக்குள் மோதல் போக்கு எதுவும் இல்லை.

    2014 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு 22 மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் 21 மாநிலங்களில் காங்கிரசை மக்கள் நிராகரித்து விட்டார்கள். தற்போது காங்கிரஸ் கட்சியினர் நாங்கள் கொண்டுள்ள இந்துத்வா கொள்கைகளை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள். அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார்கள்.

    நாங்கள் தேர்தல் காலத்தில் மட்டும் இந்த கொள்கைகளை பின்பற்றுபவர்கள் அல்ல. காங்கிரஸ் முத்த தலைவர்கள் கமல்நாத், ஜி.பி. ஜோஷி போன்றவர்கள் ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் கருத்துக்களை கூறி அரசியல் ஆதாயத்தை பெற முயற்சிக்கிறார்கள்.

    தற்போது காங்கிரஸ் தலைவர்கள் பலர் மலிவான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். பிரதமர் நரேந்திரமோடி, உமாபாரதி போன்றவர்கள் பற்றி மோசமான விமர்சனங்களை செய்கிறார்கள். நாங்கள் அவர்களுடைய வாரிசு அரசியல், ஜாதி அரசியலை தடுப்பதால் எங்கள் மீது ஆத்திரம் அடைந்து இது போன்று நடந்து கொள்கிறார்கள்.

    காங்கிரஸ் தலைவர்கள் மோடியின் தாயாரை பற்றி விமர்சித்தது மிகவும் தவறானது. கடுமையாக கண்டிக்கக் கூடியது.

    நாங்கள் ஒருபோதும் ஜாதி, மத அரசியலை முன்வைப்பது இல்லை. அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் தான் செயலாற்றி வருகிறோம். எனவே அனைத்து தரப்பு மக்களும் எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

    தெலுங்கானா மாநிலத்தில் நாங்கள் சட்டமன்ற தேர்தலில் வலுவாக போட்டியிடுகிறோம். இதனால் தெலுங்கானா அரசை விமர்சிக்கிறோம். பாராளுமன்ற தேர்தல் என வரும்போது, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சி எங்களை ஆதரிக்க வேண்டும். இல்லை என்றால் எதிர்க்க வேண்டும்.

    மாநில தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் வெவ்வேறு சூழ்நிலைகளை கொண்டது.

    ரபேல் விமான ஊழல் தொடர்பாக ராகுல்காந்தி தொடர்ந்து அப்பட்டமான பொய் தகவல்களை கூறி வருகிறார். இதனால் பிரதமர் மோடியின் செல்வாக்குக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. அங்கு என்ன நடந்தது என்பது பற்றிய நாங்கள் சீலிட்ட கடிதத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கிறோம்.

    எங்களை எதிர்ப்பதற்கு எந்த பிரச்சினையும் கையில் இல்லாததால் இதையே திரும்ப, திரும்ப கூறிக் கொண்டிருக்கிறார்.

    சி.பி.ஐ. மற்றும் ரிசர்வ் வங்கி விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி போன்றவர்கள் குற்றம்சாட்டுவது தவறு. சி.பி.ஐ.யில் 2 அதிகாரிகள் தங்களுக்குள் மோதிக் கொண்டார்கள். இந்த சூழ்நிலையில் மத்திய அரசு தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த விவகாரம் தற்போது மத்திய கண்காணிப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    ரிசர்வ் வங்கி விவகாரத்தை பொறுத்தவரை ரிசர்வ் வங்கி சட்ட விதிகள் படி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இதற்காக மத்திய அரசு தலையிட்டதாக கூறுவது தவறு. தன்னிச்சையாக செயல்படும் அவற்றின் மீது மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தவில்லை.

    காஷ்மீர் மாநில சட்டசபையை கலைத்தது கவர்னர் எடுத்த முடிவு. அங்கு குதிரை பேரம் நடந்ததால் கவர்னர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனால் அவர்களுக்கு யார் ஆதரவு கொடுக்கிறார்கள் என்ற விவரத்தை கூட குறிப்பிடவில்லை. அதற்கான கடிதமும் கொடுக்கப்படவில்லை.

    இவ்வாறு அமித் ஷா கூறினார். #AmitShah #BJP

    மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் 35 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட அனுமதி அளிக்கப்படவில்லை. #BJP #MadhyaPradeshelection

    புதுடெல்லி:

    மத்தியபிரதேச மாநிலத்தில் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

    230 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்துக்கு வருகிற 28-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    2003-ம் ஆண்டில் இருந்து பா.ஜனதா மத்தியபிரதேசத்தில் ஆட்சி செய்து வருகிறது. அந்த கட்சி தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு ஆட்சியை கைப்பற்றும் வேட்கையில் காங்கிரஸ் உள்ளது.

    இந்த நிலையில் பா.ஜனதா தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 177 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

     


    தற்போதைய எம்.எல்.ஏ.க் கள் 35 பேருக்கு டிக்கெட் கொடுக்காமல் பா.ஜனதா அதிரடி முடிவை எடுத்தது.

    ஹர்ஷ்சிங், கவுரிசங்கர் உள்ளிட்ட 3 மந்திரிகளுக்கும் கட்சி மேலிடம் டிக்கெட் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் நீக்கப்பட்ட 2 மந்திரிகளுக்கு பதிலாக அவர்களது மகன்களுக்கு சீட் வழங்கி உள்ளது.

    பா.ஜனதா எம்.பி.க்களாக இருக்கும் மனோகர்சிங் உந்த்வால், நாகேந்திரசிங் ஆகிய இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

    2-வது கட்ட வேட்பாளர் பட்டியலிலும் சில எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்படுவார்கள் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #BJP #MadhyaPradeshelection

    சத்தீஷ்கர் முன்னாள் முதல்-மந்திரியான அஜித் ஜோகியின் குடும்பத்தினர் 4 பேர் 3 கட்சிகள் சார்பில் வர இருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார்கள். #AssemblyElection

    ராய்ப்பூர்:

    மத்திய பிரதேசத்தில் இருந்து சத்தீஷ்கர் மாநிலம் 2000-ம் ஆண்டு உருவானது. அம்மாநிலத்தின் முதல்- மந்திரி பொறுப்பை முதலில் வகித்தவர் அஜித் ஜோகி.

    கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அஜித் ஜோகியும், அவரது மகன் அமித் ஜோகியும் காங்கிரஸ் கட்சியை விட்டு 6 ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்டனர்.

    இதை தொடர்ந்து அவர் 2016-ம் ஆண்டு ஜனதா காங்கிரஸ் சத்தீஷ்கர் (ஜே.சி.சி.) என்ற கட்சியை தொடங்கினார்.

    முன்னாள் முதல்-மந்திரியான அஜித் ஜோகியின் குடும்பத்தினர் 4 பேர் 3 கட்சிகள் சார்பில் வர இருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார்கள். 90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கர் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக நவம்பர் 12 மற்றும் 20-ந் தேதிகளில் தேர்தல் நடக்கிறது.

    அஜித் ஜோகியின் மனைவி ரேணு தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அவர் காங்கிரசில் இருந்து விலகி தனது கணவர் கட்சியில் சேர மறுத்துவிட்டார்.

    ஹோண்டா தொகுதியில் மீண்டும் போட்டியிட டிக்கெட் கேட்டுள்ளார். அவர் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் நிறுத்தப்படுகிறார்.


    அஜித் ஜோகியின் மருமகள் ரிச்சா. அவர் தனது மாமனாரின் கட்சியில் இருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராகவும் அவர் நிறுத்தப்பட்டுள்ளார். அகல்தரா தொகுதியில் ரிச்சா போட்டியிடுகிறார்.

    அஜித் ஜோகியும், அவரது மகன் அமித்தும் ஜனதா காங்கிரஸ் சத்தீஷ்கர் கட்சி சார்பில் போட்டியிட உள்ளனர்.

    இதில் அஜித் ஜோகி போட்டியிடுவாரா? என்பது இன்னும் உறுதியாகவில்லை. அஜித் ஜோகி குடும்பத்தில் 4 பேர் 3 கட்சிகளில் உள்ளனர். அவர்கள் தேர்தல் களத்தில் நிற்கிறார்கள்.

    மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் அஜித் ஜோகி கூட்டணி அமைத்து போட்டியிகிறார். ஜனதா காங்கிரஸ் சத்தீஷ்கர் கட்சி 55 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 33 இடங்களிலும் போட்டியிடுகின்றன. #AssemblyElection

    மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று டைம்ஸ்நவ் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. #BJP #MadhyaPradeshAssemblyElection
    போபால்:

    மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜக. ஆட்சி நடந்து வருகிறது.

    அம்மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 28-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    மத்திய பிரதேசத்தில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று சமீபத்தில் சிவோட்டர் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது. அதில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் இணைந்து வார்ரூம் ஸ்ட்ரடெஜிஸ் நிறுவனமும் இணைந்து ஒரு கருத்து கணிப்பை நடத்தின. அந்த சர்வே முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

    அந்த கருத்து கணிப்பில் மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பாஜ.க. 142 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் 77 தொகுதியிலும், மற்ற கட்சிகள் 11 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

    2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 166 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தடவை 24 இடங்கள் குறைந்துவிடும் என்று சர்வேயில் தெரிய வந்துள்ளது. அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக 20 இடங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


    தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 44 சதவீதம் பேர் வாக்களிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 35 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    முதல் மந்திரியாக யார் வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 61 சதவீதம் பேர் சிவராஜ் சிங்சவுகானை தேர்வு செய்துள்ளனர். காங்கிரசை சேர்ந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை 17 சதவீதம், திக்விஜய்சிங்கை 25 சதவீதம், கமல்நாத்தை 6 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர்.

    மத்திய பிரதேசம் போல சத்தீஸ்கரிலும் ராமன்சிங் தலைமையிலான பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.  #BJP #MadhyaPradeshAssemblyElection #Congress
    5 மாநில சட்டசபைகளுக்கு நடைபெறும் தேர்தல்களில் பா.ஜ.க. வரலாறு காணாத வெற்றிபெறும். சத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். #5statepolls #BJP # RaviShankarPrasad
    புதுடெல்லி:

    சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மிஜோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஓ.பி.ராவத் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், இந்த தேர்தல்களில் பா.ஜ.க. வரலாறு காணாத வெற்றிபெற்று சத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரவிசங்கர் பிரசாத், இந்த தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலிமையான கூட்டணியை அமைக்க தவறிய காங்கிரஸ் தலைமையை  குற்றம்சாட்டியுள்ளார்.

    வலிமையான கூட்டணிக்கான உறவுகளை உருவாக்கவும், பாதுகாக்கவும் தவறிவிட்ட காங்கிரஸ் கட்சியை ஒரு குடும்பத்தினருக்கான கட்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மத்தியில் முன்னர் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது நோயாளி மாநிலங்களாக நொடிந்துப்போய் கிடந்த ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தற்போது வெகுவாக முன்னேற்றம் அடைந்துள்ளன.

    சமீபத்தில் உருவாக்கப்பட்ட மிகச்சிறிய மாநிலமான சத்தீஸ்கரில் நடைபெறும் பா.ஜ.க. அரசு நாட்டிற்கே முன்னோடியாக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளது.

    ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நல்லமுறையில் நடைபெற்றதாகவும், இந்த தேர்தலிலும் இம்மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க. வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #5statepolls #BJP # RaviShankarPrasad
    பிரதமர் மோடியின் செயல்திறனால் மத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெறும். முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் பதவி ஏற்பார் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார். #MPpolls
    போபால்:

    பிரதமர் மோடியின் செயல்திறனால் மத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெறும். முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் பதவி ஏற்பார் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார்.

    நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் 5 மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

    சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல் கட்டமாக நவம்பர் 12-ம் வாக்குப்பதிவு  நடைபெறும். இரண்டாம் கட்டமாக நவம்பர் 20-ம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது.

    தர்மேந்திர பிரதான்

    மத்தியப்பிரதேசம், மிஜோரம் மாநிலங்களில் ஒரே கட்டமாக நவம்பர் 28-ம் தேதி ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்தப்படும்.  அடுத்ததாக ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையர்  தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் இன்று அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த மத்தியப்பிரதேசம் மாநில பா.ஜ.க. தேர்தல் குழு பொறுப்பாளரும் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரியுமான தர்மேந்திர பிரதான், மத்தியப்பிரதேசம் சட்டசபைக்கு எப்போது தேர்தல் நடந்தாலும் சரி, பிரதமர் மோடியின் செயல்திறனால் மத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெறும். முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் பதவி ஏற்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். #MPpolls #ShivrajSinghChouhan #MPCM #DharmendraPradhan 
    ×