search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால்குடம்"

    • கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.
    • கட்டச் சோலைப்பட்டி கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    மேலூர்

    மேலூர் தாலுகா வெள்ளலூர் சேகரம், கட்டச்சோலை பட்டியல் அமைந்திருக்கும் ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் சமேத பாமா ருக்மணி கோவிலின் 16-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. பக்தர்கள் மாலை அணிந்து 15 நாட்கள் விரதம் இருந்து வந்தனர்.

    கோபாலகிருஷ்ண கோவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்று பின்பு கோவில் வந்தடைந்தனர். பின்னர் கிருஷ்ணனுக்கு பாலா பிஷேக நடைபெற்றது. உரியடித்தல் தீப ஆராதனை நடைபெற்றது. பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கோவில் அருகே உள்ள விநாயகர்கோவில் மண்டபத்தில் சிறப்பு அன்ன தானம் நடைபெற்றது.

    இந்த அன்னதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட னர். கோபாலகிருஷ்ணன் சுவாமி ஊர்வலம் இடைய வலசை, இடையர்கோவில் பட்டி, இந்திராநகர், வெள்ள லூர் நகரத்தார் வீதி, வெள்ள லூர் மந்தை கருப்பன சுவாமி கோவில், ஏழை காத்த அம்மன் கோவில், அரசு மருத்துவமனை, மன்ற மலை ஒத்தப்பட்டி வழியாக சுவாமி கோவில் வந்தடைந் தது. சிறுவர்களுக்கு விளை யாட்டு போட்டு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கட்டச் சோலைப்பட்டி கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • மேலூர் கட்டச்சோலை பட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
    • கோவில் அருகே உள்ள விநாயகர்கோவில் மண்டபத்தில் சிறப்பு அன்ன தானம் நடைபெற்றது.

    மேலூர்

    மேலூர் தாலுகா வெள்ள லூர் சேகரம், கட்டச்சோலை பட்டியல் அமைந்திருக்கும் ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் சமேத பாமா ருக்மணி கோவிலின் 16-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. பக்தர்கள் மாலை அணிந்து 15 நாட்கள் விரதம் இருந்து வந்தனர்.

    கோபாலகிருஷ்ண கோவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்று பின்பு கோவில் வந்தடைந்தனர். பின்னர் கிருஷ்ணனுக்கு பாலா பிஷேக நடைபெற்றது. உரியடித்தல் தீப ஆராதனை நடைபெற்றது. பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வழி பட்டனர். கோவில் அருகே உள்ள விநாயகர்கோவில் மண்டபத்தில் சிறப்பு அன்ன தானம் நடைபெற்றது.

    இந்த அன்னதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட னர். கோபாலகிருஷ்ணன் சுவாமி ஊர்வலம் இடைய வலசை, இடையர்கோவில் பட்டி, இந்திராநகர், வெள்ள லூர் நகரத்தார் வீதி, வெள்ள லூர் மந்தை கருப் பன சுவாமி கோவில், ஏழை காத்த அம்மன் கோவில், அரசு மருத்துவமனை, மன்ற மலை ஒத்தப்பட்டி வழியாக சுவாமி கோவில் வந்தடைந் தது. சிறுவர்களுக்கு விளை யாட்டு போட்டு நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கட்டச் சோலைப்பட்டி கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்த னர்.

    • ஆவணி மாதம் நாகசதுர்த்தி அன்று பால் குட திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • பால்குடம் சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    சீர்காழி:

    கொள்ளிடம் அருகே குமிளங்காட்டில் ஆதிநாகத்தம்மன் கோயில் அமைந்துள்ளது.

    இந்த கோயிலில் வருடம் தோறும் ஆவணி மாதம் நாக சதுர்த்தி அன்று பால் குட திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்து வார்கள்.

    அதேபோல் இந்த வருடம் பால்குடம் திருவிழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு முதல் நாளிலிருந்து பத்தாம் நாள் வரை காப்பு கட்டிக் கொண்ட பக்தர்கள் 500க்கும் மேற்பட்டோர் தலையில் பால்குடம் மற்றும் அலகு காவடிகள் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக நாகத்தம்மன் கோயிலுக்கு வந்து அடைந்தனர்.

    அதனைத் தொடர்ந்த பக்தர்கள் எடுத்து வந்த பாலை கொண்டு நாகாத்தம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு திபாரதனை காட்டப்பட்டது.

    விழாவில் பல்வேறு மாவட்டங்களி லிருந்தும் வந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் கோயில் அறங்காவலர் தெய்வேந்த அடிகளார் மற்றும் விழா குழுவினர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • மாரியம்மனுக்கு 1,008 இளநீர் அபிஷேகம் நடந்தது.
    • அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை சேந்தங்குடியில் படைவெட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிக் கடை ஞாயிற்று கிழமையை முன்னிட்டு பால் குடம் விழா நடைபெற்றது. கருவரையில் உள்ள மாரி யம்மன் திருவுருவத்துக்கு 1008 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து காவிரி கரையில் இருந்து ஊர்வலமாக பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன் அம்பாள் விதி உலாவும், பெண்கள் பால்குடம் தலையில் சுமந்துக் கொன்டு அம்மன் சன்னதிக்கு வந்து தங்களது நேர்த்ததிக் கடனை செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு மகா அபிஷேகமும், அலங்கார அர்ச்சனை செய்து தீபாரத னையும் நடைபெற்றது.

    தொடர்ந்து பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்க ப்பட்டது.மாலை சந்தன காப்பு அலங்காரம் செய்து ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற் பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா ராஜேந்திரன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தார்கள். விழாவில் நகர்மன்ற துணைத் தலைவர் சிவக்குமார், சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் தொழிலதிபர்ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் மோகன், ஆன்மீகத் தொண்டர் எஸ். குருமூர்த்தி, சாமி, செல்வம், ரவி உட்பட பலர் கலந்துக்கொன்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பத்ரகாளி அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
    • நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெருவில் பெரிய ஆண்டிச்சி என்கிற பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 6-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. இதனை தொடர்ந்து சாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் பத்ரகாளி அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. கோமுகி நதிக்கரையில் இருந்து பெண்கள் 108 பால்குடங்களை ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • 41-வது ஆண்டு பால்குடம் ஊர்வலம் இன்று நடந்தது.
    • விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சேப்பநாய க்கன்வாரி பகுதியில் கோட்டை முனியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் பால்குட ஊர்வலம் நடைபெறும்.

    அதன்படி 41-வது ஆண்டு பால்குடம் ஊர்வலம் இன்று விழா குழு பொறுப்பாளர்கள் தாமஸ், பூமிநாதன் ,சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

    • ஆடி மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமை அன்று பால்குடம் ஊர்வலம் இக்கோவிலில் நடைபெறும்.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொண்டு வந்த பாலை மூலவருக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு திருவரங்க செல்லியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் 18-ம் ஆண்டு பால்குடம் ஊர்வலம் இன்று நடைபெற்றது. ஆடி மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமை அன்று பால்குடம் ஊர்வலம் இக்கோவிலில் நடைபெறும்.

    இதன்படி இக்கோவிலில் இன்று காலை பால்குட ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக பெருமாள் கோவிலில் இருந்து அருள்மிகு திருவரங்க செல்லியம்மனுக்கு தாய் வீட்டு சீதனமான மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை, பாக்கு, பூ, பழம், வளையல், இனிப்பு, காரம், புது துணி உள்ளிட்டவை கொண்டு வந்து செலுத்தும் நிகழ்ச்சியாக ஸ்ரீதேவி-பூதேவி சமேத அருள்மிகு அழகிய சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பொருட்கள் பஜனை கோவிலை வந்து அடைந்தது.

    இதையடுத்து பால் குடத்துடன்-தாய் வீட்டு சீதனத்தையும் பக்தர்கள் இந்த ஊராட்சியில் உள்ள மாட வீதிகள் மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று அருள்மிகு திருவரங்க செல்லியம்மன் ஆலயத்தில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதன் பின்னர், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொண்டு வந்த பாலை மூலவருக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மூலவருக்கு அலங்காரம் மகா தீபராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிகளில் இக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்காண ஏற்பாடுகளை கிராம மக்களும், விழா குழுவினர்களும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் சிறப்பாக செய்திருந்தனர்.

    • மதியம் அம்பாளுக்கு அபிஷேகமும், கஞ்சிவார்த்தலும், அன்னதானமும் நடைபெற்றது.
    • மாலை அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரமும், அன்னதானமும் நடைபெற்றது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தால் நடத்தப்படும் ஆழ்வான்கோவில் தெரு, ஜோதி மாரியம்மன் கோவிலின் 3-ம் ஆண்டு அபிஷேக, ஆராதனை விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு சர்க்கரை படித்துறையில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. பின், அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், மதியம் அம்பாளுக்கு அபிஷேகமும், கஞ்சிவார்த்தலும், அன்னதானமும் நடைபெற்றது. தொடர்ந்து, மாலை அன்னபூரணி அலங்காரமும், அன்னதானமும் நடைபெற்றது.

    விழாவில் கோபால கிருஸ்ணன், சீனுவாஸ்சன், சேதுராமன், சங்கத்தலைவர் கீர்த்திவாசன், துணைத்தலைவர் சுரேஷ், செயலாளர் சுரேஷ், பொருளாளர் அபிஷேக் முரளி, நிர்வாக கமிட்டி தலைவர் இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.
    • முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்து வதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ (ஓரிரு நாள் முன்பின்) தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்தநாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

    தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.

    தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கி செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்.

    கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப் பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகை பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்த வரே கந்தன் எனப்படும் முருகனாவார்.

    சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக காப்பாற்றினான்.

    தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

    தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கு கின்றனர். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.

    முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாக சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்து வதையும் பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.

    • மூலவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
    • கெங்கையம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் ஆனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை குடியாத்தம் முத்தாலம்மன் கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்து கெங்கையம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்துவது வழக்கம்.

    அதன்படி ஆனி மாத கடைசி வெள்ளியான நேற்று கெங்கையம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு குடியாத்தம் தரணம்பேட்டை முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும் நடைபெற்றன.

    தொடர்ந்து 1,501 பெண்கள் பால்குடம் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கெங்கையம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு மூலவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் தேவகி கார்த்திகேயன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பால்குட ஊர்வலத்தை முன்னிட்டு மூலவர் கெங்கையம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கோவில் வளாகத்தில் ஆணி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வேப்பிலைக்காரி அம்மனாக பக்தர்களுக்கு கெங்கையம்மன் காட்சியளித்தார்

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி டி.திருநாவுக்கரசு, ஊர் நாட்டாண்மை ஆர்.ஜி.எஸ். சம்பத், தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணி கமிட்டி தலைவர் ஆர்.ஜி.எஸ். கார்த்திகேயன் உள்ளிட்ட விழாக்குழுவினர், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

    • பத்ரகாளியம்மனுக்கு கரக உற்சவம் நடந்தது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் காமராஜர் தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் பால்குடம் மற்றும் காவடி திருவிழா நடந்தது. முன்னதாக மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரை துலா கட்டத்தில் புனித நீராடிய பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க காப்பு கட்டி பால்குடம் மற்றும் அலகு காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்த பால்குடத்திற்கு வீடு, வீடாக பக்தர்கள் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

    பின்னர் பால்குட ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. அங்கு பத்ரகாளியம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பால்குடத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பத்ரகாளியம்மனுக்கு கரக உற்சவம் நடந்தது.

    • பால்குட திருவிழா கணபதி ஹோமம், மகாகாளி மூல மந்திர ஹோமம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    • விழாவையொட்டி அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமணஞ்சேரி ஊராட்சி அஞ்சாறுவார்த்தலை பழைய தெருவில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் கரகம், பால்குட திருவிழா கணபதி ஹோமம், மகாகாளி மூல மந்திர ஹோமம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கரகம், பால்குட திருவிழா நேற்று நடந்தது.

    முன்னதாக குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து கரகம், பால்குடம் எடுத்த பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    விழாவையொட்டி அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    திருவிளக்கு பூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×