search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbakonam"

    கும்பகோணம் அருகே உள்ள சிவன் கோவிலில் 47 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போன 7 ஐம்பொன் சிலைகள் தொடர்பாக பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #Ponmanickavel
    சென்னை:

    கும்பகோணம் அருகே உள்ள சிவன் கோவிலில் 47 ஆண்டுகளுக்கு முன்பு விலை உயர்ந்த 7 ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது. இதுதொடர்பாக தற்போது சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கும்பகோணம் அருகே தன்டன்தோட்டம் என்ற கிராமத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான சோழர்காலத்தில் கட்டப்பட்ட நடனபுரிஷ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12-5-1971-ல் கோவில் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு ரூ.60 கோடி மதிப்பிலான 5 ஐம்பொன் சாமி சிலைகள் திருட்டு போய்விட்டது.

    போலீசில் புகார் கொடுத்தும் கடந்த 47 வருடங்களாக உரிய வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதேபோல 1972-ல் அதேகோவிலில் ரூ.50 கோடி மதிப்புள்ள நடராஜர் ஐம்பொன் சிலையும், கொலு அம்மன் ஐம்பொன் சிலையும் திருடப்பட்டது.

    இதுதொடர்பாகவும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையிலும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.



    இதுபற்றிய தகவல் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கிடைத்தது. உடனடியாக சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் போலீஸ் படையுடன் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பிறகு உடனடியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    திருட்டு போன சிலைகளில் நடராஜர் சிலை இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றிற்கு விற்கப்பட்டு, அங்கிருந்து அமெரிக்காவுக்கு கடத்தி செல்லப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    7 சிலைகள் திருட்டு போன பிறகு இந்த கோவிலில் மீதமுள்ள 17 சிலைகள் தற்போது அதேபகுதியில் உப்பிலியப்பன் கோவிலில் பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள சிலைகளில் சில உண்மையான சிலைகள் திருடப்பட்டு அதற்கு பதில் போலியான சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளது.

    இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றி விசாரணை நடத்தி தேடி வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #Ponmanickavel
    கும்பகோணத்தில் அடுத்தடுத்த 3 கடைகளில் ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் சுவாமிமலை ரோட்டில் உள்ள மேலக்காவிரியில் ஒரு காம்பளக்ஸ் உள்ளது. இங்கு 4 கடைகள் உள்ளன. இந்த கடைகளை இரவு வியாபாரிகள் பூட்டி விட்டுசென்று விட்டனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு காம்பளசுக்கு வந்த கொள்ளையர்கள் 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டனர். அவர்கள் ஜெய் லாபுதீன் என்பவரின் டிராவல்ஸ் நிறுவனத்துக்குள் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.23 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்தனர். மேலும் பைசல் என்பவரது செல்போன் கடையில் 5 செல்போன்கள் மற்றும் பொருட்களை திருடியுள்ளனர். மேலும் பால்கடை, எலக்ட்ரிக்கல் கடை பூட்டையும் உடைத்துளனர். மேலும் அடுத்த காம்பளக்சில் உள்ள ரபீக் மளிகை கடையில் ரூ.12 ஆயிரத்தை திருடினர். 3 கடைகளிலும் கொள்ளை போனவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் என்று கூறப்படுகிறது.

    இந்த துணிகர கொள்ளை குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 கடைகளில் திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அடுத்தடுத்த கடைகளில் கொள்ளை நடந்தது கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கும்பகோணத்தில் வாய்க்காலில் சைக்கிளுடன் தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கவர தெருவை சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 32). இவர் கும்பகோணம் பகுதியில் உள்ள ஒரு இனிப்பு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் பாலகிருஷ்ணனுக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று இரவு 7 மணியளவில் பாலகிருஷ்ணன் சைக்கிளில் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். அப்போது கும்பகோணம் உள்ளூர் வாய்க்கால் அருகே சென்ற போது திடீரென அவருக்கு வலிப்பு நோய் வந்தது. இதனால் அவர் வாய்க்காலில் அருகே சைக்கிளுடன் திடீரென தவறி விழுந்தார்.

    இதில் சைக்கிளுடன் வாய்க்கால் தண்ணீரில் விழுந்த பாலகிருஷ்ணன் சிறிதுநேரத்தில் மூழ்கி பலியானார்.

    இன்று காலையில் வாய்க்காலில் பாலகிருஷ்ணன் உடல் மிதப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி கும்பகோணம் மேற்கு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வாய்க்காலில் மிதந்த பாலகிருஷ்ணன் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தண்ணீரில் மூழ்கி பலியான பாலகிருஷ்ணனுக்கு தீபலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    கும்பகோணத்தில் வடமாநில பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 4 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. #GoondasAct
    தஞ்சாவூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கடந்த 2-ந் தேதி வங்கி பயிற்சி பணிக்காக மாவட்டம் கும்பகோணம் ரெயில் நிலையம் வந்தார்.

    அப்போது ரெயில் நிலையம் அருகே வந்த ஒரு ஆட்டோவில் இளம்பெண் ஏறி, தான் செல்ல வேண்டிய ஓட்டலில் இறங்கி விடுமாறு கூறினார்.

    ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் அந்த பெண் சொன்ன முகவரிக்கு செல்லாமல் வேறு பாதையில் ஆட்டோவை ஓட்டி சென்றார். இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டதால் ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணை கும்பகோணம் அருகே உள்ள செட்டிமண்டபம் பைபாஸ் சாலையில் இறக்கி விட்டு சென்றுவிட்டார்.

    நள்ளிரவில் தனியாக ரோட்டில் நடந்து சென்ற அந்த இளம்பெண்ணை 4 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக அந்த பெண் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தினேஷ் (வயது 24), மோதிலால் தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் வசந்த் (21), மூப்பனார் நகரை சேர்ந்த சிவாஜி மகன் புருஷோத்தமன் (19), ஹலிமா நகரை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் அன்பரசன் (19) ஆகிய 4 பேர், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரைக்கு பரிந்துரை செய்தார்.

    இதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள வசந்த், தினேஷ்குமார், அன்பரசன் மற்றும் புருஷோத்தமன் ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.

    இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 4 வாலிபர்களிடம் அதன் நகலை போலீசார் வழங்கினர். #GoondasAct
    கும்பகோணம் ஆசிரியை காரில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் இந்திராகாந்தி சாலை அண்ணாநகரை சேர்ந்தவர் கிரிராஜன். இவரது மனைவி மீரா. கிரிராஜன் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், 4 மகள்கள் உள்ளனர்.

    மூத்த மகள் காயத்ரி (வயது31). இவர் கும்பகோணம் எல்.பி.எஸ் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மாலை காயத்ரி பள்ளி முடிந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பினார். அப்போது பள்ளியிலிருந்து மகாமகம் குளத்தின் வடகிழக்கு மூலை நுழைவு சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த கார் காயத்ரியின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் காயத்ரி கீழே விழுந்ததும் அவரை காரில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்தனர். இதில் திருச்சி- திண்டுக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள கேமராவை ஆய்வு செய்யும் போது அதில் ஆசிரியையை காரில் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து பள்ளி ஆசிரியையை மீட்க தனிப்படை பிரிவு போலீசார் திண்டுக்கல் விரைந்துள்ளனர்.

    கும்பகோணம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தை அடுத்த மணகுடியை சேர்ந்தவர் பாண்டியன், விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் பானுபிரியா (வயது 25).

    இவருக்கு பெற்றோர் மாப்பிளை பார்த்து வந்தனர். சிலர் வந்து பெண் கேட்டும் திருமணம் நிச்சயமாகவில்லை. இதனால் பாண்டியனும், அவரது மனைவியும் வேதனை அடைந்தனர். அவர்கள் இது தொடர்பாக நேற்று இரவு பேசிக் கொண்டு இருந்தனர். அதனை பானுபிரியா கேட்டதும் தனக்கு திருமணமாகாதது பெற்றோருக்கு மிகுந்த கஷ்டத்தை கொடுப்பதாக எண்ணி மனமுடைந்தார். அவர் எலி மருந்தை தின்று விட்டு படுத்து கொண்டார். இன்று காலை பானுபிரியா எலி மருந்தை தின்றது தெரியவந்தது. அவரை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடலை வீட்டுக்கு எடுத்து சென்றனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் அமையாததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மனகுடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கும்பகோணம், நாகேஸ்வரன் கோவிலில் ஐப்பசி மாத கடைமுழுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. காவிரியில் திரளான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
    ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30-ந் தேதி காவிரி ஆற்றில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பது வழக்கம். மயிலாடுதுறை துலா கட்டம், கும்பகோணம் பகவத் படித்துறை, ராமேஸ்வரம் தீர்த்த கட்டம் ஆகிய 3 இடங்களில் நடைபெறும் இத்தகைய கடைமுழுக்கு தீர்த்தவாரி புகழ்பெற்றது. சிறப்பு பெற்ற ஐப்பசி மாத கடைமுழுக்கு தீர்த்தவாரி நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி நாகேஸ்வரன் கோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், பெரியநாயகி அம்மன், நாகேஸ்வர சாமி, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

    பின்னர் பகல் 12 மணிக்கு காவிரி ஆற்றின் பகவத் படித்துறையில் அஸ்திர தேவருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

    இதை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி மண்டபத்தில் வைக்கப்பட்டு, இரவு மின்னொளி அலங்காரத்தில் வீதிஉலாவாக வந்து கோவிலை சென்றடைந்தது. 
    கும்பகோணத்தில் டாஸ்மாக் கடையில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே தேப்பெருமாள் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல்காதீர். இவரது மகன் சேட்டு என்கிற கமல் பாட்ஷா.

    நேற்று இரவு 10 மணிக்கு கமல்பாட்ஷா கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். அப்போது ஊழியர்கள் கடையை அடைத்து விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த கமல்பாட்ஷா டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் மது கேட்டு கத்தியை காட்டி மிரட்டி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் தர்மன் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கமல் பாட்ஷாவை கைது செய்தனர்.

    கும்பகோணத்தில் பதுக்கி வைத்திருந்த 3888 மதுபாட்டில்கள் மற்றும் 55 கேன்களில் இருந்த 1925 லிட்டர் எரிசாராயம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே மணஞ்சேரி பகுதியில் எரிசாராயம்- மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு ரகசியமாக விற்கப்படுவதாக கும்பகோணம் மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் மதுவிலக்கு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சரசுவதி, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் மணஞ்சேரி பகுதிக்கு சென்று கணகாணித்தனர்.

    அப்போது பாதிகட்டப்பட்ட நிலையில் இருந்த ஒரு வீட்டில் சிலர் செல்வதும், வருவதுமாக இருந்தனர் இதனால் சந்தேகமடைந்த போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசார் வருவதை கண்ட ஒரு கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீசார் அங்கிருந்த பொருட்களை சோதனை செய்தனர். இதில் அட்டை பெட்டிகளில் இருந்த 3888 மதுபாட்டில்கள், 55 கேன்களில் இருந்த 1925 லிட்டர் எரிசாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். மேலும் அருகே நிறுத்தியிருந்த ஒரு டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

     


    இதுகுறித்து மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் இது தொடர்பாக அதேபகுதியை சேர்ந்த சாராய வியாபாரியான பெரியவன் என்கிற முருகன், அருண்பாண்டியன், ஆனந்த், மணிகண்டன், பாரதி, மற்றொரு முருகன் ஆகிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கும்பகோணத்தில் மதுகுடிக்க பணம் கேட்டு காவலாளிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம், நாகேஸ்வரன் வடக்குவீதியில் ஒரு நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு செக்யூரிட்டியாக அருண்ராஜ் (வயது 40) மற்றும் கலியமூர்த்தி (45) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று நகைக்கடைக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் 2 மர்ம நபர்கள் மது அருந்தி விட்டு அருண்ராஜ் மற்றும் கலியமூர்த்தியிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் இவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து அருண்ராஜ் மற்றும் கலியமூர்த்தி ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர். பலத்த காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைக்கடை பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கும்பகோணம் அருகே டி.வி.பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் கவரத் தெருவை சேர்ந்தவர் யோகேஸ்வரி (வயது 13). அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 17-ந்தேதி யோகேஸ்வரி வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் அன்று இரவு முழுவதும் யோகேஸ்வரி மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதையடுத்து நேற்று காலை பெற்றோரிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் யோகேஸ்வரி கிடைக்கவில்லை.

    இது குறித்து கும்பகோணம் தாலுக்கா போலீசில் யோகேஸ்வரி பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.

    கும்பகோணத்தில் பழக்கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம், மாதுளம் பேட்டை எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 45). இவர் கும்பேஸ்வரன் கோவில் வாசல் முன்பு பழக்கடை வைத்துள்ளார்.

    நேற்று அரவிந்தன் வழக்கம் போல் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் இன்று காலை கடையை அரவிந்தன் திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அரவிந்தன் கடைக்கு உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையின் கள்ளாபெட்டி திறக்கப்பட்டு அதில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அரவிந்தன் கும்பகோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி கேமராவை சோதனை செய்தனர். அப்போது கேமராவை மேல்புறமாக திருப்பி வைத்ததும், கடையில் உள்ளே இருந்த கம்யூடரின் கார்ட் டிஸ்கை கொள்ளையர்கள் எடுத்து சென்றதும் தெரியவந்தது.

    பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×