search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "milk jug"

    • மதியம் அம்பாளுக்கு அபிஷேகமும், கஞ்சிவார்த்தலும், அன்னதானமும் நடைபெற்றது.
    • மாலை அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரமும், அன்னதானமும் நடைபெற்றது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தால் நடத்தப்படும் ஆழ்வான்கோவில் தெரு, ஜோதி மாரியம்மன் கோவிலின் 3-ம் ஆண்டு அபிஷேக, ஆராதனை விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு சர்க்கரை படித்துறையில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. பின், அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், மதியம் அம்பாளுக்கு அபிஷேகமும், கஞ்சிவார்த்தலும், அன்னதானமும் நடைபெற்றது. தொடர்ந்து, மாலை அன்னபூரணி அலங்காரமும், அன்னதானமும் நடைபெற்றது.

    விழாவில் கோபால கிருஸ்ணன், சீனுவாஸ்சன், சேதுராமன், சங்கத்தலைவர் கீர்த்திவாசன், துணைத்தலைவர் சுரேஷ், செயலாளர் சுரேஷ், பொருளாளர் அபிஷேக் முரளி, நிர்வாக கமிட்டி தலைவர் இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அலங்காநல்லூர் அருகே பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.
    • இதற்கான ஏற்பாடுகளை 24 மனை தெலுங்குபட்டி செட்டி உறவின்முறை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரியஇலந்தைகுளம் கிராமத்தில் செல்வ விநாயகர், மாசான கருப்புசாமி திருக்கோவில் வைகாசி உற்சவ விழா நடந்தது. 2 நாட்கள் நடந்த இந்த விழாவில் சாத்தவுராயன் சுவாமிக்கு வாண வேடிக்கையுடன் பக்தர்கள் பழக்கூடை எடுத்து சென்றனர். இதை தொடர்ந்து செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கிடாய் வெட்டுதல் நடந்தது. ஏற்பாடுகளை 24 மனை தெலுங்குபட்டி செட்டி உறவின்முறை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • முன்னதாக பந்தக்கால் முகூர்த்தமும் தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    • பக்தர்கள் சக்திகரகம், அக்னி கொப்பரை, அலகுகாவடி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தை அடுத்த மாத்தி கிராமத்தில் உள்ள ரணகுண மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், காவடி, அலகு காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    முன்னதாக பந்தக்கால் முகூர்த்தமும் தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவையொட்டி மகா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. சிறப்பு மலர் அலங்காரத்தில் மகா காளியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை கும்பகோணம் அரசலாற்றங்கரையிலிருந்து சுமார் 100-க்கு மேற்பட்ட பக்தர்கள் சக்திகரகம், அக்னி கொப்பரை, வேல், காவடி, அலகுகாவடி, பால்குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    இதனை தொடர்ந்து கோவிலில் மகா காளியம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • திருப்பத்தூரில் வசந்த விழாவில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
    • வசந்த பெருவிழா குழு நிர்வாகத்தால் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பூமாயி அம்மன் கோவில் 89-ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு

    13-ம் ஆண்டு வசந்த விழா நடந்தது. 10 நாள் விழாவாக நடந்த இந்த விழாவில் பால்குட திருவிழா விமரிசையாக நடந்தது. சாம்பான் ஊரணி அருகே உள்ள கோட்டை கருப்பர் கோவிலில் இருந்து பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டோர் பால்குடம், பூத்தட்டுகளை தலையில் சுமந்து 4 ரோடு, கீழரத வீதி, தேரோடும் வீதிகள் வழியாக கோவில் திருக்குளத்தை சுற்றி பூமாயி அம்மன் கோவிலை வந்தடைந்தனர். அதன்பின்பு பூமாயி அம்மனுக்கு திருமஞ்சனம், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 8 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் கொண்டு வந்த பூக்களால் பூமாயி அம்மனுக்கு பூச்சொரிந்தனர். வசந்த பெருவிழா குழு நிர்வாகத்தால் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர், தென்மாபட்டு, தம்பிபட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த சோழிய வெள்ளாளர் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோவில் வசந்த விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பூமாயி அம்மன் கோவில் உள்ளது. இங்கு 89-ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு 13-ம் ஆண்டு வசந்த பெருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. இன்று வசந்த திருவிழாவில் பால்குட ஊர்வலம் மிகவும் விமரிசையாக நடை பெற்றது.

    இதில் திருப்பத்தூர், தென்மாபட்டு, தம்பிபட்டி ஆகிய பகுதி களை சேர்ந்த இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு பால்குடம், பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக சென்றனர். சாம்பான் ஊரணி அருகே உள்ள கோட்டை கருப்பர் கோவிலில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் பூத்தட்டுகளை தலையில் சுமந்து 4 ரோடு, கீழரத வீதி, தேரோடும் வீதிகள் வழியாக கோவில் திருக்குளத்தை சுற்றி பூமாயி அம்மன் கோவிலை வந்தடைந்தனர். அதன்பின்பு பக்தர்கள் கொண்டுவந்த பாலால் பூமாயி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து திருமஞ்சனம், தயிர், பஞ்சாமிர்தம் சந்த னம், குங்குமம் உள்ளிட்ட 8 வகையான திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் வெள்ளி அங்கியில், சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதன்பிறகு பக்தர்கள் கொண்டு வந்த பூக்களால் பூமாயி அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. அந்த பூக்களை பெண்கள் மடி ஏந்தி வாங்கிச்சென்றனர். பால் குட விழாவில் கலந்து கொண்ட பக்தர் களுக்கு பால்குடம், பூ உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. காலை, மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெய்ஹிந்த் வர்த்தக சங்க அமைப்பாளர் பாலகிருஷ்ணன், தலைவர் சுரேஷ் ராமன், செயலாளர் சண்முகநாதன், பொருளாளர் ராஜா, உயர்மட்டகுழு உறுப்பினர் சரவணன் மற்றும் உறுப்பி னர்கள் செய்திருந்தனர்.

    • சிங்கம்புணரி முத்து வடுகநாத சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
    • பால்குடம் எடுத்து வந்து கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வணிகர் நல சங்கத்தின் சார்பாக 82-ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்து பக்தர்கள் சித்தர் முத்துவடுகநாதருக்கு அபிஷேகம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து பெரியகடை வீதி, நான்கு முனை சந்திப்பு சாலை, வேங்கைபட்டி சாலை வழியாக நகரின் முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து கோவிலை சென்றடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வந்து கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வணிகர் நலச்சங்க தலைவர் வீரபாண்டியன், செயலாளர் வாசு, திருமாறன், பொருளாளர் பாப்பா கணேசன், சரவணன், பாலன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • நொண்டி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது.
    • காஞ்சிவனம் சுவாமி கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் நொண்டி கோவில்பட்டியில் அமைந்துள்ள நொண்டி கோவில் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு இன்று நொண்டி கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று காலை மேலூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீ காஞ்சிவனம் சுவாமி கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து கிராம அம்பலகர்கள் முன்னிலையில் ஊர்வமாய் சேனல் ரோடு, ஆற்றுக்கால் வழியாக கோவிலை சென்றடைந்தனர். அங்கு சாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

    • ஆனங்கூரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 25-ந் தேதி, பூச்சாட்டுதல், கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • காலை 8 மணிக்கு, சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால்குடங்களை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஆனங்கூரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 25-ந் தேதி, பூச்சாட்டுதல், கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து காப்பு கட்டி பண்டாரம், தினமும் இரவு 7 மணிக்கு மேல் தீச்சட்டியை ஏந்தி கோவிலை சுற்றி வரும் நிகழ்ச்சியும், தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்று வந்தது.

    நேற்று முன்தினம் வடிசோறு நிகழ்ச்சியும், நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. இன்று மாலை பொங்கல், மாவிளக்கு திருவிழா நடைபெறுகிறது.

    முன்னதாக காலை 8 மணிக்கு, சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால்குடங்களை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு அருகில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் வளாகத்தில் பால்குடங்களை வைத்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து காமாட்சி அம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அங்கிருந்து புறப்பட்ட பால்குடம் ஊர்வலம், மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது.

    பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலை, மாரியம்மனுக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவி யங்களால் அபிஷேகமும், பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இன்று மாலை 5 மணிக்கு மேல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், மாவிளக்குகளை ஊர்வலமாக கொண்டு வந்தும் பூஜை செய்வர். இரவு வான வேடிக்கையும் நடைபெறுகிறது.

    நாளை காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மாலை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்துள்ளனர்.

    • சிவகங்பிகை அருகே பிரான்மலையில் பால்குட ஊர்வலம் நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை பரம்பரை ஸ்தானிகம் உமாபதி சிவாச்சாரியார் செய்திருந்தார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பிரான்மலை வடுக பைரவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் ஜெயந்தன் பூஜை நடத்தப்படுகிறது. இதையொட்டி பி.மதகுபட்டி ராமர் கோவிலில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் மலைக்கோவிலை நோக்கி புறப்பட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம் மலைக்கோவிலை வந்தடைந்தது. அங்கு வடுக பைரவருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கு திருமஞ்சனம், பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், விபூதி உள்ளிட்ட வாசனாதி திரவியங்கள் மூலம் அபிஷேகங்கள் நடந்தன. விழா ஏற்பாடுகளை பரம்பரை ஸ்தானிகம் உமாபதி சிவாச்சாரியார் செய்திருந்தார்.

    மேலும் மண்ணால் செய்யப்பட்ட நாய், பன்றி பதுமைகளை பக்தர்கள் தோளில் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • தீக்குண்டத்தில் இறங்கி வேண்டுதல்களை நிறைவேற்றனர்.
    • பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் இருந்து நேற்று இரவுதிரளான பக்தர்கள் அலகு குத்தியும் காவடி எடுத்தும் நகர வீதிகளில் வழியாக உலா வந்து தண்டாயுதபாணி ஆலயத்தின் முன்பு உள்ள இருந்த தீக்குண்டத்தில் இறங்கி தங்களது வழிபாட்டை நிறைவு செய்தனர்.

    இதே போல பூதலூர் அருகே உள்ள சித்திரக்குடி சிவனாதிஸ்வரர் ஆலயத்தில் உள்ள மலைமேல் முருகன் சாமிக்கு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பால்அபிஷேகம் செய்து சாமி தரிசனம்செய்தனர்.அன்னதானம் நடைபெற்றது.

    • விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பூசலாங்குடியில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

    மதியம் அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், அன்னதானம், அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் வீதியுலா நடைபெற்றது.

    தொடர்ந்து அக்னி கப்பரை வீதிஉலா நடைபெற்றது.

    • ராமநாதபுரம் அருகே பால்குடம் எடுத்து திருநங்கைகள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • முத்துமாரி அம்மனுக்கு முதன் முறையாக முளைக்கொட்டு திருவிழாவை கோலாகலமாக நடத்தி மகிழ்ந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே மாடக்கொட்டான் தில்லை நாயகபுரம் கிராமத்தில் முன் மும்தாஜ் என்ற திருநங்கை வீடு உள்ளது. இந்த வீட்டில் 15 திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நாட்டு மக்கள் நோய் நொடியின்றி வாழவும் தங்களது பகுதியில் மணலில் முத்துமாரியம்மன் கோவில் அமைத்து முளைப்பாரித் திருவிழா நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி முதலாம் ஆண்டாக முளைப்பாரித் திருவிழாவை நடத்தினர். இதையொட்டி காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர். தினமும் கோவில் முன்பு கும்மி கொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

    இந்த நிலையில் திருநங்கைகள் மாடக்கொட்டான் பகுதியில் இருந்து 2 கி.மீ. தூரம் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இந்த ஊர்வலத்தில் சென்னை, பெங்களூரு, கோவை, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். முளைப்பாரி களை ஊர்வலமாக சுமந்து முத்துமாரியம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்று சிறப்பு பூஜை செய்தனர்.

    அதனையடுத்து முளைப்பாரிகளை அங்குள்ள காட்டு ஊரணியில் கரைத்தனர். கடந்த ஒரு வார காலமாக பல்வேறு விதமான பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் திருநங்கைகள் பல்வேறு அபிஷேக ஆராதனை நடத்தி முத்துமாரி அம்மனுக்கு முதன் முறை யாக முளைக்கொட்டு திரு விழாவை கோலாகலமாக நடத்தி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×