search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் கடவுள்கள்"

    • தென்திசை நோக்கிப் புறப்பட்ட அகத்தியர், பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.
    • அப்போது, உமையவள் அகத்தியரிடம், தான் அணிந்திருந்த முத்து ஆரத்தை அளித்தார்.

    சிவன் - பார்வதி திருமணத்தை தரிசிக்க, ரிஷிகளும், முனிவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும்

    கயிலை மலைக்கு சென்றதால், உலகின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது.

    உலகத்தை சமநிலைக்குக் கொண்டுவர சிவபெருமானின் ஆணைப்படி அகத்தியர் தெற்கு நோக்கிப் புறப்பட்டார்.

    அப்போது, உமையவள் அகத்தியரிடம், தான் அணிந்திருந்த முத்து ஆரத்தை அளிக்க, அகத்தியர்

    அதைத் தமது கமண்டலத்தில் வைத்துக்கொண்டு தெற்கு நோக்கி புறப்படுகிறார்.

    ஆனால், உண்மையில் அது வெறும் முத்தாரம் மட்டும்தானா..?

    இல்லை.

    பெண் எனப் போற்றும் நதியின் சில நீர்த்துளிகளே அந்த ஆரமாகி, அம்பிகையின் திருமார்பில் தவழ்ந்து கொண்டிருந்தன!

    சிவபெருமானின் தேவியான பார்வதிதேவி லலிதை என்னும் ஞானசக்தியாகத் திகழ, இச்சா மற்றும் கிரியாசக்திகள்

    ஞானசக்தியாகிய லலிதைக்குப் பணிவிடை செய்தனர்.

    அதனால், மனம் நெகிழ்ந்த தேவி அவர்களிடம், 'வேண்டும் வரம் கேளுங்கள்' என்று கூறினர்.

    அதற்கு அவர்கள், ''தேவி, தாங்கள் நாராயணனாக வந்து எங்களை மணந்துகொள்ளவேண்டும்'' என்று கூறினர்.

    தன்னில் சரிபாதியை தனக்குத் தந்த தன்னுடைய நாயகனைப் பிரிய மனமில்லாத தேவி, அவர்களுடைய

    விருப்பத்தை நிறைவேற்ற நாரணியாகவும் நாராயணனாகவும் வடிவெடுத்தாள்.

    நாரணியாகத் தன் நாயகனிடம் இருந்துகொண்டு, நாராயணனாக அவர்கள் இருவரையும் மணந்துகொண்டாள்.

    தம்முடன் இருந்த நாரணியுடன் ஈசன் நதிநீர்விளையாட்டில் விருப்பம் கொண்டவராக நீராடச் செல்ல,

    அப்போது நதியின் சில நீர்த்துளிகள் அம்பிகையின் திருமார்பில் இருந்த குங்குமத்துடன் கலந்து

    தாமிர நிறம் பெற்று முத்துக்களாக மாறியது.

    அம்பிகை அந்த முத்துக்களைச் சேர்த்து ஆரமாக்கி அணிந்துகொண்டாள்.

    நாரணியாகத் தோன்றியதற்கான அவசியம் முடிந்ததும், அந்த முத்துமாலை ஸ்ரீபுர நாயகியான பராசக்தியிடம் சேர்ந்துவிட்டது.

    சிலகாலம் சென்றது.

    தாட்சாயணியாக அவதரித்து சிவபெருமானை மணந்திருந்த நிலையில், தன் நாயகனை மதிக்காமல்

    தன் தந்தை நடத்திய யாகத்தைத் தடுக்கச் சென்றவள், அது முடியாமல் போகவே பிராண தியாகம் செய்துகொண்டாள்.

    பின்னர், இமவானின் மகளாகத் தோன்றி, இமவதி, பார்வதி என்ற பெயர்களைப் பெற்று, சிவபெருமானை மணம் செய்துகொள்ள விரும்பினாள்.

    அதற்காக எந்த சக்தியின் அம்சமாகத் தோன்றினாளோ அந்த பராசக்தியைக் குறித்து தவம் இயற்றினாள்.

    பராசக்தியும், தன் அம்சமான தேவியை ஆசீர்வதித்து, தான் அணிந்திருந்த முத்துமாலையையும் பார்வதிக்கு கொடுத்து அருளினாள்.

    அந்த முத்தாரத்தைத்தான் தென்திசை நோக்கிப் புறப்பட்ட அகத்தியரிடம் பார்வதிதேவி வழங்கினாள்.

    அகத்தியர் அந்த முத்துமாலையைக் கையில் வாங்கியதுமே, அது பெண்ணாக உருமாறி, அகத்தியரைப் பணிந்து வணங்கியது.

    அதே வேளையில் அங்கிருந்த தேவர்கள் மலர்மாரி பொழிந்து, தாமிர வர்ணம் கொண்டு திகழ்ந்ததால் தாமிரபரணி என்று போற்றிக் கொண்டாடினர்.

    பிறகு, சிவபெருமான் அகத்தியரிடம், 'தாமிரபரணி தேவியானவள் பெண் உருவம் கொண்ட நதி என்றும்,

    உரிய காலத்தில் நதி வடிவம் பெற்று, உலகத்துக்குச் சிறந்த மேன்மையை வழங்குவாள்' என்றும் கூறி,

    அவளையும் நதியுருவாக்கி கமண்டலத்தில் அடக்கிக்கொண்டு தென் திசைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.

    தென்திசை நோக்கிப் புறப்பட்ட அகத்தியர், பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.

    கயிலை நாயகனின் கல்யாணக் கோலம் தரிசிக்கப் பெற்று உள்ளம் மகிழ்ந்தார்.

    மகிழ்ச்சியான அந்த மனநிலையில், உலகைச் செழுமைப்படுத்த திருவுள்ளம் கொண்ட அகத்திய முனிவர்,

    வைகாசி மாதம் விசாக நட்சத்திர நன்னாளில், அதுவரை தம்முடைய கமண்டலத்தில்

    இருந்த தாமிரபரணி நீரை குப்தசிருங்கம் எனப்படும் கொடுமுடியில் இருக்கும் ஒரு குகையில் விடுவிக்கிறார்.

    இதுதான் தாமிரபரணியின் சிலிர்ப்பூட்டும் வரலாறு.

    • அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து அவரால் விடுவிக்கப்பட்டது தாமிரபரணி என்கின்றன புராணங்கள்.
    • அகத்தியர் அதைத் தமது கமண்டலத்தில் வைத்துக்கொண்டு தெற்கு நோக்கி புறப்படுகிறார்.

    வேதங்களிலும், புராண இதிகாசங்களிலும், இலக்கியங்களிலும், வரலாற்றிலும் பெரிதும் போற்றப்படும் நதி

    தாமிரபரணி, காவிரியை போல் இதுவும் அகத்திய முனிவரால் உருவான ஆறுதான்.

    அகத்திய முனிவரின் கமண்டலத்தில் இருந்து, காக்கை வடிவில் வந்து விநாயகரால் தட்டிவிடப்பட்டு பரந்து விரிந்து பாய்ந்தது காவிரி.

    அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து அவரால் விடுவிக்கப்பட்டது தாமிரபரணி என்கின்றன புராணங்கள்.

    சிவன் பார்வதி திருமணத்தை தரிசிக்க, ரிஷிகளும், முனிவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும்

    கயிலைக்கு சென்றதால், உலகின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது.

    உலகத்தை சமநிலைக்குக் கொண்டுவர சிவபெருமானின் ஆணைப்படி அகத்தியர் தெற்கு நோக்கிப்

    புறப்படும்போது, உமையவள் அகத்தியரிடம் தான் அணிந்திருந்த முத்து ஆரத்தை அளிக்க,

    அகத்தியர் அதைத் தமது கமண்டலத்தில் வைத்துக்கொண்டு தெற்கு நோக்கி புறப்படுகிறார்.

    அகத்தியர் அந்த முத்துமாலையை கையில் வாங்கியதுமே, அது பெண்ணாக உருமாறி, அகத்தியரைப் பணிந்து வணங்கியது.

    அவ்வேளையில் அங்கிருந்த தேவர்கள் மலர்மாரி பொழிந்து, தாமிர வர்ணம் கொண்டு திகழ்ந்ததால் தாமிரபரணி என்று போற்றிக் கொண்டாடினர்.

    பிறகு, சிவபெருமான் அகத்தியரிடம், 'தாமிரபரணி தேவியானவள் பெண் உருவம் கொண்ட நதி என்றும்,

    உரிய காலத்தில் நதி வடிவம் பெற்று, உலகத்துக்குச் சிறந்த மேன்மையை வழங்குவாள்' என்று கூறி,

    அவளையும் தென் திசைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.

    பொதிகைமலையில் அகத்தியர் சிவன்-பார்வதி திருமண காட்சியை கண்ட மகிழ்வில் இருக்கும்போது

    வைகாசி மாதம் விசாக நட்சத்திர நன்னாளில், அதுவரை தம்முடைய கமண்டலத்தில் இருந்த

    தாமிரபரணி நீரை குப்தசிருங்கம் எனப்படும் கொடுமுடியில் இருக்கும் ஒரு குகையில் விடுவிக்கிறார்.

    கிழக்கு நோக்கிய அருவியாக கலம்பகர்த்தம் என்ற தடாகக் குழியில் விழுகிறாள் தாமிரபரணி.

    அதுவே பாணதீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

    தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரமான வைகாசி விசாகம்தான், தமிழ் வளர்த்த

    தவமுனிவராம் அகத்தியரால் தோற்றுவிக்கப்பட்ட தாமிரபரணியின் நட்சத்திரம் என்பதும்

    தாமிரபரணிக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கிறது.

    • நம்மை சிறப்புற இம்மையிலும், மறுமையிலும் உள்ள வாழ்க்கைக்கு தயார் செய்கிறார்கள்.
    • இந்த காலகட்டத்திலாவது நதியை மாசுபடுத்தாதீர்கள்.

    தாமிரபரணி ஆற்றில் நடக்கும் இந்த நிகழ்வில் நாம் ஏன் தீர்த்தம் ஆட வேண்டும் நாம் ஏன் பூஜைகள்

    வழிபாடுகள் செய்ய வேண்டும் என்ற பல்வேறு கேள்விகள் நமக்குள் இருக்கும்.,

    ஆனாலும் எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்று சிலரும் புராண இதிகாச கதைகளை

    மேற்கோள்காட்டி சிலரும் கலந்து கொள்வார்கள்.

    அதைவிட உண்மை நிகழ்வுகளை நன்கு புரிந்துகொண்டு செயல்படுவது என்பது மேன்மையுடையதாக இருக்கும்.

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களின் தொகுப்பே இப்பிரபஞ்சம்.

    அதுபோலவே ஐந்து பூதங்களின் கலப்பினால் நம் உடல் உருவாகி இருக்கிறது எனவே தான் சித்தர்கள் அண்டத்தில்

    உள்ளது பிண்டத்திலும் பிண்டத்தில் உள்ளது அண்டத்திலும் உள்ளது எனும் ஒரு விளக்கத்தை சொல்லி இருக்கிறார்கள்.

    காரணம் என்னவென்றால் பஞ்சபூதங்களான இவை ஐந்தும் நம் உடலுக்குள் உள்ள முக்கிய உறுப்புகளுடன் தொடர்புகொண்டது

    உதாரணமாக நீர் பூதம் சிறுநீரகம் சிறுநீர் பை கர்ப்பப்பை விதைப்பை ஆகியவற்றுடன் நேரடித் தொடர்பு உள்ளது

    மேலும் எலும்புகள் மூட்டுகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் நீர்ச்சத்து குறைவே காரணம்

    இப்படி ஒரு தொடர்பு உள்ள நம் உறுப்புகள் பலவீனம் அடைவதும் பாதிப்புகள் அடைவதும் நாம் பஞ்சபூதங்களில்

    ஒன்றான நீர்நிலைகளை அசுத்தப்படுத்துவதாலும் அதை போற்றி பாதுகாக்காமல் இருப்பதாலும் மேற்கண்ட

    தோஷத்தினால் உறுப்புகள் பாதிப்படையும்.

    நீர் பூதம் உறுப்புகள் தோஷம் நீங்கி சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் நாம் வசிக்கும் பகுதியில் உள்ள

    நீர் நிலைகளையும் அதை சார்ந்த பகுதிகளையும் பராமரித்து சுத்தமாகவும் வைத்திருத்தலே

    நாம் நம் நீர் பூத உறுப்புகளை பாதுகாக்கும் வழிமுறையாகும்.

    இது உடல் சார்ந்த தொடர்பு அது மட்டுமல்ல நம் மனதிற்கும் பஞ்சபூதங்களுக்கும் தொடர்பு உண்டு.

    நீரை நாம் அசுத்தப்படுத்தினால் நம் மனதில் பயம் கூச்சம் தாழ்வுமனப்பான்மை போன்ற

    எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் இது மனதில் ஏற்படும் மாற்றங்கள்.

    மேலும் ஆன்ம ரீதியாக ஐம்பூதங்களை நாம் வணங்கி பாதுகாத்து வந்தால் அதன் பொருட்டு ஆண்மை தெளிவும் உறுதியும் ஏற்படும் என்பது சித்தர்களின் தெளிவு.

    ஆகவே மனம், உடல் ஆன்மா இவை அனைத்திற்கும் நாம் செய்யும் இத்தகைய செயல்கள் நம்மை

    மேன்மை அடைய வைக்கும் ஆகவேதான் சித்தர்கள் பஞ்சபூதத்திற்கான விழாவை நமக்கு கொடுத்து

    நம்மை சிறப்புற இம்மையிலும், மறுமையிலும் உள்ள வாழ்க்கைக்கு தயார் செய்கிறார்கள்.

    நவகோள்களில் ஒன்றான குரு பெயர்ச்சி அன்று தன் ஆற்றலை இந்நதியின் மூலக்கூறுகளுடன் கலந்து

    நீரின் மூலக்கூறு சக்தியை பன்மடங்காக்கும் நிகழ்வுதான் இது.

    இப்படி ஓர் அரிய நிகழ்வு நாம் வாழும் காலத்தில் கிடைத்திருக்கிறது.

    அந்த சக்தி அடைந்த மூலக்கூறுகள் கொண்ட இந் நதியின் நீர் நம் உடலையும் மனதையும் தோஷம் நீக்கி

    புத்துணர்ச்சி அடைய வைக்கிறது.

    குரு கோளின் அதீத தெய்வ சக்தி அடைந்த இந்நதியை கோவிலின் கருவறையாகவே கருதவேண்டும்.

    இந்த காலகட்டத்திலாவது நதியை மாசுபடுத்தாதீர்கள்.

    நதியின் தூய்மை மற்றும் தெய்வீகத்தை காக்கும் பணியில் உறுதுணையாக நின்றவர்கள் கோவில் கும்பாபிஷேகம் செய்த பலனை அடைவார்கள்.

    • உரோமேச்சுரம்- உரோமச தீர்த்தம், மார்க்கண்ட தீர்த்தம்.
    • பிரமேசுரம் (தென்கரை) - பிரம,அக்னி, லட்சுமி,தேவ,சங்க,தாரா,வேத,வாயு,வன்னி,நரசிங்க தீர்த்தங்கள்.

    1. பொதியமலை - ஸ்ரீதர தீர்த்தம் முதல் துர்கா தீர்த்தம் வரை 18 தீர்த்தங்கள்.

    2. பாபநாசம் - முக்கூடல் தீர்த்தம்.

    3. திருமூல நகரம் (அம்பை, மேலப்பாளையம் வட்டாரம், திருமூலநாதர் கோவில்) - சாலா தீர்த்தம்.

    4. காசிபேசுரம் (அம்மைஎரிச்சாவுடையார் கோயில்) - காசிப தீர்த்தம், தீப தீர்த்தம்.

    5. திருக்கோட்டீச்சுரம் - முக்கூடல், கண்ணுவேசர், விசுவ, பிரம, சர்வ, தட்சிண தீர்த்தங்கள்.

    6. கரிகாத்தபுரி (அத்தாளநல்லூர்) - சித்த, மாண்டவ்ய, பிரமதண்ட தீர்த்தங்கள்.

    7. திருப்புடைமருதூர் -துர்கா தீர்த்தம், ரிஷி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம்.

    8. பொருநையாற்றின் தென்கரையில் -சோம தீர்த்தம்.

    9. உரோமேச்சுரம்- உரோமச தீர்த்தம், மார்க்கண்ட தீர்த்தம்.

    10. துருவாச நகரம் (அரியநாயகிபுரம்) -துருவாச , காந்தர்வ தீர்த்தங்கள், பச்சையாறு, முக்கூடல்.

    11. மந்திரேசுரம் (ஓமனுவர்) - தேவதீர்த்தம், ருத்ர தீர்த்தம்.

    12. திரு அக்கினீச்சுரம் (தருவை)- அக்கினீச்சுர தீர்த்தம்.

    13. துர்கேசுரம் -துர்கா தீர்த்தம்.

    14. சிந்துபூந்துறைத் தீர்த்தம்.

    15. சிந்துபூந்துறைக்கு வடபால் -சப்தரிஷி தீர்த்தம்.

    16. சிந்துபூந்துறைக்கு கீழ்பால் -குட்டத் துறைத் தீர்த்தம்.

    17. ராமேசநல்லுவர் -ஜடாயு தீர்த்தம்.

    18. மணலுவர் (அ) மணவாள நல்லுவர்- மங்கள தீர்த்தம்.

    19. அழகர் கோயில் (சீவலப்பேரி)- முக்கூடல், பிதிர், கோதண்ட, தட்சிண, வியாக்ரம, வியாச தீர்த்தங்கள்.

    20. ஸ்ரீவைகுண்டம்- வைகுந்தத் தீர்த்தம்.

    21. காந்தீசுரம் -காந்தீசுரத் தீர்த்தம்.

    22. ஆழ்வார் திருநகரியாகிய திருக்குருகூர் -சக்கர, சங்க, பஞ்சகேத்ர தீர்த்தங்கள்.

    23. நவலிங்கபுரம் (பொருநை தென்கரை) - நவதீர்த்தம்.

    24. பிரமேசுரம் (தென்கரை) - பிரம, அக்னி, லட்சுமி, தேவ, சங்க, தாரா, வேத, வாயு, வன்னி, நரசிங்க தீர்த்தங்கள்.

    25. சோமேசுரம் (தென்கரை) - சோம தீர்த்தம்.

    26. திருச்செந்துவர் -சங்கமுகம்.

    27. சங்கமத் துறை -பொருநையாறு கடலில் கலக்குமிடம்.

    • சிறுவயதிலேயே அரிய பெரிய நூல்களைப் புரட்டிப் பார்த்து விடுவார்கள்.
    • மற்றவர்களுடைய முன்னேற்றத்திற்குத் தன்னலமற்றுப் பாடுபடுவர்.

    புதன் என்றால் தெரிந்தவன் என்று பொருள்.

    இதனால்தான் புதனைக் கல்விக் காரகன் அல்லது, வித்யாகாரகன் என்று சோதிடப் புலவர்கள் அழைத்தனர் போலும்!

    சூரியனுக்கு வெகு அருகாமையில் ஒளிர்வதோடு மிகத்துரிதமாய் மூன்றே மாதங்களுக்குள் சூரியனைச் சுற்றிவரும் ஆற்றலுடைய கிரகமாகையால் சூரியனைப் பற்றி நன்கு தெரிந்தவன் புதன்.

    புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் கற்றறியும் திறமை உடையவர்களே.

    அதுவும் துரிதமாய்க் கற்றுணரக் கூடியவர்கள்.

    சிறுவயதிலேயே அரிய பெரிய நூல்களைப் புரட்டிப் பார்த்து விடுவார்கள்.

    புரட்டாசியில் தோன்றிய இவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளே!

    பல நூல்களை நன்றாகப் புரட்டியவர்களாகையால் தர்க்கம் பேசுவதிலும் ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள்.

    குதர்க்கம் செய்வதிலும் வித்தகர் என்று பெயர் எடுப்பார்கள்.

    அரிய நூல்களைச் சேகரிப்பர். சீக்கிரத்தில் அரச யோகத்தை அடைந்திடுவர்.

    கற்றதை மாற்றிப் பேசிப் போற்றுதலைப் பெறுவர். மற்றவர்களைப்போல நடிப்பதில் கில்லாடிகள்.

    படிக்காத மேதைகளும், படித்த பட்டதாரிகளும் விஞ்ஞானிகளும் மெய் ஞானிகளும் இம் மாதத்தில் பிறந்தவர்களே.

    புரட்டாசியில் பிறந்தவர்கள் ஆழ்ந்து சிந்திக்காமல் எந்த விவகாரங்களிலும் தலையிட மாட்டார்கள் எதையும் திறம்படச் செய்யவேண்டு மென்ற கொள்கை உடையவர்.

    மற்றவர்கள் செய்யும் குற்றங்குறைகள் முதன்முதலில் இவர்களின் கண்களுக்குத்தான் தோன்றும், ஒளிவு மறைவின்றி சாமர்த்தியமாக ஆனால், அழுத்தந் திருத்தமாக எடுத்துக் கூறிவிடுவார்கள்.

    மற்றவர்கள் சாதாரணமாகப் புரியக்கூடிய தவறுகள் ஏற்படாவண்ணம் தாம் நடந்துகொள்வர்.

    மற்றவர்களுடைய முன்னேற்றத்திற்குத் தன்னலமற்றுப் பாடுபடுவர்.

    தம்முடைய திறமையினாலும் உழைப்பினாலும் உயர்ந்த அந்தஸ்தைத் தேடி அடைந்திடுவார்கள்.

    பிறரைப் புகழ்ந்தோ அல்லது குறுக்கு வழிகளைக் கடைப்பிடித்தோ நினைத்ததை சாதிப்பது இவர்களுக்குப் பிடிக்காது.

    அசைவம் சாப்பிடாதீர்கள்

    பிரண்டை தண்ணீர் இல்லாமல் வளரக்கூடியது.

    அத்தகைய பிரண்டையும் புரட்டாசி மாதத்தில் காயும் என்பார்கள்.

    ஏனென்றால், அந்த அளவிற்கு புரட்டாசி மாதத்தில் வெயில் இருக்கும்.

    சாதாரணமாக சைவ உணவு நமது உடல் நலத்துக்கு எல்லா வகையிலும் உகந்தது.

    எனவே வெயில் காலங்களில் அசைவ உணவுகளைத் தவிர்த்தால் நமக்கு நல்லது.

    • புதன் கிரகம் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில்.
    • நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புத பகவான்.

    'பொன்னுருகக் காய்ந்து மண்ணுருகப் பெய்யும் புரட்டாசியில்' என்பார்கள்.

    அதாவது, புரட்டாசி மாதத்தில் பகல் பொழுதினில் தங்கம் உருகும் அளவிற்கு கடுமையான வெயில் காய்ந்து, இரவினில் மண் உருகி வழிந்தோடும் அளவில் நல்ல மழை பெய்யும் என்பது இதன் பொருள்.

    இந்த மாதம் முழுவதும் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் இதனை கன்னியா மாதம் என்றும் அழைப்பர்.

    புரட்டாசி என்ற வார்த்தையைக் கேட்கும்போதே நம் கண் முன் தோன்றுவது பெருமாளின் திருவுருவமே.

    புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருப்போரும் உண்டு.

    நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புத பகவான்.

    புதன் கிரகம் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில்.

    எனவேதான் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி, பெருமாளுக்கு உரிய மாதம் என பெரியவர்கள் வகுத்திருக்கிறார்கள்.

    அதோடு பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரியனோடு புதனும் இணைந்திருப்பார்.

    சூரியனுக்கு உரிய பிரத்யதி தேவதை பசுபதி என்றழைக்கப்படும் சிவபெருமான்.

    புதனுக்கு உரிய பிரத்யதி தேவதை நாராயணன்.

    இவர்கள் இருவரும் தெய்வீக மூலையாக கருதப்படும் கன்னி மூலையில் இணைவது சங்கர-நாராயணர் இணைவாகக் கருதப்படுகிறது.

    சூரியநாராயண ஸ்வாமி என்று சூரியன் பெயர் பெற்ற காரணமும் இதுவே.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டால் பெருமைகள் வந்து சேரும்.
    • நல்ல வாழ்க்கையும் அமைகின்றது.

    ஒவ்வொரு வாரத்திலும் சனிக்கிழமை வந்து கொண்டே தான் இருக்கிறது.

    அப்பொழுதெல்லாம் நாம் சனீஸ்வரர் சன்னிதிக்குச் சென்று சனீஸ்வரரை வழிபட்டு சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்வோம்.

    அதுமட்டுமல்லாமல் 'சனி பிடிக்காத தெய்வம்' என்று வர்ணிக்கப்படும் விநாயகப் பெருமானையும், அனுமனையும் விடாது வழிபட்டு வருவோம்.

    ஆதியந்தப்பிரபு வழிபாடும் ஆனந்த வாழ்வை வழங்கும்.

    ஆனால் மற்ற சனிக்கிழமைகளைக் காட்டிலும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை புனிதமான சனிக்கிழமையாகக் கருதப்படுகிறது.

    அன்றைய தினம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் வெற்றி மீது வெற்றிகளைக் குவிக்கலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது.

    அலங்காரப் பிரியர் விஷ்ணு என்பதால் பச்சைப் பட்டும், வாசமலரும் அணிவித்தால் பணவரவு திருப்தி தரும்.

    குறிப்பாக செட்டி நாட்டுப் பகுதிகளில் ராமர் பட்டாபிஷேகம் படம் வைத்து ராமாயணம் படிப்பது வழக்கம்.

    கவியரசு கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில் அங்குள்ள சிவன் கோவிலில் ராமாயணம் படிக்கிறார்கள்.

    இங்ஙனம் ராமாயணம் படிப்பவர்கள், படித்ததைக் கேட்பவர்களுக்கு எல்லாம் ராமபிரானின் அருளும் கிடைக்கின்றது.

    நல்ல வாழ்க்கையும் அமைகின்றது.

    எனவே புரட்டாசி சனிக்கிழமைகளில் நீங்கள் ஒரு நேரமேனும் விரதமிருந்து அருகில் இருக்கும் விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று

    பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டால் பெருமைகள் வந்து சேரும்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள கொங்கரத்தி வன்புகழ் நாராயணசுவாமி, திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள்,

    புதுக்கோட்டை மாவட்டம் செவ்வூரில் உள்ள ரோட்டுப் பெருமாள் கோவில், முதலைப்பட்டியில் உள்ள விஷ்ணு ஆலயங்களில்

    புரட்டாசி சனிக்கிழமை அன்று சென்று வழிபட்டவர்களுக்கு பொருள் வளம் பெருகி பொன்னான வாழ்க்கை அமையும்.

    இதுபோல அவரவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்கு புரட்டாசி சனிக்கிழமை சென்று லட்சுமி சமேத விஷ்ணுவையும், மாருதியையும் வழிபட்டால் மன மகிழ்ச்சி நிலைக்கும்.

    • காரணம் கேட்டால் உடம்புச் சூடு தணிய என்று கூறுவார்கள்.
    • தீய கதிர்கள் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணெய் முழுக்கு.

    நம் முன்னோர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நல்லெண்ணெய் உடல் முழுக்க பிரட்டி சிறிது நேரம் இருந்து தோய்வது வழக்கமாக இருந்தது எல்லோருக்கும் தெரியும்.

    காரணம் கேட்டால் உடம்புச் சூடு தணிய என்று கூறுவார்கள்.

    ஆனால் அதற்கு இன்னுமொரு காரணம் இருப்பதாக விஞ்ஞான ரீதியில் கூறப்பெற்றுள்ளது.

    இந்த சனிக்கிரகம் உடலுக்கு தீங்கு (தோஷத்தை) ஏற்படுத்தக் கூடிய தீய கதிர் வீச்சுக்களை வீசுகின்றது.

    அதனால் அதனை ஒரு பாபக் கிரகமாக ஜோதிடம் அடையாளம் காட்டுகின்றது.

    சனி கிரகம் ஒரு ஜாதருக்கு பெரும் தோஷத்தை ஏற்படுத்தக் கூடிய இடங்களில் (ஜாதகத்தில் சந்திர ராசிக்கு 1, 2, 5, 8, 12 ஆகிய இடங்களில்) கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர்வீச்சுக்கள் மேலும் தீவிரம் அடைவதாக கணிக்கப் பெற்றுள்ளன.

    அதனால் அந்த ஜாதகர் உடல், உள்ளம் ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார்.

    சனிக்கிரகத்தில் இருந்து வரும் கதிர்களை எள் எண்ணெய்யில் ஊறிய உடம்பு, தாக்க விடாது தடை செய்கின்றது.

    தீய கதிர்கள் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணெய் முழுக்கு.

    இத் தீய கதிர்கள் மூளை நரம்புகளை பாதிக்கின்றது.

    ஜாதகருடைய சிந்தனைகளை திசைமாறி செல்ல வைத்து பல சிக்கல்களில் மாட்டிவிடுகின்றது.

    அந்த கிரகத்தின் கதிர் வீச்சிலிருந்து தப்பிக்க பல பரிகார சடங்குகள் இருந்தாலும் மிக முக்கியமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் உடல் முழுக்க எள் எண்ணெய்யை (நல்லெண்ணெய் வைத்து) பிரட்டி சூரிய உதயத்தில் 1/2 மணி நேரம் நின்ற பின் குளிக்க வேண்டும்.

    அதனால்தான் நமது முன்னோர்கள் சனிக்கிழமைகளில் எண்ணெய் வைத்து குளிக்கும் வழக்கத்தினைப் பின்பற்றியுள்ளனர்.

    • கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனி பகவான் பிடியிலிருந்து காப்பாற்றுவார்.
    • அன்றிலிருந்து ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை.

    கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனி பகவான் பிடியிலிருந்து காப்பாற்றுவார்.

    இதற்குப் புராணத்தில் ஒரு கதை உண்டு.

    ஒரு சமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க அவரிடம் அனுமதி கேட்டார்.

    சனியின் நச்சரிப்புத் தாங்காமல் ஆஞ்சநேயர், என் தலைமீது அமர்ந்து கொள் என்று சொன்னதும், ஆஞ்சநேயர் தலையில், சனி பகவான் அமர்ந்தார்.

    இதுதான் சமயம் என்று அங்கிருந்த பெரிய பாறாங்கல்லை தன் வாலில் எடுத்துத் தன் தலை மீது அமர்ந்திருக்கும் சனி பகவானின் தலைமீது வைத்தார்.

    பாறாங்கல்லின் பாரம் தாங்காமல் மூச்சு வாங்கிய சனி பகவான், தன்னை விடுவிக்கும்படி ஆஞ்சநேயரிடம் மன்றாடவே,

    என்னையும் என்னை வணங்கும் பக்தர்களுக்கும் இனி தொந்தரவு கொடுக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடு என்று சொல்லவே, ஆஞ்சநேயரின் கட்டளைக்கு அடிபணிந்தார் சனி பகவான்.

    அன்றிலிருந்து ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை.

    • பிறகு வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு உணவளித்து, தாம்பூலம் கொடுப்பர்.
    • எல்லோரும் பக்திப் பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும்.

    வெங்கடாசலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு.

    சிலர் பாயாசமும் படைப்பர்.

    வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான நவநீதமும் படைப்பதுண்டு.

    அன்புடன் இலையை அர்ப்பணித்தாலும் ஏற்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியது இங்கே கருதத்தக்கது.

    பெருமாளுக்குப் படையலிட்டுப் பூஜை செய்யும்போது உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து கலந்து கொள்ள செய்ய வேண்டும்.

    எல்லோரும் பக்திப் பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும்.

    பூஜை முடிந்த பிறகு பக்திப் பாடல்களைப் பாடி வணங்கி, வழிபாடு செய்வர்.

    பிறகு வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு உணவளித்து, தாம்பூலம் கொடுப்பர்.

    இப்படி அவரவர் இருப்பிடத்திலேயே கோவிந்தா என்ற திருநாமத்தைக் கூறியபடி இருந்தால் திருமாலே அந்த இல்லத்துக்கு எழுந்தருள்வார்

    • சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு.
    • துளசியால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.

    திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம்.

    இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம்.

    இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம்.

    புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.

    சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு.

    துளசியால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.

    மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும்.

    பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

    • இந்த தீபத்திற்கு வெங்கடேச சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்வர்.
    • துளசி, சாமந்தி மலர்கள் விசேஷம். இந்த தீபம் மாலை வரை எரியும்.

    புரட்டாசி சில வீடுகளில் மாவிளக்குடன் கூட புத்துருக்கு நெய்யை பெரிய உருளியில் இட்டு, பருத்திக் கொட்டையுடன் கூடிய பஞ்சிலிருந்து கொட்டையைப் பிரித்து,

    அதை ஒரு புதிய துணியில் வைத்து திரி போல் செய்து உருளியில் உள்ள நெய்க்கு நடுவே வைத்து அதை தீபமாக ஏற்றி மலையப்பனாக ஆவாஹனம் செய்வர்.

    இந்த தீபத்திற்கு வெங்கடேச சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்வர்.

    துளசி, சாமந்தி மலர்கள் விசேஷம். இந்த தீபம் மாலை வரை எரியும்.

    பின் மாவிளக்கும் ஏற்றி, மலையேறும் நேரம், சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் முதலியன நிவேதனம் செய்வது வழக்கம்.

    பூஜைக்கு வந்துதவிய அனைவருக்கும் விருந்தளிப்பது நல்லது.

    அந்த குறையொன்றுமில்லாத கோவிந்தன் நிறைந்த நல்வாழ்வை அளிப்பான்.

    வேண்டியதைத் தந்திடும் வேங்கடேசனைப் போற்றுவோம்!

    ×