search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருநள்ளாறு நளதீர்த்தம்!
    X

    திருநள்ளாறு நளதீர்த்தம்!

    • நள தீர்த்தத்தின் கரையில் விநாயகர் ஆலயம் உள்ளது.
    • வெள்ளிக்கிழமை இரவு இந்த ஆலயத்தில் தங்கி, சனிக்கிழமை காலையில் இதில் நீராட வேண்டும்.

    திருநள்ளாறு நளதீர்த்தம்

    திருநள்ளாறு ஆலயத்திற்கு சனி பகவான் தோஷ பரிகாரத்திற்காகச் செல்பவர்கள் முதலில்,

    பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம், அன்ன தீர்த்தம் அட்ட திக்கு பாலகர் தீர்த்தங்கள், அகஸ்தியர் தீர்த்தம், அம்ஸ தீர்த்தம் முதலியவற்றில் நீராடிவிட்டு நள தீர்த்தத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

    நள தீர்த்தம் கோவிலுக்கு சற்று தள்ளி உள்ளது.

    நள தீர்த்தத்தின் கரையில் விநாயகர் ஆலயம் உள்ளது.

    நளதீர்த்ததில் நீராடிவிட்டு, இந்த விநாயகர் ஆலயத்திற்குச் சென்று அங்கு நளனுக்காக சிவபெருமான் ஏற்படுத்திய கங்கைத் தீர்த்தமாகிய, "கங்காகூபம்" (நளகூபம்) உள்ளது.

    இதில் நீராடி, புதுத்துணி உடுத்தி, விநாயகரை வழிபட்டு, பின், இறைவன், அம்பாள் சனிபகவான் ஆகியோரை வழிபட்டு, ஆலயத்தில் உள்ள காகத்திற்கு சோறு அளித்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    வெள்ளிக்கிழமை இரவு இந்த ஆலயத்தில் தங்கி, சனிக்கிழமை காலையில் இந்த தீர்த்தங்களில் நீராட வேண்டும்.

    Next Story
    ×