search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஷ்மி நரசிம்மர்"

    • மாலையில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும்.
    • பொங்கல் கழிந்த மறுநாள் கனுப்பரிவேட்டை உற்சவம் நடைபெறும்.

    சோளிங்கர் தலத்தில் தைப்பொங்கல் திருநாளில் காலையில் பெருமாள் ஆண்டாளுக்கு அலங்காரத் திருமஞ்சனம் நடைபெறும்.

    மாலையில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும்.

    போகிப்பண்டியைன்று தான் எல்லா ஊர்களிலும் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும்.

    ஆனால் இவ்வூரில் மட்டும் தைப்பொங்கல் திருநாளில் ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுவது விசேஷம்.

    இது கந்தாடை பெரியப்பங்கார் உபயமாகும்.

    இவ்வாறு திரு ஆடிப்பூரத் திருக்கல்யாணம், சங்கராந்தித் திருக்கல்யாணம், ஆழ்வார் திருவடி தொழல் ஆகிய மூன்று நாட்களிலும் தொட்டாச்சார் வம்சத்தவர்க்கு முதல் தீர்த்தகாரர்களுக்கு இரட்டை மரியாதை நடைபெறும்.

    பொங்கல் கழிந்த மறுநாள் கனுப்பரிவேட்டை உற்சவம் நடைபெறும்.

    இதனை மேற்குத்திக்குப் பரிவேட்டை என்றும் கூறுவர்.

    விடியற் காலையில் பெருமாள் தனித்துத்தலைப்பாகை, குற்றுவாள், கேடய அலங்காரத்துடன்

    கிளிக்கூண்டில் புறப்பாடு காண்பார் கண்டருளி மேற்குத்திசைக் கிராமங்களுக்குச் செல்வார்.

    திரும்பும் போது எறும்பி எனும் அசுவரேந்தபுரம் கிராம மண்டபத்தில் திருவாராதளம், திருப்பாவை நடைபெறும்.

    பின்னர் திருப்பாவை சாற்று தீர்த்த விநியோகம் நிகழும்.

    • திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் சோளிங்கர் நரசிம்மப் பெருமானை அக்காரக்கனி என்றே அழைத்துள்ளனர்.

    பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்

    கொண்டங் குறைவாயார்க்கு கோவில் போல் வண்டு

    வளம்கிளரும் நீர்சோலை வண்பூங் கடிகை

    இளங்குமரன் தன்விண்ணகர்.

    பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி. 61

    மிக்காளை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்

    புக்காளைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையைத்

    தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த

    அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே.

    திருமங்கைஆழ்வார் பெரியதிருமொழி. 8-9-4.

    எக்காலத் தெந்தையாய் என்னுள் மன்னில்

    மற்றெக் காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்

    மிக்கார் வேதவிமலர் விழுங்குமென்

    அக்காரக் கனியே உன்னையே யானே.

    நம்மாழ்வார் திருவாய்மொழி. 2-9-8.

    திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் சோளிங்கர் நரசிம்மப் பெருமானை அக்காரக்கனி என்றே அழைத்துள்ளனர்.

    பேயாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் கடிகை என்றே சோளிங்கரைக் குறிப்பிட்டுள்ளனர்.

    • சோளிங்கபுரக் கல்வெட்டுகள் 1896 மற்றும் 1952, 53-ம் ஆண்டுகளில் தொல்லியல் துறையால் படியெடுக்கப்பட்டன.
    • வரதராஜப் பெருமாள் கோவில் கட்டப்பட்ட விவரம் சின்னமலை அனுமார் கோவில் நுழைவாயிலில் உள்ளது.

    சோளிங்கபுரக் கல்வெட்டுகள் 1896 மற்றும் 1952, 53-ம் ஆண்டுகளில் தொல்லியல் துறையால் படியெடுக்கப்பட்டன.

    நரசிம்மர் குறித்த முக்கிய விவரங்களை மட்டுமே இங்கே காண்போம்.

    வேங்கடபதிதேவ மகாராயர் ஆட்சியின் போது சக ஆண்டு 1527 தை மாதத்தில் கந்தாடை அப்பய்யங்கார் விருப்பப்படி

    அக்காரக்கனி நரசிங்கப்பெருமாளுக்கு அமுது படிக்குத்தானம் செய்தவர்

    சின்ன திம்மய்யன் மகன் சின்ன நாராயணப்பர் ஆவார்.

    மடைப்பள்ளியில் உள்ள கல்தொட்டியில் தெலுங்குக் கல்வெட்டு உள்ளது.

    அதில் கந்தாளப்ப என்றுள்ளது. சங்கு சக்கரத்துடன் தென்கலை நாமம் பொறிக்கப்பட்டுள்ளது.

    கி.பி. 1619-ல் கடிகாசலத்தில் சப்தரிஷி கோவிலும் வரதராஜப் பெருமாள் கோவிலும் கட்டப்பட்ட விவரம்

    சின்னமலை அனுமார் கோவில் நுழைவாயிலில் உள்ளது.

    ஊர்க்கோவில் நுழைவாயிலில் உள்ள தமிழ் மற்றும் தெலுங்குக் கல்வெட்டுக்கள் சாத்தாத

    வைஷ்ணவர் தக்கான் துவஜரோஹணத்தன்றும் தொட்டராசர் திருநட்சத்திரத் தன்றும்

    தீபாராதனை செய்ய பொன் வழங்கப்பட்டதைக் கூறுகின்றன.

    கி.பி 1633-ல் கிருஷ்ண ஜெயந்தி உரியடி போன்ற விழா செலவுகளுக்கு முதலீடாக 200 காசுகளைப் பாவாடை தம்மு நாயக்கர் ராம தேவராயர் அளித்ததை ஒரு சாசனம் கூறுகிறது.

    கி.பி. 1633-ல் ராமராஜா என்பவர் நிலத்தானம் செய்துள்ளார். அக்கார நரசிங்கப்பெருமான் திருவமுது படைக்கவும் 12 ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு உணவிடவும் இத்தானம் பயன்பட்டது.

    13.6 1595-ல் கூடிய வேங்கடபதிராயர் கல்வெட்டு முதன் முதலில் சோளிங்கபுரம் பெயரைச் சுட்டுகிறது.

    கி.பி. 1637-ல் வெட்டப்பட்ட சாசனம் தக்கான் நாச்சிமர பூசைக்கும் பிரம்மோற்சவம் முதலிய விழாக்களுக்கும் சாத்தாத அலமேலம்மங்கார் முதலீடு அளித்துள்ளார் என்கிறது.

    2-5-1717-ல் ஆண்டாள் சிலை புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    • சோளிங்கர் நகரின் மையப்பகுதியில் பக்தோசிய சுவாமி திருக்கோவில் உள்ளது.
    • இவ்வூரில் பெரியமலை உச்சியில் யோக நரசிம்மர் திருக்கோவில் உள்ளது.

    தொண்டை மண்டலத்தில் உள்ள 22 வைணவத் தலங்களில் ஒன்றாகவும் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் கருதப்படும் கோளிங்கபுரம் தற்போது சோளிங்கர் என அழைக்கப்படுகிறது.

    வேலூர் மாவட்டத்தில் வாலாஜாப்பேட்டை-அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சோளிங்கரில் ரெயில்வே நிலையமும் உள்ளது.

    சென்னை-பெங்களூர் ரெயில்வே மார்க்கத்தில் அமைந்துள்ள சோளிங்கர், திருக்கடிகை அல்லது கடிகாசலம் என முன்பு வழங்கப்பட்டுள்ளது.

    சோளிங்கர் நகரின் மையப்பகுதியில் பக்தோசிய சுவாமி திருக்கோவில் உள்ளது.

    இங்கு யோக நரசிம்ம சுவாமியின் உற்சவப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

    சோளிங்கர் நகருக்குத் தெற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் கொண்டபாளையம் என்ற சிற்றூர் உள்ளது.

    இவ்வூரில் பெரியமலை உச்சியில் யோக நரசிம்மர் திருக்கோவில் உள்ளது.

    மலைக்கோவிலின் நீளம் 200 அடி. அகலம் 150 அடி. உயரம் 750 அடியாகும்.

    சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக்கோவிலுக்குச் செல்ல 1305 படிகளைக் கடந்து செல்ல வேண்டும்.

    பெரியமலைக்கு எதிரில் உள்ள சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேயசுவாமி திருக்கோவில் உள்ளது.

    150 அடி நீளமும் 250 அடி அகலமும் கொண்ட இக்கோவிலை அடைய 406 படிகளைக் கடந்து செல்ல வேண்டும்.

    உயரம் 350 அடியாகும். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பக்தோசிதசுவாமி கோவில்

    சுமார் 2 ஏக்கர் பரப்பில் 300 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்டுள்ளது.

    • தாமதமாக வந்த ஆஞ்சநேயர் சாளக்ராமத்தை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.
    • அதை ஆஞ்சநேயர் பூஜைக்காக எடுத்துக் கொண்டு வான்வழியே பறந்து வந்தார்.

    பங்குனி உத்திரம் தினத்தன்று காதில் பூ வைத்து காட்சி தருகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்.

    இத்தலத்தில் பங்குனி உத்திர விழா விசேஷமாக நடக்கிறது.

    அன்று ஒரு நாள் மட்டும் நரசிம்மர், தாயாருடன் சேர்ந்து காட்சி தருகிறார்.

    ஒரு சமயம் நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் ஆஞ்சநேயர் நீராடிய போது ஒரு சாளக்ராமம் கிடைத்தது.

    அதை ஆஞ்சநேயர் பூஜைக்காக எடுத்துக் கொண்டு வான்வழியே பறந்து வந்தார்.

    நாமக்கல் தலத்தில் நீராடுவதற்காக அவர் இறங்கினார்.

    சாளக்ராமத்தை கீழே வைக்க முடியது என்பதால் என்ன செய்வது என யோசித்த வேளையில் தீர்த்தக்கரையில் மகாலட்சுமி தாயார், தவம் இருப்பதைக் கண்டார்.

    அவளை வணங்கிய ஆஞ்சநேயர், அவளது தவத்திற்கான காரணத்தைக் கேட்டார்.

    திருமாலை, நரசிம்ம வடிவில் தான் பார்த்ததில்லை என்றும் அந்த வடிவத்தைக் காணதான் தவம் இருப்பதாகவும் கூறினாள்.

    ஆஞ்சநேயர் அவளது கையில் சாளக்ராமத்தைக் கொடுத்து, நீராடி விட்டு, வந்து வாங்கிக் கொள்வதாக சொன்னார்.

    குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து வாங்கிக் கொள்ளா விட்டால், சாளக்ராமத்தை தரையில் வைத்து விடுவேன் என லட்சுமி நிபந்தனை விதித்தாள்.

    ஆஞ்சநேயருக்கு சில காரணங்களால் தாமதமாகி விட்டது.

    தாயார், சாளக்ராமத்தை கீழே வைத்து விட்டார்.

    தாமதமாக வந்த ஆஞ்சநேயர் சாளக்ராமத்தை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

    அது பெரியமலையாக உருவெடுத்தது.

    அம்மலையில் நரசிம்மர் தோன்றி தாயாருக்கு அருள் செய்தார்.

    இவர் லட்சுமி நரசிம்மர் எனப்பட்டார். ஆஞ்சநேயரும் இங்கேயே தங்கி விட்டார்.

    நரசிம்மரின் மடியில் லட்சுமி இருந்ததால், லட்சுமி நரசிம்மர் என்றழைக்கப்படுகிறார்.

    ஆனால் லட்சுமி இவரது மடியில் இல்லாமல் மார்பில் இருக்கிறாள்.

    இவளை வணங்கிட கணிதத்தில் புலமை பெறலாம் என்பது நம்பிக்கை.

    சாளக்ராமத்தைக் கொண்டு வந்த ஆஞ்சநேயருக்கு நரசிம்மர் கோவில் எதிரே தனிக்கோவில் இருக்கிறது.

    18 அடி உயரமுள்ள இவர் கையில் ஜெபமாலையும், இடுப்பில் கத்தியும் வைத்திருக்கிறார்.

    பங்குனியில் இங்கு 15 நாள் விழா நடக்கிறது.

    பங்குனி உத்திரத்தன்று காலையில் மூலஸ்தானத்திலுள்ள நரசிம்மர் தாயார் சன்னதிக்கு எழுந்தருளி சேர்த்தியாக காட்சி தருகிறார்.

    அப்போது விசேஷ அபிஷேகம் நடக்கிறது. அதன் பின் இருவரும் முன்மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளுகின்றனர்.

    அன்று ஒரு நாள் மட்டுமே இங்கு சுவாமி தாயார் இவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.

    ×