என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெண்கள் பற்றி சீமான் பேசிய வீடியோவை நான் பார்க்கவில்லை - காளியம்மாள்
- பெண்களை சீமான் இழிவாக பேசி வருகிறார் என்று பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
- சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வைத்துள்ளது.
சீமான் தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக விஜயலட்சுமி அளித்த புகார் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சீமானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க முடியாது என்றும்
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கின் விசாரணைக்கு இடையே விஜயலட்சுமி குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்களை சீமான் இழிவாக பேசி வருகிறார் என்று பலரும் சீமானுக்கு கண்டனம் தெரிவித்தனர்.பெண்களை சீமான் இழிவாக பேசி வருகிறார் என்று பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்திரன் இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வைத்துள்ளது.
இதனிடையே, சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் வெளிப்பக்க கதவில் மீண்டும் சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. போலீசார் சம்மன் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த சம்மனை சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார்.
அதன்பேரில் சம்மனை கிழித்த சீமான் வீட்டு பணியாளரை கைது செய்வதற்காக நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்ராஜேஷ் சீமான் வீட்டுக்கு சென்றார்.
அங்கு காவலாளிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்மனை கிழித்தவர் மற்றும் சீமான் வீடு காவலாளியை போலீசார் கைது செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியை விட்டு அண்மையில் வெளியேறிய காளியம்மாளிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், சம்மனை வீட்டில் கொடுத்திருக்கலாம். அதை இவ்வளவு பெரிய விஷயமாக மாறியிருக்க தேவையில்லை.நேர்மையான முறையில் அரசு அதிகாரி இவ்விஷயத்தை கையாண்டிருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
சில நாட்களாக பெண்கள் குறித்து சீமான் இழிவாக பேசியது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, "சீமான் பெண்கள் பற்றி பேசிய வீடியோவை இன்னும் சரியா பாக்கல" என்று காளியம்மாள் பதில் அளித்தார்.






