என் மலர்

    நீங்கள் தேடியது "Kavadi"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நெல்லை மாநகர பகுதியில் கடந்த 2 நாட்களாக பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், நாளை பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

    நெல்லை:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தைப்பூசம் ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம்.

    பொங்கல் வைத்து வழிபாடு

    பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் அவர்கள் பொங்கல் பண்டிகை அன்று வீட்டில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.

    வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, கடையம், அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கடந்த 1 வாரமாக வே பாத யாத்திரை யாக திருச்செந்தூருக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

    வேண்டுதல் நிறைவேற...

    இதே போல் மதுரை, விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி பகுதியை சேர்ந்த வர்களும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களும் பாத யாத்திரை செல்கிறார்கள்.

    பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு இணங்க காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக செல்கிறார்கள்.

    நெல்லை மாநகர பகுதியில் கடந்த 2 நாட்களாக பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறு செல்லும் பக்தர்கள் கொக்கிரகுளத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு தைப்பூச மண்டபத்தில் ஓய்வு எடுத்து செல்கிறார்கள்.

    பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், நாளை பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விவசாயிகள் சாலையோரம் வாழைக்குலை தோரணம் கட்டி அலங்கரித்து உள்ளனர்.
    • பக்தர்கள் பல விதவிதமான காவடிகளை எடுத்து செல்கின்றனர்.

    தக்கலை அருகில் உள்ள குமாரகோவிலில் பிரசித்திபெற்ற வேளிமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன் நிறைவேற்ற விரதம் இருந்து காவடி எடுத்து செல்வது வழக்கம்.

    இதுபோல் திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே நாட்டில் மும்மாரி பெய்து, விவசாயம் செழித்து, மக்கள் பசி பட்டினி இன்றி வாழவும், சண்டை சச்சரவு இன்றி நிம்மதியுடன் வாழவும் தக்கலை பொதுப்பணித்துறை, போலீஸ் நிலையம் சார்பில் வேளிமலை முருகனுக்கு அதிகாரிகள் காவடி எடுத்து செல்வார்கள். இந்த பாரம்பரிய மரபு தொன்றுதொட்டு இன்று வரை அரசு சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு காவடி ஊர்வலம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பறக்கும் காவடி, வேல்காவடி, புஷ்பகாவடி, பால், பன்னீர், சந்தனம் போன்ற விதவிதமான காவடிகளை எடுத்து செல்கின்றனர்.

    பக்தர்கள் ஒவ்வொரு ஊரில் இருந்தும் காவடி எடுத்து கால்நடையாகவும், வாகனங்களில் தொங்கியவாறும் ஊர்வலமாக வேளிமலை முருகன்கோவிலுக்கு செல்வார்கள். கோவிலில் இன்று பிற்பகல் 3 மணியில் இருந்து முருகபெருமானுக்கு பக்தர்கள் காவடியில் கொண்டு செல்லும் அபிஷேக பொருட்கள் மூலம் அபிஷேகம் நடைபெறும்.

    இந்த விழாவையொட்டி பக்தர்களை வரவேற்கும் விதமாக தென்கரைதோப்பு ஊர் விவசாயிகள் பொதுமக்கள் சார்பில் புலியூர்குறிச்சியில் சாலையின் இருபுறங்களிலும் வரிசையாக வாழை குலை தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் தக்கலை போலீஸ் நிலையம், பொதுப்பணித்துறை அலுவலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அக்னிகொப்பரை, சக்தி கரகம், பால்குடம், அலகு காவடி புறப்பட்டு வாணவேடிக்கையுடன் வீதியுலா நடைபெற்றது.
    • அம்பாளுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் டாக்டர் மூர்த்தி ரோட்டில் அமைந்துள்ள ஜலசந்திர மகா மாரியம்மன் கோவில் உற்சவ பெருவிழா கடந்த 5ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது .அதனைத் தொடர்ந்து காவேரி ஆற்றங்கரையில் இருந்து அக்னிகொப்பரை, சக்தி கரகம், பால்குடம், அலகு காவடி புறப்பட்டு வானவேடிக்கையுடன் வீதி உலா காட்சிகள் நடைபெற்றது.

    இதையடுத்து அம்பாளுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மாலை நாதஸ்வர கச்சேரியுடன் வான வேடிக்கை முழங்க ஜலசந்திர மகா மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. பின்னர் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கும்பகோணம் டாக்டர் மூர்த்தி ரோடு தெருவாசிகள், பஞ்சாயத்தார்கள் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து பக்தர்கள் ஏராளமானோர் பால்குடம், அலங்கார காவடிகள் எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றி கொண்டனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே உள்ள உத்தாணியில் உள்ள முத்து முனியாண்டவர் கோவிலில் 50 ஆம் ஆண்டு ஊரணி பொங்கல்விழா, பால்குட காவடி எடுக்கும் விழா நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக பக்தர்கள் பால்கு டம், காவடி எடுத்து வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குடமுருட்டிஆற்றங்க ரையிலிருந்து பெண்கள் உட்பட பக்தர்கள் ஏராளமா னோர் பால்குடம், அலங்கார காவடிகள் எடுத்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து கன்னிமூல கணபதி, முத்து முனியாண்டவர், தர்ம சாஸ்தா ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வ ங்களுக்கு சிறப்புஅபிஷேக, ஆராதனையும், மஹா தீபாரதனையும் நடைபெ ற்றது.

    இந்நிக ழ்ச்சியில் உத்தானி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடு உத்தாணி கிராமவாசிகள், லாரி தொழிலாளர்கள் சங்கத்தினர், விழா குழுவினர்கள் கிராமவா சிகள் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்
    • இன்று இரவு 11 மணி வரை முருகனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படும்.இந்தாண்டு ஆடி கிருத்திகை சிறப்பு தரிசனம் அதிகாலை 5 மணி முதல் தொடங்கியது.

    நண்பகல் 12 மணி வரை, மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம், பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை, ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.

    இன்று இரவு 11 மணி வரை வடபழனி முருகனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    வடபழனி முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஏராளமானோர் முருகனை தரிசிக்க வந்திருந்தனர். பால்குடம் நேர்த்திக்கடன் ஊர்வலமும் நடந்தது. இதனால் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குடி நீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டன.

    அலகு குத்தி வரும் பக்தர்கள், மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ரூ.50 தரிசன கட்டணத்தில் பக்தர்கள் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. நீண்ட வரிசையில் பக்தர்கள் கோவிலுக்குள் சென்றனர். பக்தர்களுக்காக `கார் பார்க்கிங்' வசதி, வள்ளி திருமண மண்டபம் எதிரில் ஏற்பாடு செய்யப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படிப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து சென்று மலைக்கோவிலுக்கு சென்றனர்.
    • பழனி கோவிலின் உப கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். ரோப் கார் பராமரிப்பு பணிகள் காரணமாக இயக்கப்படாததால் மின் இழுவை ரெயில் மூலம் மூலமே பக்தர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் அப்பகுதியில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதே போல படிப்பாதை வழியாகவும் பக்தர்கள் நடந்து சென்று மலைக்கோவிலுக்கு சென்றனர். கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பிறகே சாமி தரிசனம் செய்ய முடிந்தது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி, மலர் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதனால் அடிவாரம் பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    காவடி எடுத்து வந்த பக்தர்கள் பாட்டுப்பாடியும், ஆட்டம் போட்டும் உற்சாகத்தோடு மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    மலைக்கோவில் பாரவேல் மண்டபம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அங்கு பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இதே போல பழனி கோவிலின் உப கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஆடி கிருத்திகை விழா நடைபெற உள்ளது.
    • ஆடி மாதம் தொடங்கிய நாள் முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

    விடுமுறை தினம் மற்றும் ஆடிமாதம் தொடங்கியதை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் திருத்தணி முருகன் கோவிலுக்கு நேற்று காவடி எடுத்து வந்தனர். முன்னதாக மலையடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை குளம் அருகே சூடம் ஏற்றி வழிப்பட்டு பின்னர் படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

    ஞாயிறு விடுமுறை மற்றும் ஆடி மாதம் தொடங்கிய முதல் நாளே மலைக்கோவில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் பொதுவழியில் ஒரு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். வருகின்ற 23-ந்தேதி ஆடிக்கிருத்திகை திருவிழா மற்றும் தெப்பத் திருவிழாவன்று லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனை வழிப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், வருகின்ற 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் ஆடி கிருத்திகை விழா மற்றும் தெப்பத்திருவிழாவும் நடைபெற உள்ளது. இதற்காக சரவணப்பொய்கை குளத்தில் இந்தாண்டிற்கான தெப்பம் கட்டும் பணியில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் தன்னார்வாலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக தெப்பம் அமைக்க பயன்படுத்தப்படும் பேரல்களுக்கு வண்ணம் தீட்டபட்டு, தெப்பத்தை கட்டி குளத்தில் மிதக்க விட்டு பரிசோதித்தனர். ஓரிரு நாட்களில் தெப்பம் கட்டும் பணி முழுமை பெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூரை அடுத்த புட்லூர் அருகே ராமாபுரம் பகுதியில் உள்ள பூங்காவனத்தம்மன் என்கிற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ஆடி மாதம் துவங்கியதை முன்னிட்டு நேற்று 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். பெண்கள் விரதம் இருந்து கோவிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர் பிரார்த்தனை நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் நேற்று காலை முதல் தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து திரளான பெண்கள் கோவிலில் குவிந்தனர். பின்னர், நேர்த்தி கடனை செலுத்தி சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.

    மேலும், வேண்டுதல் நிறைவேற்ற 20-க்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு கோவில் வளாகத்திலேயே சீமந்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான உறவினர்கள் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து வாழ்த்தினார். திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர். அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாத விழா நேற்று நடைபெற்றது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருபுவனத்தில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு கும்பகோணம் வழியாக சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சுவாமிமலை முருகன் கோவிலை அடைந்தனர்.
    கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியில் இருந்து ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோம வாரத்தை முன்னிட்டு சோமவார காவடி கமிட்டி சார்பில் ஏராளமான பக்தர்கள் சுவாமிமலை முருகன் கோவிலுக்கு காவடிகள் எடுத்து செல்வது வழக்கம்.

    நேற்று 140- வது ஆண்டாக திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவிலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளை எடுத்து சுவாமிமலை முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர்.

    பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருபுவனத்தில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு கும்பகோணம் வழியாக சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சுவாமிமலை முருகன் கோவிலை அடைந்தனர். தொடர்ந்து சுவாமிமலை முருகன் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவரான முருகன் மற்றும் வள்ளி தெய்வானை உள்ளிட்ட சாமிகளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். கொரோனா பரவல் காரணமாக நேற்று நடைபெற்ற பாதையாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து சென்றனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வலங்கைமான் மகாமாரியம்மன் கோவில் பாடைக்காவடி திருவிழா நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரையில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கிராம வழிபாட்டு தலமாகவும், சக்தி தலமாகவும் போற்றப்படுவதுடன், சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 8-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. கடந்த 10-ந் தேதி முதல் காப்பு கட்டுதலும், 17-ந் தேதி 2-ம் காப்பு கட்டுதலும் நடந்தது. விழா நாட்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

    நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் அடைய மகாமாரியம்மனை வேண்டி கொள்வர். பின்னர் நோயில் இருந்து குணமடைந்தவர்கள் இக்கோவிலுக்கு வந்து பச்சை ஓலை படுக்கையுடன் பச்சை மூங்கில் பாடையில் இறந்தவரை போல் படுத்து கொள்வர். இறந்தவரை எடுத்து செல்லும் இறுதி சடங்கு போன்று தீச்சட்டியுடன் அனைத்து சடங்குகளை செய்து அந்த பாடையை அவரது உறவினர்கள் 4 பேர் தூக்கி கொண்டு கோவிலை 3 முறை வலம் வருவார்கள். இதுவே பாடைக்காவடி திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாடைக்காவடி திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நோயில் இருந்து குணமடைந்தவர்கள் பச்சை ஓலை படுக்கையுடன் பச்சை மூங்கில் பாடையில் இறந்தவர் போல் படுத்து கொண்டனர். இறந்தவரை எடுத்து செல்லும் இறுதி சடங்கு போன்று தீச்சட்டியுடன் அனைத்து சடங்குகளை செய்து அந்த பாடையை அவருடைய உறவினர்கள் 4 பேர் தூக்கி கொண்டு கோவிலை 3 முறை வலம் வந்தனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பறவை காவடி, தொட்டில் காவடி, அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் வழங்கிய பால் மற்றும் அபிஷேக பொருட்களால் அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சங்கர், நகர செயலாளர் குணசேகரன் உள்பட பலர் சாமி தரிசனம் செய்தார்.

    மாலையில் அம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. செம்மறி ஆடு ஊர்வலமாக பிடித்து வரப்பட்டது. பின்னர் கோவிலின் எதிர்புறம் அமைக்கப்பட்டிருந்த செடில் மரத்தில் ஆட்டை ஏற்றி 3 முறை வலம் வந்து செடில் திருவிழா நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தங்ககவசம் சாற்றப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் ஆண்கள், பெண்கள் பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்திட சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது. கோவிலின் உட்புறம், வெளிபுறங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கூட்ட நெரிசல் கண்காணிக்கப்பட்டது. பேரூராட்சி சார்பில் அனைத்து பகுதிகளில் குப்பைகள் அகற்றி தடையில்லா குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் செய்து இருந்தனர். ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜவேலு தலைமையில், மருத்துவ குழுவினர், தீயணைப்பு நிலைய வாகனத்துடன் தீயணைப்பு வீரர்கள் கோவிலின் முன்புறம் முகாம் அமைத்து தயார் நிலையில் இருந்தனர்.

    தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவின்படி, திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு துரை ஆலோசனைபடி, நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன், திருவாரூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜோசப், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா மற்றும் போலீசார் 300-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மின்சார துறை சார்பில் தடையில்லா மின்சாரம் வினியோகிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கிளை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், மன்னார்குடி, திருவையாறு, கும்பகோணம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் இருந்து வலங்கைமானுக்கு 48 மணி நேரத்திற்கு மேலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இரவு 7 மணியளவில் 1 மணி நேரத்திற்கு சிறப்பு வான வேடிக்கைகள் நடந்தது.

    விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவக்குமார், ஆய்வாளர் ரமணி, மேலாளர் சீனிவாசன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குமரி மாவட்டத்தில் இருந்து திருச்செந்தூருக்கு காவடி ஊர்வலம் புறப்பட்டது.இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து காவடி ஊர்வலங்கள் புறப்பட்டு செல்வது வழக்கம். அதன்படி, மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல் காவடி ஊர்வலம் நேற்று புறப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் பறக்கும் வேல்காவடிக்கு பூஜை, கணபதி ஹோமம், வேல் தரித்தல் போன்றவை நடந்தது.

    நேற்று யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து காவடி ஊர்வலம் புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று அங்கு தீபாராதனை நடந்தது.

    மாலையில் பறக்கும் வேல் காவடிகள், புஷ்ப காவடிகள் திருச்செந்தூருக்கு புறப்பட்டன. இந்த காவடி ஊர்வலம் மணவாளக்குறிச்சி, அம்மாண்டிவிளை, ராஜாக்கமங்கலம் வழியாக சென்றது.

    வடக்கன்பாகம் தர்ம சாஸ்தா கோவிலிலும் வேல்தரித்தல், காவடி பூஜைகள், அன்னதானம், காவடி அலங்காரம் போன்றவை நடந்தது. நேற்று காவடி ஊர்வலம் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று அங்கு தீபாராதனை நடந்தது.

    மாலையில் பறக்கும் காவடி ஊர்வலம் திருச்செந்தூருக்கு புறப்பட்டது. இதுபோல், சேரமங்கலம் ஆழ்வார்கோவிலில் இருந்தும் பறக்கும் வேல்காவடி ஊர்வலம் திருச்செந்தூருக்கு சென்றது.

    குளச்சலில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து பக்தர்கள் பறக்கும் காவடி, வேல்காவடி எடுத்தும், சிறுவர்கள் முருகன் வேடம் அணிந்தும், குளச்சல் போலீஸ் நிலைய பகுதிக்கு வந்தனர்.

    அங்கு காவடிகளை வரவேற்க ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். பின்னர் காவடிகள் திங்கள்சந்தை வழியாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றது.

    இரணியல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான இரணியல்கோணம், நெய்யூர், தலக்குளம் போன்ற பகுதிகளில் இருந்து காவடி ஊர்வலங்கள் புறப்பட்டு திங்கங்சந்தையில் உள்ள ராதாகிருஷ்ணன் கோவிலுக்கு வந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், அங்கிருந்து பறவை காவடி உள்பட பல்வேறு காவடிகள் ஊர்வலமாக திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டன. இந்த ஊர்வலம் கண்டன்விளை, தோட்டியோடு, நாகர்கோவில் வழியாக சென்றது. ஊர்வலத்தையொட்டி திங்கள்சந்தை நகரில் நேற்று போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin