search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலஆஞ்சநேயர் கோவிலில் பால்குட ஊர்வலம்
    X

    பால்குடங்களை ஊர்வலமாக எடுத்த வந்த பக்தர்கள்.

    பாலஆஞ்சநேயர் கோவிலில் பால்குட ஊர்வலம்

    • வைகாசி மாத அமாவாசை பெருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தடைந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியை அருகே உள்ள பூவைத்தேடி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீபாலஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் வைகாசி மற்றும் அமாவாசையை பெருவிழாவை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 501 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.

    விரதம் இருந்த பக்தர்கள் மாணிக்க விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் செண்டை மேளங்கள் முழங்க பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்தடைந்தனர்.

    பின்னர் ஸ்ரீபாலஆஞ்சநேயருக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு மஹாதீபாரதணை காண்பிக்கப்பட்டது.இதில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×