search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "list"

    • பிரதிநிதிகள் முன்பாக மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட உள்ளது.
    • திருவையாறு மற்றும் பூதலூர் வட்ட அலுவலகங்களில் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்து ஆய்வு.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், சமூக சீர்திருத்தத்துறை அரசு செயலாளருமான ஆபிரகாம் தலைமை தாங்கினார். கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.

    பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் அரசு செயலாளர் ஆபிரகாம் பேசும்போது,

    தஞ்சை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை (வியாழக்கிழமை) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பாக மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட உள்ளது.

    நாளை முதல் இந்த ஆண்டு முழுவதும் நடைபெற உள்ள தொடர் திருத்த முறையில் 18 வயது நிறைவடைய உள்ளவர்கள் அடுத்து வரும் 4 காலாண்டுகளின் மைய தகுதி நாளில் அதாவது ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 தொடர்புடைய காலாண்டின் தகுதி நாளில் 18 வயது நிறைவடையும் இளம் வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அந்தந்த வட்டாட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் தேர்தல் துணை வட்டாட்சியரிடம் படிவங்கள் வழங்கலாம்.

    அல்லது NVSP Portal என்ற இணையதளம் மற்றும் Voters helpline என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவர், வல்லம், திருவையாறு மற்றும் பூதலூர் வட்ட அலுவலகங்களில் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

    கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, வருவாய் கோட்டாட்சியர்கள் ரஞ்சித் (தஞ்சை), பிரபாகரன் (பட்டுக்கோட்டை), பூர்ணிமா (கும்பகோணம்) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தாசில்தாரிடம் இருந்து சாதிச்சான்றிதழ் நிலுவை பட்டியல் போன்ற பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் முன்னிலையில் நீதித்துறை, அரசுத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் விழிக்க ண் குழுக் கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்தில் தலைமை கொறடா கோவி செழியன் பேசியதாவது:-

    உண்மைக்கு புறம்பான வழக்குகள், முந்தைய கூட்டத்தில் இறுதி

    செய்யப்படாதவை, உண்மைக்கு புறம்பான வழக்குகள், புதிதாக ஆய்வுக்கு வைக்கப்படும் வழக்குகள், புலன் விசாரணை வழக்குகள் மொத்த வழக்குகள், நீதிமன்ற விசாரணையில் உள்ள , விசாரணை முடிவுற்ற வழக்குகள்,

    தீருதவித்தொகை நிலுவை, தாசில்தாரிடம் இருந்து சாதிச்சான்றிதழ் நிலுவை பட்டியல் போன்ற பல்வேறு கருத்துக்கள்கு றித்து பொருள் விவாதிக்கப்பட்டது.

    விவாதிக்கப்பட்ட அனைத்து பணிகளும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்ப ந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் முன்னேற்றம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்குவதுடன் தேவையான கட்டமைப்புகள், விடுதிகளில் விளையாட்டு வசதிகள், நூலகம், போட்டி தேர்வுக்கான வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு தலைமை கொறடா கோவி செழியன் அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா, தாட்கோ மாவட்ட மேலாளர் ரங்கராஜன், திருவிடைமருதூர் ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, அரசு சிறப்பு வழக்கறிஞர் இளஞ்செழியன், வழக்கறிஞர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • உயர்கல்வி படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
    • மத்திய அரசு நடைமுறையில் உள்ள கல்வியை மாநில அரசின் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கொரடாச்சேரி வட்டாரக்கிளை நிர்வாகிகள் பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாரத் தலைவர் நக்கீரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஈவேரா சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஐயப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயந்தி, மேனாள் மாநில செயற்குழு உறுப்பினர் வீரசேகரன், மேனாள் நற்பணி தலைவர் அறிவழகன், வட்டாரத் செயலாளர் தேர்தல் ஆணையர் வேதமூர்த்தி, வட்டாரச் செயலாளராக சந்திரமோகன், வட்டாரப் பொருளாளர் யசோதா, வட்டார மகளிர் வலையமைப்பு தலைவர் கார்த்திகாராணி, செயலாளர் யோகப்பிரியா, பொருளாளர் மாலதி ஆகியோர் உரையாற்றினர்.

    கூட்டத்தில் வட்டார துணைத் தலைவர்கள் ஜெய்சங்கர், சாந்தி, துணைச் செயலாளர்கள் மார்க்ரெட் ஹேமலதா, தனலட்சுமி, அகஸ்டின் மகளிர் வலையமைப்பு துணைத்தலைவர்கள் சுபா, லட்சுமி, துணைச் செயலாளர்கள் தமிழ்ப்பிரியா, நல்லம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல் படுத்த வேண்டும். அகவிலைப் படியை உடனே வழங்க வேண்டும். உயர்கல்வி படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.

    நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊதி்யம் வழங்குவதற்கு தேவையான நிதியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.

    மத்திய அரசு நடைமுறையில் உள்ள கல்வியை மாநில அரசின் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தஞ்சாவூா் மாவட்டத்தில் பதிவேட்டை கொண்டு இறந்த வாக்காளா்களின் பெயரை நீக்க வேண்டும்.
    • 18 முதல் 19 வயது வரையுடைய வாக்காளா்களிடமிருந்து 28,894 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் தொடா்பாக அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், சமூக சீா்திருத்தத் துறை அரசுச் செயலருமான ஆபிரகாம் தலைமை தாங்கி பேசியதாவது :-

    வட்டம், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் இறப்பு பதிவேட்டைக் கொண்டு வாக்காளா் பட்டியலில் உள்ள இறந்த வாக்காளா்களின் பெயரை நீக்க வேண்டும்.

    மேலும், நவம்பா் 9 ஆம் தேதி முதல் டிசம்பா் 8 ஆம் தேதி வரை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் மீது டிசம்பா் 26 ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தோ்தல் சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட படிவங்கள் அனைத்தையும் நிலுவையில் இல்லாமல் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்த தோ்தல் படிவங்களை இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு அனைத்து அலுவலா்கள் நிலையிலும் ஆய்வு செய்து, தூய வாக்காளா் பட்டியல் என்ற இலக்கை அடைய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாவட்டத்தில் புதிய வாக்காளா்களைச் சோ்ப்பதற்கு 34,302 படிவங்கள், நீக்கம் செய்ய 23,807 படிவங்கள், திருத்தம் செய்ய 17,988 படிவங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்களில் 52,394 படிவங்களும், 18 முதல் 19 வயது வரையுடைய வாக்காளா்களிடமிருந்து 28,894 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

    இச்சிறப்பு கருக்க முறைத் திருத்தப் பணிகள் நிறைவு பெற்று ஜனவரி 5 ஆம் தேதி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) சுகபுத்ரா, மாநக ராட்சி ஆணையா்கள் சரவண குமாா் (தஞ்சாவூா்), செந்தில் முருகன் (கும்பகோணம்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரெங்கராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தேர்தல் வாக்குறுதிப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்திட வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும்.
    • பள்ளிகளில் சுகாதாரத்தை மேம்படுத்த முழு நேர தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.

    ராசிபுரம்:

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ராசிபுரம் ஒன்றிய நிர்வாகிகள் தேர்தல், ராசிபுரத்தில் உள்ள தனியார் நடுநிலைப் பள்ளியில் நடந்தது. ஒன்றிய செயலாளர் கதிரேசன், நாமகிரிப்பேட்டை முருகேசன் ஆகியோர் தேர்தலை நடத்தினர்.

    இதில் ஒன்றிய பொறுப்பாளர்களாக 21 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிறகு நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் குணவதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் லட்சுமி வரவேற்றார். மாவட்ட மகிளர் அணி அமைப்பாளர் பாரதி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சங்கர், மாநில பொருளாளர் முருக செல்வராசன், பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன், தணிக்கை குழு உறுப்பி னர் தண்டபாணி, நாமகி ரிப்பேட்டை முன்னாள் ஒன்றிய தலைவர் சிதம்பரம், இலக்கிய அணி அமைப்பாளர் ஜெயவேல் ஆகியோர் பேசினர்.

    இதில், தேர்தல் வாக்கு றுதிப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்திட வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் மற்றும் முழுநேர கணினி இயக்குபவர் நியமனம் செய்ய வேண்டும்.

    பள்ளிகளில் சுகாதா ரத்தை மேம்படுத்த முழு நேர தூய்மை பணியா ளர்களை நியமிக்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒன்றிய பொருளாளர் ஆரோக்ய மேரி நன்றி கூறினார்.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படது. தொடர்ந்து 1.1.2023-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டு படிவங்கள் கடந்த 8-ந்தேதி வரை வரை பெறப்பட்டன.
    • அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்து வருகிற ஜனவரி 5-ந்தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியிடும் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    சேலம்:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படது. தொடர்ந்து 1.1.2023-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டு படிவங்கள் கடந்த 8-ந்தேதி வரை வரை பெறப்பட்டன.

    அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்து வருகிற ஜனவரி 5-ந்தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியிடும் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் பணிக்காக நியமிக்கப்பட்ட மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா, மாவட்ட கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், அனைத்து உதவி பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் ஆகியோ ருடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்துக்காக பெறப்பட்ட படிவங்கள் குறித்தும், களப்பணி குறித்தும், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் மேல்த ணிக்கை செய்யப்பட்ட சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான படிவங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இந்த படிவங்கள் இறுதி செய்யப்பட்டு பிழையில்லா வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர்கள் விஷ்ணு வர்த்தினி, சரண்யா,

    சவும்யா, தணிகாஜலம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சரவணன், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்களார் பதிவு அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநில செயலாளர் அடையாறு பாஸ்கர் வெளியிட்டார்.
    • 4 சட்டமன்ற தொகுதியிலும் தலா 100 கொடிக்கம்பங்கள் கல்வெட்டுடன் நிறுவ வேண்டும் என்று கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் ஜக்காரியா தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் ராமநாதபுரத்தில் நடந்தது. இதில் ஏராளமானோர் போட்டியிட்டனர்.

    தற்போது முதற்கட்டமாக மாவட்டத்தில் நகரம் மற்றும் வட்டார அளவிலான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு ள்ளனர்.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளரும், ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளருமான அடையாறு பாஸ்கர் ராமநாதபுரத்தில் நகர் மற்றும் வட்டார தலை வர்களின் புதிய பட்டியலை வெளியிட்டார்.

    அதன்படி ராமநாதபுரம் நகர் தலைவராக கோபி, ராமேசுவரம் நகர் தலைவராக ராஜீவ் காந்தி, பரமக்குடி நகர் தலைவராக அஹமத் கபீர், கீழக்கரை நகர் தலைவராக அஜ்மல் கான் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    வட்டார அளவிலான தலைவர்களாக திருவா டானை வடக்கு தட்சணா மூர்த்தி, திருவாடானை தெற்கு கணேசன், ஆர்.எஸ்.மங்கலம் வடக்கு மனோகரன், ஆர்.எஸ்.மங்க லம் தெற்கு சுப்பிரமணியன், ராமநாதபுரம் சேகர், மண்ட பம் மேற்கு அன்வர்அலி.

    மண்டபம் கிழக்கு செல்லசாமி, திருப்புல்லாணி கிழக்கு சேதுபாண்டியன், திருப்புல்லாணி மேற்கு கந்தசாமி, முதுகுளத்தூர் கிழக்கு ராமர், முதுகுளத்தூர் மேற்கு புவனேஸ்வரன், கடலாடி கிழக்கு தனசேகரன், கடலாடி மேற்கு அப்துல் சத்தார், கடலாடி வடக்கு சுரேஷ் காந்தி, கமுதி தெற்கு கோவிந்தன், கமுதி வடக்கு ஆதி, பரமக்குடி மேற்கு சுப்பிரமணியன், பரமக்குடி கிழக்கு வேலுசாமி, நயினார் கோவில் கார்மேகம், போக லூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து அடையாறு பாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதியிலும் தலா 100 கொடிக்கம்பங்கள் கல்வெட்டுடன் நிறுவ வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதன்படி ராமநாதபுரம் தொகுதிக்கு முன்னாள் மாவட்ட தலைவர் செல்லதுரை அப்துல்லா, திருவாடானை தொகுதிக்கு கருமாணிக்கம் எம்.எல்.ஏ, முதுகுளத்தூர் தொகுதிக்கு மாவீரன் வேலுச்சாமி, பரமக்குடி தொகுதிக்கு செந்தாமரை கண்ணன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு அவர்கள் தலைமையில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பணி ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தொடங்கப்பட உள்ளது அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் ஜனவரி 15-ந்தேதிக்குள் குறிப்பிட்ட அளவில் கொடி கம்பங்கள் ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாட வேண்டும்.
    • வாக்குச்சாவடி முகவர் பட்டியல் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. மாநகர ஒன்றிய, பேரூர், பகுதி செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் இறைவன் தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகர் எம்.எல்.ஏ, எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் டிசம்பர் 19 பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடுவது, வாக்குச் சாவடி முகவர் பட்டியல் வழங்க வேண்டியது மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், து.செல்வம், மாவட்ட பொருளாளர் எல். ஜி. அண்ணா, மாவட்ட துணைச் செயலாளர்கள் மணிமாறன், புண்ணிய மூர்த்தி, கனகவள்ளி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • முகாம்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.
    • ஆதார் எண், கைபேசி எண் இணைக்காத வாக்காளர்கள் படிவம் 6-பி பூர்த்தி செய்தும் வழங்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் வசதிக்காக இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.

    நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) இந்த சிறப்பு முகாம்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு முகாமில் 2023 ஜனவரி 1-ம் தேதியன்று 18 வயது நிரம்பியவர்கள் அதாவது 2005 ஜனவரி 1-ம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் உள்ளவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் எண் 6ஐ அருகாமையில் உள்ள வாக்கு சாவடிகளில் பெற்று பூர்த்தி செய்து அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்திற்கான ஆவண நகல்களை இணைத்து தங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தினை படிவத்தில் ஒட்டி சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம்.

    மேலும் இறப்பு, நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு போன்ற காரணங்களின் அடிப்படையில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும், வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வகையான பிழை திருத்தங்கள் மேற்கொள்ள தொகுதி மாற்றம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, பெயர், உறவுமுறை, புகைப்படம் மாற்றம் செய்ய, காணாமல் போன வாக்காளர் அட்டைக்கு பதிலாக மாற்று அட்டை பெற படிவம் 8-ஐ பூர்த்தி செய்தல், இதுவரை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண், கைபேசி எண் இணைக்காத வாக்காளர்கள் படிவம் 6-பி பூர்த்தி செய்தும் வழங்கலாம்.

    பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

    அலுவலக வேலை நாட்களில் தாசில்தார் அலுவலக தேர்தல் பிரிவில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த இரண்டு நாட்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் என சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • படிவங்களை பூர்த்தி செய்து நேரடியாக அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சைமாவட்ட கலெக்டர் தினேஷ்பொ ன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரை களின் படி கடந்த 12.11.2022 மற்றும் 13.11.2022 ஆகிய இரண்டு நாட்களில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் காலை 09.30 மணி மாலை 5.30 மணி வரை நடைபெற்றது.

    இச்சிறப்பு முகாம்களில் 15704 படிவம் 6 ம், 2122 படிவம் 7 மற்றும் 5441 படிவம் 8 ம் ஆக கூடுதலாக 23267 படிவங்கள் பெறப்பட்டது.

    மேலும், ஆன்லைன் மூலமாக 1205 படிவம் 6-ம், 3187 படிவம் 7 மற்றும் 1903 படிவம் 8-ம் ஆக கூடுதலாக 6295 படிவங்கள் ஆன்லைன் மூலமாக பெறப்பட்டது. இச்சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளத் தவறிய பொது மக்கள் எதிர்வரும் 26 (சனிக் கிழமை) மற்றும் 27 ஆகிய தேதிகளில் (ஞாயிற்று கிழமை) நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மேலும், 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களுக்கு உரிய படிவங்களை பூர்த்தி செய்து நேரடியாக அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம், NVSP Portal என்ற இணையதளம் மற்றும் Voters Helpline என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுகளும் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
    • வார்டு குழு உறுப்பினர்கள் பட்டியலை உடனே வெளியிட வேண்டும்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மாநகராட்சி உறுப்பினர்கள் அவசர கூட்டம் பழைய நகராட்சி அலுவலகம் படேல் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கினார்.

    துணை மேயர் தமிழழகன், ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுகளும் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெறப்பட்டு, மாவட்ட அரசிதழில் பிரசுரமாக வெளியிடப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து 48 வார்டுகளில் உருவாக்க ப்பட்ட 192 வார்டு பகுதிகளுக்கு அரசாணையில் தெரிவித்துள்ளபடி வார்டு குழு உறுப்பினர்களை நியமனம் செய்ய பட்டியல் தயாரிக்க அனுமதிக்க ப்பட்டுள்ளது என்ற தீர்மானம் வாசிக்கப்ப ட்டது.

    அப்போது குறுக்கிட்ட 19 மற்றும் 33-வது வார்டு அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் ஆதிலட்சுமி, கவுசல்யா ஆகியோர் தங்களது வார்டில், வார்டு குழு உறுப்பினர்கள் பட்டியல் வழங்கியுள்ளதை அங்கீகரிக்க வேண்டும் எனக்கூறி வாக்குவாதம் செய்தனர்.

    ஆனால் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறி மேயர், துணைமேயர் எழுந்து சென்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த ஆதிலட்சுமி, கவுசல்யா தங்களுக்கு உரிய விளக்கத்தை மாநகராட்சி மன்றம் தெரிவிக்காததாலும், வார்டு குழு உறுப்பினர்கள் பட்டியலை உடனே வெளியிடக்கோரியும் கூட்டம் நடைபெற்ற படேல் அரங்கில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த 19,33-வது வார்டு கவுன்சிலர்களின் ஆதரவாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் மாநகராட்சி மேயர், துணை மேயர் ஆகியோரிடம் வார்டு குழு பட்டியல் விவரத்தை கேட்டறிந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் 48 வார்டுகளில் உள்ள 192 வார்டு குழு உறுப்பினர்கள் பட்டியலை நாளை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதையடு த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • போராட்ட குழுவினர் நீக்கப்பட்ட 4 தொழிலாளர்களை உடனடியாக பட்டியலில் சேர்க்க வேண்டும்.
    • இச்சம்பவம் குறித்து கிராம முக்கியஸ்தர்கள் கோட்ட மேலாளரை நேரில் சந்திக்குமாறு தெரிவித்தனர்.

    மெலட்டூர்:

    தேவராயன்பேட்டை அருகே உள்ள பொன்மா ன்மேய்ந்த நல்லூர் கிராமத்தில் இயங்கி வரும் அரசு கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் குமார், காமராஜ், உள்பட 4 தொழிலாளர்கள் திடீரென பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

    மேலும் ஊழியர்கள் வேலை பார்த்த கூலியும் நிறுத்தப்ப ட்டுள்ளது.

    இதனை கண்டித்து பாதிக்கப்பட்ட தொழிலா ளர்கள் சார்பில் தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி மனோகர் தலைமையில் தேவராய ன்பேட்டை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாரதி, தி.மு.க ஒன்றிய பிரதிநிதி குமார் உள்பட கிராமமக்கள் பலர் அரசு கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    தகவல் அறிந்த நுகர்பொருள் வாணிப கழக கொள்முதல் அலுவலர் சுரேஷ்குமார், பாபநாசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்ட குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது போராட்ட குழுவினர் நீக்கப்பட்ட 4 தொழிலாளர்களை உடனடியாக பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டு மெனவும், அவர்களுக்கு வழங்க வேண்டி கூலி நிலுவை தொகையயையும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

    அதிகாரிகள் தரப்பில் இருந்து பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் சேர்ப்பது குறித்து கோட்ட மேலாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் இச்சம்பவும் குறித்து கிராம முக்கியஸ்தர்கள் கோட்ட மேலாளரை நேரில் சந்திக்குமாறு தெரிவித்ததை போராட்ட குழுவினர் ஏற்றுகொண்டு காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ×