search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devotees take"

    • தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • .இதில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நொண்டி கோவில்பட்டியில் ஆதிபராசக்தி கோவில் உள்ளது. இதன் 27-ம் ஆண்டு வருடாந்திர ஆடிப்பூர திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு ஏராளமான பெண்கள் அக்னிச்சட்டி ஏந்தியும், விவசாயம் செழிக்க முளைப்பாரி எடுத்தும், கஞ்சி களையம் சுமந்தும், சில பக்தர்கள் நேர்த்திக்கடனாக அலகு குத்தியும் நொண்டி கோவில் பட்டியில் உள்ள கோவிலில் இருந்து புறப்பட்டு மேலூர் அழகர்கோவில் ரோடு, பெரிய கடை வீதி, செக்கடி பஜார், பஸ் நிலையம், சேனல் ரோடு வழியாக நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து மீண்டும் கோவிலை வந்து அடைந்தனர்.அதனைத் தொடர்ந்து ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் முன்பாக அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    • பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • மாணவ நல மன்றம் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள புல்வாய்குளம் கிராமத்தில் பழமையான சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி அன்று சித்திரை திருவிழாவையொட்டி பெருமாள் கள்ளழகர் வேடம் அணிந்து ஆற்றில் இறங்கினார். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் விலை நிலங்களில் விளைந்த நெல், கேழ்வரகை இடித்து புட்டு வைத்து பெருமாளுக்கு படைத்து வழிபாடு நடத்தினர்.

    விழாவையொட்டி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை புல்வாய்குளம் கிராம மக்கள், மாணவ நல மன்றம் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

    ×