search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை முத்துமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
    X

    பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

    மழை முத்துமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

    • சித்திரை திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • மேளதாளங்கள் முழங்க பால்குடங்களை சுமந்து வந்து மழைமுத்து மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் ஸ்ரீ மழைமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது .

    இந்த கோவிலில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 501 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

    காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்களின் பால்குட ஊர்வ லமானது கன்னித்தோப்பு சௌந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் மேளதாளங்கள் முழங்க பால்குடங்களை சுமந்து வந்து மழைமுத்து மாரியம்ம னுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் பாரம்பரிய கலையான தம்பிரான்குடியிருப்பு இறையருள் கலைக்குழுவினரின் சிறுவர் சிறுமியர்களின் கோலாட்டம் நிகழ்ச்சி நடை பெற்றது.

    சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×