search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Floods"

    மழை வெள்ள பாதிப்புகளை இரண்டாவது நாளாக பார்வையிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவுக்கு மத்திய அரசு கூடுதல் உதவிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். #KeralaFloods #RahulGandhi
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் 100 ஆண்டு களில் இல்லாத அளவிற்கு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். தற்போது அங்கு மழை ஓய்ந்து நிவாரண பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. கேரள மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனாலும் அங்கு ஏற்பட்ட பாதிப்பு மிகவும் அதிகம் என்பதால் பல ஆயிரம் மக்கள் இன்னும் முகாம்களிலேயே முடங்கி உள்ளனர்.

    கேரள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்று கேரளா சென்றார். அவர், செங்கனூர், ஆலப்புழா, எர்ணாகுளம் உள்பட பல மாவட்டங்களுக்கு சென்று முகாம்களில் தங்கி உள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    கேரள வெள்ளத்தின் போது, மீனவர்கள் அந்த மாநில மக்களை மீட்க எடுத்த முயற்சிகளை ராகுல்காந்தி பாராட்டினார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் போது மீனவளத்துறைக்கு என்று தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    மேலும் ஹெலிகாப்டரிலும் சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டார். செங்கனூர் கல்லூரியில் உள்ள முகாமில் தங்கி இருந்த மக்களை சந்தித்து விட்டு அங்குள்ள ஹெலிபேடு தளத்திற்கு ராகுல்காந்தி சென்றார்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக கேரள வெள்ள சேதங்களை ராகுல்காந்தி பார்வையிட்டார். அவர், வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். அவருடன் கேரள காங்கிரஸ் தலைவர்களும் சென்றனர். மேலும் கோழிக் கோட்டில் நிவாரண முகாம் களில் தங்கி உள்ள பொதுமக்களையும் ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது, “கேரள வெள்ளத்தை அரசியலாக்க விரும்பவில்லை. மிகமோசமாக இம்மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு கூடுதல் உதவிகளை வழங்க வேண்டும்” என கூறினார். 
    கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் வெள்ள நீர் சூழ்ந்திருந்த நிலையில், தற்போது 15 நாட்களுக்கு பின்னர் இன்று விமானங்கள் இயக்கப்பட உள்ளன. #KeralaFloods #KochiAirport
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 1924-ம் ஆண்டுக்குப் பிறகு கேரளத்தை தாக்கிய இந்த வெள்ளப்பேரிடரால் சுமார் 370 பேர் தங்கள் உயிரை இழந்தனர். 80,000 பேர் காப்பாற்றப்பட்டனர். 5,645 நிவாரண முகாம்களில் சுமார் 2,23,000 பேர் தங்கவைக்கப்பட்டனர். மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

    மேலும் 200 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. 80,000 கிலோ மீட்டர் அளவுக்கான சாலைகள் பாதிக்கப்பட்டது. இடுக்கி மற்றும் வயநாடு பகுதிகளில் உள்ள சாலைகள் மிகக் கடுமையாக சேதமடைந்தன.

    இடுக்கி, முல்லை பெரியாறு அணைகள் திறக்கப்பட்டதாலும், கனமழையினாலும் தண்ணீர் தேங்கியதால் கொச்சின் விமான நிலையம் 15 நாட்களாக மூடப்பட்டிருந்தது. இதனால் ரூ.220 கோடி அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 
    மேலும் கொச்சின் வரும் விமானங்கள் திருவனந்தபுரம், கோழிக்கோடு மற்றும் கோயமுத்தூர் போன்ற வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. விமான ஓடு பாதை, விமான நிலையத்தில் உள்ள கடைகள், டாக்ஸிகள் நிறுத்துமிடம் போன்றவையும் பாதிக்கப்பட்டன.

    இந்த பாதிப்புகளால் மக்களின் அன்றாடம் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், மாநில வருவாயில் 10 சதவீதம் பங்களிக்கும் சுற்றுலா துறையிலும் இவை பாதிப்பை ஏற்படுத்தின. மேலும் சாலை, விமானம் என 2 வகை போக்குவரத்துகள் முடங்கிய நிலையில் வர்த்தகக் கூட்டங்கள், மாநாடுகள் நடைபெறுவதிலும் சிக்கல்கள் எழுந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 20 முதல் வர்த்தக விமானங்கள் மட்டும் செயல்பட துவங்கியது.

    இந்நிலையில் 15 நாட்களாக மூடப்பட்டிருந்த கொச்சி விமான நிலையம், பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இன்று திறக்கப்பட உள்ளது. பிற்பகலில் முதல் விமானம் தரையிறங்க உள்ளது. 
    பிரசித்திப்பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ள பொக்கி‌ஷங்களை கேரள வெள்ள நிவாரணத்துக்கு பயன்படுத்துவது குறித்து திருவிதாங்கூர் மன்னர் கருத்து தெரிவித்துள்ளார். #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில் ஏராளமான ரகசிய அறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த அறைகளை திறந்து பார்த்தபோது தங்கம், வைரம் என்று விலை மதிக்க முடியாத பொக்கி‌ஷம் அந்த அறைகளில் நிறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பொக்கி‌ஷங்களை கணக்கெடுத்து பாதுகாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, அந்த பொக்கி‌ஷங்கள் இருந்த 5 பாதாள அறைகள் திறக்கப்பட்டு அவை கணக்கெடுக்கப்பட்டது. மேலும் சில அறைகளை திறக்க சுப்ரீம் கோர்ட்டு இன்னும் அனுமதி வழங்காததால் அவை திறக்கப்படவில்லை.

    அந்த அறைகளிலும் ஏராளமான பொக்கி‌ஷம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பத்மநாபசுவாமி கோவிலுக்கு நவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த பொக்கி‌ஷம் பாதுக்காக்கப்பட்டு வருகிறது.


    கேரளாவில் தற்போது வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அதில் இருந்து கேரளம் மீண்டு வர அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் பணம் தேவைப்படும் என்று மாநில அரசு கூறி உள்ளது. பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கி‌ஷங்களை கேரள வெள்ளப்பாதிப்புக்கு பயன்படுத்தலாம் என்ற கருத்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதுபற்றி பத்மநாபசுவாமி கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் மன்னர் ஆதித்தயவர்மா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள பொக்கி‌ஷங்களின் மொத்த மதிப்பு பற்றி எனக்கு தெரியாது. அவசர கால தேவைக்காக எனது முன்னோர் இவற்றை சேகரித்து வைத்துள்ளனர்.

    கேரள இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த பொக்கி‌ஷங்களை நிவாரண பணிக்களுக்கு பயன்படுத்துவது பற்றி நான், எதுவும் கூற முடியாது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி தான் எதையும் செய்ய முடியும்.

    கேரள மாநில அரசும் இதில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவேண்டும். பத்மநாபசுவாமி கோவில் மட்டுமல்ல அனைத்து மத வழிபாட்டு தலங்களில் இருந்தும் உதவிகளை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KeralaFloods #PadmanabhaswamyTemple
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #KeralaFlood #ITReturn
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இந்த மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக அம்மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்நிலையில், கேரளாவை சேர்ந்த மாத சம்பளம் பெறுவோர் மற்றும் வருமான வரி செலுத்த தகுதி உடையோர் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய மேலும் 15 நாட்கள் அதாவது அடுத்த மாதம் 15-ம் தேதி வரை அவகாசம் வழங்கி மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

    கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை இன்று பார்வையிட்ட ராகுல் காந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மீனவர்களின் நலனுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என தெரிவித்தார். #KeralaFloods #RahulGandhi
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 11 நாட்கள் பெய்த பேய் மழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசு அமைத்து இருந்த மீட்பு குழுக்கள் மற்றும் இராணுவ படையினர் மிகவும் கடுமையாக போராடினர்.

    இந்த போராட்டத்தில், கேரள மீனவர்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. தங்களது படகுகள் போன்ற பல்வேறு வழிகளில் மீனவர்கள் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பை அளித்தனர். இதையடுத்து கேரளாவில் மழை ஓய்ந்துள்ள நிலையில், தற்போது வெள்ளச் சேதங்களை சீரமைக்கும் பணியில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில், கேரள மழை வெள்ள சேதங்களை பார்வையிட இன்று கேரளா வந்தடைந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் செங்கனூர் பகுதிக்கு சென்றார். அங்குள்ள ஒரு முகாமுக்கு நேரில் சென்ற ராகுல் காந்தி, அங்கு தங்கியிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    பின்னர், ஆலப்புழா மாவட்டத்துக்கு வந்த ராகுல்காந்தி, கேரள வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது உதவிய மீனவர்களுக்கு கேடயங்களை வழங்கி, வாழ்த்து கூறி கவுரவித்தார்.

    அங்கு திரளாக கூடியிருந்த மீனவ மக்களிடையே பேசிய ராகுல் காந்தி, வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், விவசாயிகளுக்கு உள்ளதுபோல் மீனவர்களின் நலனுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என உறுதி அளித்தார்.

    போலி வாக்குறுதியாக இதை கூறவில்லை. எவ்வித பாதுகாப்பும் அளிக்கப்படாத மீனவ மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் இதை நான் தெரிவித்து கொள்கிறேன் என்றும் ராகுல் குறிப்பிட்டார்.

    எண்ணிக்கையில் குறைவான சுமார் 3 ஆயிரம் மீனவ மக்கள் மாநிலம் முழுவதும் 70 ஆயிரம் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டதை பெருமையாக குறிப்பிட்ட அவர், ஒக்கி புயல் பாதிப்பின்போது அனைத்தையும் இழந்துநின்ற மீனவ மக்களுக்கு போதுமான உதவிகளை அரசு செய்து தராதது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார். #KeralaFloods #RahulGandhi 
    கேரள வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கூகுள் சார்பில் ஏழு கோடி ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFloodRelief



    கேரளா மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் மழை வெள்ள சேதங்களை சரி செய்ய கேரளாவுக்கு ஏழு கோடி ரூபாய் வழங்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

    கூகுள்.ஓஆர்ஜி (Google.org) மற்றும் கூகுளர்ஸ் (Googlers) சார்பில் ஒரு மில்லியன் டாலர்கள் கேரளாவுக்கு வழங்கப்படும் என கூகுள் தெற்காசியா மற்றும் இந்தியாவுக்கான துணை தலைவர் ராஜன் ஆனந்தன் தெரிவித்தார். கேரள வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களுக்கு உதவியாக கூகுள் பேரிடர் மீட்பு குழு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    அந்த வகையில் கூகுள் பெர்சன் ஃபைன்டர் டூல் ஆக்டிவேட் செய்யப்பட்டு இதுவரை 22,000 பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆனந்தன் தெரிவித்தார். கேரளாவில் மே 29-ம் தேதி துவங்கிய பருவமழையில் சிக்கி சுமார் 417 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 8.69 லட்சம் பேர் மாநிலம் முழுக்க அமைக்கப்பட்ட 2,787 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    முன்னதாக, கடந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு ஏழு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்தது. 

    “கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் மனமுடைந்து போனோம். ஆப்பிள் சார்பாக கேரள முதல்வர் பொது நிவாரண நிதி கணக்கு மற்றும் மெர்சி கிராப்ஸ் இந்தியா எனும் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.7 கோடி வழங்கப்படுகிறது. இந்த நிதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், வீடு இழந்தோருக்கு புதிய வீடுகள், மற்றும் பள்ளிக் கூடங்களை கட்ட உதவியாக இருக்கும்,” என ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

    மேலும் ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கம், ஆப் ஸ்டோர் மற்றும் ஐடியூன்ஸ் ஸ்டோர் உள்ளிட்டவற்றில் மெர்சி கிராப்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு உதவ பிரத்யேக பேனர்களை பதிவிட்டது. ஆப்பிள் வாடிக்கையாளர்கள் மெர்சி கிராப்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு 5, 10, 25, 50, 100 அல்லது 200 டாலர்கள் வரை நிதி வழங்கலாம் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.
    கேரளாவில் மழை வெள்ளம் காரணமாக மூடப்பட்ட கொச்சி விமான நிலையம் நாளை திறக்கப்பட்டு விமானங்கள் இயக்கப்பட உள்ளது. #KochiAirport #KeralaFloods
    கொச்சி:

    கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்னர். கனமழை தொடர்ந்து பெய்ததால் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. கொச்சி விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் விமான நிலையம் கடந்த 15-ம் தேதி மூடப்பட்டது. கொச்சி கடற்படை தளத்தில் இருந்து மட்டும் ஒருசில விமானங்கள் இயக்கப்பட்டன.



    கொச்சி விமான நிலையத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி, சீரமைப்பு பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஆனதால் விமான நிலையத்தை திறப்பதும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 26-ம் தேதி விமான நிலையத்தை திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், ஊழியர்கள் அனைவரையும் பணிக்கு அழைத்து வருவது உள்ளிட்ட சில சிக்கல்கள் காரணமாக மேலும் மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டது. விமான நிலையம் மூடப்பட்டதால் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில்  கொச்சி விமான நிலையத்தில் நாளை முதல் விமான சேவை தொடங்கும் என்று விமான நிலையம் அறிவித்துள்ளது. நாளை மதியம் 2 மணியில் இருந்து சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்களில் முழு அளவில் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது. #KochiAirport #KeralaFloods
    புதுவை அரசு ஊழியர்களில் ஒரு பிரிவினர் கேரளத்துக்கு தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் முதல்-அமைச்சர் நாராயணசாமி எண்ணப்படி அதிகளவு நிதி திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #KeralaFloods #Narayanasamy
    புதுச்சேரி:

    கேரள மாநிலத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    கேரள மாநில மக்களுக்கு உதவும் வகையில் நாடு முழுவதும் இருந்து அந்த மாநிலத்துக்கு நிவாரணத் தொகை, பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அண்டை மாநில மான தமிழகம் அதிகளவு நிவாரணம் மற்றும் உதவிகளை வழங்கி வருகிறது.



    தமிழகத்தைப் போல புதுவை மாநிலமும் உதவி செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி விருப்பம் தெரிவித்தார். அதற்காக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

    இதை ஏற்று அரசு ஊழியர்கள் சங்கங்களின் தலைவர்கள் ஊதியத்தை வழங்குவதற்கான ஒப்புதல் கடிதத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் வழங்கினர்.

    இந்த நிலையில் கேரள அரசு முல்லைப் பெரியாறில் இருந்து தமிழக அரசு நீரைத் திறந்து விட்டதால் தான் வெள்ள சேதம் ஏற்பட்டது என்றும், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தைக்குறைக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

    இதையடுத்து உச்சநீதிமன்றமும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்க உயரத்தை குறைக்கும்படி உத்தரவிட்டது. கேரள அரசின் இந்தச் செயல் தமிழர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கேரளத்துக்கு தொடர்ந்து உதவ வேண்டுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    மேலும் அவ்வாறு உதவினாலும் கேரள மக்கள் தமிழர்கள் மீது அன்பு காட்ட மாட்டார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதனால் புதுவை அரசு ஊழியர்களில் ஒரு பிரிவினர் தங்களது ஒரு நாள் ஊதியத்தைப் பிடித்தம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்காமல் உள்ளனர்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் ஒரு நாள் ஊதியத்தைப் பிடித்தம் செய்து கொள்ள அனுமதிக்க கடிதம் கொடுத்திருந்தாலும், ஊழியர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஊதியத்தைப் பிடித்தம் செய்து விருப்பம் தெரிவித்து தனிப்பட்ட முறையில் கையொப்பமிட்டு கடிதம் வழங்க வேண்டும்.

    அவ்வாறான கடித நகல் கடந்த வியாழக்கிழமை துறைத் தலைமை அலுவலகம் சார்பில் அனைத்து ஊழியர்களிடமும் வழங்கப்பட்டது. ஆனால் அரசு ஊழியர்களில் ஒரு பிரிவினர் கேரளத்துக்கு தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் கடிதம் தரமறுத்து வருவதாகவும் தெரிகிறது.

    இதனால் கேரள மக்களுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி எண்ணப்படி அதிகளவு நிதி திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #KeralaFloods #Narayanasamy

    கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் போலீசார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். #Seeman
    சென்னை:

    மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு தமிழகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அதிக அளவில் சென்றுள்ளன.

    நாம் தமிழர் கட்சி சார்பிலும் கேரள மக்களுக்கு உதவி செய்வதற்காக குடிநீர், உடைகள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் திரட்டப்பட்டன. ரூ.15 லட்சம் மதிப்பிலான இந்த நிவாரண பொருட்களுடன் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர் கேரளா சென்றனர். கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கனாசேரி முகாமுக்கு நிவாரண பொருட்களை வழங்கிவிட்டு திரும்பினர்.

    நாம் தமிழர் கட்சியினர் சென்ற வாகனங்களில் பிரபாகரன் படத்துடன் கூடிய பதாகைகள் கட்டப்பட்டிருந்தன. இதனை காரணம் காட்டி நாம் தமிழர் கட்சியினரை போலீசார் மடக்கினர். கோட்டயம் கிழக்கு காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதுபற்றி அறிந்ததும் சீமான் அங்கு விரைந்து சென்றார். போலீஸ் நிலையத்தில் வைத்து சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினரிடம் போலீசார் கடும் கெடுபிடியுடன் நடந்து கொண்டனர். நீங்கள் கொண்டு வந்திருக்கும் உணவு பொருட்களின் மீது நம்பகத்தன்மை இல்லை என்றும், பிரபாகரன் படத்தை வைத்திருப்பதால் அனைவரும் விடுதலைப்புலிகள் தானோ? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளதாகவும் கூறியதுடன், இது போன்று தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை கூறினர்.

    இதனை கேட்டு சீமான் அதிர்ச்சி அடைந்தார். நாங்கள் கொண்டு வந்திருக்கும் பொருட்களை நன்றாக பரிசோதனை செய்யுங்கள். அதுவரை நாங்கள் இங்கேயே இருக்கிறோம் என்று கூறினார். பின்னர் 4 மணி நேரம் விசாரணைக்கு பின்னர் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சீமான் கூறியதாவது:-

    நிவாரண பொருட்களை கொண்டு செல்ல, அங்குள்ள பெண் வட்டாட்சியர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் முறைப்படி அனுமதி வாங்கி இருந்தோம்.

    கோட்டயத்தில் உள்ள மாவட்ட போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு நாங்கள் உணவு பொருட்களை கொண்டு சென்றோம். அம்மாநில காவலர்களே பொருட்களை இறக்குவதற்கு உதவி செய்தனர். ஒத்துழைப்பும் அளித்தனர். கொண்டு சென்ற பொருட்களையெல்லாம் இறக்கும் வரையில் 2½ மணி நேரம் நானும் அங்கேயே இருந்தேன். பின்னர் அங்கிருந்து அனைவரும் புறப்பட்டோம்.

    இதன் பிறகுதான் கட்சியினரை போலீஸ் நிலையத்தில் பிடித்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பிறகே நான் அங்கு சென்றேன்.

    இதுபற்றி போலீசார் கூறும்போது, எங்களுக்கு மேலிட உத்தரவு. நாங்கள் எங்கள் கடமையை செய்கிறோம் என்று கூறி விசாரித்தனர். 7 மணி நேரம் பயணம் செய்து சாப்பிடாமல் உங்களுக்கு உதவவே நாங்கள் வந்துள்ளோம் என்று தெரிவித்தோம். அதற்கு தமிழர்கள் தான்அதிக அளவில் உதவி இருக்கிறார்கள் என்று பதில் அளித்தனர். யாருடைய தூண்டுதலின் பேரிலோ தான் போலீசார் அவமானப்படுத்தும் விதத்தில் எங்களிடம் நடந்து கொண்டனர்.

    புலிக் கொடியையும், பிரபாகரன் படத்தையும் நீங்கள் எடுத்து வந்திருப்பதால் விசாரிக்க சொல்லி உத்தரவு என்று கூறிய போலீசார், எனது முகவரி, செல்போன் எண்ணையும் வாங்கி வைத்துக் கொண்டனர்.

    நாங்கள் செல்லும் போது சேவாசங்கத்தினர் சிலர் பொருட்களை தங்களிடம் கொடுக்குமாறு கூறினர். நாங்கள் உரிய அதிகாரிகளிடம்தான் வழங்குவோம் என்று கூறி எடுத்துச் சென்று விட்டோம். நாங்கள் அவமானப்படுத்தப்பட்டதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    இவ்வாறு சீமான் கூறினார். #Seeman
    கேரளாவுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் அம்மாநில போலீசார் விசாரணை நடத்தினர். #Kerala #Seeman
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வரலாறு காணாத அளவு பெய்த மழையினால் 14 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு கேரளா திரும்பி வரும் நிலையில், அவர்களின் அன்றாட தேவைகளுக்கு உதவும் விதமாக பல்வேறு அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் மற்றும் மாநில அரசுகள் உதவி செய்து வருகின்றன.

    இந்நிலையில் கேரள மக்களுக்கு உதவி புரியும் வகையில் 30ற்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு நாம் தமிழர் கட்சியினர் கோட்டயம் மாவட்டம் சென்றனர். சங்கனாச்சேரி பகுதியில் வெள்ள நிவாரணப் பொருட்களை மக்களுக்கு கொடுக்க முற்பட்ட போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படம் பொறித்த பதாகைகள் இருந்ததால் சர்ச்சை உருவாகியது.

    இதனால் ஏற்பட்ட சலசலப்பின் காரணமாக சீமான் மற்றும் அவருடன் சென்ற நாம் தமிழர் கட்சியினர் அனைவரையும் விசாரணைக்காக கோட்டயம் மாவட்டக் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர் .

    பல மணி நேர விசாரணைக்குப் பின்பு நாம் தமிழர் கட்சியினர் வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு போலீசார் அனுமதி அளித்தார்கள். விசாரணைக்குப் பின்பு சீமான்தமிழகம் திரும்பினார்.
    பிறந்தநாள் பரிசாக மகளுக்கு தந்தை அளித்த ரூ.19 லட்சம் மதிப்புள்ள ‘தங்க கேக்’ கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கப்பட்டது. துபாய் மாணவி இந்த உதவியை செய்துள்ளார். #KeralaFloods #GoldBirthdayCake
    துபாய்:

    பிறந்தநாள் பரிசாக மகளுக்கு தந்தை அளித்த ரூ.19 லட்சம் மதிப்புள்ள ‘தங்க கேக்’ கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கப்பட்டது. துபாய் மாணவி இந்த உதவியை செய்துள்ளார்.

    துபாயில் சொந்தமாக கட்டுமான நிறுவனம் நடத்தி வருபவர் விவேக் கல்லிதில். கேரளாவை சேர்ந்த இவருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த வர்னிகா, தியூதி, பிரணதி ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு வயது 12.



    3 பேரும் துபாயில் உள்ள டெல்லி தனியார் பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்கள். விவேக் தனது 3 மகள்களின் பிறந்த நாளுக்கு ½ கிலோ தங்கத்தால் உருவாக்கப்பட்ட ‘கேக்’ பரிசளித்துள்ளார்.

    துபாய் அல் பர்சாவில் உள்ள மலபார் கோல்டு அண்ட் டயமண்ட் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ‘தங்க கேக்’ 22 காரட் ஆபரணத்தங்கத்தில் கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. இந்த ‘கேக்’கின் மேற்புறத்தில் உள்ள மலர் வடிவம் துருக்கியில் இருந்து வரவழைக்கப்பட்டதாகும். அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த இந்த ‘கேக்’, ரூ.19 லட்சம் மதிப்புடையது.

    கேரளாவில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிதியுதவி சேகரிக்கப்பட்டு வருவதை விவேக் கல்லிதில் மகள்களில் ஒருவரான பிரணதி அறிந்தார். இதைத்தொடர்ந்து அவர் மற்ற சகோதரிகளுடன் பேசி, பிறந்த நாள் பரிசாக தந்தை கொடுத்த ‘தங்க கேக்’கை நிவாரண பொருளாக வழங்க முடிவு செய்து தந்தையிடம் தெரிவித்தார்.

    மேலும் ஆடைகள் மற்றும் காலணிகளை நிவாரண பொருட்களாக வழங்கும்படியும் கேட்டுக்கொண்டார். மகளின் உதவும் நோக்கத்தை பார்த்து வியந்த விவேக் கல்லிதில் உடனடியாக அந்த ‘தங்க கேக்’கை பணமாக மாற்றி கேரள முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு அனுப்பிவைத்தார்.

    இதுகுறித்து மாணவி பிரணதி கூறியதாவது:-

    எனது தந்தையின் அலுவலகத்தில் பணிபுரியும் சில ஊழியர்களின் குடும்பத்தினர் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி வீட்டின் கூரைகளில் தங்கியிருந்ததாக கூறினர். இதனை கேட்ட பிறகுதான் அங்கு துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

    எனவே நான் இந்த ‘கேக்’கை நன்கொடையாக அளித்தேன். எனது வீட்டின் அலமாரியில் வெறுமனே அலங்கார பொருளாக ‘தங்க கேக்’ இருப்பதை விட பல ஆயிரம் பேர்களின் கண்ணீரை துடைத்தால் அதுதான் மதிப்பு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவி பிரணதியின் இந்த மனிதாபிமான உதவிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. #KeralaFloods #GoldBirthdayCake 
    மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி நிதியுதவியை கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார். #KeralaFloods #KeralaFloodRelief #RaghavaLawrence
    தொடர் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

    கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி மதிப்புள்ள செக்கை கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று நேரில் வழங்கினார்.



    நடிகர் விஜய் ரூ.70 லட்சமும், நடிகர் விக்ரம் ரூ.35 லட்சமும், விஜய் சேதுபதி ரூ.30 லட்சமும் நிதியுதவி வழங்கியுள்ளனர். 

    நடிகர்கள் கமல், ரஜினி, சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, பிரபு, நடிகைகள் ரோஹினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பலரும் நிதியுதவி வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief #RaghavaLawrence

    ×