என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-அங்க பொருட்கள்!
    X

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-அங்க பொருட்கள்!

    • தியாகேசப் பெருமான் இராஜாதி ராஜர் ஆதலின், அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை.
    • பண் - பதினெண் வகைப்பண்

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-அங்க பொருட்கள்

    1. ஆடுதண்டு - மணித்தண்டு,

    2. கொடி - தியாகக்கொடி,

    3. ஆசனம் - இரத்தின சிம்மாசனம்,

    4. மாலை - செங்கழுநீர்மாலை,

    5. வாள் - வீரகண்டயம்,

    6. நடனம் - அஜபா நடனம்,

    7. யானை - ஐராவணம்,

    8. மலை - அரதன சிருங்கம்,

    9. முரசு - பஞ்சமுக வாத்தியம்,

    10. நாதஸ்வரம் - பாரி,

    11. மத்தளம் - சுத்தமத்தளம்,

    12. குதிரை - வேதம்,

    13. நாடு - சோழநாடு,

    14. ஊர் - திருவாரூர்,

    15. ஆறு - காவிரி,

    16. பண் - பதினெண் வகைப்பண்

    என்பன இவையாவும் இத்தலத்துப் பெருமானுக்குரிய அங்க பொருள்களாகும்.

    தியாகேசப் பெருமான் இராஜாதி ராஜர் ஆதலின், அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை, அவருடன்

    1. அருளிப்பாடியார்,

    2. உரிமையில் தொழுவார்,

    3. உருத்திரப் பல்கணத்தார்,

    4. விரிசடை மாவிரதிகள்,

    5. அந்தணர்கள்,

    6. சைவர்கள்,

    7. பாசுபதர்கள்,

    8. கபாலியர்கள் ஆகிய எட்டு கணங்கள் சூழ வருவார்கள்.

    Next Story
    ×