search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரத்தநாடு அருகே கடத்தப்பட்ட கல்லூரி மாணவி மீட்பு- போலீசார் விசாரணை
    X

    ஒரத்தநாடு அருகே கடத்தப்பட்ட கல்லூரி மாணவி மீட்பு- போலீசார் விசாரணை

    ஒரத்தநாடு அருகே கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை போலீசார் மீட்டனர். எதற்காக கடத்தப்பட்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு காவல் சரகம் தொண்டராம்பட்டு கிழக்கு கிராமம் புதுத் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது45). விவசாயி இவரது மகள் பிரதிக்ஷா(19). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரதிக்ஷாவை மர்மநபர்கள் சிலர் கடத்தி சென்று விட்டதாக பாலமுருகன் பாப்பாநாடு போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் கடத்தப்பட்ட மாணவி பிரதிக்ஷா குறித்து இன்ஸ் பெக்டர் ஹேமலதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசாருடன் சென்று பட்டுக்கோட்டையில் இருந்து பிரதிக்ஷாவை மீட்டு போலீஸ நிலையம் அழைத்து வந்தார். அவரிடம் யார் கடத்தி சென்றனர்?. எதற்காக கடத்தப்பட்டார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×