என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "kidnapped"
நாகர்கோவில்:
கருங்கல் பகுதியில் பெற்றோரை இழந்த 23 வயது இளம்பெண் ஒருவர் உறவினர் பாதுகாப்பில் வசித்து வந்தார். இளம்பெண்ணுக்கு உறவினர்கள் சென்னையில் டிரைவர் வேலை பார்க்கும் வாலிபரை திருமணம் பேசி நிச்சயம் செய்தனர். திருமண நிச்சயத்திற்கு பிறகு இளம்பெண்ணும், டிரைவரும் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் வசிக்கும் டிரைவரை பார்க்க இளம்பெண் தனியாக சென்றார்.
சென்னை சென்ற இளம்பெண் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது பற்றி சென்னையில் உள்ள டிரைவரை உறவினர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண், சென்னை கோயம்பேட்டில் நிற்பதாக எனக்கு போன் செய்தார்.
அன்று நான், வெளியூர் சவாரி சென்றிருந்தேன். இதனால் அந்த பெண்ணை உடனடியாக ஊருக்கு புறப்பட்டு செல்லும்படி கூறினேன், என்றார். அந்த பெண் ஊர் திரும்பாததால் அவர், சென்னையில் மாயமாகி இருக்கவேண்டும் என்று உறவினர்கள் கருதினர்.
மாயமான பெண்ணை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் மனு கொடுத்தனர். அவர், மாயமான பெண்ணை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்தார்.
தனிப்படை போலீசார் பெண்ணுக்கு நிச்சயம் செய்யப்பட்ட டிரைவரை அழைத்து விசாரித்தனர். அவரிடம் பெண் பேசிய செல்போன் எண்ணை கைப்பற்றினர். அந்த எண்ணுக்கு சொந்தமான நபரை கண்டுபிடிக்க முயன்றனர்.
இதில் அந்த எண்ணுக்குரிய நபர் சென்னையைச் சேர்ந்த பெண் என தெரிய வந்தது. அந்த பெண்ணின் பின்னணி குறித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். இதில் அந்த சென்னை பெண் விபசார கும்பலுடன் தொடர்புடையவர் என தெரிய வந்தது. இதன் மூலம் டிரைவரை தேடி சென்னை சென்ற குமரி பெண் விபசார கும்பலிடம் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் தனிப்படை போலீசாருக்கு ஏற்பட்டது.
அவர்கள், சென்னையிலேயே தங்கியிருந்து விபசார கும்பலுடன் தொடர்புடைய பெண்ணை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, அவர், குமரி பெண்ணை சென்னையில் பணிபுரியும் போலீஸ்காரர் ஒருவரிடம் ஒப்படைத்தது தெரிய வந்தது.
குமரி தனிப்படை போலீசார் சென்னை போலீஸ்காரரையும் கண்டுபிடித்து விசாரித்தனர். இதில், குமரி பெண்ணை கடத்தி சென்றது விபசார கும்பலைச் சேர்ந்த பெண்ணும், சென்னை போலீஸ்காரரும்தான் என தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் நேற்று குமரி பெண், கண்டுபிடிக்கப்பட்டார்.
மீட்கப்பட்ட குமரி பெண்ணையும், அவரை கடத்திச் சென்ற விபசார கும்பலைச் சேர்ந்த பெண், சென்னை போலீஸ்காரர் ஆகியோரை தனிப்படை போலீசார் இன்று நாகர்கோவில் அழைத்து வந்தனர். இங்கு வந்ததும் மீட்கப்பட்ட பெண், தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி போலீசாரிடம் கூறியதாவது:-
எனக்கு நிச்சயம் செய்யப்பட்ட டிரைவரை தேடி சென்னைக்கு சென்றேன். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து டிரைவரின் வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் நின்றேன். அப்போது பெண் ஒருவர் என்னிடம் வந்து விவரம் கேட்டார். அவரிடம் என்னைப்பற்றி கூறினேன். அந்த பெண், என்னை டிரைவர் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறினார்.
மேலும் டிரைவர் சென்னையில் வேலை பார்ப்பதால் எனக்கும், சென்னையிலேயே வேலை வாங்கி தருவதாக கூறினார். இதற்காக அவருக்கு தெரிந்த போலீஸ்காரர் ஒருவரிடம் என்னை ஒப்படைத்தார். அந்த போலீஸ்காரர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.
அவரிடமிருந்து தப்பி வெளியே வந்தேன். சாலையில் நடந்து சென்றபோது, இன்னொரு வாலிபரும் என்னை கடத்திச் சென்று செக்ஸ் தொல்லை கொடுத்தார். பின்னர் ஊருக்கு வர ரெயில் நிலையம் வந்தபோது, குமரி மாவட்ட போலீசார் என்னை கண்டுபிடித்து இங்கு அழைத்து வந்தனர்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.
பின்னர் மேலும் பல தகவல்களை முன்னுக்குப் பின் முரணாக கூறினார். இதனால் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறும்போது, பெண்ணிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர், கூறும் தகவலின்பேரில் தவறு செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு காவல் சரகம் தொண்டராம்பட்டு கிழக்கு கிராமம் புதுத் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது45). விவசாயி இவரது மகள் பிரதிக்ஷா(19). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரதிக்ஷாவை மர்மநபர்கள் சிலர் கடத்தி சென்று விட்டதாக பாலமுருகன் பாப்பாநாடு போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் கடத்தப்பட்ட மாணவி பிரதிக்ஷா குறித்து இன்ஸ் பெக்டர் ஹேமலதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசாருடன் சென்று பட்டுக்கோட்டையில் இருந்து பிரதிக்ஷாவை மீட்டு போலீஸ நிலையம் அழைத்து வந்தார். அவரிடம் யார் கடத்தி சென்றனர்?. எதற்காக கடத்தப்பட்டார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நைஜீரியா நாட்டின் தென் மாகாணமான ரிவர்ஸ்சில் புகழ் பெற்ற ஷெல் எண்ணெய் நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் 2 ஊழியர்கள், எண்ணெய் வியாபாரம் தொடர்பாக அண்டை மாகாணமான பாயேல்சா மாகாணத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக 2 போலீஸ் அதிகாரிகள் உடன் சென்றனர்.
இந்த நிலையில் அவர்களை துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் திடீரென வழிமறித்தனர். அவர்களை கடத்தவும் முயன்றனர். ஆனால் அதை பாதுகாப்பு போலீஸ் அதிகாரிகள் தடுத்தனர். உடனே ஆத்திரம் அடைந்த கடத்தல்காரர்கள், 2 போலீஸ் அதிகாரிகளையும் சுட்டுக்கொன்று விட்டு எண்ணெய் நிறுவன ஊழியர்கள் 2 பேரையும் கடத்திச்சென்று விட்டனர்.
அந்த எண்ணெய் நிறுவன ஊழியர்களின் கதி என்ன ஆனது என தெரியவில்லை. இந்த தாக்குதலை ஷெல் எண்ணெய் நிறுவனம் உறுதி செய்துள்ளது. #Nigeria #OilWorkers #Kidnapped
வடமதுரை:
திண்டுக்கல் அருகே உள்ள எரியோடு பண்ணைப்பட்டியை சேர்ந்தவர் வனிதா (வயது17), மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் காவியா (17). இவர்கள் 2 பேரும் வடமதுரை அருகே உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர்.
கடைசி தேர்வு எழுத சென்ற மாணவிகள் 2 பேரும் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதோடு மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
வடமதுரை போலீசார் 2 மாணவிகளையும் தீவிரமாக தேடி வந்தனர். அவர்கள் பயன்படுத்தி வந்த செல்போன் எண்களை ஆய்வு செய்து பார்த்த போது மாணவிகள் ஐதராபாத்தில் இருப்பது தெரியவந்தது. மேலும் சென்ட்ரிங் வேலை பார்த்து வரும் நாட்ராயன் என்பவரும், பிளஸ்-2 மாணவர் பாலமுருகன் என்பவரும் மாணவிகளை கடத்தி சென்றது தெரியவந்தது.
போலீசார் உடனே ஐதராபாத்துக்கு விரைந்தனர். மாணவிகளையும், அவர்களை கடத்தி சென்ற வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு உத்தரவுபடி மைனர் பெண்களை கடத்தியதாக 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கைலவணம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது மகள் பார்த்திபா (வயது 19). இவர் பி.இ. படித்துள்ளார்.
கடந்த 3-ந் தேதி காலை தமிழ்ச்செல்வியும், பார்த்திபாவும் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த கலைச்செல்வன், சரவணன், மாரிமுத்து, புகேழேந்தி, சுப்பிரமணியன், தங்கம்மாள், சங்கீதா, மாதவன் ஆகிய 8 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் வந்து பார்த்திபாவை கடத்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் தடுத்துள்ளார். ஆனால் அவரை தள்ளிவிட்டு பார்த்திபாவை கடத்தி சென்று விட்டனர்.
இதுகுறித்து தாயார் தமிழ்செல்வி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ் பெக்டர் ஜெகதீஸ்வரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அகோரம் ஆகியோர் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை கடத்தி சென்ற கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.
வடமதுரை:
திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கெச்சானிப்பட்டி பிரிவு அருகே இன்று பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் பள்ளி சீருடையில் ஒரு மாணவியும், 3 வாலிபர்களும் இருந்தனர்.
இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்கள் கொண்டு வந்த பையை பிரித்து சோதனையிட்டனர். அதில் மணப்பெண்ணுக்கு தேவைப்படும் பட்டுச் சேலை, திருமாங்கல்யம், நகை, மாப்பிள்ளைக்கு தேவையான பட்டு வேஷ்டி, சட்டை ஆகியவை இருந்தது.
இது குறித்து அவர்களிடம் விசாரித்த போது கரூர் மாவட்டம் கடவூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்றும், தனது அத்தை மகளான 10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்வதற்காக காரில் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. அவர்களுக்கு உடந்தையாக வந்த தாமரைச் செல்வன், செந்தில்குமார் ஆகியோரையும் பறக்கும்படையினர் பிடித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காரில் கடத்தி வரப்பட்ட மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று அவருக்கு கடைசி தேர்வான சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது. தேர்வு எழுத வந்த நேரத்தில் அவரை ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் காரில் கடத்தி வந்தது தெரிய வந்தது. மாணவியின் பெற்றோருக்கு தெரியாமல் கடத்தி வரப்பட்டார்களா? என்ற கோணத்திலும் மைனர் பெண்ணை கடத்தி வந்த குற்றத்துக்காக அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். சம்பவம் நடந்த பகுதி கடவூர் என்பதால் இது குறித்து அப்பகுதி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
10-ம் வகுப்பு அரசு கடைசி தேர்வை எழுத முடியாமல் தவற விட்டு வாலிபர்களுடன் வந்த மாணவி போலீஸ் நிலையத்தில் கதறி அழுதார்.
தர்மபுரி:
தர்மபுரியை அடுத்த குப்பூர் பகுதியில் உள்ள எஸ்.கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
சம்பவத்தன்று அவர் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலையில் நீண்ட நேரமாகியும் மாணவி வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இதுகுறித்து மாணவி யின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கா ததால் மாணவி மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அதே பகுதியைச் சேர்ந்தவரும் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் கோபாலகிருஷ்ணன் என்பவர் மாணவியை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாணவியை கடத்தி சென்ற உதவி பேராசிரியர் கோபால கிருஷ்ணனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை போக்சோ சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்குபதிந்து போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து மாணவியை மீட்டு தொப்பூர் அருகே உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன் (வயது 52). சுற்றுச்சூழல் ஆர்வலர். இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். மேலும், தூத்துக்குடி கலவரத்துக்கு போலீசார்தான் காரணம் என்பது குறித்த வீடியோ ஆதாரங்களை கடந்த பிப்ரவரி 15-ந் தேதி முகிலன் சென்னையில் வெளியிட்டார். அதன்பிறகு அன்று இரவு ரெயிலில் மதுரைக்கு புறப்பட்டார். ஆனால் ரெயில் திண்டிவனம் சென்றபோது முகிலனை திடீரென காணவில்லை.
இந்த நிலையில், முகிலனின் மனைவி பூங்கொடி (42) சென்னிமலையில் நேற்று நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“எனக்கும், முகிலனுக்கும் 1996-ம் ஆண்டு திருமணம் நடந்தது. முகிலன் டி.எம்.இ. படித்துள்ளார். எங்கள் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம் ஆகும்.
திருமணத்திற்கு முன்பே எனது கணவர் முகிலன் புரட்சிரக இளைஞர் முன்னணி அமைப்பில் இருந்து கொண்டு பல்வேறு மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்டார். என்னை விட அவருக்கு 10 வயது அதிகம். ஆனாலும் அவருடைய சமூக அக்கறை காரணமாக அவர் மீது எனக்கு காதல் ஏற்பட்டது. எங்களுக்கு கார்முகில் (21) என்ற ஒரே மகன் உள்ளார்.
கார்முகில் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் உள்ளூரில் நடந்த பல்வேறு போராட்டங்களில் முகிலன் கலந்துகொண்டுள்ளார். நானும் அவரோடு போராட்டத்தில் பங்கேற்று இருக்கிறேன்.
எங்கள் குடும்ப வருமானத்திற்காக மட்டுமின்றி சமூக போராட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் அச்சடிப்பதற்காக 1998-ம் ஆண்டு அச்சகம் அமைத்து 2 வருடங்கள் அச்சகத்திலேயே முகிலன் இருந்தார். 2010-ம் ஆண்டிற்கு பிறகு முகிலன் தமிழக அளவிலான பல்வேறு போராட்டங்களில் தீவிரமாக கலந்துகொண்டார். அதன்பிறகு வீட்டிற்கு அடிக்கடி வரமாட்டார்.
2013-ம் ஆண்டில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு 3 மாதங்கள் சிறை சென்றார். புரட்சிகர இளைஞர் முன்னணி, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம், கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான கூட்டியக்கம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இயக்கம் என பல்வேறு இயக்கங்களோடு இணைந்து பல போராட்டங்கள் நடத்தியதுடன் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பையும் தொடங்கி போராட்டங்கள் நடத்தினார்.
அதனால் இவர் மீது 100-க்கும் மேற்பட்ட போராட்ட வழக்குகள் இருந்தது. 2014-ம் ஆண்டில் முகிலனே வள்ளியூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்து திருச்சி சிறையில் 6 மாதம் இருந்தார். பின்னர் நீதிபதியே சொந்த ஜாமீனில் இவரை வெளியே விட்டார்.
கடந்த 2017-ம் ஆண்டில் திருச்சி காவிரி ஆற்று பகுதியில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை எதிர்த்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் முகிலன் கைது செய்யப்பட்டு 379 நாட்கள் சிறையில் இருந்து 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். அதன்பிறகு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்தது.
இந்த போராட்டத்தில் முகிலன் மிக தீவிரமாக கலந்துகொண்டார். கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி சென்னிமலைக்கு வந்த முகிலன் 2 மணி நேரம் மட்டுமே வீட்டில் இருந்தார். அதன்பிறகு தூத்துக்குடி கலவரம் குறித்த போலீசாருக்கு எதிரான சி.டி.யை பிப்ரவரி 15-ந் தேதி சென்னையில் முகிலன் வெளியிட்டார்.
சி.டி. வெளியிட்ட அன்றே ஸ்டெர்லைட் நிறுவனத்தில் உள்ள ஊழியர் ஒருவர் முகிலனிடம், தூத்துக்குடி கலவரம் குறித்த சி.டி. ஆதாரங்கள் ஏதாவது இருந்தால் எங்களிடம் கொடுங்கள் என்றும், இதை ஏன் நீதிமன்றத்தில் கொடுத்தீர்கள்? என்றும் கேட்டுள்ளதாக உடன் இருந்தவர்களிடம் முகிலன் தெரிவித்துள்ளார்.
முகிலன் காணாமல் போனதற்கு ஓரிரு நாள் முன்பு காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார். முகிலன் கலந்துகொண்ட போராட்டத்தில் பெண்களும் கலந்துகொள்வது உண்டு. அதுபோல நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் பங்கேற்றுள்ளார்.
என்னுடைய கணவரின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் சில அரசியல்வாதிகள், உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி உடன் இருந்தவர்களும் அவர் மீது தவறான தகவலை பரப்பி வருகின்றனர். அதுபோல இவருடன் போராடிய பெண்ணோடு இணைத்து அவதூறு பரப்பி வருகின்றனர்.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு எதிராக எனது கணவர் துண்டு பிரசுரங்கள் கொடுத்து பிரசாரம் செய்துள்ளார். அதனால் இனி வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான அரசியல் கட்சிகளுக்கு எதிராக முகிலன் செயல்படுவார் என நினைத்து ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்களே போலீஸ் துணையுடன் சேர்ந்து என் கணவரை கடத்தி வைத்திருக்கலாம்.
கடந்த 2013-ம் ஆண்டுகூட ஒரு போராட்ட வழக்கில் போலீசார் இவரை யாருக்கும் சொல்லாமல் சில நாட்கள் போலீஸ் காவலில் வைத்திருந்தனர். அதுபோல் இப்போதும் கடத்தி சென்றுள்ளனர்.
இதுவரை பொது வாழ்க்கைக்காகவே தன்னை அர்ப்பணம் செய்த முகிலன் மீது உடன் இருப்பவர்களே பரப்பி வரும் அவதூறுகளை முறியடித்து அவரை மீட்க போராடி வருகிறேன். பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கடத்தி சென்றவர்களே முகிலனை விட்டுவிடுவார்கள் என நம்புகிறேன்” என்றார். #Mukilan #Sterlite
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டி குளத்துப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகள் பவித்ரா (வயது 15). காமாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு தேர்வு எழுதச் சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பவில்லை.
அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் வனம் இது குறித்து ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் அழகாபுரி காலனியைச் சேர்ந்த சிகாமணி மகன் விஜய் (22) என்பவர்தான் தனது மகளை கடத்திச் சென்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும் அவரை கடத்திச் சென்ற வாலிபரையும் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்