என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள எம்.காப்பிளியப்பட்டியைச் சேர்ந்த சிக்கணன் மகன் மணிவேல் (வயது 24). இவர் கட்டிட வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் நட்பாக பழகி வந்தார். பின்னர் அடிக்கடி சந்தித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். சம்பவத்தன்று மாணவியை மணிவேல் கடத்தி சென்று விட்டார்.
இது குறித்து அவரது பெற்றோர் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், சப்-இன்ஸ் பெக்டர் அழகுபாண்டி ஆகியோர் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
வெளியூரில் தங்கி இருந்த அவர்களை போலீசார் பிடித்து வந்து விசாரித்தனர். அப்போது மாணவி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி மணிவேல் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினாள். இதனையடுத்து இவ்வழக்கு திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இன்ஸ்பெக்டர் வசந்தி விசாரணை நடத்தியதில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என தெரிய வந்தது. இதனையடுத்து மணிவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மாணவியை தனியார் காப்பகத்தில் மருத்துவ சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்