என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Lightning"
- மதுரை திருப்பரங்குன்றம் அருகே மின்னல் தாக்கி இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
- இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
திருப்பரங்குன்றம் அருகேயுள்ள கொம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி தேவிகா(வயது38). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
மதுரையில் நேற்று மாலை வெப்ப சலனம் காரணமாக இடி, மின்னலுடன் மழை பெய்தது. கொம்பாடி பகுதியில் மழை பெய்தபோது கண்மாயில் துணி துவைத்துக் கொண்டிருந்த தேவிகா அவசர அவசரமாக வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது இடி தாக்கியதில் தேவிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெருங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 11 கோவில்களில் இருந்து சுவாமிகள் சிறப்பு அபிஷேகத்திற்கு பின்னர் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் எழுந்தருளினர்.
- தஞ்சையில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் முத்துப்பல்லக்கு வீதி உலா நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான முத்து பல்லக்கு திருவிழா நேற்று தொடங்கியது.
தஞ்சை சின்ன அரிசிக்காரத்தெருவில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் இருந்து விநாயகர், முருகன், மானம்புச்சாவடி விஜயமண்டப தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோவிலில் இருந்து விநாயகர், முருகப்பெரு மான், குறிச்சி தெருவில் உள்ள முருகன், மேல அலங்கம் சுப்ரமணிய சாமி கோவிலில் உள்ள முருகர், கீழவாசல் வெள்ளை விநாயகர், உஜ்ஜையினி காளி கோவிலில் இருந்து கல்யாண கணபதி, தெற்கு ராஜ வீதி கமலரத்தின விநாயகர், காமராஜர் காய்கறி மார்க்கெட் செல்வ விநாயகர், வடக்கு வாசல் வட பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து முருகர், விநாயகர், மேல வெளி ரெட்டிப்பாளையம் சாலை வெற்றி முருகன் உள்பட 11 கோவில்களில் இருந்து சுவாமிகள் சிறப்பு அபிஷேகத்திற்கு பின்னர் அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் எழுந்தருளினர்.பல்லக்குகள் பூக்களாலும், பல வண்ண காகிதங்களாலும், மின் விளக்குகளாலும் கலைநயத்துடன் வடிவ மைக்கப்பட்டு இருந்தன.
பல்லக்குகள் அனைத்தும் தெற்கு வீதி, கீழவீதி ,மேல வீதி, வடக்கு வீதி ஆகிய 4 ராஜ வீதிகளிலும் மேள தாளங்கள் முழங்க வலம் வந்தன.
அப்போது தஞ்சையில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது.
இருந்தாலும் மழையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முத்து பல்லுக்கு வீதி உலாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இரவில் தொடங்கிய வீதி உலா விடிய விடிய இன்று காலை வரை நடைபெற்றது.
வீதி உலா முடிந்த பின்னர் மீண்டும் பல்லக்குகளில் இருந்து
சுவாமிகள் தங்களது கோவில்களுக்கு சென்ற டைந்தன.
- இரவு 7 மணி அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
- பூதலூரில் அதிகபட்சமாக 102.60 மி.மீ. மழை பதிவானது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் சுட்டெரித்து வந்தது.
பகல் முழுவதும் அடிக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் நீடித்தது.
இந்த நிலையில் தஞ்சையில் நேற்று பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. மாலையில் வானத்தில் கரு மேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.
7 மணி அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.
ஆரம்பத்தில் லேசாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக மாறியது.
தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டியது.
தஞ்சை அருகே பூதலூர் ,திருக்காட்டுப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
மாவட்டத்தில் பூதலூரில் அதிகபட்சமாக 102.60 மி.மீ. மழை பதிவானது.
இதேபோல் வல்லம், குருங்குளம், ஒரத்தநாடு, கும்பகோணம், திருவிடை மருதூர், பட்டுகோட்டை, அதிராம்பட்டினம் , மதுக்கூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடைவிடாமல் மழை பெய்தது.
ஒரே நாளில் மாவட்டத்தில் 517.40 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.
இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு:-
பூதலூர் -102.60, திருக்காட்டுப்பள்ளி -69.20, நெய்வாசல் தென்பாதி-39.20, கும்பகோணம் -35.60, திருவிடைமருதூர் -33.60, குருங்குளம் -30.60, வல்லம் -23, தஞ்சாவூர் -19.
- தீ வேகமாக பரவியதால் உடனடியாக செவ்வாய்ப் பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
- அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
சேலம்:
சேலம் எருமாபாளையம் ராமானுஜர் கோவில் செல்லும் வழியில் ஜெயகோபால் என்பவருக்கு சொந்தமான காட்டன்மில் உள்ளது. இந்த மில்லில் பஞ்சு மற்றும் நூல் குவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு சேலத்தில் தொடர் மழை பெய்தபோது மின்னல் மற்றும் பயங்கர சத்தத்துடன் இடி இடித்தது. அப்போது காட்டன் மில் மொட்டை மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி. அவுட்டர் மிஷின் மீது மின்னல் தாக்கியதில், அதில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு, மில்லில் உள்பகுதியில் இருந்த பால்சீலிங் தீப்பி டித்தது. இந்த தீ குபு, குபுவென எரிய தொடங்கியது. இதனால் ஆலை முழுவதும் கரும்புகை மூட்டம் நிலவியது.
இதை பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் முடியவில்லை. தீ வேகமாக பரவியதால் உடனடியாக செவ்வாய்ப் பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
உதவி மாவட்ட அதிகாரி சிவகுமார், தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்ட காரணத்தினால், தீ ஆலையில் உள்ள பஞ்சு மற்றும் நூல்களில் பரவாமல் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
- மாதேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான கூரை வீடு மீது மின்னல் தாக்கி வீடு முழுவதும் எரிந்து போனது.
- வீட்டின் உரிமையாளர்கள் அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் வேலை பார்த்து வந்ததால் உயிர் தப்பினார்கள்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திருக்குன்றம் கிராமத்தில் நேற்று இடி மின்னலுடன் பெய்ந்த கனமழையால் காற்று கொட்டாய் பகுதியில் வசிக்கும் மாதேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான கூரை வீடு மீது மின்னல் தாக்கி வீடு முழுவதும் எரிந்து போனது . வீட்டின் உரிமையாளர்கள் அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் வேலை பார்த்து வந்ததால் உயிர் தப்பினார்கள். இந்த தீ விபத்தில் ஒரு லட்சம் பணம் 4 பவுன் நகை ,நிலத்தின் பத்திரம் மோட்டார் சைக்கிள், சைக்கிள், வெங்காய மூட்டைகள் அனைத்தும் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு2 லட்சத்திற்கு மேல் எனக் கூறப்படுகிறது. இன்று காலை சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. உதய சூரியன் எரிந்து போன வீட்டை நேரில் பார்வையிட்டு வீட்டின் உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களுக்கு அரசு மூலம் புதிய வீடு கட்டித் தருவதாக உறுதி அளித்தார். பின்னர் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணை சேர்மன் அன்புமணி மாறன் ,தாசில்தார் இந்திரா, சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசி பாண்டியன் ,துணைத் தலைவர் தன பாலகிருஷ்ணன், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள்மொழி ஆகியோர் உடன் இருந்தனர்.
- கனமழையால் தஞ்சை சீத்தா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கியது.
- தொடர்ந்து 4 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் பருவ கால மாற்றத்தின் காரணமாக கடந்த 2 மாதங்களாக மழை பெய்வதும், வெயில் அடிப்பதுமாக மாறி மாறி பருவநிலை நிலவி வருகிறது. கடந்த மாதத்தில் பல நாட்கள் மழை பெய்தது.
ஆனால் கடந்த மாத இறுதியில் இருந்து அக்னி நட்சத்திரம் போல் வெயில் சுட்டெரித்து வந்தது.
கோடை காலத்தை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதி அடைந்தனர்.
கடந்த ஒரு வாரமாகவே 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தியது. பகலில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில் தஞ்சையில் நேற்று பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்து வந்தது.
இரவு 7 மணி அளவில் திடீரென சாரல் மழை பொழிந்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.
நள்ளிரவு 12 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் இடி முழங்கியது.
அவ்வப்போது மின்னல் அடித்துக் கொண்டிருந்தது.
அடுத்த சில நிமிடங்களில் மழை பெய்ய தொடங்கியது.
ஆரம்பத்தில் மிதமான அளவில் பெய்து வந்த மழை நேரம் செல்ல செல்ல அதிகரிக்க தொடங்கியது.
கனமழையாக மாறி வெளுத்து வாங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர்ந்து 2 மணி நேரம் மழை நீடித்தது.
அதன் பின்னர் இன்று அதிகாலை 4 மணியில் இருந்து மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.
தொடர்ந்து இரண்டு மணி நேரம் அதாவது காலை 6 மணி வரை மிதமான அளவில் மழை பெய்தது.
இதன் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது.
தொடர்ந்து பெய்த கனமழையால் தஞ்சை சீத்தா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கியது.
மேலும் வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்து கொண்டது.
இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர அவதி அடைந்தனர்.
தஞ்சை சாந்த பிள்ளைக்கேட் ரெயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்கியது.
இதனால் அந்த வழியை கடந்து பூக்கார தெரு, விளாருக்கு செல்லும் பொதுமக்கள் மாற்று பாதையில் சென்றனர்.
சிலர் தண்ணீரை கடந்தும் சென்றனர்.
தஞ்சை மாவட்டம் பூதலூரில் நள்ளிரவில் இருந்து இன்று காலை வரை கனமழை கொட்டி தீர்த்தது.
சாலை, தெருக்களில் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக பூதலூரில் தான் 167.60 மி.மீ. மழை அளவு பதிவானது.
இதேபோல் வல்லம், செங்கிப்பட்டி, திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், வெட்டிக்காடு, ஒரத்தநாடு, அய்யம்பேட்டை, பேராவூரணி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
இதற்கிடையே தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தொடர்ந்து 4 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மீண்டும் தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு வருமாறு (மி.மீ.) :-
பூதலூர்-167.69, கல்லணை- 155, தஞ்சாவூர் -122, நெய்வாசல் தென்பாதி -118.20, வல்லம் -117, திருக்காட்டுப்பள்ளி- 89.40, பட்டுக்கோட்டை -88, ஒரத்தநாடு- 41.60, மதுக்கூர்-36, வெட்டிக்காடு- 36.
- களக்காடு பகுதியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் மழை பெய்தது.
- இறந்த மாட்டின் மதிப்பு ரூ 70 ஆயிரம் ஆகும்.
களக்காடு:
திருக்குறுங்குடி அருகே உள்ள செங்குளகுறிச்சி வடக்குத் தெருவை சேர்ந்தவர் சுந்தரபாண்டி (வயது 45). தொழிலாளி. இவர் மாடுகளும் வளர்த்து வருகிறார். நேற்று மாலை இவர் தனது வீடு அருகே உள்ள வேப்ப மரத்தில் மாடுகளை கட்டி போட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. மாடுகள் கட்டி போடப்பட்டிருந்த வேப்பமரத்தில் மின்னல் தாக்கியது.
இதில் வேப்பமரம் சேதமடைந்தது. மேலும் மரத்தில் கட்டி போடப்பட்டிருந்த ஒரு பசு மாடும், கோழியும் பலியானது. இறந்த மாட்டின் மதிப்பு ரூ 70 ஆயிரம் ஆகும். மின்னல் தாக்கிய போது, சுந்தரபாண்டி தனது குடும்பத்தினர்களுடன் வெளியே நின்று கொண்டிருந்தார்.
மின்னல் தாக்கிய போது பயங்கர சத்தத்துடன் அதிர்வும் ஏற்பட்டதால் அவர்கள் வீட்டுக்குள் ஓடி விட்டனர். பலியான பசு மாட்டிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சுந்தரபாண்டி வலியுறுத்தியுள்ளார்.
- சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக மேதினிராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
- பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.
ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். பலியான பல்ராம் யாதவ் (56), மன்மதி தேவி (45) ஆகியோர் வயலில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, இடி தாக்கியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக மேதினிராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று துணை ஆணையர் ஆஞ்சநேயுலு டோடே தெரிவித்தார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் கடந்த 2 மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் 3 மணிக்கு ஆயக்காரன்புலம் செட்டியார் குத்தகையில் திடீரென மழை பெய்தது.
அப்பகுதியில் ஒரு சில கூரை வீடுகளில் மின்னல் தாக்கியது. அப்போது வீட்டில் தூங்கி இருந்த வீரமணி மற்றும் சந்திரா இருவரும் காயம் ஏற்பட்டது. மேலும் அடுத்தடுத்த வீடுகளில் தூங்கி கொண்டிருந்த 12 பேர் லேசான காயம் அடைந் தனர்.
மின்னல் தாக்கிய 14 பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க பட்டனர் மின்னல் தாக்கியதில் வீடுகளில் இருந்த மிக்சி மற்றும் டி.வி. உள்ளிட்ட மின்சார பொருட்கள் சேதம் அடைந்தன.
இதேபோல் தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் இன்று அதிகாலை 4 மணியளவில் மழை பெய்தது. மேலும் மதுக்கூர் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் லேசான மழை பெய்தது.
கடந்த 2 மாதங்களாக வெயிலில் தவித்து வந்த மககள், திடீரென பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். மழையால் அப்பகுதியில் இதமான சீதோஷ்ண நிலை நிலவியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை கொட்டியது. மாவட்டத்தில் பவானி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் இதேபோல் சத்தியமங்கலம் பகுதியிலும் நள்ளிரவில் கன மழை கொட்டியது.
இந்த திடீர் மழையால் ரோடுகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் கோபி, கவுந்தப்பாடி மற்றும் கொடிவேரி, பெரும்பள்ளம், குண்டேரி பள்ளம் அணைப்பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டியது.
இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
பவானி- 42.
சத்தியமங்கலம்- 26.
கோபி- 21.
கவுந்தப்பாடி- 19.2.
கொடிவேரி அணை-15.
அணை- 18.
அணை- 12.
அணை- 11.8.
எலந்தகுட்டை மேடு-11.
பவானிசாகர்- 7.
நம்பியூர்- 6.
பு.புளியம்பட்டி- 3.5.
சிவகிரி- 2.2. #heavyrain
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு கடலூர் நகர பகுதியில் லேசான மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. இடியுடன் மழை பெய்ததால் நகரின் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. கடலூர், திருப்பாதிரிப்புலியூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதியில் மழைநீர் செல்ல போதிய வசதி இல்லாததால் மழைநீரும், சாக்கடை நீரும் சேர்ந்து தெப்பக்குளம்போல் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதியில் துர் நாற்றம் வீசுகிறது. சேறும்- சகதியுமாக காட்சி அளித்தது.
கடலூர் நகர் பகுதியில் இன்று காலையும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
சிதம்பரம், குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, காட்டுமன்னார்கோவில் போன்ற இடங்களில் இன்று காலை முதலே மழை பெய்ய தொடங்கியது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதியடைந் தனர். அவர்கள் குடை பிடித்த படியும், மழையில் நனைந்தும் பள்ளி- கல்லூரிக்கு சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, களமருதூர், சேந்த நாடு போன்ற பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது.
அதுபோல மரக்காணம் அதனை சுற்று பகுதிகளிலும் இன்று காலை மழை பெய்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்