என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மத்தியபிரதேச தேர்தல்: 35 எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் இல்லை - பாஜக அதிரடி
புதுடெல்லி:
மத்தியபிரதேச மாநிலத்தில் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.
230 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்துக்கு வருகிற 28-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.
2003-ம் ஆண்டில் இருந்து பா.ஜனதா மத்தியபிரதேசத்தில் ஆட்சி செய்து வருகிறது. அந்த கட்சி தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு ஆட்சியை கைப்பற்றும் வேட்கையில் காங்கிரஸ் உள்ளது.
இந்த நிலையில் பா.ஜனதா தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 177 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய எம்.எல்.ஏ.க் கள் 35 பேருக்கு டிக்கெட் கொடுக்காமல் பா.ஜனதா அதிரடி முடிவை எடுத்தது.
ஹர்ஷ்சிங், கவுரிசங்கர் உள்ளிட்ட 3 மந்திரிகளுக்கும் கட்சி மேலிடம் டிக்கெட் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் நீக்கப்பட்ட 2 மந்திரிகளுக்கு பதிலாக அவர்களது மகன்களுக்கு சீட் வழங்கி உள்ளது.
பா.ஜனதா எம்.பி.க்களாக இருக்கும் மனோகர்சிங் உந்த்வால், நாகேந்திரசிங் ஆகிய இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
2-வது கட்ட வேட்பாளர் பட்டியலிலும் சில எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்படுவார்கள் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #BJP #MadhyaPradeshelection
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்