பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன்

அலங்காநல்லூர் அருகே பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை 24 மனை தெலுங்குபட்டி செட்டி உறவின்முறை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன்
Published on

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரியஇலந்தைகுளம் கிராமத்தில் செல்வ விநாயகர், மாசான கருப்புசாமி திருக்கோவில் வைகாசி உற்சவ விழா நடந்தது. 2 நாட்கள் நடந்த இந்த விழாவில் சாத்தவுராயன் சுவாமிக்கு வாண வேடிக்கையுடன் பக்தர்கள் பழக்கூடை எடுத்து சென்றனர். இதை தொடர்ந்து செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கிடாய் வெட்டுதல் நடந்தது. ஏற்பாடுகளை 24 மனை தெலுங்குபட்டி செட்டி உறவின்முறை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com