search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலு"

    • கொலு படிகளை ஒற்றைப்படையில் தான் வைக்க வேண்டும்.
    • கொலுப்படியில் பொம்மை வைப்பதற்கு முறை உள்ளது.

    நவராத்திரி என்றால் கொலு பொம்மை தான் முதலில் நமது நினைவிற்கு வரும். கொலுப் படிகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் தான் வைக்க வேண்டும். எனவே கொலு படிகள் அமைக்கும் போது 3 அல்லது 5 என்ற எண்ணிக்கையில் வைக்கலாம். கொலு படிகள் அமைக்கும் போது கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமைக்க வேண்டும்.

    கொலுப்படியில் பொம்மை வைப்பதற்கு முறை உள்ளது. மேலே உள்ள படியில் இறைவனின் பொம்மைகளை வைப்பார்கள். ஆதற்கு கீழே ரிஷிகள் முனிகள் சித்தர்கள் போன்ற பொம்மைகள், அதற்கு கீழே மனிதர்கள், பின் விலங்குகள்,பறவைகள், போன்றவற்றை வைப்பார்கள். அதாவது கொலு படிகளில் கீழிருந்து ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவு, ஐந்தறிவு, ஆறறிவு, ரிஷிகள், தெய்வங்கள் என்ற வரிசையில் பொம்மைகளை அடுக்கி வைத்து கொலுப் படிகளின் நடுவில் கலசம் வைப்பார்கள்.

    நவராத்திரி கொலுப் படியில் இருக்கும் கலசத்திற்கு தினமும் மஞ்சள், குங்குமம், அட்சதை மற்றும் பூக்கள் மற்றும் வஸ்திரம் சார்த்தி பூஜித்தி வருவார்கள். மாலையில் தினமும் சுண்டல் செய்து நிவேதனம் செய்து வீட்டில் கொலு பார்க்க வருபவர்களுக்கு வழங்க வேண்டும். பத்து நாட்கள் முடிந்த பிறகு கலசத்தில் வைத்த தேங்காயை வைத்து இனிப்பு பண்டங்களைச் செய்யலாம்.

    ஒரு சிலர் வீட்டில் பத்து நாட்களும் விளக்கு எரிய வைப்பார்கள். இதற்கு அகண்ட தீபம் என்று பொருள். இதில் மூன்று வித எண்ணெய் நல்லெண்ணெய், நெய் இலுப்பெண்ணெய்)அல்லது ஐந்து வித எண்ணெய் கலந்து தீபம் ஏற்றலாம்.

    கொலுப்படி மற்றும் பொம்மைகள் வைக்க இயலாதவர்கள் எளிமையாக வீட்டில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் படத்தை வைத்து அதற்கு முறையாக பூஜைகள், நைவேத்தியங்கள் படைத்து எளிய முறையில் வழிபடலாம்.

    நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் காலை மாலை என இரண்டு வேளை பூஜை செய்ய வேண்டும். அம்மன் பற்றிய பாடல்களை பாடுவார்கள். வீட்டிற்கு அக்கம் பக்கம், தெரிந்தவர்கள் மற்றும் விருந்தினர்களை அழைத்தது வெற்றிலை, பாக்கு, மஞ்சள் பழம், தட்சினை சுண்டல், மற்றும் நீங்கள் விரும்பினால் ஏதாவது பரிசுப்பொருட்கள அல்லது ரவிக்கை போன்றவற்றை அவரவர் தகுதி மற்றும் விருப்பத்திற்கேற்ப கொடுக்கலாம்.

    சிறு குழந்தைகள் வந்தால் அவர்கள் வயதிற்கேற்ற பொருட்களை வாங்கி கொடுக்கலாம். இந்த ஒன்பது நாட்களுள் ஏதாவது ஒரு நாள் ஒரு கன்னிப் பெண்ணை அழைத்து உணவளித்து வெற்றிலை, பாக்கு உடை எடுத்து அளிக்கலாம். இதனை செய்வது மிகவும் சிறப்பு.

    இத்தகைய சிறப்புமிக்க்க நவராத்திரி பண்டிகையையொட்டி சென்னை வடபழனியை சேர்ந்த பிரேமலதா-அரவிந்தன் தம்பதி லண்டனில் உள்ள தனது வீட்டில் கொலு வைத்துள்ளனர்.

     அதேபோன்று சென்னை தி.நகர் தண்டபாணி தெருவை சேர்ந்த சங்கர்-லட்சுமி தம்பதியினர் நவராத்திரி பண்டிகையை யொட்டி தங்கள் வீட்டில் கொலு வைத்துள்ளார்கள்.

    • ஒட்டக் கூத்தர்க் குதவினோய் போற்றி
    • வட்டவெண் தாமரை வாழ்வோய் போற்றி

    அறிவினுக் கறிவாய் ஆனாய் போற்றி

    செறிஉயிர் நாத்தொறும் திகழ்வோய் போற்றி

    ஆட்சிகொள் அரசரும் அழியாய் போற்றி

    காட்சிசேர் புலவர்பால் கனிவோய் போற்றி

    இல்லக விளக்கம் இறைவி போற்றி

    நல்லக மாந்தரை நயப்பாய் போற்றி

    ஈரமார் நெஞ்சினார் இடந்தோய் போற்றி

    ஆரமார் தொடையால் அணிவோய் போற்றி

    உலகியல் நடத்தும் ஒருத்தி போற்றி

    அலகில் உயர்க்கிறி வளிப்போய் போற்றி

    ஊனமில் வெள்ளை உருவினாய் போற்றி

    கானக் குயில்மொழிக் கன்னியே போற்றி

    எண்ணிலாப் புகழுடை எந்தாய் போற்றி

    பண்ணியல் தமிழின் பாவாய் போற்றி

    ஏழுல குந்தொழும் இறைவி போற்றி

    சூழநல் அன்பரின் துணைத்தாய் போற்றி

    ஐதுசேர் வெண்கலை ஆடையாய் போற்றி

    மைதீர் முத்து மாலையாய் போற்றி

    ஒட்டக் கூத்தர்க் குதவினோய் போற்றி

    வட்டவெண் தாமரை வாழ்வோய் போற்றி

    ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி

    போதுசேர் அருட்கண் பொற்கோடி போற்றி

    ஒளவைமூ தாட்டியாய் ஆனாய் போற்றி

    கௌவையே இல்லாக் கலைமகள் போற்றி

    கல்விக் கரசே கலைக்கடல் போற்றி

    நல்விற் புருவ நங்காய் போற்றி

    செங்கையில் புத்தகம் சேர்த்தோய் போற்றி

    அங்கையில் படிகம் அடக்கியோய் போற்றி

    சமை குண்டிகைக்கைத் தாயே போற்றி

    அமைவுகொள் ஞான அருட்கையாய் போற்றி

    அஞ்சலென் றருள்தரும் அன்னே போற்றி

    மடமறு நான்முகன் வாழ்வே போற்றி

    திடமுறு செந்தமிழ்த் தெளிவே போற்றி

    கண்கண்ட தெய்வக் கண்மணி போற்றி

    பண்கண்ட பாவிற் படர்ந்தனை போற்றி

    தந்தையும் தாயுமாய்த் தழைப்போய் போற்றி

    மைந்தரோ டொக்கலாய் வளர்வோய் போற்றி

    நல்லோர் சொற்படி நடப்போய் போற்றி

    பல்லோர் பரவும் பனுவலோய் போற்றி

    மன்னரும் வணங்க வைப்போய் போற்றி

    உன்னரும் பெருமை உடையோய் போற்றி

    யாவர்க்கும் இசைந்த யாயே போற்றி

    பாவும் பொருளுமாய்ப் படர்வோய் போற்றி

    பூரப் பரிவரு பொற்கொடி போற்றி

    வார நெஞ்சினர் வழித்துணை போற்றி

    சிலம்பொலிச் சிற்றடித் திருவருள் போற்றி

    நலஉமை இடக்கணாம் நாயகி போற்றி

    வள்ளைக் கொடிச் செவி மானே போற்றி

    பிள்ளை மொழித் தமிழ்ப் பிராட்டி போற்றி

    அழகின் உருவ அணங்கே போற்றி

    பழகு தமிழின் பண்ணே போற்றி

    இளமை குன்றா ஏந்திழாய் போற்றி

    வளமை குளிர்மை மன்னினாய் போற்றி

    அறனும் பொருளும் அருள்வோய் போற்றி

    வறனறு இன்பம் மலிந்தோய் போற்றி

    சொன்ன கலைகளின் தொடர்பே போற்றி

    மன்னிய முத்தின் வயங்குவாய் போற்றி

    கம்பர்க் கருளிய கருத்தே போற்றி

    நம்பினோர்க் கின்பருள் நல்லோய் போற்றி

    காண்டகும் எண்ணெண் கலையாய் போற்றி

    வேண்டா வெண்மையை விலக்குவோய் போற்றி

    கிட்டற் கரிய கிளிமோழி போற்றி

    வெட்ட வெளியாம் விமலை போற்றி

    கீர்த்தியார் வாணியாம் கேடிலாய் போற்றி

    ஆர்திதியார் அன்பரின் அகத்தாய் போற்றி

    குமர குருபரர்க் குதவினோய் போற்றி

    அமரரும் வணங்கும் அம்மே போற்றி

    கூர்மையும் சீர்மையும் கொண்டோய் போற்றி

    ஆர்வலர் ஏத்த அருள்வோய் போற்றி

    கெடலரும் பாவின் கிழத்தி போற்றி

    விடலரும் அறிவின் வித்தே போற்றி

    கேள்வி கல்விக் கிழமையோய் போற்றி

    ஆள்வினை அருளும் அமிழ்தே போற்றி

    கையகப் கழுநிர்க் கலைமகள் போற்றி

    பொய்தீர் அருங்கலைப் பொருளே போற்றி

    கொண்டற் கூந்தற் கொம்பே போற்றி

    வண்டமிழ் வடமொழி வளனே போற்றி

    கோதில் பலமொழிக் குருந்தே போற்றி

    போதில் உறையும் பொன்னே போற்றி

    சங்கொத் தொளிர்நிறத் தாளே போற்றி

    அங்கண் அருள்நிறை அம்மா போற்றி

    சாதலும் பிறத்தலும் தவிர்ந்தோய் போற்றி

    போதலும் இருத்தலும் போக்கினோய் போற்றி

    சினமும் செற்றமும் தீர்ந்தோய் போற்றி

    மனமும் கடந்த மறை பொருள் போற்றி

    சீரார் சிந்தா தேவியே போற்றி

    ஏரார் செழுங்கலை இன்பே போற்றி

    சுடரே விளக்கே தூயாய் போற்றி

    இடரே களையும் இயல்பினாய் போற்றி

    சூழும் தொண்டரின் தொடர்பே போற்றி

    ஏழுறும் இசையின் இசைவே போற்றி

    செவ்விய முத்தமிழ்த் திறனே போற்றி

    ஒளவியம் அறுக்கும் அரசி போற்றி

    சேவடிச் செல்வம் அளிப்போய் போற்றி

    பாவடிப் பயனே படைத்தருள் போற்றி

    சைவம் தாங்கும் தனிக்கொடி போற்றி

    மையெலாம் போக்கும் மருந்தே போற்றி

    சொல்லோடு பொருளின் சுவையருள் போற்றி

    அல்லொடு பகலுன் அடைக்கலம் போற்றி

    சோர்விலா அறிவின் தொடர்பே போற்றி

    தீர்விலா நுண்கலைத் திறனே போற்றி

    தமிழ்க்கலை தமிழ்ச்சுவை தந்தருள் போற்றி

    தமிழ்மந் திரமொழித் தண்பயன் போற்றி

    தாயே நின்னருள் தந்தாய் போற்றி

    தாயே நின் திருவடி தொழுதனம் போற்றி

    திருவுடன் கல்வித் திறனருள் போற்றி

    இரு நிலத் தின்பம் எமக்கருள் போற்றி

    • ஓம் நடுநிலை நீங்கிடாத நல்லவர்க் கருள்வாய் போற்றி
    • ஓம் திருப்புக ழுடையாய் போற்றி

    ஓம் திருவே போற்றி

    ஓம் திருவளர் தாயே போற்றி

    ஓம் திருமாலின் தேவி போற்றி

    ஓம் திருவெலாம் தருவாய் போற்றி

    ஓம் திருத்தொண்டர் மணியே போற்றி

    ஓம் திருப்புக ழுடையாய் போற்றி

    ஓம் திருஞான வல்லி போற்றி

    ஓம் திருவருட் செல்வி போற்றி

    ஓம் திருமால் மகிழ்வாய் போற்றி

    ஓம் திருமார்பி லமர்ந்தாய் போற்றி

    ஓம் தினமெமைக் காப்பாய் போற்றி

    ஓம் தீப சோதியே போற்றி

    ஓம் தீதெல்லாம் தீர்ப்பாய் போற்றி

    ஓம் தூப சோதியே போற்றி

    ஓம் துயரந்தீர்த் தருள்வாய் போற்றி

    ஓம் திருப்பாற் கடலாய் போற்றி

    ஓம் தருவழு தருள்வாய் போற்றி

    ஓம் அன்னையே அருளே போற்றி

    ஓம் அழகெலாம் உடையாய் போற்றி

    ஓம் அயன்பெறு தாயே போற்றி

    ஓம் அறுமுகன் மாமி போற்றி

    ஓம் அமரர்குல விளக்கே போற்றி

    ஓம் அமரேசன் தொழுவாய் போற்றி

    ஓம் அன்பருக் கினியாய் போற்றி

    ஓம் அண்டங்கள் காப்பாய் போற்றி

    ஓம் ஆனந்த வல்லியே போற்றி

    ஓம் ஆருயிர்க் குயிரே போற்றி

    ஓம் ஆவிநல் வடிவே போற்றி

    ஓம் இச்சை கிரியை போற்றி

    ஓம் இருள்தனைக் கடிவாய் போற்றி

    ஓம் இன்பப் பெருக்கே போற்றி

    ஓம் இகபர சுகமே போற்றி

    ஓம் ஈகையின் பொலிவே போற்றி

    ஓம் ஈறிலா அன்னை போற்றி

    ஓம் எண்குண வல்லி போற்றி

    ஓம் ஓங்கார சக்தி போற்றி

    ஓம் ஒளிமிகு தேவி போற்றி

    ஓம் கற்பக வல்லி போற்றி

    ஓம் காமரு தேவி போற்றி

    ஓம் கனக வல்லியே போற்றி

    ஓம் கருணாம்பிகையே போற்றி

    ஓம் குத்து விளக்கே போற்றி

    ஓம் குலமகள் தொழுவாய் போற்றி

    ஓம் மங்கல விளக்கே போற்றி

    ஓம் மங்கையர் தொழுவாய் போற்றி

    ஓம் தூங்காத விளக்கே போற்றி

    ஓம் தூயவர் தொழுவாய் போற்றி

    ஓம் பங்கச வல்லி போற்றி

    ஓம் பாவலர் பணிவாய் போற்றி

    ஓம் பொன்னி அம்மையே போற்றி

    ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி

    ஓம் நாரணன் நங்கையே போற்றி

    ஓம் நாவலர் துதிப்பாய் போற்றி

    ஓம் நவரத்தின மணியே போற்றி

    ஓம் நவநிதி நீயே போற்றி

    ஓம் அஷ்டலக்குமியே போற்றி

    ஓம் அறம்பொருள் தருவாய் போற்றி

    ஓம் ஆதிலட்சுமியே போற்றி

    ஓம் ஆணவம் அறுப்பாய் போற்றி

    ஓம் கஜலட்சுமியே போற்றி

    ஓம் கள்ளமும் கரைப்பாய் போற்றி

    ஓம் தைரியலட்சுமியே போற்றி

    ஓம் தயக்கமும் தவிர்ப்பாய் போற்றி

    ஓம் தனலட்சுமியே போற்றி

    ஓம் தனதானியம் தருவாய் போற்றி

    ஓம் விஜயலட்சுமியே போற்றி

    ஓம் வெற்றியைத் தருவாய் போற்றி

    ஓம் வரலட்சுமியே போற்றி

    ஓம் வரமெலாம் தருவாய் போற்றி

    ஓம் முத்துலட்சுமியே போற்றி

    ஓம் முத்தியை அருள்வாய் போற்றி

    ஓம் மூவேந்தர் தொழுவாய் போற்றி

    ஓம் முத்தமிழ் தருவாய் போற்றி

    ஓம் கண்ணேஎம் கருத்தே போற்றி

    ஓம் கவலையை ஒழிப்பாய் போற்றி

    ஓம் விண்ணேஎம் விதியே போற்றி

    ஓம் விவேகம தருள்வாய் போற்றி

    ஓம் பொன்னேநன் மணியே போற்றி

    ஓம் போகம தருள்வாய் போற்றி

    ஓம் பூதேவி தாயே போற்றி

    ஓம் புகழெலாம் தருவாய் போற்றி

    ஓம் சீதேவி தாயே போற்றி

    ஓம் சிறப்பெலாம் அருள்வாய் போற்றி

    ஓம் மதிவதன வல்லி போற்றி

    ஓம் மாண்பெலாம் தருவாய் போற்றி

    ஓம் நித்திய கல்யாணி போற்றி

    ஓம் நீதிநெறி அருள்வாய் போற்றி

    ஓம் கமலக்கண்ணி போற்றி

    ஓம் கருத்தினி லமர்வாய் போற்றி

    ஓம் தாமரைத் தாளாய் போற்றி

    ஓம் தவநிலை அருள்வாய் போற்றி

    ஓம் கலைஞானச் செல்வி போற்றி

    ஓம் கலைஞருக் கருள்வாய் போற்றி

    ஓம் அருள்ஞானச் செல்வி போற்றி

    ஓம் அறிஞருக் கருள்வாய் போற்றி

    ஓம் எளியவர்க் கருள்வாய் போற்றி

    ஓம் ஏழ்மையைப் போக்குவாய் போற்றி

    ஓம் வறியவர்க் கருள்வாய் போற்றி

    ஓம் வறுமையை ஒழிப்பாய் போற்றி

    ஓம் வேதமல்லியே போற்றி

    ஓம் வேட்கை தணிப்பாய் போற்றி

    ஓம் பிறர்பொருள் கவர எண்ணாப் பெரியர்க் கருள்வாய் போற்றி

    ஓம் நடுநிலை நீங்கிடாத நல்லவர்க் கருள்வாய் போற்றி

    ஓம் அறநெறி வழுவிலாத அடியவர்க் கருள்வாய் போற்றி

    ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி

    ஓம் அருண்இலக் குமியே போற்றி

    • ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி
    • ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி

    ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி

    ஓம் ஆதிபராசக்தியே போற்றி

    ஓம் அபிராமியே போற்றி

    ஓம் ஆயிரங்கண்கள் உடையவளே போற்றி

    ஓம் அம்பிகையே போற்றி

    ஓம் ஆசைகளை அறுப்பாய் போற்றி

    ஓம் அன்பின் உருவே போற்றி

    ஓம் ஆபத்தைத் தடுப்பாய் போற்றி

    ஓம் அச்சம் தீர்ப்பாய் போற்றி

    ஓம் ஆனந்தம் அளிப்பாய் போற்றி

    ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி

    ஓம் ஆற்றல் தருவாய் போற்றி

    ஓம் இமய வல்லியே போற்றி

    ஓம் இல்லறம் காப்பாய் போற்றி

    ஓம் இரு சுடர் ஒளியே போற்றி

    ஓம் இருளை நீக்குவாய் போற்றி

    ஓம் ஈசனின் பாதியே போற்றி

    ஓம் ஈஸ்வரியே போற்றி

    ஓம் உமையவளே போற்றி

    ஓம் உளைமான் கொண்டாய் போற்றி

    ஓம் உள்ளரவம் தீர்ப்பாய் போற்றி

    ஓம் உற்சாகம் அளிப்பாய் போற்றி

    ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி

    ஓம் ஊக்கம் அளிப்பாய் போற்றி

    ஓம் என் துணை இருப்பாய் போற்றி

    ஓம் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி

    ஓம் எம்பிராட்டியே! போற்றி

    ஓம் ஏற்றம் அளிப்பாய் போற்றி

    ஓம் ஐமுகன் துணையே போற்றி

    ஓம் ஐயுறவு தீர்ப்பாய் போற்றி

    ஓம் ஒளிர்வு முகத்தவளே போற்றி

    ஓம் ஓச்சம் அளிப்பாய் போற்றி

    ஓம் கங்காணியே போற்றி

    ஓம் காமாட்சியே போற்றி

    ஓம் கடாட்சம் அளிப்பாய் போற்றி

    ஓம் காவல் தெய்வமே போற்றி

    ஓம் கருணை ஊற்றே போற்றி

    ஓம் கற்பூர நாயகியே போற்றி

    ஓம் கற்பிற்கரசியே போற்றி

    ஓம் காம கலா ரூபிணியே போற்றி

    ஓம் கிரிசையே போற்றி

    ஓம் கிலியைத் தீர்ப்பாய் போற்றி

    ஓம் கீர்த்தியைத் தருவாய் போற்றி

    ஓம் கூர்மதி தருவாய் போற்றி

    ஓம் குவலயம் ஆள்பவளே போற்றி

    ஓம் குலத்தைக் காப்பாய் போற்றி

    ஓம் குமரனின் தாயே! போற்றி

    ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி

    ஓம் கொற்றவையே! போற்றி

    ஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் போற்றி

    ஓம் கோமதியே! போற்றி

    ஓம் கோன்ரிவாகனம் கொண்டாய் போற்றி

    ஓம் சங்கரியே போற்றி

    ஓம் சாமுண்டீஸ்வரியே போற்றி

    ஓம் சந்தோஷம் அளிப்பாய் போற்றி

    ஓம் சாந்த மனம் தருவாய் போற்றி

    ஓம் சக்தி வடிவே! போற்றி

    ஓம் சாபம் களைவாய் போற்றி

    ஓம் சிம்ம வாகனமே! போற்றி

    ஓம் சீலம் தருவாய் போற்றி

    ஓம் சிறுநகை புரிபவளே போற்றி

    ஓம் சிக்கலைத் தீர்ப்பாய் போற்றி

    ஓம் சுந்தர வடிவழகியே போற்றி

    ஓம் சுபீட்சம் அளிப்பாய் போற்றி

    ஓம் செங்கதிர் ஒளியே போற்றி

    ஓம் சேவடி பணிகிறேன் போற்றி

    ஓம் சோமியே! போற்றி

    ஓம் சோதனை தீர்ப்பாய் போற்றி

    ஓம் தண்கதிர் முகத்தவனே போற்றி

    ஓம் தாயே! நீயே! போற்றி

    ஓம் திருவருள் புரிபவளே போற்றி

    ஓம் தீங்கினை ஒழிப்பாய் போற்றி

    ஓம் திரிபுரசுந்தரியே போற்றி

    ஓம் திரிசூலம் கொண்டாய் போற்றி

    ஓம் திசையெட்டும் புகழ்கொண்டாய் போற்றி

    ஓம் தீரம் அளிப்பாய் போற்றி

    ஓம் துர்க்கையே! அம்மையே! போற்றி

    ஓம் துன்பத்தை வேரறுப்பாய் போற்றி

    ஓம் துணிவினைத் தருவாய் போற்றி

    ஓம் தூயமனம் தருவாய் போற்றி

    ஓம் நாராயணீயே! போற்றி

    ஓம் நலங்கள் அளிப்பாய் போற்றி

    ஓம் நிந்தனை ஒழிப்பாய் போற்றி

    ஓம் நீதியினைக் காப்பாய் போற்றி

    ஓம் பகவதியே! போற்றி

    ஓம் பவானியே போற்றி

    ஓம் பசுபதி நாயகியே போற்றி

    ஓம் பாக்கியம் தருவாய் போற்றி

    ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே போற்றி

    ஓம் பிழை தீர்ப்பாய் போற்றி

    ஓம் புகழினை அளிப்பாய் போற்றி

    ஓம் பூஜிக்கிறேன் துர்க்கா! போற்றி

    ஓம் பொன் ஒளி முகத்தவளே போற்றி

    ஓம் போர் மடத்தை அளிப்பாய் போற்றி

    ஓம் மகிஷாசுரமர்த்தினியே போற்றி

    ஓம் மாதங்கியே போற்றி

    ஓம் மலைமகளே போற்றி

    ஓம் மகமாயி தாயே போற்றி

    ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி

    ஓம் தவன் தங்கையே போற்றி

    ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி

    ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி

    ஓம் வேதவல்லியே! போற்றி

    ஓம் வையம் வாழ்விப்பாய்! போற்றி

    ஓம் ஜெயஜெய தேவியே! போற்றி

    ஓம் ஜெயங்கள் அளிப்பாய்! போற்றி

    ஓம் துர்க்கா தேவியே! போற்றி

    • நடராஜர் சன்னதியில் கொலு வைக்கப்பட்டிருந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கொலு கண்காட்சியை பார்வையிட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் 11-வது ஆண்டு நவராத்திரி விழா வெகு விமரிசயைாக தொடங்கியது.

    விழாவில் கோவில் செயல் அலுவலர் முருகையன் தலைமை தாங்கினார். சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு செயலாளர் ஜெயப்பிரகாஷ், ஒருங்கிணைப்பபாளர் துரை ராயப்பன், கோவில் ஊழியர் ராஜ்மோகன், டாக்டர் பாண்டியன், ஓய்வு பெற்ற தலைமையாசியர் தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முதல் நாள் நிகழ்வில் பிறவி மருந்தீஸ்வரர் கோவிலின் நாதஸ்வர வித்வான் சுவாமிநாதன் மகன்கள் பூர்ணசந்திரன், தமிழிசை வேந்தன், காளிதாஸ் ஆகியோரின் சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சியும், தவிலிசை கலைஞர்களான ஆதிரெங்கம் தவிலிசை மாமுரசு பாலசங்கர், தவிலிசை இளவரசு, ஜெகதீஷ் ஆகியோரின் தவிலிசை நிகழ்ச்சியும் நடந்தது.

    முன்னதாக நவராத்திரி விழாவை முன்னிட்டு நடராஜர் சன்னதியில் கொலு வைக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து கொலுவை பார்வையிட்டனர்.

    தொடர்ந்து, வருகிற 24-ந் தேதி வரை நடைபெறும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு மற்றும் நவராத்திரி குழுவினர் செய்துள்ளனர்.

    • நவராத்திரி தொடங்கியதை முன்னிட்டு புதுக்கோட்டை கோவில்களில் கொலு அமைக்கப்பட்டது
    • தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை புதுநகர் கருமாரியம்மன் கோவிலில் முதல் வருடமாக கொலு கோவில் செயலா ளார் புதுநகர் குமார் ஏற்பா ட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் கல ந்துக் கொண்டு வழிபட்டு பிரசாதம் பெற்று சென்ற னர்.இதே போல் சாந்தநாதா சுவாமி கோவில், அரிய நாச்சி அம்மன் கோவில், ஸ்ரீ பிரகதாம்பாள் கோவில் மற்றும் ஸ்ரீ புவனேஸ்வரி அதிஷ்டானத்திலும் கொலு உற்சாகம் நடைபெற்றுவரு கிறது.இந்த கோவில்களில் தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    • இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட பிராணிகள்.
    • கொலு படிகளை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற ஒற்றைப்படை வரிசையில் அமைக்கவேண்டும்.

    * கொலு படிகளை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற ஒற்றைப்படை வரிசையில் அமைக்கவேண்டும்.

    * கொலு வைக்கும் பொழுது முதல் படியில் ஓரறிவு கொண்டவைகளான புல், பூண்டு, செடி, கொடி, தாவர வகைகளை வைக்க வேண்டும்.

    • இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட பிராணிகளின் பொம்மைகள், சிப்பி, சங்கு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும்.

    * மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான் பொம்மைகளை வைக்கவேண்டும்.

    *நான்காவது படியில் நான்கு அறிவுகொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்ற ஜீவராசிகளின் பொம்மைகள் இடம்பெற வேண்டும்.

    * ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

    * ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள் மற்றும் நாட்டிற்காக உழைத்த தலைவிகளின் பொம்மைகள் இருக்க வேண்டும்.

    * ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை இடம் பெறச்செய்யவேண்டும்.

    * எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், தெய்வங்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

    * ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் அவர்களின் துணைவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரின் உருவங்களையும் வைக்க வேண்டும். இதற்கெல்லாம் நடுநாயகமாக கொலு பீடத்தில் விநாயகப் பெருமானையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும்.

    • ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும்.
    • பெண்கள் இதனைச் செய்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பம் செழிப்புடன் இருக்கும்.

    நல்ல மஞ்சள் நிறமுடைய பழுத்த எழுமிச்சம்பழங்களை வாங்கி அவைகளை இரண்டாக குறுக்கு வசத்தில் அறுத்து சாறு பிழிந்துவிட்டு குப்புறக் கவிழ்த்து கிண்ணம்போல் செய்து கொள்ள வேண்டும்.

    அதில் நெய் ஊற்றி திரிபோட்டு, அத்துடன் அர்ச்சனைப் பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அம்மனை அர்ச்சனை செய்ய கொண்டு வந்திருக்கும் பூ, பழம், கற்பூரம், தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு, ஊதுவத்தி,

    எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம், விபூதி, பன்னீர் பாட்டில் அடங்கிய அர்ச்சனை தட்டை அம்மனை பூஜை செய்யும் அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும்.

    துர்க்கைக்கு எலுமிச்சம்பழ மாலை சூட்ட விருப்பம் உள்ள பக்தர்கள் எலுமிச்சம்பழத்தை மாலையாகத் தொடுத்து அர்ச்சகரிடம் கொடுத்தால் அவர் அம்மாலையை அம்மனுக்கு சாத்துவார்.

    அதன்பின்னர் தயாராக செய்து வைத்துள்ள எலுமிச்சப்பழக் கிண்ண விளக்கில் திரியை கொளுத்தி ஒளிப்பெற செய்யவேண்டும்.

    ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும்.

    பிரார்த்தனைக்கு ஏற்றவாறு ஐந்து, ஒன்பது, பதினொன்று, நூற்றி ஒன்று இப்படி எத்தனை வேண்டுமானாலும் நெய்விளக்கு ஏற்றலாம்.

    திருமணம் ஆகவேண்டிய பெண்கள் இதனைச் செய்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பம் செழிப்புடன் இருக்கும்.

    எலுமிச்சம் பழ நெய்விளக்குகள் ஏற்றிய பின்னர் அந்த ஒளியில் துர்க்காதேவியின் திருமுகத்தை உற்றுப்பாருங்கள்.

    தன்னை மறந்து அன்னையின் மீது உங்கள் மனதை ஐக்கியப்படுத்துங்கள்.

    மானசீகமாக தங்களின் குறைகளை அன்னையிடம் சமர்ப்பியுங்கள். உங்களது குறைகள் என்னவாக இருந்தாலும் தீர்த்து வைப்பாள்.

    அவளது பேரருள் தங்களுக்கு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறி நல்வாழ்வு பெறுவீர்கள்.

    அன்னையின் முன்னால் துர்க்கை அம்மன் கவசத்தை 108 தடவை வாய்விட்டு சொல்லுங்கள்.

    பக்தி பரவசத்துடன் பாமாலைப் பாடி மனமுருகி துதியுங்கள். மன நிம்மதி பெறுவீர்கள்.

    தீபாராதனை முடித்து அர்ச்சகர் அர்ச்சனைத் தட்டை தரும்போது அம்மனின் பிரசாதமாக குங்குமம், பூ தருவார்.

    அதனால் அன்னையின் அருள்கடாட்சம் பரிபூரணமாகக் கிடைக்கும்.

    பூஜை முடிந்த பின்னர் அன்னையின் சுற்று பிரகாரத்தை பதினெட்டு தரம் வலம் வந்து, கொடி மரத்தையும் பதினொரு தரம் சுற்றிவிட்டு,

    அம்மனின் சன்னதியின் எதிரில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு எழும்போது அங்கிருந்தவாறே அம்மனை வணங்கிவிட்டு வர வேண்டும்.

    • பூஜை செய்யும் அறையில் முதலில் சக்தி மாகோலமிட வேண்டும்.
    • அதனை சுற்றி செம்மண் இட்டு அதன்மீது தலை வாழையிலையை போடவேண்டும்.

    துர்க்கை அன்னையை வீட்டிலேயே தீப பூஜை செய்ய விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் முறையில் அனுசரித்து வழிபட வேண்டும்.

    பூஜை செய்யும் அறையை முதலில் சுத்தமாக கழுவிவிட்டு, அங்கே சக்தி மாகோலமிட வேண்டும்.

    அதனை சுற்றி செம்மண் இட்டு அதன்மீது தலை வாழையிலையை போடவேண்டும்.

    வாழை இலையில் பச்சரிசியைப் பரப்பி அதன் நடுவில் ஐந்துமுக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.

    மஞ்சள் நிறமுடைய பத்து எலுமிச்சம் பழங்களை வாங்கி, பழங்களை இரண்டு துண்டாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

    அந்த இருபது துண்டுகளில் இரண்டு துண்டுகளை மட்டும் எடுத்து சாறு பிழிந்து விட்டு பிழிந்த முடிகளை உள்பக்கம் வெளிப்பக்கம் வருமாறு திருப்பி குழிவான கிண்ணம் போல் செய்து கொள்ள வேண்டும்.

    அந்த எலுமிச்சம்பழக் கிண்ணத்தில் நெய் ஊற்றி திரி போட்டு ஏற்றி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட துர்க்கா தேவியின் படத்தின் முன்போ, அல்லது சிலையின் முன்போ வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

    துர்க்கா தேவிக்கு நிவேதனைப் பொருளாக தயிர் சாதம், உளுத்துவடை, அவல், பாயாசம், எலுமிச்சம் பழச்சாதம் படைக்கலாம்.

    • துர்க்கை பூஜைக்கு உகந்த மலர் செவ்வரளிப்பூவாகும்.
    • தோஷம் அகல மாலை நேரம் அம்மனை வழிபட வேண்டும்.

    துர்க்கா பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகல விதமான சம்பத்துகளும் வந்துசேரும்.

    குடும்ப கஷ்டங்கள் விலகி ஓடும்.

    எந்தவித தோஷங்கள் தாக்கி கஷ்டப்பட்டாலும் துர்க்கை அம்மன் அதனை அகற்றி அருள்புரிவாள்.

    தோஷம் அகல உகந்த நேரம் மாலை நேரம் என்பதினால் அந்நேரத்தில் அம்மனை வழிபட வேண்டும்.

    துர்க்காதேவிக்கு உகந்த நாட்கள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களாகும்.

    இருப்பினும், மிகவும் உகந்த காலம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 வரையிலான ராகு காலமே பூஜைக்குரிய சிறப்பான நேரமாகும்.

    அன்னையின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து தலைக்கு பூச்சூடி,

    நெற்றிக்கு விபூதி, குங்குமம் வைத்துக்கொண்டு துர்க்கா தேவியை வழிபட கோவிலுக்கு செல்லவேண்டும்.

    துர்க்கை பூஜைக்கு உகந்த மலர் செவ்வரளிப்பூவாகும்.

    அந்த பூக்களை உதிரியாகவோ அல்லது மாலையாகவோ வாங்கி கொள்ளலாம்.

    • கறுப்பு நிறத்துடன் காணப்படும் இவளது முகம் பன்றியை ஒத்திருக்கும்.
    • தண்டநாத வாராகி பொன் நிறம் உடையவள்.

    வாராகி என்பவள் வாரகமூர்த்தியின் சக்தி ஆவாள்.

    கறுப்பு நிறத்துடன் காணப்படும் இவளது முகம் பன்றியை ஒத்திருக்கும்.

    இவளுக்கு மொத்தம் 6 கைகள் உண்டு.

    வலது கரத்தில் வரத முத்திரையும், இடது கரத்தில் அபய முத்திரையும் கொண்டிருக்கிறாள்.

    இவள் எருமையை வாகனமாக கொண்டிருப்பதாக ஸ்ரீதத்துவநிதி சொல்கிறது.

    வாராகி அம்சத்தில் தண்டநாத வாராகி, சுவப்ன வாராகி, சுத்த வாராகி என்று மேலும் 3 வகை வாராகிகள் உள்ளனர்.

    தண்டநாத வாராகி பொன் நிறம் உடையவள்.

    பன்றி முகத்துடன் காட்சி அளிக்கும் இவள் கைகளில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் ஆகியவற்றை ஏந்தி உள்ளாள்.

    சுவப்ன வாராகி மேகம் போன்ற நிறம் கொண்டவள்.

    இவளுக்கு 3 கண்கள் உண்டு. தலையில் பிறைச்சந்திரனை சூடி இருப்பாள்.

    கைகளில் வாள், கேடயம், அரிவாள் ஆகியவற்றை ஏந்தி இருப்பாள்.

    சுத்தவாராகி என்பவள் நீலநிறமாக இருப்பாள்.

    இவளது பன்றி முகத்தில் இருந்து வெள்ளை நிற கோர பற்கள் வெளியே நீண்டு கொண்டிருக்கும்.

    இவள் தலையில் பிறச்சந்திரனை சூடி இருப்பாள்.

    இவள் தன் கைகளில் சூலம், உடுக்கை, நாகம் போன்றவற்றை ஏந்தி இருப்பாள்.

    • ஓம் நல்வினை நிகழ்த்துவோய் போற்றி
    • ஓம் அகிலத்தின் காப்பே போற்றி

    ஓம் அறிவினுக்கறிவே போற்றி

    ஓம் ஞானதீபமே போற்றி

    ஓம் அருமறைப் பொருளே போற்றி

    ஓம் ஆதிமூலமாய் நின்றவளே போற்றி

    ஓம் புகழ்தரும் புண்ணியளே போற்றி

    ஓம் நறும்பாகின் சுவையே போற்றி

    ஓம் நல்வினை நிகழ்த்துவோய் போற்றி

    ஓம் பரமனின் சக்தியே போற்றி

    ஓம் பாபங்கள் களைவாய் போற்றி

    ஓம் அன்பெனும் முகத்தவளே போற்றி

    ஓம் அகிலத்தின் காப்பே போற்றி

    ஓம் செம்மேனியளே போற்றி

    ஓம் செபத்தின் விளக்கமே போற்றி

    ஓம் தானியந் தருவாய் போற்றி

    ஓம் கல்யாணியம்மையே போற்றி

    ×