search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வெட்டுகள்"

    • வலம்புரி விநாயகரையும் சுப்பிரமணியரையும் எழுப்பியருளியவர் மும்முடி திம்மரசர்.
    • விபூதி பிரகாரத்து மதிற்சுவரைத் தோற்றுவித்தவன் திருநீற்றுச் சுந்தரபாண்டியன்.

    பல்வேறு சோழ மன்னர்கள் இக்கோவிலுக்குப் பல கொடைகளை வழங்கியுள்ளனர், இதை இதுவரை இங்குக் கிடைத்துள்ள 156 கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.

    இவற்றுள் பராந்தக சோழன் பற்றிய கல்வெட்டுகளே மிக தொன்மையானவை.

    இத்தலப் பெருமை அறிந்து தமிழ் நாட்டைச் சார்ந்த சோழ பாண்டியர்கள் மட்டுமன்றிப் போசளப் பேரரசர்கள், விஜயநகர அரசர்கள்,

    மதுரை நாயக்கர்கள் போன்றோரும் ஆற்றிய திருப்பணிகளைச் சுமார் 154 கல்வெட்டுகள் அறிவிக்கின்றன.

    ஐந்து பிரகாரங்களைக் கொண்ட இத்திருத்தலத்தின் முதலாம் பிராகாரத்திலான துவார பாலகர் திருவுருக்களைச் செய்வித்தவர் இளைய நயினார் மகன் தெய்வங்கள் பெருமாள்.

    நீலகண்ட நாயக்கர் நான்காம் பிரகாரத்தில் அகிலாண்டநாயகியின் முன் உள்ள பசுபதீஸ்வரம் உடையாரை எழுந்தருளச் செய்துள்ளார்.

    சதாசிவ வரஜப்பைய யாஜி தீட்சிதராயர் இக்கோவிலின் உற்சவ மண்டபத்தை உருவாக்கினார்.

    முதற் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள ஷ்ரீபாதீஸ்வரம் உடைய நாயனார் கோயிலைக் கட்டியவர், திருஞானசம்பந்தர்.

    சந்தபேந்திரன் நான்காவது பிரகாரத்தில் உள்ள மேலக்கோபுரத்தினை எழுப்பினார்.

    வலம்புரி விநாயகரையும் சுப்பிரமணியரையும் எழுப்பியருளியவர் மும்முடி திம்மரசர்.

    விபூதி பிரகாரத்து மதிற்சுவரைத் தோற்றுவித்தவன் திருநீற்றுச் சுந்தரபாண்டியன்.

    எம்பிரானின் திருவிளையாடல்களில் ஒன்றான திருநீறு தங்கமாக மாறிய அற்புத காலமும் இதுவேயாகும்.

    பெரும் சிவனடியாரான வீரசோம ஈசுவரன் என்னும் ஹொய்சால மன்னன் இத்திருத்தலத்தின் கிழக்கில் ஒரு ஏழுநிலைக் கோபுரத்தை எழுப்பினான்.

    பாண்டிய அரசர்களான மாறவர்மன் சுந்தரபாண்டியன் மற்றும் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் தமது பிறந்த நாளை யொட்டி இத்திருத்தலத்திற்கு நிபந்தங்களை வழங்கியுள்ளனர்.

    திருபுவனச் சக்கரவர்த்தி என்னும் சிறப்புற்ற இராஜேந்திர சோழன் (கங்கை கொண்ட சோழன்) இருபத்தைந்து வேலி நிலத்தை இத்திருத்தலத்திற்கு இறை பணிக்காக அளித்தான்.

    • 2,500 ஆண்டுகளுக்கு முன்பே பெரும் சிறப்போடு திகழ்ந்த நாடு காங்கயம் நாடு.
    • தமிழா்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சடங்குகளிலும் மண் பானைகள் முக்கிய இடம் பெறுகின்றன.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் வட்டத்துக்குட்பட்ட பரஞ்சோ்வழியில் உள்ள மகாதேவா் நட்டுராமந்தா் என்னும் மத்தியபுரீஸ்வரா், வீரநாராயண பெருமாள் கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த 2 கோவில்களிலும் திருப்பூா் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநா் ரவிகுமாா், பொறியாளா் பொன்னுசாமி ஆகியோா் கள ஆய்வு மேற்கொண்டு பழமையான இரு கல்வெட்டுகளை கண்டறிந்தனா்.

    இது தொடா்பாக ஆய்வு மையத்தின் இயக்குநா் ரவிகுமாா் கூறியதாவது:-

    பண்டைய கொங்கு மண்டலத்துக்குட்பட்ட 24 நாடுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகத்தால் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே பெரும் சிறப்போடு திகழ்ந்த நாடு காங்கயம் நாடு.

    இந்த நாட்டில் உள்ள பண்டைய 12 கிராமங்களில் பழஞ்சேபளி என்றும், பரஞ்சோ்பள்ளி என்றும் அழைக்கப்பட்ட இன்றைய பரஞ்சோ்வழியும் ஒன்றாகும். இங்குள்ள மத்தியபுரீஸ்வரா் கோவிலின் அம்மன் சன்னதி முன் மண்ணில் புதைந்திருந்த பெரிய தூண் கல்லை எடுத்து ஆய்வு செய்தபோது கி.பி.11-ம் நூற்றாண்டை சோ்ந்த கிரந்த எழுத்துகளுடன் கூடிய மந்திர குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளதை அறிய முடிந்தது.

    220 செ.மீ., உயரம், 50 செ.மீ., அகலம், 20 செ.மீ., கனம் கொண்ட பெரிய கல்லில் நான்கு பக்கங்களிலும் குறியீடுகளும், கிரந்த எழுத்துகளும் பொறிக்கப்பட்டுள்ளன. முதல் பக்கத்தில் இரண்டு குத்துவிளக்குகள், சூலம், சங்கு மற்றும் சந்திரன் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்துகளின் உயரம் 60 செ.மீ., ஆகும்.

    இந்த கிரந்த எழுத்துகளை வாசித்த இந்திய வரலாற்று பேராசிரியா் சுப்பராயலு, கல்வெட்டின் 4 பக்கங்களிலும் ஹ்ர்ரிம், ஹஸ்த்தா, ஹஸ்ரா, ஷாம், லம் போன்ற சொற்களே திரும்ப திரும்ப வருகின்றன என்றாா்.

    பொதுவாக இவ்வகை மந்திரக் கல்லை வழிபடுவதால் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படும் நோய் குணமாகும் என்பது நம்பிக்கையாகும். எழுத்து அமைப்பை வைத்து பாா்க்கும்போது இது கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகும்.

    அதேபோல, வீரநாராயண பெருமாள் கோவிலில் புதைந்திருந்த ஒரு கல்லை வெளியே எடுத்து ஆய்வு செய்தபோது அதில் 3 பக்கங்களிலும் தமிழ் எழுத்துகள் இருப்பதை காண முடிந்தது. 80 செ.மீ., உயரம், 50 செ.மீ., அகலம், 20 செ.மீ., கனம் கொண்ட இந்த கல்லில் 3 பக்கங்களில் வரலாற்று சிறப்புமிக்க செய்திகள் உள்ளன.

    தமிழா்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சடங்குகளிலும் மண் பானைகள் முக்கிய இடம் பெறுகின்றன. கோவில்களிலும் இறைவனுக்கு மண்பானையிலேயே அமுது செய்து படைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மண் பானைகளை உருவாக்கும் குயவா்களை, வேட்கோவா், வேள்கோ என்றெல்லாம் நமது இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

    இந்த கல்வெட்டில் முதல் பக்கத்தில் 12 வரிகளும், இரண்டாம் பக்கத்தில் 9 வரிகளும், மூன்றாம் பக்கத்தில் 4 வரிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் வேட்கோவா்களுக்கு வரி விதித்தது பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது.

    அதாவது விளம்பி வருஷம் மாசி மாதம் 18-ம் நாள் ஸ்ரீ மன் கும்பள அண்ணாா்கள் இப்பகுதியை திம்மராசன் ஆட்சியின் கீழ் அதிகாரம் செய்தபோது, பரஞ்சோ்பள்ளி வீர நாராயண பெருமாளுக்கு திருநந்தா தீபம் எரிப்பதற்காக கூத்தாா் சுங்கம் என்னும் வேட்கோவா் மண்பானை செய்ய பயன்படும் ஒரு சக்கரத்துக்கு அன்று விதிக்கப்பட்ட வரிப்பணம் நான்கை சந்திரன் உள்ளவரை கொடுத்துள்ள செய்தியை அறிய முடிகிறது.

    இதன் மூலம் அன்று மண்பானை தொழில் சிறப்புற்று இருந்ததும், அதற்கு வரி விதிக்கப்பட்டு இருந்ததையும் நாம் அறிய முடிகிறது. எழுத்து அமைப்பை வைத்து பாா்க்கும் போது இது கி.பி.16-ம் நூற்றாண்டை சோ்ந்ததாகும் என்றாா்.

    • இங்குள்ள எல்லா கல்வெட்டுக்களும் முற்றுப் பெறாத கல்வெட்டுக்களே.
    • இந்த கோவிலை பிரித்துக் கட்டும்போது கற்கள் பல மாறி இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

    இதுவரை தலபுராணத்தை பற்றி பார்த்தோம்.

    இந்த ஆலயத்துள் துண்டு கல்வெட்டுகள் உள்ளன.

    இங்குள்ள எல்லா கல்வெட்டுக்களும் முற்றுப் பெறாத கல்வெட்டுக்களே.

    இந்த கோவிலை பிரித்துக் கட்டும்போது கற்கள் பல மாறி இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

    ராஜ கோபுரவாயிலில், 16-ம் நூற்றாண்டை சேர்ந்து எழுத்தமைதியுடைய ஒரு கல்வெட்டு செய்யுள் வடிவில் அமைந்து இருக்கிறது.

    இப்பாடல் எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரியவிருத்த வடிவில் அமைந்துள்ளது.

    • சோளிங்கபுரக் கல்வெட்டுகள் 1896 மற்றும் 1952, 53-ம் ஆண்டுகளில் தொல்லியல் துறையால் படியெடுக்கப்பட்டன.
    • வரதராஜப் பெருமாள் கோவில் கட்டப்பட்ட விவரம் சின்னமலை அனுமார் கோவில் நுழைவாயிலில் உள்ளது.

    சோளிங்கபுரக் கல்வெட்டுகள் 1896 மற்றும் 1952, 53-ம் ஆண்டுகளில் தொல்லியல் துறையால் படியெடுக்கப்பட்டன.

    நரசிம்மர் குறித்த முக்கிய விவரங்களை மட்டுமே இங்கே காண்போம்.

    வேங்கடபதிதேவ மகாராயர் ஆட்சியின் போது சக ஆண்டு 1527 தை மாதத்தில் கந்தாடை அப்பய்யங்கார் விருப்பப்படி

    அக்காரக்கனி நரசிங்கப்பெருமாளுக்கு அமுது படிக்குத்தானம் செய்தவர்

    சின்ன திம்மய்யன் மகன் சின்ன நாராயணப்பர் ஆவார்.

    மடைப்பள்ளியில் உள்ள கல்தொட்டியில் தெலுங்குக் கல்வெட்டு உள்ளது.

    அதில் கந்தாளப்ப என்றுள்ளது. சங்கு சக்கரத்துடன் தென்கலை நாமம் பொறிக்கப்பட்டுள்ளது.

    கி.பி. 1619-ல் கடிகாசலத்தில் சப்தரிஷி கோவிலும் வரதராஜப் பெருமாள் கோவிலும் கட்டப்பட்ட விவரம்

    சின்னமலை அனுமார் கோவில் நுழைவாயிலில் உள்ளது.

    ஊர்க்கோவில் நுழைவாயிலில் உள்ள தமிழ் மற்றும் தெலுங்குக் கல்வெட்டுக்கள் சாத்தாத

    வைஷ்ணவர் தக்கான் துவஜரோஹணத்தன்றும் தொட்டராசர் திருநட்சத்திரத் தன்றும்

    தீபாராதனை செய்ய பொன் வழங்கப்பட்டதைக் கூறுகின்றன.

    கி.பி 1633-ல் கிருஷ்ண ஜெயந்தி உரியடி போன்ற விழா செலவுகளுக்கு முதலீடாக 200 காசுகளைப் பாவாடை தம்மு நாயக்கர் ராம தேவராயர் அளித்ததை ஒரு சாசனம் கூறுகிறது.

    கி.பி. 1633-ல் ராமராஜா என்பவர் நிலத்தானம் செய்துள்ளார். அக்கார நரசிங்கப்பெருமான் திருவமுது படைக்கவும் 12 ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு உணவிடவும் இத்தானம் பயன்பட்டது.

    13.6 1595-ல் கூடிய வேங்கடபதிராயர் கல்வெட்டு முதன் முதலில் சோளிங்கபுரம் பெயரைச் சுட்டுகிறது.

    கி.பி. 1637-ல் வெட்டப்பட்ட சாசனம் தக்கான் நாச்சிமர பூசைக்கும் பிரம்மோற்சவம் முதலிய விழாக்களுக்கும் சாத்தாத அலமேலம்மங்கார் முதலீடு அளித்துள்ளார் என்கிறது.

    2-5-1717-ல் ஆண்டாள் சிலை புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    • கொங்கு நாட்டை கொங்குச்சோழர்கள், பிற்காலச் சோழர்கள் ஆட்சி செய்துள்ளனர் என்பதற்கு ஏராளமான சான்றுகளும், கல்வெட்டுகளும் கிடைக்க பெற்றுள்ளது.
    • ஸ்ரீ வீரபாண்டியன் திரிபுவனச் சக்கரவர்த்தி சாசனம், தானம் எனவும் கல்வெட்டெழுத்துக்கள் காணப்படுகிறது.

    உடுமலை

    தென் கொங்குப்பகுதியில் சேர, சோழர்கள் மட்டுமல்லாமல் பாண்டியர்கள் உட்பட மூவேந்தர்களும் ஆட்சி செய்துள்ளதற்கான கல்வெட்டுகள் கிடைத்துள்ளதாக உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

    மன்னர்கள் ஆட்சி செய்த காலம், அவர்கள் ஆண்ட பகுதி, வழங்கிய தானங்கள் உள்ளிட்ட பல சரித்திர ஆதாரங்கள் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன. அந்தவகையில் கி.பி. 8-ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு இறுதி வரையிலும் கொங்கு நாட்டை கொங்குச்சோழர்கள், பிற்காலச் சோழர்கள் ஆட்சி செய்துள்ளனர் என்பதற்கு ஏராளமான சான்றுகளும், கல்வெட்டுகளும் கிடைக்க பெற்றுள்ளது.

    இதற்கு எடுத்துக்காட்டாக, கரைவழி பகுதியில் கொழுமம், குமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, காரத்தொழுவு, கடத்தூர் ஆகிய பகுதிகளில் வீரசோழன், வீரசோழ கலமூர்க்கன், விக்கிரம சோழன், அபிமான சோழ ராஜாதிராஜன், உத்தம சோழ வீரநாராயணன், முதல் குலோத்துங்க சோழன், வீரராசேந்திர சோழன், இரண்டாம் விக்கிரம சோழன் ஆட்சி செய்துள்ளதற்கான கல்வெட்டு சான்றுகள் ஏராளமாக உள்ளது.

    மடத்துக்குளத்தையடுத்த கண்ணாடிப்புத்தூர் பகுதி மட்டும் வீரபாண்டிய சதுர்வேதி மங்கலம் எனும் பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் பெயர் கொண்டதாக உள்ளது. அத்துடன் அதற்கு ஆதாரமான கல்வெட்டுகளும் இங்கு இருக்கின்றன. மேலும் கி.பி. 960 முதல் 980 வரை அமரபுயங்கன் பாண்டியன் எனும் பாண்டிய மன்னனின் ஆட்சிக்காலத்தில் தான் சோமவாரப்பட்டி சிவனியத்தலம் கற்கோயில் உருவாக்கப்பட்டதால் அம்மன்னனுடைய பெயரில் அமரபுயங்கீசன் என்னும் பெயரில் அந்த கோவில் வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. அது போல சிஞ்சுவாடி பகுதியில் ஒரு கல்வெட்டு உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினரால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீ விக்கரம சோழன் தெவற்கு பங்குனி எனவும், ஸ்ரீ வீரபாண்டியன் திரிபுவனச் சக்கரவர்த்தி சாசனம், தானம் எனவும் கல்வெட்டெழுத்துக்கள் காணப்படுகிறது.இதில் பெரும்பாலான எழுத்துக்கள் சிதிலமடைந்து இருக்கின்றன.

    இருந்தாலும் அதில் உள்ள, தெரியும் கல்வெட்டு எழுத்துக்களை வைத்து பார்த்தால் வீரபாண்டியன், ஆட்சியாண்டை குறிப்பதாகவும், நில தானம் செய்ததற்கான கல்வெட்டெழுத்துக்கள் என்பது தெரிய வருகிறது.சுமார் 500 முதல் 600 ஆண்டுகள் முந்தைய கல்வெட்டெழுத்து என்பதால் இது பிற்கால பாண்டியர்கள் 12 அல்லது 13-ம் நூற்றாண்டு கல்வெட்டாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    தென்கொங்குப் பகுதி வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதி என்றும், இதற்கு ஆழமான வரலாறுகள் இருப்பதையும் கொழுமம் பகுதியை சேரர்கள் ஆட்சி செய்ததற்கான சான்றுகள் இருக்கும் போது, கடத்தூர், சோழமாதேவி, காரத்தொழுவு, கண்ணாடிப்புத்தூர் பகுதிகளில் சோழர் ஆட்சி செய்தமைக்கான சான்றுகள் இருக்கும் போது, பாண்டியர்களும் கொங்குப் பகுதியை ஆட்சி செய்துள்ளனர் என்பதற்கு இந்தக் கல்வெட்டெழுத்துகள் உறுதியான சான்றுகளாக இருக்கின்றன.

    இந்தத் தகவலை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் முனியப்பன், வரலாற்றுப் பேராசிரியர் மதியழகன், வரலாற்று ஆசிரியர் ராபின், வி.கே. சிவகுமார், அருட்செல்வன் ஆகியோர் தெரிவித்தனர்.

    • நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை.
    • 10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன.

    300 டன் எடையுடன் அசைந்தாடி வரும் ஆழித்தேர்

    'திருவாரூர்த் தேரழகு' என்றும் 'திருவாரூர்த் தேரசைவது போல் அசைகிறான்' என்ற பழமொழியும் நாட்டு மக்களிடம் திருவாரூர் தேர்ப்பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது என்பதை அறியலாம்.

    'ஆழித்தேர் வித்தகனே நான் கண்டது ஆரூரே' என்று திருநாவுக்கரசர் சொல்கிறார்.

    அவர் காலம் 7 ஆம் நூற்றாண்டு.

    இதன்மூலம் 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தேர்த்திருவிழா நடந்து வருவதை அறியலாம்.

    மற்ற ஊர்களில் உள்ள தேர்கள் அரைத்தேர், முக்கால் தேர்தான். திருவாரூர் தேரே முழுத் தேராகும்.

    தமிழகத் தேர்களில் திருவாரூர் தேரே பெரியதாகும்.

    இதனால் இதனை 'ஆழித்தேர்' என்று அழைக்கின்றனர்.

    'ஆழி' என்பது சக்கரமாகும்.

    மனுநீதிசோழன் தன் மகன் கன்றைக் கொன்றதால், மகனையே தன் தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதியைக் காத்ததால் இத்தேர் திருவிழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    1748இல் தேர்த் திருவிழா நடைபெற்றதற்கான குறிப்பு தஞ்சை அரண்மனை சரஸ்வதி மகால் நூலக மேயடி ஆவணம் கூறுகிறது.

    1765 ஆம் ஆண்டு தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா, திருவாரூர் தேர் விழாவுக்கு வருகை தந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

    1926 ஆம் ஆண்டு தேரோட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் திருவாரூர் தேர் முழுவதும் எரிந்தது. 2 நாட்கள் எரிந்ததாக கூறுவர்.

    பின்னர் 1928 ஆம் ஆண்டு புதுத்தேர் உருவாக ஆரம்பித்து 1930 ஆம் ஆண்டு மார்ச் 3ந் தேதி மீண்டும் ஓடியது.

    இது இன்று நாம் காணும் தேராகும். பின்னர் 1948 ஆம் ஆண்டோடு தேரோட்டம் நின்றுவிட்டது.

    1970 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி மற்றும் வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார் போன்றோரின் முன் முயற்சியால் மீண்டும் ஓடத் தொடங்கியது.

    அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடியாகும்.

    விமானம் வரை தேர்ச்சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி, விமானம் 12 அடி. தேர்க்கலசம் 6 அடி என அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடியாகும்.

    இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள் உள்பட அலங்கரிக்கப்படாத மரத்தேரின் எடை சுமார் 220 டன்களாகும்.

    இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகளும், 50 டன் எடையுள்ள மூங்கில்களும், சுமார் 10 டன் எடையுள்ள சவுக்கு மரங்களும் பயன்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன.

    திருச்சி பாரத மிகு மின் நிறுவனத்தார் இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள், மற்றும் ஹைட்ராலிக் பிரேக் போன்ற சாதனங்களைப் பொருத்தினர்.

    10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இரும்புக் கயிறு, ஹைட்ராலிக் பிரேக் போன்றவற்றின் எடையைக் கூட்டினால் தேரின் எடை சுமார் 300 டன்களாகும்.

    நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை.

    வடம் இழுக்கப் பயன்படும் கயிற்றின் சுற்றளவு 21 அங்குலமாகும்.

    இந்த மாற்றங்களால் சுமார் 10 ஆயிரம் பேர் சேர்ந்து இழுக்க வேண்டிய இத்தேரை மூவாயிரம் பேர் சேர்ந்து இழுத்தாலே நகர்ந்து விடுகிறது.

    • ‘திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்’ என்று சுந்தரர் தேவாரம் பாடுகிறது.
    • தஞ்சையை ஆண்ட மன்னன் சகாஜி திருவாரூர் தியாகராஜர் மீது தமிழில் கீர்த்தனைகள் பாடியுள்ளார்.

    64 சக்தி பீடங்களில் திருவாரூர் முக்கியமான ஊர்

    இக்கோவிலில் ஞானசக்தியாகவும் (கமலாம்பிகை), கிரியா சக்தியாகவும் (நீலோத்பலாம்பாள்), இச்சாசக்தியாகவும் (கொண்டி) வடிவு கொண்டு அருள் புரிகிறாள்.

    இக்கோவிலில் உள்ள சித்தீஸ்வரம், மேதா தட்சிணாமூர்த்தி சன்னதியில் தருமபுர ஆதீன நிறுவனர் உபதேசம் பெற்றதாக கருதப்படுகிறது.

    17 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மன்னன் சகாஜி திருவாரூர் தியாகராஜர் மீது தமிழில் பல நூறு கீர்த்தனைகள் பாடியுள்ளார்.

    இவரும் இவருக்குப் பின்னர் முதல் சரபோஜியும் ஆண்டபோது திருவாரூரில் மன்னரின் பிரதிநிதியாக சாமந்தனார் ஒருவர் பணிபுரிந்தார்.

    அவருடைய மந்திரியாய் பணிபுரிந்தவர் சிங்காதனம்.

    இவர் சிறந்த ஓவியர். இவர் வரைந்த ஓவியங்களில் கோவிலின் மண்டபத்தில் இன்றும் உள்ளது.

    அதன் வாயிலாக 17 ஆம் நூற்றாண்டில் ஆரூர் திருக்கோவில் எப்படித் திகழ்ந்துள்ளது என்றும் ஆரூர் மக்களின் பண்பாடு, அவர்களின் இயல், இசை, கூத்துக்கள் பற்றி விளக்கமாக நாம் காண முடிகிறது.

    'திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்' என்று சுந்தரர் தேவாரம் பாடுகிறது. இதைவிட இவ்வூர்ச் சிறப்பு பற்றி வேறு சொல்ல வேண்டுமா?

    • மனுநீதிச் சோழன் கதை, அழகிய கல் சித்திரமாகக் காணப்படுகிறது.
    • இவ்வாலயம் கோவில்களின் கூடாரமாக விளங்குகிறது.

    திருவாரூர் கோவிலின் சிறப்புகள்

    இவ்வாலயம் கோவில்களின் கூடாரமாக விளங்குகிறது.

    9 ராஜகோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மண்டபங்கள், 15 தீர்த்தக் கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 100-க்கும் மேற்பட்ட சன்னதிகள் ஆகியவற்றுடன் இத்திருக்கோவில் பிரம்மாண்டமாகப் பரந்து விரிந்து சிறப்பாக அமைந்துள்ளது.

    கண்டீசர் இருக்குமிடத்தில் எமன் இருப்பதும் நின்ற நிலையில் நந்தி அமைந்திருப்பதும் இக்கோவிலின் பிற சிறப்புகளாகும்.

    இக்கோவிலிலுள்ள தியாகராசருடைய 'அசபா நடனம்' இவ்வூர்த் திருவிழாக்களில் சிறப்பாக நடைபெறுகிறது.

    மனுநீதிச் சோழன் கதை, அழகிய கல் சித்திரமாகக் கீழைக் கோபுர வாயிலருகே காணப்படுகிறது.

    சுந்தரரின் மனைவியரான பரவையார் பிறந்த ஊர் இதுவே.

    பரவை நாச்சியாருக்கென தியாகராசர் கோவில் தெற்குக் கோபுரத்தின் தென்புறத்தில் தனி ஆலயம் உள்ளது.

    தண்டபாணிக் கோவில், இராஜதுர்கை கோவில், மாணிக்க நாச்சியார் கோவில், திருவாரூர்ப் பரவையுண் மண்டலி முதலியன இவ்வூரில் காணத்தக்கவை.

    • 330 தேவாரப்பாடல்களும், திருவாசகப் பாடல்களும் உள்ளன.
    • 63 நாயன்மார்களில் இருபத்து மூவருக்குத் தொடர்புடைய தலமாகும்.

    திருவாரூர் கோவில்-புலவர்களால் பாடப்பெற்ற தலம்

    திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்றது திருவாரூர்.

    330 தேவாரப்பாடல்களும், திருவாசகப் பாடல்களும் உள்ளன.

    இது தவிர திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், பன்னிரு திருமுறைகளிலும் போற்றப்பட்டுள்ளது.

    அருணகிரிநாதர், தெலுங்கிசை மும்மூர்த்திகள், கயிலை ஞானப்பிரகாசர், குருஞானசம்பந்தர், இரட்டைப்புலவர்கள், அந்தகக்கண் வீரராகவ முதலியார்,

    மராட்டிய மன்னர் சகாஜி, வள்ளலார் முதலியோராலும், தமிழ், தெலுங்கு, மராட்டி, சமஸ்கிருத இலக்கியங்களிலும் இவ்வூரைப்பற்றி பாடப்பட்டுள்ளன.

    63 நாயன்மார்களில் இருபத்து மூவருக்குத் தொடர்புடைய தலமாகும்.

    இக்கோவிலிலுள்ள ஆயிரங்கால் மண்டபம், கல்தூண்களை மட்டுமே உடையது. விழாக்களின்போது அவற்றின் மீது பந்தல் அமைத்துக் கொள்வர்.

    இம்மண்டபத்தை சேக்கிழார் பாடியுள்ளார்.

    இக்கோவிலிலுள்ள தேவாசிரிய மண்டபத்தில்தான் சுந்தரருடைய திருத்தொண்டத் தொகையை இயற்றப்பட்டதாக கூறுவர்

    • ராஜகோபுரம் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    • சோழ மன்னர் நிலம் அளித்தனர் என்பதும் இங்குள்ள கல்வெட்டுக்களால் தெரிய வருகிறது.

    தியாகராஜர் கோவில்-ஆலய திருப்பணிகள்

    முதலாம் ஆதித்தன் (கி.பி. 871-907) காலக் கல்வெட்டு முதல் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மராத்திய மன்னர் சரபோஜி காலம் வரையிலான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

    முற்கால சோழர்கள் ஆட்சியில் இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்தே வலிவு பெற்றிருக்கிறது.

    அருட்திரு தியாகராஜசாமி கருவறை விமானத்துக்கு தங்கத்தகடு போர்த்திய முதலாம் இராஜேந்திரன் குடமுழுக்கும் செய்வித்ததாக இக்கோவிலின் கல்வெட்டு கூறுகிறது.

    இக்கோவிலின் ராஜகோபுரம் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டதென்று திருபுவனம் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

    இரண்டாம் இராஜாதிராஜன் பெரிய கோபுரத்தையும் சபாபதி மண்டபத்தையும் கட்டினான்.

    இரண்டாம் இராஜேந்திரன் வீதிவிடங்கர் எழுந்தருளியுள்ள கர்ப்ப கிரகத்தையும், வன்மீகநாதர் கருவறையையும் பொன் வேய்ந்தான் என்பதும்,

    திருமுறை ஆசிரியர்களின் திருநாட்களைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பதும்,

    திருவிளக்குப் பணிக்காகவும் பூசை முதலியவற்றுக்காகவும் சோழ மன்னர் நிலம் அளித்தனர் என்பதும் இங்குள்ள கல்வெட்டுக்களால் தெரிய வருகிறது.

    • திருவாரூரையும் தியாகராசர் கோவிலும் பிரித்து வரலாறே எழுத முடியாது.
    • சோழ அரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து ஊர்களுள் இதுவும் ஒன்று.

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-மூலாதாரத்தலம்

    பண்டைய தமிழ்நாட்டின் பகுதியாகிய சோழ மண்டலத்தின் ஒரு பகுதியே திருவாரூர் வட்டமாகும்.

    கரிகாலன் கி.பி. 50 முதல் 95 வரை ஆண்டதாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

    கரிகாலனுக்கும் முற்பட்ட புராண காலச் சோழர்களான முசுகுந்தன், புறாவுக்காக தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி, கன்றுக்காக மகனைக் கொன்ற மனுநீதிகண்ட சோழன் மூவரும் வாழ்ந்த இடமாக கூறப்படும் இடம் திருவாரூர் ஆகும்.

    திருவாரூரையும் தியாகராசர் கோவிலும் பிரித்து வரலாறே எழுத முடியாது.

    காவிரி ஆற்றின் வளமான வண்டல்பகுதியை உள்ளடக்கியது திருவாரூர் வட்டம்.

    சோழ அரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து ஊர்களுள் இதுவும் ஒன்று. (மற்ற ஊர்கள்- காவிரிப்பூம்பட்டினம், உறையூர், செய்ஞலுர், கருவூர்).

    ஆறு சிவத்தலை விராட புருடனின் ஆறு ஆதாரங்கள் என்று போற்றுவது சைவமரபு. அம்முறையில் திருவாரூர் மூலாதாரத்தலம்.

    • புரட்டாசி மகர நவமியில் பால் அன்னம் நிவேதிப்பவர்கள் முக்தியடைவர்.
    • நினைத்த காரியம் நிறைவேற தியாகராஜருக்கு விஷ்ணு பகவான் செய்த “முகுந்தார்ச்சனை” செய்யலாம்.

    தியாகராஜர் கோவில்-நேர்த்திக்கடன்கள்

    வீதிவிடங்க விநாயகருக்கு பின் உள்ள பிரம்ம நந்தியை மழை வேண்டி பிரார்த்தித்து, இவர் மீது நீர் நிரப்பினால் மழை கொட்டும்.

    பசுக்கள் கறவாது இருந்தால் இவருக்கு அருகு சாற்றி, அதனை பசுவுக்குக் கொடுத்தால் நன்றாகப் பால் கறக்கும்.

    கமலாம்பாளை வணங்கினால் ஞானம் கிட்டும்.

    ஊமைகள் கூட வியாழனுக்கு குருவாவார்கள்.

    புரட்டாசி மகர நவமியில் பால் அன்னம் நிவேதிப்பவர்கள் முக்தியடைவர்.

    ஜூரம் நீங்க, ஆயுள் அதிகரிக்க இங்குள்ள ஜூர தேவரை மிளகுரசம் படைத்து வழிபடுகிறார்கள்.

    தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.

    நினைத்த காரியம் நிறைவேற தியாகராஜருக்கு விஷ்ணு பகவான் செய்த "முகுந்தார்ச்சனை" செய்யலாம்.

    முசுகுந்த சக்கரவர்த்தி தியாகராஜருக்கு செய்த "முசுகுந்தார்ச்சனை" செய்யலாம்.

    ×