search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naam Tamilar"

    தலைவர் பிரபாகரனை இளம் தலைமுறையினர் எப்படி பார்க்க வேண்டும் என்றால், வெறும் தமிழீழ நாட்டிற்கான விடுதலைப்போரின் தலைவன் என்றோ, இல்லை தமிழ்தேச விடுதலைக்கான போராட்டத்தின் தலைவன் என்று மட்டுமோ பார்க்கக் கூடாது.

    சென்னை:

    பிரபாகரனின் 67-வது பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் செங்குன்றத்தில் தமிழர் எழுச்சி நாள் விழா நடைபெற்றது. இதில் சீமான் பங்கேற்று பேசியதாவது:-

    “தலைவர் பிரபாகரனை இளம் தலைமுறையினர் எப்படி பார்க்க வேண்டும் என்றால், வெறும் தமிழீழ நாட்டிற்கான விடுதலைப்போரின் தலைவன் என்றோ, இல்லை தமிழ்தேச விடுதலைக்கான போராட்டத்தின் தலைவன் என்று மட்டுமோ பார்க்கக் கூடாது. அதுவும் அவருக்கான அளவுகோல் அல்ல. உலகெங்கும் ஒடுக்கப்பட்டு இருக்கின்ற தேசிய இனங்கள் அதன் விடுதலைக்காக போராடுமானால் அதற்கான முன்னத்தி ஏராக தலைவர் பிரபாகரனை பார்க்க வேண்டும்.

    ஈழத்தில் போரின்போது கட்டுநாயக்கா ராணுவ விமான தளத்தை தகர்த்த நம் தலைவருக்கு, பொது விமான தளத்தில் குண்டு போட எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆனால் அதனை செய்யவில்லை, காரணம் அவர் இறுதிவரை நம்பினார். எமது எதிரிகள் சிங்கள மக்கள் அல்ல. எங்களை அடித்து ஒழிக்கும் சிங்கள ராணுவம் தான் என்று. இப்படி அறத்தின் வழி நின்று போரிட்டவர் எம் தலைவர்.

    அந்த நிலத்தில் தலைவருக்கு இருந்த சிக்கல் என்னவென்றால் நம் நிலத்தை அடிமைப்படுத்தி சிறைப்படுத்தி சிங்களவன் ஆயுதம் வைத்து நம் மக்களை அழித்தொழித்தான். ஆனால் இந்த நிலத்தில் நம்மிடத்தில் இருந்தே வாக்கினைப் பெற்று அரசியல் அதிகாரம் அடைந்து நம் உரிமைகளை எல்லாம் பறித்து நம்மை அடிமைப்படுத்துகிறார்கள். அந்த நிலத்தில் நம் தலைவர் தூக்க வேண்டியது துவக்காக இருந்தது. இந்த நிலத்தில் நாம் தூக்க வேண்டியது வாக்காக இருக்கிறது. ஆயுதம் மிச்சம் வைத்ததை வென்று முடிக்க வேண்டிய வரலாற்றுத்தேவை, பெரும் பணி நமக்கு கைகளில் அளிக்கப்பட்டுள்ளது.

    சாய்சஸ் எனும் புத்தகத்தில் சிவசங்கர மேனன் எழுதியிருக்கிறார் ‘பிரபாகரன், பொட்டம்மான் போன்ற தலைவர்களைப் பாதுகாத்து ஏதாவது ஒரு அரசியல் தீர்வினை எட்ட முற்பட்டபோது அன்று டெல்லியில் உள்ள அரசியல் தலைமையும் தமிழ் நாட்டு தலைமையும் அதனை விரும்பவில்லை. பிரபாகரனின் இருப்பு தங்கள் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என்று நம்பினார்கள். அதனால் இந்த போரினை விரைந்து முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என விரும்பினார்கள்’ என்று அவர் எழுதி இருக்கிறார். அதனால் நாம் என்ன நினைக்கிறோம் என்றால் இவர்களுடைய அரசியல் வாழ்வை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று நினைக்கிறோம்“

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையும் படியுங்கள்... சென்னையில் தண்ணீர் தேங்கிய 75 பகுதிகளில் இருந்து வெறியேற்றும் பணி தீவிரம்- மாநகராட்சி நடவடிக்கை

    கேரளாவுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் அம்மாநில போலீசார் விசாரணை நடத்தினர். #Kerala #Seeman
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வரலாறு காணாத அளவு பெய்த மழையினால் 14 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு கேரளா திரும்பி வரும் நிலையில், அவர்களின் அன்றாட தேவைகளுக்கு உதவும் விதமாக பல்வேறு அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் மற்றும் மாநில அரசுகள் உதவி செய்து வருகின்றன.

    இந்நிலையில் கேரள மக்களுக்கு உதவி புரியும் வகையில் 30ற்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு நாம் தமிழர் கட்சியினர் கோட்டயம் மாவட்டம் சென்றனர். சங்கனாச்சேரி பகுதியில் வெள்ள நிவாரணப் பொருட்களை மக்களுக்கு கொடுக்க முற்பட்ட போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படம் பொறித்த பதாகைகள் இருந்ததால் சர்ச்சை உருவாகியது.

    இதனால் ஏற்பட்ட சலசலப்பின் காரணமாக சீமான் மற்றும் அவருடன் சென்ற நாம் தமிழர் கட்சியினர் அனைவரையும் விசாரணைக்காக கோட்டயம் மாவட்டக் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர் .

    பல மணி நேர விசாரணைக்குப் பின்பு நாம் தமிழர் கட்சியினர் வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு போலீசார் அனுமதி அளித்தார்கள். விசாரணைக்குப் பின்பு சீமான்தமிழகம் திரும்பினார்.
    திருச்சி விமான நிலையத்தில் மதிமுக - நாம் தமிழர்கள் கட்சியினர் மோதிய விவகாரத்தில் முன் ஜாமீன் கோரி சீமான் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், வரும் 30-ம் தேதி வரை அவரை கைது செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. #Seeman
    மதுரை:

    கடந்த வாரம் திருச்சி விமான நிலையத்தில் வைகோ மற்றும் சீமான் வருகைக்காக காத்திருந்த மதிமுக, நாம் தமிழர்கள் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இதில், பிரச்சனையை தூண்டி விட்டதாக சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனை அடுத்து, அவர் முன் ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, மே 30 வரை சீமானை கைது செய்ய போலீசாருக்கு தடை விதித்தனர். மேலும், தொண்டர்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமான பேசக்கூடாது என சீமானுக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார். #Seeman
    ×