search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அர்ஜுனன்"

    • பஞ்ச பாண்டவர்களில் மூன்றாவதாக பிறந்தவன் அர்ஜுனன்.
    • நினைத்த பொழுது, நினைத்தபடி தூங்கவோ, தூங்காதிருக்கவோ அவனுக்கு இயலும்.

    பஞ்ச பாண்டவர்களில் மூன்றாவதாக பிறந்தவன் அர்ஜுனன்.

    பத்துவித பெயர்களை உடையவன் அவன்.

    கூர்மையான பார்வையை உடையவன்.

    நினைத்த பொழுது, நினைத்தபடி தூங்கவோ, தூங்காதிருக்கவோ அவனுக்கு இயலும்.

    அதனால் அவன் குடாகேசன் என்று அழைக்கப்பட்டான்.

    கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தான்.

    கீதை பிறக்க காரணமாய் இருந்தவன் அர்ஜுனன்.

    எனவே அர்ஜுனன் பிறந்த தினமான பங்குனி உத்திர திருநாள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • பாரதப்போரில் வென்றதால் அகந்தையோடும், ஆணவத்துடனும் இருந்தான் அர்ஜுனன்.
    • உன்னைவிட என் மீது அதிகமாக அன்பும், பக்தியும் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.

    கிருஷ்ணர் கூட அதிகநேரம் இருப்பவரான அர்ஜுனனுக்கு தான் தான் மிகச்சிறந்த பக்திமான் என்கிற அகந்தை இருந்தது. கிருஷ்ணர் அந்த ஆணவத்தை அர்ஜுனனிடம் இருந்து எப்படி அகற்றினார் என்பதை தான் இந்த கதையில் பார்க்கப்போகிறோம்.

    பாரத போர் நடந்து முடிந்தது. அதில் வெற்றி பஞ்சபாண்டவர்களுக்கு கிடைத்தது. பாரதப்போரில் வென்றதால் அகந்தையோடும், ஆணவத்துடனும் இருந்தான் அர்ஜுனன். நான் வெற்றிபெற்ற பிறகும், இப்போது வரைக்கும் கிருஷ்ணர் என்னுடன் தான் இருக்கிறார். என்னைவிட யாரும் கிருஷ்ணரிடம் அதிக அன்புடனும், பக்தியுடன் யாரும் இருக்கவில்லை என்று நினைத்தார் அர்ஜுனர்.

    இதைபார்த்த கிருஷ்ணர், அர்ஜுனனிடம் அப்படி நீயாகவே முடிவு செய்துவிடக்கூடாது. உன்னைவிட என் மீது அதிகமாக அன்பும், பக்தியும் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அதிலும் அர்ஜுனனின் இந்த கர்வத்தை எப்படியாவது அகற்ற வேண்டும் என்று எண்ணிய கிருஷ்ணர், அர்ஜுனனை பார்த்து என்னை அதிக பக்தியுடன் வணங்கி வருபவள் பிங்கலை. அவள் அஸ்தினாபுரத்துக்கு அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கிறாள். அவளை நாம் சென்று பார்த்து வரலாம் என்று கூறினார்.

    உடனே கிருஷ்ணர் இப்போது தான் பாரதபோர் முடிந்துள்ளது. இதே தோற்றத்தில் நாம் வெளியில் செல்ல வேண்டாம். அதனால் நான் ஒரு பெண்ணாக மாறுகிறேன். நீயும் என் தோழியாக மாறி செல்லலாம் என்றார்.

    சற்று நேரத்தில் அரண்மணையில் இருந்து கிருஷ்ணரும், அர்ஜுனரும் பெண்களாக மாறி வெளியே புறப்பட்டு வந்தனர். அஸ்தினாபுரம் வழியாக சென்று பிங்கலை வீட்டிற்கு சென்றனர்.

    அர்ஜுனரும், கிருஷ்ணரும் பிங்கலையின் வீட்டின் கதவை தட்டினர். அங்கு தெய்வீக ஒளியோட ஒரு மூதாட்டி கதவை திறந்தார். உடனே பெண்களாக உருமாரி கிருஷ்ணரும், அர்ஜுனரும் தாயே... நாங்கள் நெடுந்தூரம் செல்ல வேண்டும். மிகவும் களைப்பாக உள்ளது. சற்று நேரம் இங்கு இளைப்பாறிவிட்டு செல்லலாமா? என்று கேட்டனர்.

    அதற்கு அந்த மூதாட்டி உள்ளே வாருங்கள். நான் பூஜை செய்துகொண்டு இருக்கிறேன். பூஜை முடிந்தபிறகு நீங்களும் உணவு அருந்திவிட்டு செல்லுங்கள் என்றார். வீட்டில் உள்ள பூஜை அறையில் ஒரு பீடத்தில் கிருஷ்ணரின் விக்கிரகம் இருந்தது. அந்த கிருஷ்ணரின் விக்கிரகத்துக்கு அருகில் சிறியதாக ஒரு கத்தியும், நடுத்தரமாக ஒரு கத்தியும், மூன்றாவதாக பெரியதாக ஒரு கத்தியும் இருந்தது. மொத்தம் 3 கத்திகள் அந்த கிருஷ்ணர் விக்கிரகத்துக்கு அருகில் வைக்கப்பட்டிருந்தது.

    இதைப்பார்த்தை பெண் வடிவில் இருந்த கிருஷ்ணர் தாயே... ஏன் கிருஷ்ணரின் விக்கிரகத்துக்கு அருகில் 3 கத்திகள் வைக்கப்பட்டுள்ளது. ஏன் கிருஷ்ணர் விக்கிரகத்துடன் 3 கத்துகளையும் வைத்து பூஜைசெய்கிறீர்கள். இந்த கத்திகள் யாருடையது என்று கேட்டார். அதற்கு பிங்கலை இந்த கத்திகள் என்னுடையது தான். வாய்ப்பு கிட்டும்போது கிருஷ்ணருக்கு கொடுமைசெய்த எனது விரோதிகள் மூவரையும் கொல்ல வேண்டும். அதன்பொருட்டுத்தான் இந்த பூஜை.

    உடனே கிருஷ்ணர் விரோதியா? யார் அந்த விரோதிகள் என்று கேட்டார். குசேலன், பாஞ்சாலி, அர்ஜுனன். இந்த மூவரும் தான் அந்த விரோதிகள். இந்த குசேலனை கொல்லை சின்ன கத்தியும், பாஞ்சாலிக்கு நடுத்தர கத்தி, மாவீரன் என்று தன்னைப்பற்றி பிதற்றிக்கொண்டு திரியும் அர்ஜுனனை கொல்லத்தான் இந்த பெரிய கத்தி என்று சொன்னாள் பிங்கலை.

    இதைக்கேட்டதும் பெண் உருவில் வந்த அர்ஜுனனுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. உடனே பெண் உருவில் இருந்த கிருஷ்ணர், பிங்கலையிடம் அந்த மூவரும் கிருஷ்ணருக்கு அப்படி என்ன தீங்கு செய்தனர் என்று கேட்டார். பிங்கலை அந்த குசேலன் தவிட்டு அவலை என்னுடைய கிருஷ்ணருக்கு கொடுக்கலாமா? கிருஷ்ணர் வெண்ணெய்யை விரும்பி உண்பவன். அந்த அவல் என்னுடைய கிருஷ்ணரின் தாமரை போன்ற இதழை பாதிக்காதா. இந்த புத்தி கூட இல்லாமல் அவலை கிருஷ்ணருக்கு கொடுக்கலாமா? என்று கேட்டாள் பிங்கலை.

    அது சரி... பாஞ்சாலி ஒரு பெண் அவள் எப்படி உங்களுக்கு விரோதியானாள்? என்று கேட்டார் கிருஷ்ணர். ஓ அதுவா.... என்னுடைய கிருஷ்ணரிடம் இருந்து புடவைகளை பெற்றாள். துவாரகையில் இருக்கும் என்னுடைய கிருஷ்ணர் அஸ்தினாபுரத்தில் உள்ள பாஞ்சாலிக்கு புடவைகளை வாரிவாரி கொடுத்தார். அந்த புடவையை இழுத்து இழுத்து துச்சாதனன் கைவலித்து மயக்கமே போட்டு விழுந்தான். புடவையை இழுத்த துச்சாதனனுக்கே அப்படி என்றால், அதை வாரி வாரி வழங்கிய என்னுடைய கிருஷ்ணருக்கு எப்படி கைவலித்திருக்கும். என்னுடைய கிருஷ்ணரின் கைகளை வலிக்கச்செய்த பாஞ்சாலையை நான் சும்மாவிடுவேனா நான் என்று கோபமாக கூறினாள்.

    இதைக்கேட்ட பெண் வடிவில் இருந்த கிருஷ்ணர். அந்த மூன்றாவது கத்தி அர்ஜுனனுக்கு என்று சொன்னீர்களே, கிருஷ்ணரின் பக்தியிலேயே சிறந்தவன் அர்ஜுனன். அர்ஜுனன் மேல் ஏன் இந்த விரோதம்? உடனே பிங்கலை அர்ஜுனனின் பக்தியை நீ தான் மெச்சிக்கொள்ள வேண்டும்.

    என் கிருஷ்ணனை தேரோட்ட சொல்வானா? தேரோட்டுவது அவ்வளது சாதாரணமானதல்ல. ஊரில் தேரோட்டிகளுக்கா பஞ்சம். ஊரில் என்றாவது ஒரு நால் என் கண்ணில் அகப்படுவான். அப்போது அன்றைக்கு அவனை பார்த்துக்கொள்கிறேன் என்றாள் பிங்கலை கோபமாக.

    இவ்வாறு பிங்கலை சொன்னவுடன், பெண் வேடமிட்டு வந்த அர்ஜுனனுக்கு பதட்டத்தில் வியர்த்து கொட்டியது. இதைப்பார்த்து கிருஷ்ணர் சிரித்துக்கொண்டு பிங்கலையை பார்த்து தாயே குசேலன் அறியாமையில் செய்தான். குசேலனிடம் அவலை தவிர வேறு எந்த ஒரு பொருளும் இல்லை. அவன் கிருஷ்ணரிடம் எந்த ஒரு பொருளையும் எதிர்பார்க்கவில்லை. அவன் கேட்காமலேயே கிருஷ்ணர் தான் அவனுக்கு அளவற்ற செல்வத்தை வழங்கினார். குசேலன் சுயநலமற்றவன் எனவே குசேலனை மன்னித்துவிடுமாறு பிங்கலையிடம் கூறினார் கிருஷ்ணர். இதைக்கேட்டதும் பிங்கலை கிருஷ்ணர் பீடத்தின் அருகில் வைக்கப்பட்டிருந்த சிறிய கத்தியை எடுத்து வீசினார்.

    பெண்வேடமிட்டு வந்திருந்த கிருஷ்ணர் மீண்டும் பாஞ்சாலிக்கு புடவையை வாரி வாரி கொடுத்து கிருஷ்ணரின் கைகள் வலித்தது உண்மைதான். ஆனாலும் ஒரு பெண்ணிற்கு மானம் பெரிதல்லவா, எனவே மானம் காக்க உதவியதால் பாஞ்சாலியையும் மன்னித்துவிடுங்கள் என்று கிருஷ்ணர் கூறினார். இதைக்கேட்டதும் பிங்கலை இரண்டாவது கத்தியையும் தூக்கி வீசிவிட்டார்.

    ஆனால் போரில் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்ற உலகியல் சுயநலத்திற்காக என்னுடைய கிருஷ்ணரை தேரோட்டச் செய்த அர்ஜுனனை மட்டும் நான் மன்னிக்கவே மாட்டேன். இந்த பெரிய கத்தி அந்த பீடத்திலேயே இருக்கட்டும் என்று சொன்னார் பிங்கலை.

    இதைக்கேட்டதும் பெண் வடிவில் இருந்த கிருஷ்ணர், பிங்கலையிடம் சுயநலம் பிடித்த அர்ஜுனனை நீங்கள் கொல்வதும் நியாயம் தான். அதை நானும் ஒப்புக்கொள்கிறேன் என்று கிருஷ்ணர் சொன்னவுடன் அர்ஜுனனுக்கு தூக்கிவாரிப்போட்டது. அர்ஜுனனுக்கு பயத்தில் வியர்த்து கொட்டியது.

    இதைப்பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணர், பிங்கலையிடம் அர்ஜுனன், கிருஷ்ணரின் மனதை கவர்ந்ததால் தான் கைவலியையும் பொருட்படுத்தாமல் தேரோட்டினார். நீங்க அர்ஜுனனை கொன்றுவிட்டால் நண்பனை இழந்து கிருஷ்ணர் வாடிவிடுவார் அல்லவா. கிருஷ்ணர் வருத்தப்பட்டால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா என்று சொன்னார் கிருஷ்ணர்.

    அடடா நீங்கள் சொன்ன கோலத்தில் நான் யோசிச்சு பார்க்கவில்லையே. நீ சொன்னதும் நியாயம் தான் என்னுடைய கிருஷ்ணர், உடல் வருத்தமோ, மன வருத்தமோ இல்லாமல் இருந்தால் அதுபோதும் எனக்கு. கிருஷ்ணருக்கு மனவருத்தம் தரக்கூடிய செயலை நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே பிங்கலை மூன்றாவது கத்தியையும் தூக்கி வீசிவிட்டார்.

    உடனே பெண் வேடத்தில் இருக்கும் அர்ஜுனன், பிங்கலையின் காலில் விழுந்து வணங்கினான். அப்போது அர்ஜுனனின் ஆணவம் அழிந்துபோனது.

    இந்த கதையில் இருந்து நாம் என்ன தெரிந்துகொண்டோம் என்றால், நம்மில் பலருக்கும் நான் என்ற ஒரு ஆணவமும், என்னால் மட்டும் தான் முடியும் என்கிற கர்வமும் என்னைக்குமே தலைதூக்கிக்கொண்டே இருக்கும். இந்த கர்வமும், ஆணவமும் நம்மிடம் இருந்து நீங்கினால் வாழ்க்கையில் வெற்றி தானாக தேடிவரும். அதைத்தான் இந்த கதை நமக்கு உணர்த்துகிறது.

    • பக்தியின் திருவுருவமாக விளங்கியவர்தான் கண்ணப்பநாயனார்.
    • அய்யனே எனக்கு இடையறாத பக்தியை தரவேண்டும்.

    இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவன்தொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் இந்த நாயன்பார்கள். அந்த வகையில் இன்றைக்கு நாம் கண்ணப்பநாயனார் பற்றி இன்று தெரிந்துகொள்வோம்.

    பக்தியின் திருவுருவமாக விளங்கியவர்தான் கண்ணப்பநாயனார். இவர் முற்பிறவியில் அர்ஜுனனாக இருந்தார். அர்ஜுனன் மிகப்பெரிய சிவபக்தனாக இருந்தார். மகாபாரதபோரில் தன்னுடைய மகனான அபிமன்யூவை கொன்றவர்களை கொல்லாமல் விடமாட்டேன் என்று சொல்லிக்கொண்டு உணவும் உண்ணாமல், சிவபூஜையும் செய்யாமல் கண்ணபிரான் கூட கயிலாயத்திற்கு சென்றார்.

    சிவபெருமானிடம் வரம் கேட்பதற்காக செல்கிறார். அங்கு சென்றபோது ஒரு பன்றியின் காரணமாக அர்ஜுனனுக்கும் வேடன் வடிவில் இருந்த சிவபெருமானுக்கும் இடையே சண்டை நடக்கிறது. வேடன் வடிவில் இருப்பது சிவபெருமான் என்று அறியாமல் வேடன் தானே என்று வேடன் குலத்தை திட்டினான். உடனே தன்னுடைய திருவுருவத்தை அர்ஜுனனிடம் காட்டி அர்ஜுனா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று கூறினார் சிவபெருமான்.

    உடனே அர்ஜுனன் தன்னுடைய தவறை உணர்ந்து. அவரிடம் அய்யனே உன்னை என்றுமே மறவாத வரத்தை தரவேண்டும் என்று கேட்டார். ஆனால் வரம் வாங்க வந்ததே தன்னுடைய மகனை கொன்றவர்களை கொல்ல பாசுவதகனி வாங்க வந்தவர் அவ்வாறு கேட்காமல் அய்யனே எனக்கு இடையறாத பக்தியை தரவேண்டும் என்று கேட்டுவிட்டார்.

    சிவபெருமான் மகனே அர்ஜுனா... நீ அபிமன்யூவை கொன்றவர்களை கொல்வதற்காக மனதிற்குள்ளேயே கேட்டாயே பாசுவத கனி அதனை நான் இப்போது உனக்கு தருகிறேன். ஆனால் நீ அடுத்த பிறவியில் இப்போது நீ கேட்டாயே ஒருவரம் இடையறாத பக்தியை தரவேண்டும் என்று அந்த வரத்தை நான் அடுத்த பிறவியில் உனக்கு தருவேன்.

    ஆனால் நீ என்னை திட்டினாயே வேடன் என்று, எனவே நீ அடுத்த பிறவியில் வேடர் குலத்தில் பிறந்து ஒரு பன்றியின் காரணமாக காளஹஸ்தியில் என்னை கண்டு முக்தி பெருவாய் என்று கூறினார் சிவபெருமான். இதுதான் கண்ணப்பநாயனாரின் முற்பிறப்பு வரலாறு.

    வேடர் குலத்தில் ஒரு தலைவர் இருந்தார். அவர் பெயர் நாகன். அவருடைய மனைவி பெயர் தத்தை. இந்த நாகனுக்கும் தத்தைக்கும் நீண்டகாலமாக குழந்தைப்பேறு இல்லை. இதனால் இவர்கள் இருவரும் முருகப்பெருமானை நோக்கி தவம் செய்தனர். முருகப்பெருமானின் திருவருளால் நாகனுக்கும் தத்தைக்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தின்னன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

    தின்னன் சிறுவயதிலேயே காட்டிற்கு சென்று புலிக்குட்டியை பிடித்து வந்து வீட்டின் முற்றத்தில் கட்டிபோட்டு விடுவான். அந்த அளவிற்கு வீரமுடன் இருந்தான். தின்னன் 7 வயதிலேயே வில்விற்றையை கற்றுக்கொண்டு நல்ல தின்மையாகவும், வேடவர் குலத்திற்கு ஏற்ற தைரியசாலியாகவும் இருந்தார்.

    வேடவர் தலைவனாகிய நாகனுக்கு இப்போது வயதாகிவிட்டது. வேட்டைக்கு இவர்கள் செல்லாததால் மலைப் பகுதியில் விளையக்கூடிய பயிர்களை எல்லாம் விலங்குகள் அழிக்கத்தொடங்கின. இதனால் வேடர்கள் எல்லோரும் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இதனால் வேடவர்களின் தலைவனாகிய நாகன், தன்னுடைய வேடவ இன மக்களை எல்லாம் அழைத்து எனக்கு வயதாகிவிட்டது. என்னால் இனி வேட்டையாட முடியாது. எனவே என்னுடைய மகானான தின்னனை தலைவனாக அறிவிக்கிறேன் என்று கூறினார் நாகன்.

    தலைவனான தின்னன் வேட்டையாட வில்லும், வாளும் கொண்டு சென்றார். தின்னனுக்கு நானன், காடன் என்று இரண்டு நண்பர்கள் இருந்தனர். ஒருநாள் தின்னனும், நானனும், காடனும் காட்டுக்கு வேட்டையாட காட்டிற்கு சென்றனர். காட்டில் ஒரு பன்றி தின்னனாரின் அருகிலேயே ஓடி ஓடி வந்து கொண்டிருந்தது. உடனே தின்னனாரும் அந்த பன்றிக்கு பின்னாடி ஓடினார். தின்னனை தொடர்ந்து நாகனும், அவருக்கு பின்னால் காடனும் ஒருவர் பின் ஒருவராக ஓடிச்சென்றனர். கடைசியில் தின்னனார் அந்த பன்றியை தன்னுடைய ஈட்டியால் ஒரு குத்து குத்தி கொன்றுவிட்டார்.

    நெடுந்தூரம் ஓடி வந்ததால் இவர்கள் மூவருக்கும் பசி எடுக்கத்தோன்றியது. அப்போது தின்னன் தனது நண்பர்களிடம், குடிக்க தண்ணீர் கேட்டார். உடனே அவருடைய நண்பர்களான நாணனும், காடனும் திருகாளத்தி மலைக்கு தின்னனை அழைத்துக்கொண்டு சென்றனர். அங்கு நதிக்கரை தின்னனின் நண்பன் காடன் அந்த பன்றியை சாப்பிடுவதற்கு நெருப்புமூட்டிக்கொண்டு இருந்தார்.

    அப்போது திருக்காளத்தி மலை உச்சியில் உள்ள சிவபெருமான பார்க்க நாணன் தன்னுடைய நண்பனான தின்னனாரை அழைத்துக்கொண்டு சென்றார். திருக்காளத்தி மலையில் உள்ள சிவபெருமானை பார்த்த தின்னன், அவரை பார்த்து சிவபெருமானே இந்த கொடிய காட்டின் எப்படி தனியாக இருக்கிறீர்கள் என்று கூறி வருத்தப்பட்டார். அதன்பிறகு நான் உடனே உங்களுக்கு சாப்பிடுவதற்கு ஏதாவது கொண்டுவருகிறேன் என்று சொல்லி தன்னுடைய நண்பன் காடன் சுட்டு வைத்திருந்த பன்றி இறைச்சியை பார்த்தார்.

    அந்த இறைச்சியில் எந்த பகுதி சுவையாக இருக்கும் என்று நினைத்து அந்த பகுதியை சாப்பிட்டு பார்த்து அந்த எச்சில் இறைச்சியை ஒரு இலையில் சேர்த்து வைத்து அதனை சிவபெருமானுக்கு கொண்டுசெல்லலாம் என்று எடுத்துக்கொண்டு செல்ல, ஐயோ இறைச்சி சாப்பிட்டால் சிவபெருமானுக்கு தண்ணீர் தாகம் எடுக்கும். எனவே தண்ணீர் எப்படி கொண்டு செல்வது என்று எண்ணிக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய தண்ணீரை தன்னுடைய வாயில் முகர்ந்து வைத்துக்கொண்டு உடனே திருக்காளத்தில் இருக்கக்கூடிய சிவபேருமானின் ஆலயத்துக்கு சென்றார் தின்னன்.

    அதன்பிறகு தான் கொண்டுவந்த இறைச்சியையும் சிவபெருமானுக்கு படைத்தார் தின்னன். பின்னர் வாயில் முகர்ந்து கொண்டுவந்த நீரை மஞ்சன நீராக எண்ணி சிவபெருமான் மீது உமிழ்ந்துவிட்டார். பிறகு சிவபெருமானை பார்த்து சாப்பிடுங்கள் என்று தின்னனார் பவ்யமாக வேண்டிக்கொண்டார்.

    இவ்வாறு தொடர்ந்து தின்னனார் தான் சுவைத்து பார்த்து கொண்டுவந்த இறைச்சியையும், வாயில் உமிழ்ந்து கொண்டுவந்த நீரை மஞ்சன நீராகவும் சிவபெருமானுக்கு படைத்து வந்தார். திருகாளத்தி மல்லையில் தினமும் காலையில் சிவபெருமானுக்கு ஆகம முறைப்படி சிவகேசரியார் என்பவர் பூக்கள், மஞ்சன நீர், அமுது கொண்டு பணி செய்வது வழக்கம். அன்று மதியம் தான் தின்னனார், தான் சுவைத்துக்கொண்டுவந்த இறைச்சியையும், எலும்பையும் படைத்தார். மறுநாள் பூஜை செய்வதற்காக பூக்கள், மஞ்சனநீர், அமுது ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் செய்ய வந்தார்.

    உடனே சிவபெருமானுக்கு முன்னாள் இறைச்சியும், எலும்புத்துண்டும் இருப்பதை பார்த்த சிவகேசரியார் நடுநடுங்கி போனார். இந்த கொடுஞ்செயலை செய்தவர் யாரோ என்று கூறிக்கொண்டு அதனை எடுத்து சுத்தம் செய்துவிட்டு, அருகில் இருந்த நதியில் குளித்துவிட்டு வந்து சிவபெருமானுக்கு பூஜை செய்தார். இப்படி 4 நாட்கள் சென்றது. இந்த 4 நாட்களும் சிவகேசரியார் பூக்களும், மஞ்சனநீரும், அமுதும் கொண்டு வந்து அபிஷேகம் செய்துவிட்டு செல்வார். மாலையில் தின்னனார் வந்து இறைச்சிகளும், எலும்புகளும் கொண்டுவந்து வழிபாடு செய்வார்.

    ௪ நாட்களும் தொடர்ந்து இந்த இறைச்சிகளை அப்புறப்படுத்திக்கொண்டே வந்தார். ஐந்தாவது நாள் ரொம்ப வருத்தப்பட்டு இறைவனிடம் நீ எப்படி பொருத்துக்கொண்டு இருக்கிறாய். இந்த கொடுமையை எப்படியாவது நீக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு மனம் வருந்தி வேண்டினார். அன்று இரவு சிவகேசரியார் கனவில் சிவபெருமான் வந்து, என்னிடம் வந்து பூஜை செய்பவனை சாதாரண வேடன் என்று நினைத்துவிடாதே. நீ அவன் செய்யும் பக்தியை நாளை நேரில் வந்து மறைந்திருந்து பார் என்று கூறினார்.

    சிவகேசரியார் காளஹஸ்தி மலைக்கு சென்று அங்கு ஒரு மரத்தின் பின்னால் மறைந்திருந்து என்ன நடக்கிறது என்பதை கவனித்தார். வழக்கம்போல் அன்றும் தின்னனார் ரொம்ம மகிழ்ச்சியுர இலையில் இறைச்சியும், வாயில் நீரும் முகர்ந்து வந்தார். அப்போது சிவபெருமானின் ஒரு கண்ணில் இருந்து ரத்தம் வடிந்துகொண்டு இருந்தது. உடனே சிவபெருமான் அப்பா... என்று ஓடி வந்து அலறிவிட்டார். இதனால் வாயில் இருந்த மஞ்சனநீர் கீழே வடிந்தது. உடனே ஊனுக்கு ஊன் வினைதீர்க்கும் என்கிற பழமொழி தின்னனாருக்கு நினைவுக்கு வந்தது. சிவபெருமானே உங்களுடைய கண்களில் இருந்து ரத்தம் வடிகிறது என்று கவலைப்படவேண்டாம். என்னிடம் இரண்டு கண்கள் உள்ளன என்று கூறிவிட்டு தன்னுடைய ஒரு கண்ணை பிடுங்கி எடுத்து சிவபெருமானின் ஒரு கண்ணில் வைத்தார்.

    அப்போது ரத்தம் வடிவது நின்றுவிட்டது. தின்னனாருக்கு ஒரே சந்தோசம். சிவபெருமானுக்கு கண்களில் இருந்து வடியக்கூடிய ரத்தம் நின்றுவிடவே தின்னனாருக்கு ஒரே சந்தோசம். அந்த சந்தோசம் தீருவதற்குள், சிவபெருமானின் மற்றொரு கண்ணில் இருந்தும் ரத்தம் வடிந்தது. இதை பார்த்ததும் சிவபெருமான் வருத்தப்படாதீர்கள். எனக்கு இன்னொரு கண்ணும் இருக்கிறது. அதையும் நான் உமக்கே தந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு மற்றொரு கண்ணையும் பிடுங்க சென்றார்.

    அப்போது சிபெருமானுக்கு வைக்கும் போது அடையாளம் தெரிவதற்காக தன்னுடைய காலின் பெருவிரலை அடையாளத்திற்கு சிவபெருமானின் ரத்தம் வடியக்கூடிய மற்றொரு கண்ணில் வைத்து ஊன்றி வைத்துவிட்டு அம்பை எடுத்து மற்றொரு கண்ணையும் குத்தும்போது சிவபெருமான் திகைத்து நின்று பொறு கண்ணப்பா பொறு என்று அசரிரீயாக தடுத்து நிறுத்தினார். என்னுடைய கண்ணில் ரத்தம் வடிவதை பார்த்தவுடன் உன்னுடைய கண்ணை பிடுங்கி நீ வைத்ததால் நீ கண்ணப்பர் என்று அழைக்கப்படுவாய்.

    அதுமட்டுமில்லாமல் நீ எப்போதும் என்னுடனேயே இருப்பாய் என்று கூறி திருக்காளத்தி மலையில் வைத்து முக்தியும் கொடுத்தார் சிவபெருமான். இந்த கண்ணப்பநாயனாரின் வரலாற்றில் இருந்து தெரிவது என்னவென்றால் இறைவனிடம் நாம் எப்போதும் அன்போடும், பக்தியோடும் இருந்தால் முக்தி கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் பிறவிப்பிணிகூட நீங்கும் இதைத்தான் இந்த கதை நமக்கு உணர்த்துகிறது. பக்தியோடு இருப்போம். முக்தி பெறுவோம்.

    ×