search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது
    X

    பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது

    பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள எம்.காப்பிளியப்பட்டியைச் சேர்ந்த சிக்கணன் மகன் மணிவேல் (வயது 24). இவர் கட்டிட வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் நட்பாக பழகி வந்தார். பின்னர் அடிக்கடி சந்தித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். சம்பவத்தன்று மாணவியை மணிவேல் கடத்தி சென்று விட்டார். 

    இது குறித்து அவரது பெற்றோர் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், சப்-இன்ஸ் பெக்டர் அழகுபாண்டி ஆகியோர் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

    வெளியூரில் தங்கி இருந்த அவர்களை போலீசார் பிடித்து வந்து விசாரித்தனர். அப்போது மாணவி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி மணிவேல் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினாள். இதனையடுத்து இவ்வழக்கு திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் வசந்தி விசாரணை நடத்தியதில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என தெரிய வந்தது. இதனையடுத்து மணிவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மாணவியை தனியார் காப்பகத்தில் மருத்துவ சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    Next Story
    ×