search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேராவூரணி அருகே தெய்வாங்கப் பெருமாள் கோயில் தேரோட்டம்
    X

    தேரோட்டம் நடைபெற்றது

    பேராவூரணி அருகே தெய்வாங்கப் பெருமாள் கோயில் தேரோட்டம்

    • சித்திரை திருவிழா மே 2 ந்தேதி காப்பு கட்டி திருவிழா தொடங்கியது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே செங்கமங்கலம் தெய்வாங்கப் பெருமாள், அருள்மிகு காமாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 2 ந்தேதி காப்பு கட்டி திருவிழா தொடங்கியது.

    நேற்று புதன்கிழமை 9 ம் நாள் விழா காலையில் பால் குடம், காவடி எடுத்து வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.மாலை 5.00 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பேராவூரணி, செங்கமங்கலம், அம்மையாண்டி, மாவடுகுறிச்சி, பொன்காடு, மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×