என் மலர்
செய்திகள்

வாடிப்பட்டியில் திருமண ஆசை காட்டி இளம்பெண் கடத்தல்
திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை கடத்திச்சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள முடுவார்பட்டியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகள் வர்ஷா (வயது 19). வீட்டில் தனியாக இருந்த வர்ஷாவை திருமண ஆசைக்காட்டி அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் பாண்டித்துரை (21) கடத்திச் சென்று விட்டார்.
இளம்பெண்ணை கடத்திச் செல்ல பாண்டித்துரைக்கு அவரது நண்பர்கள் சுதர்சன், முத்துப்பாண்டி, அழகர் ஆகியோர் உதவியதாக தெரியவந்தது.
இது குறித்து மோகன் பாலமேடு, போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கடத்திச் சென்ற வாலிபர் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகிறார்கள்.
Next Story