என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவடி எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்.
தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு
- தீக்குண்டத்தில் இறங்கி வேண்டுதல்களை நிறைவேற்றனர்.
- பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் இருந்து நேற்று இரவுதிரளான பக்தர்கள் அலகு குத்தியும் காவடி எடுத்தும் நகர வீதிகளில் வழியாக உலா வந்து தண்டாயுதபாணி ஆலயத்தின் முன்பு உள்ள இருந்த தீக்குண்டத்தில் இறங்கி தங்களது வழிபாட்டை நிறைவு செய்தனர்.
இதே போல பூதலூர் அருகே உள்ள சித்திரக்குடி சிவனாதிஸ்வரர் ஆலயத்தில் உள்ள மலைமேல் முருகன் சாமிக்கு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பால்அபிஷேகம் செய்து சாமி தரிசனம்செய்தனர்.அன்னதானம் நடைபெற்றது.
Next Story






