search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kavadi"

    • ஆடி உற்சவம் கடந்த 12-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • பக்தர்கள் காவடி, பறவை காவடிகள் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி விளந்தி டசமுத்திரம் பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி மாதம் 10 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு கடந்த 12-ம் தேதி காப்பு கட்டி உற்சவம் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று தீமிதி உற்சவம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சீர்காழி மணிகூண்டு மங்கைய ர்க்கரசி விநாயகர் கோயிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்கள் எடுத்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

    அதேபோல் அலகு காவடி, பறவை காவடிகள் எடுத்து பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை சென்றடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கோயிலில் பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் தீபாராதனை காட்ட ப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    • இன்று சுடலைமாட சாமிக்கு உச்சிகால பூஜை நடைபெறும்.
    • அமுத படைத்தல், சமபந்தி விருந்துடன் விழா நிறைவடைகிறது.

    கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரம் ஈழத்தமிழர் குடியிருப்பு வன பேச்சியம்மன் கோவில் ஆனி கொடை விழா நேற்றுமுன்தினம் தொடங்கியது. விழாவின் முதல் நாளில் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், பிற்பகல் 2 மணிக்கு தீர்த்தவாரி போன்றவை நடந்தது. தொடர்ந்து கொம்பு, தப்பட்டையுடன் அம்மனுக்கு பறவை காவடி மற்றும் பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள பரசுராம விநாயகர் கோவில் முன்பிருந்து தொடங்கியது. ஊர்வலத்தை கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தொடங்கி வைத்தார். ஊர்வலம் விவேகானந்தபுரம், சுவாமிநாதபுரம், பழத்தோட்டம், மகாதானபுரம் ரவுண்டானா வழியாக கோவிலை வந்து அடைந்தது.

    விழாவில் நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பகல் 12 மணி மற்றும் 1 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. 3-வது நாளான இன்று (சனிக்கிழமை) சுடலைமாட சாமிக்கு உச்சிகால பூஜை, அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் மஞ்சள் நீராடுதல் நடைபெறும். பின்னர் அமுத படைத்தல், சமபந்தி விருந்துடன் விழா நிறைவடைகிறது.

    • திருப்பரங்குன்றம் வந்த காவடி பக்தர்களுக்கு மேலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • திருப்பரங்குன்றம் கோவிலுக்கு காவடி எடுத்து கொண்டு பக்தர்கள் புறப்பட்டு சென்றது.

    மேலூர்

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அழகாபுரி, கண்டனூர் ஆகிய பகுதியிலிருந்து ஒவ் வொரு ஆண்டும் திருப்பரங் குன்றம் முருகனுக்கு காவடி எடுத்து ஏராளமான பக்தர் கள் சென்று வருகின்றனர்.

    அதேபோல் இந்த ஆண்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கிருந்து புறப்பட்டு பாதயாத்தி ரையாக நேர்த்திக் கடன் செலுத்த காவடி எடுத்துக் கொண்டு பாதயாத் திரையாக வந்த பக்தர்கள் மேலூருக்கு வந்தனர். அவர்களுக்கு மேலூர் பகுதி முருக பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் காவடி எடுத்து வந்தவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த னர்.

    பின்னர் மேலூரில் உள்ள ஒரு திருமண மண்ட பத்தில் காவடிகள் வைத்து அங்கு முருகனுக்கு சந்தனம், திருநீறு, பால், பழ அபிஷே கம் மற்றும் தீபஆராதனை நடைபெற்றது. காவடி எடுத்து வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட் டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு காவடி எடுத்து கொண்டு பக்தர்கள் புறப்பட்டு சென்றது.

    • மாலை 4.30 மணியளவில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெறுகிறது.
    • இன்று இரவு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகத் திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனைத் தொடர்ந்து தினந்தோறும் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது.

    பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் திருமண மேடையில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி எழுந்தருளினார். சுவாமிக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து திருமணக் கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருவிழாவின் 7ம் நாள் நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. மாலை 4.30 மணியளவில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலையில் இருந்தே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் காவடி எடுத்தும், பாட்டுப்பாடியும் மலைக்கோவிலுக்கு வந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் பழனியில் இன்று கூட்டம் அலைமோதியது. இன்று இரவு 7.30 மணிக்கு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • நாளை வைகாசி விசாக திருவிழா நடக்கிறது.
    • தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்து வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. இதை முன்னிட்டு கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை வழியாக மாலை மற்றும் இரவு நேரங்களில் குழுக்களாக வந்து கொண்டு இருக்கின்றனர். சாலையின் இடது புறமாகவே அனைத்து வாகனங்களும் செல்கின்றன. அதே பக்கத்தில் பாதயாத்திரை பக்தர்களும் செல்லும் போது, வாகனங்கள் வருவதை கவனிக்க முடிவது இல்லை.

    ஆகையால் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு மோட்டார் வாகன சட்டம் சாலை விதிகள் மற்றும் வழிமுறைகள் சட்டத்தின் படி பாதசாரிகள் எப்போதும் சாலையில் வலது புறமாகவே நடந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    அதே போன்று பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கூடுமானவரை இரவு நேரம் பாதுகாப்பான இடங்களில் தங்கி விட்டு பகல் நேரத்தில் பாதயாத்திரை மேற்கொள்ளலாம்.

    இரவு நேர பாதயாத்திரையை தவிர்க்குமாறும், ஒருவேளை இரவு நேர பாதயாத்திரை மேற்கொண்டால் முதுகு பகுதி மற்றும் தோல் பைகள் போன்றவற்றில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டி பாதுகாப்பாக பாதயாத்திரை செல்ல வேண்டும்.

    மேலும் கோவிலுக்கு இறைவழிபாட்டு எண்ணத்துடன் வரும் பக்தர்கள் சாதி ரீதியான அடையாளங்கள் பொறிக்கப்பட்ட பனியன்கள், சட்டைகள் போன்றவற்றை அணிந்து வரவோ, அதை வெளிப்படுத்தும் வகையிலான கொடிகளை கொண்டு வரவோ கூடாது.

    கோவிலுக்கு சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்தும் வரக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சியாமளா தேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.‌
    • விழாவில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டு இரவில் அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் ரெட்டிபா ளையம் சக்கராம்பேட்டை பகுதியில் சியாமளா தேவி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பால்குடம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இன்று 36-ம் ஆண்டு பால்குடை விழா நடைபெற்றது.

    இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்தும், அலகு காவடி எடுத்தும், அலகு குத்தியும் குளக்கரையில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டனர்.

    பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை சென்றடைந்தனர். பின்னர் சியாமளா தேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.

    இன்று இரவில் அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது.

    விழாவில் வருகின்ற 30 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பா டுகளை நாட்டாமைகாரர்கள், கிராமவாசிகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

    • பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் பறவை காவடிகள் எடுத்தும், மாவிளக்கு போட்டு வழிபட்டனர்.
    • முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    திருவோணம்:

    திருவோணத்தில் முத்துமாரி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.

    இதில் 9 ஆம் நாள் திருவிழாவாக முத்துமாரி அம்மனுக்கு இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் பால்குடம் காவடிகள் மற்றும் பறவை காவடிகள் எடுத்தும் மாவிளக்கு போட்டு வழிபட்டு நேர்த்தி கடன் செலுத்தினர்.

    மேலும் முத்துமாரியம்மனுக்கு சிறப்பான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று 10ஆம் நாள் திருவிழாவாக தேர் திருவிழா நடைபெற்றது.

    • பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட மகாமாரியம்மன் தீமிதி திருவிழா, கடந்த 1-ந் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் தொடங்கியது.
    • சில பக்தர்கள் அலகு காவடி ஏந்தியவாறு தீக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட மகாமாரியம்மன் தீமிதி திருவிழா, கடந்த 1-ந் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதி உலாவாக வந்து தீக்குழி நடைபெற்ற இடத்தின் முன்பு நிறைவு பெற்றது.

    தொடர்ந்து, திரளான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு தீக்குழியில் இறங்கி மாரியம்மனை வழிபட்டனர். சில பக்தர்கள் அலகு காவடி ஏந்தியவாறு தீக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர். விழாவில் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசித்தனர்.

    • சித்திரை திருவிழா மே 2 ந்தேதி காப்பு கட்டி திருவிழா தொடங்கியது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே செங்கமங்கலம் தெய்வாங்கப் பெருமாள், அருள்மிகு காமாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 2 ந்தேதி காப்பு கட்டி திருவிழா தொடங்கியது.

    நேற்று புதன்கிழமை 9 ம் நாள் விழா காலையில் பால் குடம், காவடி எடுத்து வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.மாலை 5.00 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பேராவூரணி, செங்கமங்கலம், அம்மையாண்டி, மாவடுகுறிச்சி, பொன்காடு, மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தீர்த்தக்காவடி என்றவுடன், நம் நினைக்கு வருவது ‘கணக்கன்பட்டி காவடி’ தான்.
    • பூஜைக்காவடியை புனிதமாக மக்கள் கருதுகின்றனர்.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா என்றாலே, பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து வழிபடுவது சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.

    அதன்படி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தத்தை காவடியாக எடுத்து வந்து முருகபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

    தீர்த்தக்காவடி என்றவுடன், நம் நினைக்கு வருவது 'கணக்கன்பட்டி காவடி' தான். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர் தான் கணக்கன்பட்டி.

    இந்த கிராம மக்கள் மட்டுமின்றி பொட்டம்பட்டி, ராஜவரம்புதூர், பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் இணைந்து காவடி எடுப்பதே 'கணக்கன்பட்டி காவடி' என்று அழைக்கப்படுகிறது.

    கணக்கன்பட்டி பகுதியை சேர்ந்த பக்தர்கள், பாதயாத்திரையாக சென்று தீர்த்தக்காவடி எடுப்பது சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை பறை சாற்று வதாக கணக்கன்பட்டி காவடி உள்ளது.

    காவடி புறப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே 5 ஊர்களை சேர்ந்த காவடியை நிர்வகிக்கும் பரம்பரை நிர்வாகிகள், பக்தர்களிடம் கருத்துகளை கேட்டு அதற்கு ஏற்ப திட்டமிடுகின்றனர்.

    கணக்கன்பட்டியில் இருந்து கொடுமுடி காவிரி ஆற்றுக்கு நடந்தே சென்று திரும்ப வேண்டும். பூஜைக்காவடியை பின்தொடர்ந்தே செல்ல வேண்டும். பயணத்தின் போது தங்கும் இடங்களில் காவடி புறப்படுவதை தெரிவிக்க கொம்பு ஓசை ஒலித்தவுடன் தங்குமிடத்துக்கு திரும்ப வேண்டும் என்ற விதிமுறை குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.

    பூஜைக்காவடியை புனிதமாக மக்கள் கருதுகின்றனர். பூமாலை சூடிய இந்த காவடியை சிலர் மட்டுமே சுமந்து செல்கிறார்கள். அந்த காவடிக்கு பின்னால் பக்தர்கள் அணிவகுத்து செல்வது வழக்கம்.

    பங்குனி உத்திரத்துக்கு 7 நாட்களுக்கு முன்பு கொடுமுடிக்கு பக்தர்களின் பாதயாத்திரை தொடங்குகிறது. அதன்படி இந்த ஆண்டு தீர்த்தம் எடுப்பதற்காக கணக்கன்பட்டியில் இருந்து காவடி குடங்களுடன் கடந்த 30-ந்தேதி புறப்பட்டனர்.

    பூஜைக்காவடி முன்னே நடந்து செல்ல, அதன்பின்னர் மற்ற காவடி குழுவினர் அணிவகுத்து சென்றனர்.

    திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களை கடந்து பாதயாத்திரை காவடி சென்றது. அப்பியம்பட்டி, மயில்ரங்கம் ஆகிய இடங்களில் தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு விட்டு 2-ந்தேதி கொடுமுடி சென்று தங்கி காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

    பின்னர் கலசங்களில் தீர்த்தம் எடுத்து அங்குள்ள மகுடேஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்தனர். அதன்பிறகு 3-ந்தேதி கொடுமுடியில் இருந்து புனித தீர்த்தம் கொண்ட கலசங்களுடன் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

    நேற்று முன்தினம் மாலை இவர்கள், திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே உள்ள அப்பியம்பட்டி நால்ரோடு பகுதிக்கு வந்தடைந்தனர்.

    இந்தநிலையில் 220 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை பயணம் மேற்கொண்ட தீர்த்தக்காவடி குழுவினர் நேற்று காலை கணக்கன்பட்டிக்கு வந்தடைந்தனர்.

    5 கிராம மக்கள் திரண்டு வந்து, ஊரின் எல்லையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் காவடிக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு தீர்த்த கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் பொது அன்னதானம் நடந்தது.

    இதேபோல் கிராமத்து இளைஞர்கள் நீர், மோர் போன்றவற்றை வழங்கினர். இதைத்தொடர்ந்து கொம்பு, மேளதாளம் முழங்க ஊருக்குள் அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்குள்ள காளியம்மன் கோவிலில் தீர்த்த கலசங்களை வைத்து சிறப்பு பூஜை நடத்தினர்.

    8-வது நாளான இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணி அளவில் காளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்காவடி புறப்படுகிறது. காலை 5 மணிக்கு பழனி முருகன் கோவிலை காவடிக்குழுவினர் சென்றடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன்பிறகு முருக பெருமானுக்கு தாங்கள் கொண்டு சென்ற தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர். பின்னர் மலையின் பின்புறம் உள்ள பகுதிகளில் தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு விரதம் முடித்து மனநிறைவுடன் தங்களது ஊர்களுக்கு பக்தர்கள் திரும்பி செல்வார்கள்.

    • தீர்த்தக்குடங்களை அலங்கரிக்க காவடி கயிறுகள் பயன்படுகின்றன.
    • காவடி கயிறுகள் மிக அழகான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும்.

    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், கார்த்திகை திருவிழா, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் சிறப்பு பெற்றதாகும். தேவர்களை காக்க பன்னிரு கைகள், அறுமுகங்களோடு முருகப்பெருமான் சூரர்களுடன் போரிட்டு வெற்றி கண்டார். அதைத்தொடர்ந்து முருகனுக்கு இந்திரன் தன் மகள் தெய்வானையை பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில் திருமணம் செய்து கொடுக்கின்றார். இந்த நாளே பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    பங்குனி உத்திர திருவிழாவில் கொங்கு பகுதி மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து மேள, தாளம் முழங்க பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். பின்னர் முருகப்பெருமானுக்கு தாங்கள் கொண்டு வந்த தீர்த்தத்தை அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

    தீர்த்தம் நிறைந்த செம்பை தீர்த்தக்குடம் என்றும், தீர்த்தக்காவடி என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். தீர்த்தக்குடங்களை அலங்கரிக்க காவடி கயிறுகள் பயன்படுகின்றன. காவடி கயிறுகள் மிக அழகான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். குடத்தை மூடுவதற்கு வண்ண, வண்ண பட்டு துணிகளை பயன்படுத்துகின்றனர். தீர்த்தக்காவடி குடத்தை பக்தர்கள் தங்களது தலையில் வைத்து கைகளால் 2 புறத்தில் உள்ள கயிற்றை பிடித்து சுமக்கின்றனர்.

    பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவின்போது கொடுமுடியில் இருந்து தீர்த்தக்காவடி கொண்டு வருவதற்கு கொங்கு பகுதி கிராமங்களில் பழனி முருகன் கோவில் தீர்த்தக்காவடி சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். தீர்த்தக்குடத்தில் பழம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, இனிப்பு வகைகளை உள்ளே போட்டு துணியால் மூடி கட்டுகின்றனர். இந்த தீர்த்தக்காவடி எடுப்பதன் மூலம் நம்மை பிடித்துள்ள பாவ, கர்ம வினைகள் நீங்கும். ஆயுள், செல்வம் பெருகும்.

    • ஏப்ரல் 2-ந்தேதி புஷ்ப பல்லாக்கு விழா நடக்கிறது.
    • 9-ந்தேதி கடை ஞாயிறு திருவிழா நடக்கிறது.

    வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரையில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிராம வழிபாட்டுதலமாகவும், சக்தி தலமாகவும் போற்றப்படுகிறது. சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை பாடை காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 10-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 12-ந்தேதி முதல் காப்பு கட்டுதல், 19-ந்தேதி 2-ம் காப்பு கட்டுதல் நடந்தது. விழா நாட்களில் தொடர்ந்து அம்மன் வீதிஉலா காட்சி நடைபெற்று வந்தது.

    இந்த கோவிலில் பக்தர்கள் பாடைகாவடி எடுக்கும் நிகழ்வு முக்கிய நிகழ்ச்சியாகும். அதாவது நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து குணமடைய, மகா மாரியம்மனை வேண்டிக்கொள்வர். நோயில் இருந்து குணமடைந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனாக பாடை காவடி எடுப்பர்.

    அதன்படி பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் பாடைகாவடி நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக பக்தர்கள் கோவில் அருகே உள்ள குடமுருட்டி ஆற்றிங்கரையில் இருந்து பச்சை ஓலை படுக்கையுடன், பச்சை மூங்கிலால் பாடைகட்டி இறந்தவரை போல படுக்க வைத்து இறந்தவருக்கு செய்யப்படும் அனைத்து இறுதி சடங்குகளையும் செய்வர்.

    பின்னர் அந்த பாடை காவடியை அருகிலுள்ள குடமுருட்டி ஆற்று பகுதியிலிருந்து உறவினர்கள் 4 பேர் தூக்கி வந்து, மகா மாரியம்மன் கோவிலை 3 முறை வலம்வந்து தங்கள் நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்துவார்கள். நேற்று நடந்த இந்த திருவிழாவில் பாடை காவடி, பால்குடம், பால்காவடி, பறவைக்காவடி, செடில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை உள்ளூர் மட்டுமின்று, வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை மாலையிலிருந்து பக்தர்கள் வருகை அதிகரித்த நிலையில், நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர்.

    முன்னதாக கோவில் கருவறை அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் பல்வேறு விதமான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. இதில் விசலூர் கிராமத்தில் இருந்து செம்மறி ஆடு கரகம் அழைத்து வரப்பட்டு, கோவில் எதிரே அமைக்கப்பட்டுள்ள செடில் மரத்தில் செம்மரியாடு ஏற்றப்பட்டு 3 முறை வலம் வந்ததன் மூலம் திருவிழா நிறைவடைந்தது.

    நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பேரூராட்சி தலைவர் சர்மிளா சிவனேசன் மற்றும் செயல் அலுவலர் பரமேஸ்வரி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் செய்திருந்தனர். மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், திருவையாறு, மன்னார்குடி, மயிலாடுதுறை, பாபநாசம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    வருவாய்த்துறை, இந்துசமய அறநிலையத்துறை, தீயணைப்புத்துறை, போலீஸ் துறை, சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் பக்தர்கள் வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டனர்.

    கோவில் மற்றும் சுற்றுப்புற வளாகம் நகரின் முக்கிய பகுதிகளில், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மணவழகன் தலைமையில், வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் ரமணி, மேலாளர் சீனிவாசன் உள்ளிட்ட கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து அடுத்த மாதம்(ஏப்ரல்) 2-ந்தேதி புஷ்ப பல்லாக்கு விழாவும், 9-ந்தேதி கடை ஞாயிறு திருவிழாவும் நடக்கிறது.

    ×