search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
    X

    பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

    • பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • மாணவ நல மன்றம் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள புல்வாய்குளம் கிராமத்தில் பழமையான சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி அன்று சித்திரை திருவிழாவையொட்டி பெருமாள் கள்ளழகர் வேடம் அணிந்து ஆற்றில் இறங்கினார். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் விலை நிலங்களில் விளைந்த நெல், கேழ்வரகை இடித்து புட்டு வைத்து பெருமாளுக்கு படைத்து வழிபாடு நடத்தினர்.

    விழாவையொட்டி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை புல்வாய்குளம் கிராம மக்கள், மாணவ நல மன்றம் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×