search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணத்தில் பரபரப்பு - அடுத்தடுத்த 3 கடைகளில் ரூ.2 லட்சம் கொள்ளை
    X

    கும்பகோணத்தில் பரபரப்பு - அடுத்தடுத்த 3 கடைகளில் ரூ.2 லட்சம் கொள்ளை

    கும்பகோணத்தில் அடுத்தடுத்த 3 கடைகளில் ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் சுவாமிமலை ரோட்டில் உள்ள மேலக்காவிரியில் ஒரு காம்பளக்ஸ் உள்ளது. இங்கு 4 கடைகள் உள்ளன. இந்த கடைகளை இரவு வியாபாரிகள் பூட்டி விட்டுசென்று விட்டனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு காம்பளசுக்கு வந்த கொள்ளையர்கள் 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டனர். அவர்கள் ஜெய் லாபுதீன் என்பவரின் டிராவல்ஸ் நிறுவனத்துக்குள் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.23 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்தனர். மேலும் பைசல் என்பவரது செல்போன் கடையில் 5 செல்போன்கள் மற்றும் பொருட்களை திருடியுள்ளனர். மேலும் பால்கடை, எலக்ட்ரிக்கல் கடை பூட்டையும் உடைத்துளனர். மேலும் அடுத்த காம்பளக்சில் உள்ள ரபீக் மளிகை கடையில் ரூ.12 ஆயிரத்தை திருடினர். 3 கடைகளிலும் கொள்ளை போனவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் என்று கூறப்படுகிறது.

    இந்த துணிகர கொள்ளை குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 கடைகளில் திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அடுத்தடுத்த கடைகளில் கொள்ளை நடந்தது கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×