search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kidnapped"

    சேலத்தில் 2 மாணவிகள் கடத்தப்பட்டது குறித்து வாலிபர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.
    கொண்டலாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தாதயங்கார் பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது பேத்தி சவுமியா (வயது 17). இவர் தனது தாத்தா பழனிசாமி வீட்டில் தங்கியிருந்து பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு சேலம் அம்மாப்பேட்டையில் அருகே தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 

    கடந்த 28-ந்தேதி கல்லூரிக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி விட்டு சவுமியா வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் மகளை கண்டுபிடிக்க முடியாததால் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

    அந்த புகாரில் சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சின்ராஜ் திருமண ஆசைவார்த்தை கூறி எங்களது மகளை கடத்திச் சென்றதாகவும், இதற்கு உடந்தையாக செல்வகுமார் இருந்ததாகவும் சந்தேகம் உள்ளது. அவர்களை கைது செய்து மகளை மீட்டு தரவேண்டும் என கூறியிருந்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    சேலம் போடிநாயக்கன் பட்டி சிவைகார்டன் பகுதியை சேர்ந்தவர் யாதுன் நாதன். இவரது மகள் பிரதீபா(15), இவர் 3 ரோடு பகுதியில் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 9-ந்தேதி பள்ளிக்கு சென்ற பிரதீபா அதன் பிறகு வீட்டிற்கு திரும்பவில்லை. 

    இது குறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதில், ரெட்டியூர் பகுதியை சேர்ந்த சித்து குமார் என்பவர் திருமணம் செய்வதாக கூறி எங்களது மகள் பிரதீபாவை கடத்திச் சென்று விட்டதாக சந்தேகத்தின் பேரில் கூறியிருந்தனர்.  இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் தேடி வருகின்றார்.
    மதுரையில் கல்லூரி மாணவிகள் 3 பேர் மாய மானார்கள். அவர்கள் கடத்தப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் காஜாமொய்தீன். இவரது மகள் ஜெனிபர் ஷிமா (வயது 21). அந்தப்பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியில் படித்து வந்தார்.

    கடந்த 9-ந் தேதி கல்லூரிக்குச் சென்ற ஜெனிபர் ஷிமா பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து சிலைமான் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார். அவரை யாராவது கடத்திச் சென்றார்களா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் தாரணி (19). இவர் நத்தத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

    கடந்த 8-ந் தேதி கல்லூரிக்குச் சென்ற தாரணி பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து கொட்டாம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி திருமால்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் ரேவதி (23), இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

    திருமண அழைப்பிதழ் அச்சடிக்க கருப்பையா திண்டுக்கல் சென்றார். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது ரேவதியை காணவில்லை.

    இது குறித்து சோழவந்தான் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள எம்.காப்பிளியப்பட்டியைச் சேர்ந்த சிக்கணன் மகன் மணிவேல் (வயது 24). இவர் கட்டிட வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் நட்பாக பழகி வந்தார். பின்னர் அடிக்கடி சந்தித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். சம்பவத்தன்று மாணவியை மணிவேல் கடத்தி சென்று விட்டார். 

    இது குறித்து அவரது பெற்றோர் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், சப்-இன்ஸ் பெக்டர் அழகுபாண்டி ஆகியோர் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

    வெளியூரில் தங்கி இருந்த அவர்களை போலீசார் பிடித்து வந்து விசாரித்தனர். அப்போது மாணவி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி மணிவேல் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினாள். இதனையடுத்து இவ்வழக்கு திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் வசந்தி விசாரணை நடத்தியதில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என தெரிய வந்தது. இதனையடுத்து மணிவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மாணவியை தனியார் காப்பகத்தில் மருத்துவ சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    நெகமத்தில் வாலிபரை தாக்கி விட்டு காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவியை கடத்தி சென்ற அண்ணன், பெற்றோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    நெகமம்:

    ஈரோடு மாவட்டம், கோபியை சேர்ந்தவர் சுகன்யா (வயது 22). அங்குள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ.இறுதி ஆண்டு படித்து வருகிறார். செஞ்சேரிபுத்தூரை சேர்ந்த சதீஷ்குமார் (23). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோபியில் உள்ள தனியார் கம்பனியில் தங்கி வேலைபார்த்து வந்தார்.

    அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் பணிமாறுதல் ஆகி சதீஷ்குமார் உடுமலைக்கு வந்து விட்டார். அங்கு வந்தபிறகும் இருவருக்கும் காதல் நீடித்து வந்தது. இந்நிலையில் இருவரும் கடந்த 17-ந்தேதி உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்டு இருவரும் செஞ்சேரிப்புத்தூரில் உள்ள சதீஷ்குமார் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுகன்யாவின் அண்ணன் ரகுபதி (27), அவரது தந்தை சென்னிமலை (55) தாயார் விஜயகுமாரி (49) ஆகிய 3 பேரும் சதீஷ்குமார் வீட்டிற்கு சென்று சதீஷ்குமாரை தாக்கிவிட்டு சுகன்யாவை கடத்தி சென்று விட்டனர்.

    இதில் சதீஷ்குமார் காயம் அடைந்த நிலையில் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் நெகமம் போலீசார் வழக்கு பதிவு சுகன்யாவை கடத்தி சென்ற ரகுபதி மற்றும் அவரது தந்தை சென்னிமலை, தாயார் விஜயகுமாரி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    கூத்தாநல்லூரில் பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து நாகை கிளை சிறையில் அடைத்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள சேகரை கிராமத்தை சேர்ந்தவர் சாந்தா (வயது 48). இவரது 17 வயது மகள் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி முதல் திடீரென மாணவியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய், மகளை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை.

    இதுபற்றி திருவாரூர் மகளிர் போலீசில் அவர் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (25) என்ற வாலிபர் , மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.

    வாலிபர் விக்னேஷ், மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுமியை திருமணம் செய்த வழக்கு இருந்து வந்தது.

    இதுசம்பந்தமாக கடந்த 13-ந் தேதி போலீசார், வாலிபர் விக்னேசை கைது செய்தனர். பின்னர் அவரை நாகை கிளை சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே மாயமான மாணவியை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் வாலிபர் விக்னேஷ், வீட்டில் இருந்த மாணவியை போலீசார் மீட்டனர்.

    மார்த்தாண்டம் பிளஸ்-1 மாணவியை பெங்களூருக்கு கடத்தி சென்ற என்ஜினீயர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் அருகே உள்ள பள்ளியாடி பகுதியை சேர்ந்த 17 வயதான மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த அந்த மாணவி திடீரென்று மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மாணவியை பல இடங்களிலும் தேடினார்கள். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை.

    இதைத்தொடர்ந்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. தனிப்படை அமைத்து போலீசார் மாயமான மாணவியை தேடி வந்தனர்.

    அப்போது பள்ளியாடி பகுதியை சேர்ந்த என்ஜினீயர் மாஸ்கஸ் மெல்பு‌ஷன் (வயது 21) என்பவர் அந்த மாணவியை அடிக்கடி சந்தித்து பேசி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார், மாஸ்கஸ் மெல்பு‌ஷன் பற்றி விசாரித்தனர். அப்போது அவரும் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதனால் அவரது செல்போன் டவர் மூலம் போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். இதில் பெங்க ளூருவில் அவர் இருப்பதாக செல்போன் டவர் காட்டியது. 

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பெங்களூருக்கு விரைந்து சென்று தேடுதல்வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு வீட்டில் மாஸ்கஸ் மெல்பு‌ஷன் தங்கி இருந்தது தெரியவந்தது. மேலும் மாயமான மாணவியும் மாஸ்கஸ் மெல்பு‌ஷனின் நண்பரான பள்ளியாடி பகுதியை சேர்ந்த சுபின் என்பவரும் அவர்களுடன் இருந்தார். போலீஸ் விசாரணையில் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி அந்த மாணவியை மாஸ்கஸ் மெல்பு‌ஷன் பெங்களூருக்கு கடத்திச் சென்றதும், அங்கு வாடகை வீட்டில் அவரை அடைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

    அவர்கள் 3 பேரையும் போலீசார் மீட்டு மார்த்தாண்டம் கொண்டுவந்து விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு மாஸ்கஸ் மெல்பு‌ஷன் மற்றும் அவரது நண்பர் சுபின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    கும்பகோணம் அருகே ரூ.30 லட்சம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தி செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் வேலன்தொட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் சுபபிரியா (வயது 21). இவர் கும்பகோணம் அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் சுபபிரியா கல்லூரிக்கு சென்றார். அதன்பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் சுபபிரியாவின் தாய் சித்ரா அதிர்ச்சி அடைந்து மகளை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் காணவில்லை.

    கும்பகோணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கும் சென்று மகளை தேடி பார்த்தனர். அங்கும் அவர் இல்லை.

    இதற்கிடையே சுபபிரியாவின் செல்போன் எண்ணில் இருந்து தாய் சித்ராவின் செல்போனுக்கு நேற்று மாலை ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    அதில், உங்களது மகள் சுபபிரியாவை கடத்தி வைத்துள்ளோம். எங்களுக்கு ரூ.30 லட்சம் கொடுத்து மகளை மீட்டு கொள்ளுங்கள். பணம் கொடுக்கவில்லை என்றால் மாணவியின் உடலை வீட்டுக்கு அனுப்புவோம்’ என்று குறிப்பிட்டு இருந்தது.

    இதை படித்து பார்த்து அதிர்ச்சி அடைந்த சித்ரா, உடனடியாக பந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாணவியை கடத்திய கும்பல், பெற்றோருக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். மட்டுமே அனுப்பி உள்ளனர். போனில் எதுவும் பேசவில்லை என்பதால் போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மாணவி சுபபிரியா காதல் விவகாரத்தில் கடத்தப்பட்டு உள்ளாரா? பணத்தை பறிக்கும் நோக்கில் மர்ம கும்பல் அவரை கடத்தி சென்றுள்ளதா? அல்லது மாணவியே கடத்தல் நாடகம் நடத்துகிறாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    ரூ.30 லட்சம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தி செல்லப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    மேலூர் அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண் கடத்தப்பட்டார். இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலூர்:

    மதுரை, மேலூர் அருகேயுள்ள மெய்யப்பன் பட்டியைச் சேர்ந்த ராசு மகள் ரவிதா (வயது 19). இவர் மேலூரில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் ரவிதா சம்பவத்தன்று வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது மேலூர் சருகு வளையப்பட்டியைச் சேர்ந்த மனோஜ் (20) என்பவர் திருமண ஆசை காட்டி ரவிதாவை கடத்திச் சென்று விட்டார்.

    இதற்கு மனோஜின் தந்தை வெள்ளைக்கண்ணு, தாய் மலர், உறவினர்கள் செல்வம், நாச்சம்மாள் மற்றும் தங்கம் ஆகியோர் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.

    இது தொடர்பாக ரவிதாவின் தாய் லட்சுமி கீழவளவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சங்கீதா, ஏட்டு பரசுராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் மதுரை ஊமச்சிக்குளம் அருகிலுள்ள செல்லாயி புரத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகள் வந்தனா. இவர் நேற்றிரவு டியூசன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கவுதம், பகத்சிங், விஜய், திருப்பதி, பிரசாந்த், அஜித்பாண்டி ஆகிய 6 பேரும் வந்தனாவை கேலி கிண்டல் செய்ததாக தெரிகிறது.

    இதனை தங்கராஜ் தட்டிக்கேட்டார். எனவே 6 வாலிபர்களும் உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    இது தொடர்பாக தங்கராஜ் ஊமச்சிக்குளம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் சாந்த மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்லில் கல்லூரி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த பெயிண்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கியது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாரிகங்காணி தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் ராஜ்குமார் (வயது 21). இவர் நாமக்கல்லில் உள்ள லாரி பட்டறை ஒன்றில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி நாமக்கல் அருகே உள்ள கொமரகவுண்டனூரை சேர்ந்த 17 வயது நிரம்பிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று இளம்வயது திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து அந்த பெண்ணின் தாயார் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜ்குமாரை கைது செய்தனர்.

    பின்னர் அவர் மீது நாமக்கல் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுசீலா வாதாடினார். இவ்வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இளங்கோ தீர்ப்பு கூறினார்.

    இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராஜ்குமாரை போலீசார் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு கொண்டு சென்றனர்.
    அரசு பள்ளி மாணவர்கள் கடத்தல் கும்பலுடன் சேர்ந்து சக மாணவனை கடத்தி கொத்தடிமையாக அனுப்பிய சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கோடியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தஞ்சையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறான்.

    அதேபள்ளியில் திருக்கருக்காவூரை சேர்ந்த ராஜா (17), வளையபேட்டையை சேர்ந்த சரவணன், மாத்தூரை சேர்ந்த சந்திரன், கரந்தட்டான் குடியை சேர்ந்த சுந்தர் (மேலே உள்ள 4 மாணவர்களின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது) இவர்கள் 4 பேரும் அதே அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    கடந்த டிசம்பர் 4-ந் தேதி தினேஷ் காலை வழக்கம் போல்பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். மீண்டும் மாலை வீடு திரும்பவில்லை. தினேசின் தந்தை வெளியூரில் வேலை பார்த்து வந்ததால் அவரது தாய் மகனை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை. இதையடுத்து தன்னுடைய கணவருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து ஊருக்கு வந்த தினேசின் தந்தை மாயமான மகனை சில நாட்கள் தேடி அலைந்துள்ளார். ஆனால் மகன் எங்கு சென்றான் என்ற தகவல் கிடைக்காததால் தஞ்சையில் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்த நிலையில் போலீசில் புகார் அளித்து நீண்ட நாட்கள் ஆகியும் போலீசார் தினேசை கண்டு பிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து இனி போலீசாரை நம்பி பயன் இல்லை என தன்னுடய மகனை கண்டுபிடிக்க தானே களத்தில் இறங்கி விசாரணையில் இறங்கினார்.

    அதன்படி தினேஷ் படித்த அரசு பள்ளிக்கு சென்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தியபோது டிசம்பர் 4-ந் தேதி பள்ளிக்கு வந்த தினேஷ் அதேபள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் ராஜா, சரவணன், சந்திரன், சுந்தர் ஆகிய 4 மாணவர்களுடன் பள்ளியை விட்டு சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த 4 மாணவர்களது வீடுகளுக்கும் சென்று தன்னுடைய மகனை எங்கு அழைத்து சென்றீர்கள் என கேட்டுள்ளார். அப்போது தாங்கள் அழைத்து செல்லவில்லை என அடித்து கூறினர்.

    அதனை தொடர்ந்து அந்த 4 மாணவர்கள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரித்த போது அவர்கள் 4 பேரும் அடிக்கடி பள்ளிக்கு வராமல் ஊர் சுற்றுபவர்கள் அவர்கள் தீய பழக்கங்கள் உள்ளவர்கள் என தெரிவித்தார்.

    இதற்கிடையே தினேசின் தந்தைக்கு, 4 மாணவர்கள் மீதும் சந்தேகம் ஏற்பட்டது.

    இதனால் கடந்த மாதம் 14-ந் தேதி மாணவர் சந்திரனின் வீட்டிற்கு சென்ற தினேசின் தந்தை உங்களுடைய மகனும் அவனது நண்பர்களும் சேர்ந்து எனது மகனைகொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறேன். எனவே நிதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்ய உள்ளேன் என கூறி விட்டு வந்தார்.

    இந்நிலையில் கடந்த 18-ந்தேதி காலையில் தினேசின் தந்தை செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட அந்த 4 மாணவர்களில் ஒருவரான ராஜா உங்களுடைய மகன் கரம்பத்தூர் பகுதியில் பார்த்ததாக கூறிவிட்டு போனை கட் செய்துள்ளான்.

    இதையடுத்து அங்கு சென்று தேடி பார்த்த போது தினேஷ் ஆவூர் சாலையில் உள்ள பாலத்தில் சுய நினைவை இழந்தபடி மயக்கத்தில் இருந்தான். அவனது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன.

    தினேசை மீட்டு அவனுடைய தந்தை விசாரித்தார். அப்போது சம்பவத்தன்று தனது நண்பர்கள் 4 பேரும் தன்னை பள்ளியை விட்டு வெளியே வா. முக்கியமான இடத்திற்கு அழைத்து செல்கிறோம் என வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர்.

    பின்னர் 4 பேரும் என்னை கொடிமரத்து மூலை அருகே உள்ள டீக்கடைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவர்கள் கும்பகோணத்தை சேர்ந்த மணி என்பவரிடம் தன்னை அறிமுகம் செய்தனர். அவர்கள் தனியாக சென்று பேசினர். மணி அவர்கள் 4 பேருக்கும் பணம் கொடுத்தார். அதன்பின்னர் தனக்கு டீ வாங்கி கொடுத்தனர். அதன்பிறகு நான் மயக்கம் அடைந்துவிட்டேன். முழித்து பார்த்த போது திருப்பூரில் ஒரு அறையில் கிடந்தேன்.

    அங்கிருந்த சிலர் தனக்கு சாப்பாடு போட்டு அடித்து துன்புறுத்தி கொத்தடிமையாக வேலை வாங்கியதாக கூறியுள்ளான்.

    இதையடுத்த தினேசின் தந்தை அந்த 4 மாணவர்களிடமும் சென்று இதுகுறித்து மிரட்டி விசாரித்த போது தங்களுக்கும் இதுபோன்ற மாணவர்களை கடத்தும் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் நாங்கள் அழைத்து விடும் மாணவர்களுக்கு ஏற்றாற்போல் பணம் தருவார்கள் என கூறியுள்ளனர். நாங்கள் இதுபோன்று இனிமேல் செய்யமாட்டோம். தங்களை போலீசில் மாட்டி விட வேண்டாம் என கெஞ்சியுள்ளனர்.

    பள்ளி மாணவர்கள் என்பதால் தினேசின் தந்தை அவர்களை கண்டித்து விட்டு சென்றுவிட்டார்.

    ஆம்பூர் அருகே 17 வயது மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த பள்ளிதெரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவி. இவருக்கும் ஆந்திர மாநிலம் வி.கோட்டா பகுதியை சேர்ந்தவர் சண்முகம் மகன் தனசேகரன் (வயது 26). என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த மாதம் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை பல இடங்களில் தேடியும் காணவில்லை .

    இது குறித்து மாணவியின் பெற்றோர் உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில் தனசேகர் என்பவர் ஆசை வார்த்தை கூறி எனது மகளை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறியிருந்தனர். இதையடுத்து போலீசார் தனசேகரனை பிடித்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் 17 வயது மாணவியை கடத்தி திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்ததிற்காக தனசேகரனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை கடத்திச்சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள முடுவார்பட்டியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகள் வர்ஷா (வயது 19). வீட்டில் தனியாக இருந்த வர்ஷாவை திருமண ஆசைக்காட்டி அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் பாண்டித்துரை (21) கடத்திச் சென்று விட்டார்.

    இளம்பெண்ணை கடத்திச் செல்ல பாண்டித்துரைக்கு அவரது நண்பர்கள் சுதர்சன், முத்துப்பாண்டி, அழகர் ஆகியோர் உதவியதாக தெரியவந்தது.

    இது குறித்து மோகன் பாலமேடு, போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கடத்திச் சென்ற வாலிபர் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகிறார்கள்.

    ×