search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜோதி மாரியம்மன் கோவிலில் அபிஷேக ஆராதனை விழா
    X

    பால்குட ஊர்வலம் நடந்தது.

    ஜோதி மாரியம்மன் கோவிலில் அபிஷேக ஆராதனை விழா

    • மதியம் அம்பாளுக்கு அபிஷேகமும், கஞ்சிவார்த்தலும், அன்னதானமும் நடைபெற்றது.
    • மாலை அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரமும், அன்னதானமும் நடைபெற்றது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தால் நடத்தப்படும் ஆழ்வான்கோவில் தெரு, ஜோதி மாரியம்மன் கோவிலின் 3-ம் ஆண்டு அபிஷேக, ஆராதனை விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு சர்க்கரை படித்துறையில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. பின், அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், மதியம் அம்பாளுக்கு அபிஷேகமும், கஞ்சிவார்த்தலும், அன்னதானமும் நடைபெற்றது. தொடர்ந்து, மாலை அன்னபூரணி அலங்காரமும், அன்னதானமும் நடைபெற்றது.

    விழாவில் கோபால கிருஸ்ணன், சீனுவாஸ்சன், சேதுராமன், சங்கத்தலைவர் கீர்த்திவாசன், துணைத்தலைவர் சுரேஷ், செயலாளர் சுரேஷ், பொருளாளர் அபிஷேக் முரளி, நிர்வாக கமிட்டி தலைவர் இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×