search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "milk pot"

    • சியாமளா தேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.‌
    • விழாவில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டு இரவில் அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் ரெட்டிபா ளையம் சக்கராம்பேட்டை பகுதியில் சியாமளா தேவி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பால்குடம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இன்று 36-ம் ஆண்டு பால்குடை விழா நடைபெற்றது.

    இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்தும், அலகு காவடி எடுத்தும், அலகு குத்தியும் குளக்கரையில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டனர்.

    பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை சென்றடைந்தனர். பின்னர் சியாமளா தேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.

    இன்று இரவில் அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது.

    விழாவில் வருகின்ற 30 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பா டுகளை நாட்டாமைகாரர்கள், கிராமவாசிகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

    • கபிஸ்தலம் அருகே அக்கரைப்பூண்டி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
    • அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    கபிஸ்தலம்:

    தஞ்சாவூர் கபிஸ்தலம் அருகே அக்கரைப்பூண்டி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவி்லில் பால்குட திருவிழா நடைபெற்றது.

    விழாவையொட்டி அக்கரைப்பூண்டி காவேரி ஆற்றங்கரையில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், சக்தி கரகம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின்பு அம்மனுக்கு பால்அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    • வைகாசி மாத அமாவாசை பெருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தடைந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியை அருகே உள்ள பூவைத்தேடி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீபாலஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் வைகாசி மற்றும் அமாவாசையை பெருவிழாவை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 501 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.

    விரதம் இருந்த பக்தர்கள் மாணிக்க விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் செண்டை மேளங்கள் முழங்க பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்தடைந்தனர்.

    பின்னர் ஸ்ரீபாலஆஞ்சநேயருக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு மஹாதீபாரதணை காண்பிக்கப்பட்டது.இதில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சக்தி மலை முருகன் கோவிலுக்கு சென்றனர். ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

    கோத்தகிரி அருகே சக்தி மலை முருகன் கோவில் நேற்று வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு டானிங்டன் மகா சக்தி கணபதி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சக்தி மலை முருகன் கோவிலுக்கு சென்றனர். ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். இவ்விழாவில் இட்டக்கல் போஜராஜ், கோவில் கமிட்டி கோத்தகிரி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் கோவில் பூசாரிகள் கலந்து கொண்டனர்

    ×