search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lord Shiva"

    • கரும்பு வில், பாசாங்குசம், மலரம்பு இவற்றை ஏந்தி அழகாக, கொலுவிருப்பவளே “ஸ்ரீ ராஜராஜேஸ்வரி”
    • கவுமாரியை த்ரிசக்தி என்றும் சொல்வார்கள்.

    நவராத்திரி இரண்டாம் நாள் மகிஷாசூரனை வதம் செய்வதற்கு முன்பு, அவனது சேனைகளை துவம்சம் செய்ய புறப்பட்ட அன்னையை, கவுமாரியாக மற்றும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாக மனதார நினைத்து பூஜிக்க வேண்டும்.

    கரும்பு வில், பாசாங்குசம், மலரம்பு இவற்றை ஏந்தி அழகாக, கொலு விருப்பவளே "ஸ்ரீ ராஜராஜேஸ்வரி"

    இவளுக்குப் பிடித்த பூ மல்லிகையும், துளசியும்.

    இவற்றைக் கொண்டு அர்ச்சித்தால் மனம் நிறைந்து அருள்பாலிப்பாள்.

    கல்யாணி ராகத்தில் பாடலாம். புளியோதரையை நைவேத்தியமாய் படையுங்கள்.

    கவுமாரியை த்ரிசக்தி என்றும் சொல்வார்கள்.

    மூன்று நிலைகளை மூன்று அக்னிகளில் சேர்த்து ஏகா அக்னியாய் நிற்பவளே அன்னை த்ரிமூர்த்தி.

    இவள் மூன்று அக்னிகளாய் இருப்பதனால் தான் ஸ்வாஹாதேவியும், ஸ்வதா தேவியும் திருப்தி அடைகின்றனர்.

    இவள் மூன்று வயதுக் குழந்தை வடிவாக இருப்பவள்.

    துவிதியை திதி நாளில் மூன்று வயதுக் குழந்தையை அழைத்து வந்து, த்ரிமூர்த்தி தேவியாய் பாவித்து ஆடை, அலங்காரங்கள் செய்து, பாத பூஜை செய்து வணங்க வேண்டும்.

    தேவி பாகவதத்தில் இரண்டு, மூன்று அத்தியாயங்களையும், ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தையும், நவாஷரி மந்திரத்தையும் ஓதுதல் வேண்டும்.

    முன்று அக்னிகளாய்த் திகழும் த்ரிமூர்த்தி தேவியை வணங்குபவர்களுக்கு மீண்டும் பிறவாமையை வரமாய் அளிக்கின்றாள்.

    குரு அருள் பெற்றிடவே மூன்று நிலைகளை நாம் அடைய வேண்டும். மூன்று நிலைகள் அடைய அன்னையின் அருள் வேண்டும்.

    கவுமாரி என்ற அவதாரம் முருகப் பெருமானின் சக்தியாகக் கருதப்படுகிறது.

    இவளுக்கும் 6 முகங்கள், 12 கைகள் உண்டு என்று ஸ்ரீதத்துவநியதி கூறுகின்றது.

    இவளது கரகங்கள் வரத, அபய முத்திரைகள் தவிர வேல், கொடி, தண்டம், பாத்திரம், அம்பு, வில், மணி, தாமரை, சேவல், பரசு ஆகியவற்றை ஏந்தி இருக்கும்.

    கவுமாரி 13 கண்களை உடையவள் என்று காரணாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் இவள் மயிலை வாகனமாகவும், கொடியாகவும் கொண்டவள்.

    • கல்ப காலத்தின் இறுதியில் உலகத்தைப் பிரளயம் சூழ்ந்தது.
    • முல்லை, செவ்வந்தி, பாரிஜாத மலர்களை மாலையாக்கி அணிவிக்கலாம்.

    கல்ப காலத்தின் இறுதியில் உலகத்தைப் பிரளயம் சூழ்ந்தது.

    மகா விஷ்ணு ஒரு சிறு குழந்தையாக சேஷசயனத்தில் யோக நித்திரையில் ஆழ்ந்திருக்க, மது கைடபர் என்ற இரு அரக்கர்கள் எக்களிப்பில் திருமாலின் உந்தியிலிருந்து உதித்த பிரமனுடன் போர் புரியத் தொடங்கினர்.

    பிரமன் பராசக்தியை மகாதேவி மகாமாயை, மகா புத்தி, மகாவித்யை என்றெல்லாம் போற்றித் துதித்து இவ்விரு அசுரர்களை மயக்கி, உலகைக் காத்தருள வேண்டினார்.

    அம்பிகை மகாவிஷ்ணுவின் யோக நித்திரையிலிருந்து வெளிப்பட்டு மது கைடபர்கள் இருவரையும் தம் தொடை மீதே வைத்து தனது சக்ராயுதத்தால் மகாவிஷ்ணு வதம் செய்யக் காரணமாக இருந்தார்.

    சிவப்பு வண்ணப் பட்டாடைகளையும், சிவப்பு கலந்த ஆபரணங்களையும் அணிவிக்கலாம்.

    முல்லை, செவ்வந்தி, பாரிஜாத மலர்களை மாலையாக்கி அணிவிக்கலாம்.

    எள் சாதம், எள் பாயாசம், வேர்க்கடலை சுண்டல் வைத்து பூஜை செய்யலாம். அதையே வருபவர்களுக்கும் பிரசாதமாக வழங்கலாம்.

    • நவராத்திரி அன்று அர்ச்சனை செய்ய வேண்டிய மந்திரம்
    • ஓம் மங்கள நாயகியே போற்றி!

    ஓம் பொன்னே போற்றி!

    ஓம் மெய்ப்பொருளே போற்றி!

    ஓம் போகமே போற்றி!

    ஓம் ஞானச் சுடரே போற்றி!

    ஓம் பேரின்பக் கடலே போன்றி!

    ஓம் குமாரியே போற்றி!

    ஓம் குற்றங்களைவாய் போற்றி!

    ஓம் முற்றறிவு ஒளியோய் போற்றி!

    ஓம் பேரருட்கடலே போற்றி!

    ஓம் ஆற்றல் உடையாய் போற்றி!

    ஓம் அருட்கடலே போற்றி!

    ஓம் ஆனந்த அறிவொளி போற்றி!

    ஓம் இருளகற்றுவாய் போற்றி

    ஓம் இன்பத்தின் உறைவிடமே போற்றி!

    ஓம் ஈயும் தயாபரி போற்றி!

    ஓம் மங்கள நாயகியே போற்றி!

    இப்படி அர்ச்சனை முடிக்கவும்.

    • மகேஸ்வரியை “குமாரி” வடிவமாக அலங்கரித்து, மனதில் தியானம் செய்து வணங்க வேண்டும்.
    • குமாரி இரண்டு வயதுக் குழந்தையாய் இருப்பாள்.


    வடிவம்: மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)

    பூஜை : 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.

    திதி : பிரதமை

    கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.

    பூக்கள் : மல்லிகை, சிவப்பு நிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை.

    ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும்.

    பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.

    மகேஸ்வரி அலங்காரம்

    நவராத்திரி முதல் நாள் மதுகைடப வதத்துக்கு மூலகாரணமான தேவியை மகேஸ்வரியாக வழிபட வேண்டும்.

    மகேஸ்வரியை அபயவரஹஸ்தத்தோடு, புத்தகம், அட்ச மாலையுடன் "குமாரி" வடிவமாக அலங்கரித்து, மனதில் தியானம் செய்து வணங்க வேண்டும்.

    இந்த "குமாரி" தேவிக்கு, மல்லிகை விசேஷம்.

    எனவே மல்லிகை அர்ச்சனை உகந்தது.

    அம்பாள், சங்கீதப்பிரியை ஆயிற்றே... எனவே, தினமும் சுவாரஸ்யமான சங்கீதம் வீட்டில் தவழ்ந்தால் சுபிட்சம் பெருகும்.

    முதல் நாளில் தோடி ராகத்தில் அமைந்த கீர்த்தனைகளை பாடினால் விசேஷம்.

    குமாரி இரண்டு வயதுக் குழந்தையாய் இருப்பாள்.

    பிரதமை திதியில் இரண்டு வயதுக் குழந்தையை (தன் வீட்டுக் குழந்தை அல்ல) அழைத்து வந்து அவளை அன்னை குமாரியாகவே பாவித்து, அவளுக்கு ஆடை, அலங்காரங்கள் செய்து, பாத பூஜை செய்து வணங்க வேண்டும்.

    குழந்தைக்கு அணிவித்த ஆடை, அணிகலன்களைத் திரும்ப வாங்கி விடக்கூடாது.

    தேவி பாகவதத்தின் முதல் அத்தியாயத்தையும், ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தையும், நவாஷரி மந்திரத்தையும் ஓதித் துதித்தால் குமாரி தேவியின் அருள் பரிபூரணமாய்க் கிட்டும்.

    பிரதமை திதியில் நாம் வணங்கும் குமாரி தேவி நமக்கு குறைவற்ற வாழ்வு தருவாள்.

    குழந்தையின் கள்ளம், கபடமற்ற மன நிலை நமக்கு வந்தால் தான் இறைவனை நாம் அடைய முடியும்.

    மகேஸ்வரி சிவனின் சக்தி. வெள்ளை நிறம் கொண்டவள்.

    இவளுக்கு ஐந்து முகம் உண்டு.

    • முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்சமாக வழிபடப்படுவாள்.
    • இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள்.

    நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகை 9 வடிவங்களில் வணங்கப்படுகிறாள்.

    முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்சமாக வழிபடப்படுவாள்.

    அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள்.

    இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள்.

    இந்த ஒன்பது நாட்களும் ஒவ்வொரு நாளும் அன்னை எடுத்த அவதார நோக்கத்துக்கு ஏற்ப அலங்காரம் செய்யப்படும்.

    பாடல், கோலம், நைவேத்தியங்களும் அம்பிகையின் அவதார நோக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

    இனி வரும் பதிவுகளில் இந்த 9 நாட்களும் அன்னையை எப்படி வழிபட வேண்டும் என்பதை காணலாம்....

    • பல அவதாரங்கள் ஏற்று அசுரர்களை அழித்து, பக்தர்களை காத்துள்ளாள்.
    • எல்லா வழிபாடுகளுக்கும் தாய் வழிபாடாக, பராசக்தி வழிபாடு கருதப்படுகிறது.

    எல்லா வழிபாடுகளுக்கும் தாய் வழிபாடாக, முதன்மை வழிபாடாக பராசக்தி வழிபாடு கருதப்படுகிறது.

    பராசக்தியை வழிபட்டால் எல்லா கடவுள் அவதாரங்களையும் வழிபடும்போது என்னென்ன பலன்கள் கிடைக்குமோ, அத்தனை பலன்களும் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    பராசக்தியான அம்பிகை ஒருத்திதான்.

    ஆனால் அவள் பல அவதாரங்கள் ஏற்று அசுரர்களை அழித்து, பக்தர்களை காத்து நல்வழி காட்டியுள்ளாள்.

    அதை பிரதிபலிக்கவே ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

    நவ என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு.

    ஒன்பது நாட்கள் இரவில் அம்பிகையை வழிபடுவதே நவராத்திரி ஆகும்.

    • உடனே அன்னை பரமேஸ்வரி தன்னுடைய அம்சமாக துர்க்கையாகத் தோன்றினாள்.
    • பின்னர் துர்க்கா தேவி தன்னை எதிர்த்த மகிஷாசுரனிடம் சென்றாள்.

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மகிஷாசுரன் என்னும் கொடூரமான அரக்கன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.

    அவன் பராசக்தியை நோக்கி தவம் இருந்து அன்னையிடம் ஆற்றல்மிகு பல வரங்களைப் பெற்றான்.

    மகிஷாசுரன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் தேவர்களையும் முனிவர்களையும் கொடுமை செய்தான்.

    தேவர்களும் & முனிவர்களும் பார்வதியை நோக்கி தவம் புரிந்தனர்.

    பார்வதி தேவியும் அவர்களுக்கு காட்சி அளித்தாள்.

    அவர்களின் குறைகளைக் களைய கருணை உள்ளம் கொண்டாள்.

    தகுதியற்ற ஒரு அரக்கனுக்கு தேவையற்ற வரங்களை வழங்கிவிட்டோம் என்று வருந்தினாள்.

    ஒரு முறை வழங்கி விட்ட வரங்களைத் திருப்பிப் பெறுதல் மரபன்று.

    இருப்பினும் தர்மத்தின் பொருட்டு தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தாள்.

    உடனே பார்வதிதேவி, லலிதை என்னும் காமேஸ்வரியாக அவதாரம் எடுத்து ஈஸ்வரனைத் திருமணம் புரிந்து கொண்டாள்.

    ஈசனிடம் அஸ்திரங்களைப் பெற்று மகிஷாசுரனை எதிர்த்து போருக்கு புறப்பட்டாள்.

    மகிஷாசுரன் இதனை அறிந்து அன்னையை எதிர்க்க தனது தம்பிமார்களான விசக்கனையும், விஷக்கரனையும் ஏவினான்.

    உடனே அன்னை பரமேஸ்வரி தன்னுடைய அம்சமாக துர்க்கையாகத் தோன்றினாள்.

    அந்த இரு அசுரர்களையும் விழுங்கினாள்.

    பின்னர் துர்க்கா தேவி தன்னை எதிர்த்த மகிஷாசுரனிடம் சென்றாள்.

    மகிஷாசுரன் எவ்வளவோ சாமர்த்தியமாக மாயா ஜாலத்துடன் போர் புரிந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    இதனால் அதிர்ச்சியில் உறைந்தான்.

    ஆக்ரோஷத்துடன் எழுந்த துர்க்காதேவி மகிஷாசுரனின் தலையைத் துண்டித்து வதம் செய்தாள்.

    இதனைக் கண்ட தேவர்களும் & முனிவர்களும் மகிஷாசுரமர்த்தினி என்று துர்க்கையை வாயார போற்றி துதித்தனர்.

    இதனைக் குறிப்பது தான் நவராத்திரி என்பதாகும்.

    • பக்தியின் திருவுருவமாக விளங்கியவர்தான் கண்ணப்பநாயனார்.
    • அய்யனே எனக்கு இடையறாத பக்தியை தரவேண்டும்.

    இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவன்தொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் இந்த நாயன்பார்கள். அந்த வகையில் இன்றைக்கு நாம் கண்ணப்பநாயனார் பற்றி இன்று தெரிந்துகொள்வோம்.

    பக்தியின் திருவுருவமாக விளங்கியவர்தான் கண்ணப்பநாயனார். இவர் முற்பிறவியில் அர்ஜுனனாக இருந்தார். அர்ஜுனன் மிகப்பெரிய சிவபக்தனாக இருந்தார். மகாபாரதபோரில் தன்னுடைய மகனான அபிமன்யூவை கொன்றவர்களை கொல்லாமல் விடமாட்டேன் என்று சொல்லிக்கொண்டு உணவும் உண்ணாமல், சிவபூஜையும் செய்யாமல் கண்ணபிரான் கூட கயிலாயத்திற்கு சென்றார்.

    சிவபெருமானிடம் வரம் கேட்பதற்காக செல்கிறார். அங்கு சென்றபோது ஒரு பன்றியின் காரணமாக அர்ஜுனனுக்கும் வேடன் வடிவில் இருந்த சிவபெருமானுக்கும் இடையே சண்டை நடக்கிறது. வேடன் வடிவில் இருப்பது சிவபெருமான் என்று அறியாமல் வேடன் தானே என்று வேடன் குலத்தை திட்டினான். உடனே தன்னுடைய திருவுருவத்தை அர்ஜுனனிடம் காட்டி அர்ஜுனா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று கூறினார் சிவபெருமான்.

    உடனே அர்ஜுனன் தன்னுடைய தவறை உணர்ந்து. அவரிடம் அய்யனே உன்னை என்றுமே மறவாத வரத்தை தரவேண்டும் என்று கேட்டார். ஆனால் வரம் வாங்க வந்ததே தன்னுடைய மகனை கொன்றவர்களை கொல்ல பாசுவதகனி வாங்க வந்தவர் அவ்வாறு கேட்காமல் அய்யனே எனக்கு இடையறாத பக்தியை தரவேண்டும் என்று கேட்டுவிட்டார்.

    சிவபெருமான் மகனே அர்ஜுனா... நீ அபிமன்யூவை கொன்றவர்களை கொல்வதற்காக மனதிற்குள்ளேயே கேட்டாயே பாசுவத கனி அதனை நான் இப்போது உனக்கு தருகிறேன். ஆனால் நீ அடுத்த பிறவியில் இப்போது நீ கேட்டாயே ஒருவரம் இடையறாத பக்தியை தரவேண்டும் என்று அந்த வரத்தை நான் அடுத்த பிறவியில் உனக்கு தருவேன்.

    ஆனால் நீ என்னை திட்டினாயே வேடன் என்று, எனவே நீ அடுத்த பிறவியில் வேடர் குலத்தில் பிறந்து ஒரு பன்றியின் காரணமாக காளஹஸ்தியில் என்னை கண்டு முக்தி பெருவாய் என்று கூறினார் சிவபெருமான். இதுதான் கண்ணப்பநாயனாரின் முற்பிறப்பு வரலாறு.

    வேடர் குலத்தில் ஒரு தலைவர் இருந்தார். அவர் பெயர் நாகன். அவருடைய மனைவி பெயர் தத்தை. இந்த நாகனுக்கும் தத்தைக்கும் நீண்டகாலமாக குழந்தைப்பேறு இல்லை. இதனால் இவர்கள் இருவரும் முருகப்பெருமானை நோக்கி தவம் செய்தனர். முருகப்பெருமானின் திருவருளால் நாகனுக்கும் தத்தைக்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தின்னன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

    தின்னன் சிறுவயதிலேயே காட்டிற்கு சென்று புலிக்குட்டியை பிடித்து வந்து வீட்டின் முற்றத்தில் கட்டிபோட்டு விடுவான். அந்த அளவிற்கு வீரமுடன் இருந்தான். தின்னன் 7 வயதிலேயே வில்விற்றையை கற்றுக்கொண்டு நல்ல தின்மையாகவும், வேடவர் குலத்திற்கு ஏற்ற தைரியசாலியாகவும் இருந்தார்.

    வேடவர் தலைவனாகிய நாகனுக்கு இப்போது வயதாகிவிட்டது. வேட்டைக்கு இவர்கள் செல்லாததால் மலைப் பகுதியில் விளையக்கூடிய பயிர்களை எல்லாம் விலங்குகள் அழிக்கத்தொடங்கின. இதனால் வேடர்கள் எல்லோரும் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இதனால் வேடவர்களின் தலைவனாகிய நாகன், தன்னுடைய வேடவ இன மக்களை எல்லாம் அழைத்து எனக்கு வயதாகிவிட்டது. என்னால் இனி வேட்டையாட முடியாது. எனவே என்னுடைய மகானான தின்னனை தலைவனாக அறிவிக்கிறேன் என்று கூறினார் நாகன்.

    தலைவனான தின்னன் வேட்டையாட வில்லும், வாளும் கொண்டு சென்றார். தின்னனுக்கு நானன், காடன் என்று இரண்டு நண்பர்கள் இருந்தனர். ஒருநாள் தின்னனும், நானனும், காடனும் காட்டுக்கு வேட்டையாட காட்டிற்கு சென்றனர். காட்டில் ஒரு பன்றி தின்னனாரின் அருகிலேயே ஓடி ஓடி வந்து கொண்டிருந்தது. உடனே தின்னனாரும் அந்த பன்றிக்கு பின்னாடி ஓடினார். தின்னனை தொடர்ந்து நாகனும், அவருக்கு பின்னால் காடனும் ஒருவர் பின் ஒருவராக ஓடிச்சென்றனர். கடைசியில் தின்னனார் அந்த பன்றியை தன்னுடைய ஈட்டியால் ஒரு குத்து குத்தி கொன்றுவிட்டார்.

    நெடுந்தூரம் ஓடி வந்ததால் இவர்கள் மூவருக்கும் பசி எடுக்கத்தோன்றியது. அப்போது தின்னன் தனது நண்பர்களிடம், குடிக்க தண்ணீர் கேட்டார். உடனே அவருடைய நண்பர்களான நாணனும், காடனும் திருகாளத்தி மலைக்கு தின்னனை அழைத்துக்கொண்டு சென்றனர். அங்கு நதிக்கரை தின்னனின் நண்பன் காடன் அந்த பன்றியை சாப்பிடுவதற்கு நெருப்புமூட்டிக்கொண்டு இருந்தார்.

    அப்போது திருக்காளத்தி மலை உச்சியில் உள்ள சிவபெருமான பார்க்க நாணன் தன்னுடைய நண்பனான தின்னனாரை அழைத்துக்கொண்டு சென்றார். திருக்காளத்தி மலையில் உள்ள சிவபெருமானை பார்த்த தின்னன், அவரை பார்த்து சிவபெருமானே இந்த கொடிய காட்டின் எப்படி தனியாக இருக்கிறீர்கள் என்று கூறி வருத்தப்பட்டார். அதன்பிறகு நான் உடனே உங்களுக்கு சாப்பிடுவதற்கு ஏதாவது கொண்டுவருகிறேன் என்று சொல்லி தன்னுடைய நண்பன் காடன் சுட்டு வைத்திருந்த பன்றி இறைச்சியை பார்த்தார்.

    அந்த இறைச்சியில் எந்த பகுதி சுவையாக இருக்கும் என்று நினைத்து அந்த பகுதியை சாப்பிட்டு பார்த்து அந்த எச்சில் இறைச்சியை ஒரு இலையில் சேர்த்து வைத்து அதனை சிவபெருமானுக்கு கொண்டுசெல்லலாம் என்று எடுத்துக்கொண்டு செல்ல, ஐயோ இறைச்சி சாப்பிட்டால் சிவபெருமானுக்கு தண்ணீர் தாகம் எடுக்கும். எனவே தண்ணீர் எப்படி கொண்டு செல்வது என்று எண்ணிக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய தண்ணீரை தன்னுடைய வாயில் முகர்ந்து வைத்துக்கொண்டு உடனே திருக்காளத்தில் இருக்கக்கூடிய சிவபேருமானின் ஆலயத்துக்கு சென்றார் தின்னன்.

    அதன்பிறகு தான் கொண்டுவந்த இறைச்சியையும் சிவபெருமானுக்கு படைத்தார் தின்னன். பின்னர் வாயில் முகர்ந்து கொண்டுவந்த நீரை மஞ்சன நீராக எண்ணி சிவபெருமான் மீது உமிழ்ந்துவிட்டார். பிறகு சிவபெருமானை பார்த்து சாப்பிடுங்கள் என்று தின்னனார் பவ்யமாக வேண்டிக்கொண்டார்.

    இவ்வாறு தொடர்ந்து தின்னனார் தான் சுவைத்து பார்த்து கொண்டுவந்த இறைச்சியையும், வாயில் உமிழ்ந்து கொண்டுவந்த நீரை மஞ்சன நீராகவும் சிவபெருமானுக்கு படைத்து வந்தார். திருகாளத்தி மல்லையில் தினமும் காலையில் சிவபெருமானுக்கு ஆகம முறைப்படி சிவகேசரியார் என்பவர் பூக்கள், மஞ்சன நீர், அமுது கொண்டு பணி செய்வது வழக்கம். அன்று மதியம் தான் தின்னனார், தான் சுவைத்துக்கொண்டுவந்த இறைச்சியையும், எலும்பையும் படைத்தார். மறுநாள் பூஜை செய்வதற்காக பூக்கள், மஞ்சனநீர், அமுது ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் செய்ய வந்தார்.

    உடனே சிவபெருமானுக்கு முன்னாள் இறைச்சியும், எலும்புத்துண்டும் இருப்பதை பார்த்த சிவகேசரியார் நடுநடுங்கி போனார். இந்த கொடுஞ்செயலை செய்தவர் யாரோ என்று கூறிக்கொண்டு அதனை எடுத்து சுத்தம் செய்துவிட்டு, அருகில் இருந்த நதியில் குளித்துவிட்டு வந்து சிவபெருமானுக்கு பூஜை செய்தார். இப்படி 4 நாட்கள் சென்றது. இந்த 4 நாட்களும் சிவகேசரியார் பூக்களும், மஞ்சனநீரும், அமுதும் கொண்டு வந்து அபிஷேகம் செய்துவிட்டு செல்வார். மாலையில் தின்னனார் வந்து இறைச்சிகளும், எலும்புகளும் கொண்டுவந்து வழிபாடு செய்வார்.

    ௪ நாட்களும் தொடர்ந்து இந்த இறைச்சிகளை அப்புறப்படுத்திக்கொண்டே வந்தார். ஐந்தாவது நாள் ரொம்ப வருத்தப்பட்டு இறைவனிடம் நீ எப்படி பொருத்துக்கொண்டு இருக்கிறாய். இந்த கொடுமையை எப்படியாவது நீக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு மனம் வருந்தி வேண்டினார். அன்று இரவு சிவகேசரியார் கனவில் சிவபெருமான் வந்து, என்னிடம் வந்து பூஜை செய்பவனை சாதாரண வேடன் என்று நினைத்துவிடாதே. நீ அவன் செய்யும் பக்தியை நாளை நேரில் வந்து மறைந்திருந்து பார் என்று கூறினார்.

    சிவகேசரியார் காளஹஸ்தி மலைக்கு சென்று அங்கு ஒரு மரத்தின் பின்னால் மறைந்திருந்து என்ன நடக்கிறது என்பதை கவனித்தார். வழக்கம்போல் அன்றும் தின்னனார் ரொம்ம மகிழ்ச்சியுர இலையில் இறைச்சியும், வாயில் நீரும் முகர்ந்து வந்தார். அப்போது சிவபெருமானின் ஒரு கண்ணில் இருந்து ரத்தம் வடிந்துகொண்டு இருந்தது. உடனே சிவபெருமான் அப்பா... என்று ஓடி வந்து அலறிவிட்டார். இதனால் வாயில் இருந்த மஞ்சனநீர் கீழே வடிந்தது. உடனே ஊனுக்கு ஊன் வினைதீர்க்கும் என்கிற பழமொழி தின்னனாருக்கு நினைவுக்கு வந்தது. சிவபெருமானே உங்களுடைய கண்களில் இருந்து ரத்தம் வடிகிறது என்று கவலைப்படவேண்டாம். என்னிடம் இரண்டு கண்கள் உள்ளன என்று கூறிவிட்டு தன்னுடைய ஒரு கண்ணை பிடுங்கி எடுத்து சிவபெருமானின் ஒரு கண்ணில் வைத்தார்.

    அப்போது ரத்தம் வடிவது நின்றுவிட்டது. தின்னனாருக்கு ஒரே சந்தோசம். சிவபெருமானுக்கு கண்களில் இருந்து வடியக்கூடிய ரத்தம் நின்றுவிடவே தின்னனாருக்கு ஒரே சந்தோசம். அந்த சந்தோசம் தீருவதற்குள், சிவபெருமானின் மற்றொரு கண்ணில் இருந்தும் ரத்தம் வடிந்தது. இதை பார்த்ததும் சிவபெருமான் வருத்தப்படாதீர்கள். எனக்கு இன்னொரு கண்ணும் இருக்கிறது. அதையும் நான் உமக்கே தந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு மற்றொரு கண்ணையும் பிடுங்க சென்றார்.

    அப்போது சிபெருமானுக்கு வைக்கும் போது அடையாளம் தெரிவதற்காக தன்னுடைய காலின் பெருவிரலை அடையாளத்திற்கு சிவபெருமானின் ரத்தம் வடியக்கூடிய மற்றொரு கண்ணில் வைத்து ஊன்றி வைத்துவிட்டு அம்பை எடுத்து மற்றொரு கண்ணையும் குத்தும்போது சிவபெருமான் திகைத்து நின்று பொறு கண்ணப்பா பொறு என்று அசரிரீயாக தடுத்து நிறுத்தினார். என்னுடைய கண்ணில் ரத்தம் வடிவதை பார்த்தவுடன் உன்னுடைய கண்ணை பிடுங்கி நீ வைத்ததால் நீ கண்ணப்பர் என்று அழைக்கப்படுவாய்.

    அதுமட்டுமில்லாமல் நீ எப்போதும் என்னுடனேயே இருப்பாய் என்று கூறி திருக்காளத்தி மலையில் வைத்து முக்தியும் கொடுத்தார் சிவபெருமான். இந்த கண்ணப்பநாயனாரின் வரலாற்றில் இருந்து தெரிவது என்னவென்றால் இறைவனிடம் நாம் எப்போதும் அன்போடும், பக்தியோடும் இருந்தால் முக்தி கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் பிறவிப்பிணிகூட நீங்கும் இதைத்தான் இந்த கதை நமக்கு உணர்த்துகிறது. பக்தியோடு இருப்போம். முக்தி பெறுவோம்.

    • அந்த சக்தி அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது.
    • அந்த அதிர்வு உங்கள் உடல், மனம், ஆரோக்கியத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும்

    வில்வத்தில் அதிர்வை உணரலாம்

    சிவாலயங்களில் உள்ள லிங்கத்தில் இருந்து, இந்த பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள சக்தி வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

    அந்த சக்தி அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது.

    இதனால்தான் பழமை சிறப்புமிக்க ஆலயங்களுக்குள் நாம் செல்லும் போது அதிர்வை உணர முடியும்.

    சிவன் உறைந்துள்ள லிங்கம் மீது நாம் வில்வ இலைகளைப்போட்டு பூஜை செய்யும்போது,

    லிங்கத்தில் இருந்து வெளியாகும் அதிர்வு வில்வ இலைகள் மீது பதியும்.

    இதையடுத்து அந்த அதிர்வுகளை வில்வ இலைகள் முழுமையாக ஈர்த்து தக்க வைத்துக் கொள்ளும்.

    அந்த ஆற்றல் வில்வ இலைகளுக்கு இருக்கிறது.

    லிங்கமூர்த்தி மீது வைத்து எடுக்கப்படும் வில்வ இலைகளை, நீங்கள் அர்ச்சகரிடம் இருந்து கையில் வாங்கியதுமே, அந்த அதிர்வை உணர்வீர்கள்.

    அந்த அதிர்வு உங்கள் உடல், மனம், ஆரோக்கியத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் மகிமை கொண்டது.

    இதனால்தான் வில்வ இலையை புனிதமாக கருதுகிறார்கள்.

    அடுத்தத் தடவை சிவனை வழிபட்டு முடிந்ததும், மறக்காமல் வில்வ இலையை கேட்டுப் பெறுங்கள்.

    • வில்வ இலை பெருமைகளை சிவபுராணம் விரிவாக சொல்லி உள்ளது.
    • மற்ற மலர்களையோ இலைகளையோ அதைப் போல் பயன்படுத்தக் கூடாது.

    உலர்ந்து போனாலும் பூஜைக்கு பயன்படுத்தும் வில்வம்

    வில்வ இலை மிகவும் உயர்வானது.

    வில்வ இலை பெருமைகளை சிவபுராணம் விரிவாக சொல்லி உள்ளது.

    வில்வமரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள்.

    ஒரு வில்வ மலரானது ஒரு லட்சம் தங்க புஷ்பங்களுக்கு இணையானது என்று சொல்லி இருக்கிறார்கள்.

    ஒரு வில்வ மரத்தை வீட்டில் வளர்த்தால் அஸ்வமேத யாகம் செய்த பலனும், ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனும், கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் உலகில் உள்ள அத்தனை சிவாலயங்களைத் தரிசித்த பலனும் கிடைக்கும்.

    அதைத் தவிர வில்வத்துக்கு மட்டுமே நிர்மால்ய தோஷம் கிடையாது.

    அதைப் பறித்து எத்தனை நாட்கள் ஆனாலும் உலர்ந்து போனாலும் கூட பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

    மற்ற மலர்களையோ இலைகளையோ அதைப் போல் பயன்படுத்தக் கூடாது.

    ஆனால் வில்வ இலையை எத்தனை தடவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

    இது வில்வ இலைக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பாகும்.

    • நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை.
    • 10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன.

    300 டன் எடையுடன் அசைந்தாடி வரும் ஆழித்தேர்

    'திருவாரூர்த் தேரழகு' என்றும் 'திருவாரூர்த் தேரசைவது போல் அசைகிறான்' என்ற பழமொழியும் நாட்டு மக்களிடம் திருவாரூர் தேர்ப்பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது என்பதை அறியலாம்.

    'ஆழித்தேர் வித்தகனே நான் கண்டது ஆரூரே' என்று திருநாவுக்கரசர் சொல்கிறார்.

    அவர் காலம் 7 ஆம் நூற்றாண்டு.

    இதன்மூலம் 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தேர்த்திருவிழா நடந்து வருவதை அறியலாம்.

    மற்ற ஊர்களில் உள்ள தேர்கள் அரைத்தேர், முக்கால் தேர்தான். திருவாரூர் தேரே முழுத் தேராகும்.

    தமிழகத் தேர்களில் திருவாரூர் தேரே பெரியதாகும்.

    இதனால் இதனை 'ஆழித்தேர்' என்று அழைக்கின்றனர்.

    'ஆழி' என்பது சக்கரமாகும்.

    மனுநீதிசோழன் தன் மகன் கன்றைக் கொன்றதால், மகனையே தன் தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதியைக் காத்ததால் இத்தேர் திருவிழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    1748இல் தேர்த் திருவிழா நடைபெற்றதற்கான குறிப்பு தஞ்சை அரண்மனை சரஸ்வதி மகால் நூலக மேயடி ஆவணம் கூறுகிறது.

    1765 ஆம் ஆண்டு தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா, திருவாரூர் தேர் விழாவுக்கு வருகை தந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

    1926 ஆம் ஆண்டு தேரோட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் திருவாரூர் தேர் முழுவதும் எரிந்தது. 2 நாட்கள் எரிந்ததாக கூறுவர்.

    பின்னர் 1928 ஆம் ஆண்டு புதுத்தேர் உருவாக ஆரம்பித்து 1930 ஆம் ஆண்டு மார்ச் 3ந் தேதி மீண்டும் ஓடியது.

    இது இன்று நாம் காணும் தேராகும். பின்னர் 1948 ஆம் ஆண்டோடு தேரோட்டம் நின்றுவிட்டது.

    1970 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி மற்றும் வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார் போன்றோரின் முன் முயற்சியால் மீண்டும் ஓடத் தொடங்கியது.

    அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடியாகும்.

    விமானம் வரை தேர்ச்சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி, விமானம் 12 அடி. தேர்க்கலசம் 6 அடி என அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடியாகும்.

    இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள் உள்பட அலங்கரிக்கப்படாத மரத்தேரின் எடை சுமார் 220 டன்களாகும்.

    இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகளும், 50 டன் எடையுள்ள மூங்கில்களும், சுமார் 10 டன் எடையுள்ள சவுக்கு மரங்களும் பயன்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன.

    திருச்சி பாரத மிகு மின் நிறுவனத்தார் இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள், மற்றும் ஹைட்ராலிக் பிரேக் போன்ற சாதனங்களைப் பொருத்தினர்.

    10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இரும்புக் கயிறு, ஹைட்ராலிக் பிரேக் போன்றவற்றின் எடையைக் கூட்டினால் தேரின் எடை சுமார் 300 டன்களாகும்.

    நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை.

    வடம் இழுக்கப் பயன்படும் கயிற்றின் சுற்றளவு 21 அங்குலமாகும்.

    இந்த மாற்றங்களால் சுமார் 10 ஆயிரம் பேர் சேர்ந்து இழுக்க வேண்டிய இத்தேரை மூவாயிரம் பேர் சேர்ந்து இழுத்தாலே நகர்ந்து விடுகிறது.

    • ‘திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்’ என்று சுந்தரர் தேவாரம் பாடுகிறது.
    • தஞ்சையை ஆண்ட மன்னன் சகாஜி திருவாரூர் தியாகராஜர் மீது தமிழில் கீர்த்தனைகள் பாடியுள்ளார்.

    64 சக்தி பீடங்களில் திருவாரூர் முக்கியமான ஊர்

    இக்கோவிலில் ஞானசக்தியாகவும் (கமலாம்பிகை), கிரியா சக்தியாகவும் (நீலோத்பலாம்பாள்), இச்சாசக்தியாகவும் (கொண்டி) வடிவு கொண்டு அருள் புரிகிறாள்.

    இக்கோவிலில் உள்ள சித்தீஸ்வரம், மேதா தட்சிணாமூர்த்தி சன்னதியில் தருமபுர ஆதீன நிறுவனர் உபதேசம் பெற்றதாக கருதப்படுகிறது.

    17 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மன்னன் சகாஜி திருவாரூர் தியாகராஜர் மீது தமிழில் பல நூறு கீர்த்தனைகள் பாடியுள்ளார்.

    இவரும் இவருக்குப் பின்னர் முதல் சரபோஜியும் ஆண்டபோது திருவாரூரில் மன்னரின் பிரதிநிதியாக சாமந்தனார் ஒருவர் பணிபுரிந்தார்.

    அவருடைய மந்திரியாய் பணிபுரிந்தவர் சிங்காதனம்.

    இவர் சிறந்த ஓவியர். இவர் வரைந்த ஓவியங்களில் கோவிலின் மண்டபத்தில் இன்றும் உள்ளது.

    அதன் வாயிலாக 17 ஆம் நூற்றாண்டில் ஆரூர் திருக்கோவில் எப்படித் திகழ்ந்துள்ளது என்றும் ஆரூர் மக்களின் பண்பாடு, அவர்களின் இயல், இசை, கூத்துக்கள் பற்றி விளக்கமாக நாம் காண முடிகிறது.

    'திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்' என்று சுந்தரர் தேவாரம் பாடுகிறது. இதைவிட இவ்வூர்ச் சிறப்பு பற்றி வேறு சொல்ல வேண்டுமா?

    ×